http://www.marxists.org/archive/marx/works/1884/origin-family/index.htm
The Origin of the Family, Private Property and the State
என்ற அபத்தமான புத்தகத்தை என்னிடம் நண்பர் தியாகு பரிந்துரைத்துள்ளார்.
படித்தேன்.
அதுவே நான் சில நாட்கள் எழுதாமல் இருந்த காரணம்.
இந்த புத்தகத்தின் விமர்சனம் இங்கே
.
முதலாவது
I. Stages of Prehistoric Culture என்ற அத்தியாயம் அப்படியே Lewis H. Morgan என்ற அமெரிக்க ஆய்வாளரின் புத்தகத்தினை அப்படியே ஒப்புக்கொண்டு எழுதப்பட்டுள்ளது.
இந்த அத்தியாயத்தில் மனித வரலாற்றின் சமூகம் மூன்று நிலைகளில் உள்ளது என்று கூறுகிறார்.
முதலாவது சேவேஜரி Savagery என்னும் நிலை. இந்த கால கட்டத்தில் மனிதன் உணவை அதன் அடிப்படை அமைப்பிலேயே சாப்பிடுகிறானாம் . அதாவது பழத்தை பழமாகவே, கனியை கனியாகவே சாப்பிடுகிறான் . குரங்கிலிருந்து சற்றே முன்னேறிய நிலை.
அடுத்து பார்பரிஸம்
Barbarism இந்த காலத்தில் கால்நடைகளை பழக்கி விவசாயம் செய்கிறான். மேன்மேலும் அதிக பொருட்களை மனித செயல்பாட்டின் மூலம் உருவாக்குகிறான்
அடுத்து சிவிலைசேசன்
- தொழில்சாலை ஆகியவற்றை செய்வது
இது சுத்த பேத்தல் என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும்
. முதலாவது இவ்வாறு மாறுவதை சமூக பரிணாமம் என்று கூறுவதை போல பேத்தல் எதுவும் இல்லை .
ஏனெனில், பரிணாமம் என்பது வளர்ச்சியை கூறுவதல்ல. மாறாக எந்த சூழ்நிலையில் அந்த பொருள் இருக்க வசதியாக இருக்கிறது என்பதை பொறுத்தது . தொழிற்சாலைகள் வைத்திருந்த நாட்டில் மீண்டும் சேவேஜரி வரலாம். விவசாயம் வைத்திருக்கும் சமூகம் (இது பார்பாரிசமாம் அதாவது காட்டுமிராண்டித்தனம் என்ற் தமிழில் சொல்வது ) தொழில்ற்சாலைகள் இருக்கும் சிவிலைசேசனுக்குத்தான் போகவேண்டும் என்ற் ஒரு கட்டாயமும் இல்லை. அது அப்படியே இருக்கவும் இருக்கலாம் . ஏன் சாவேஜரி நிலைக்கு போகவும் போகலாம்.
நேர்கோட்டில் பரிணாமம் வேலை செய்யாது.
இதில் நண்பர் தியாகு கூறிக்கொண்டிருந்த புராதன பொதுவுடமை சமுதாயம் என்பது சேவேஜரி என்பதுதான் என்று கூறுகிறார்.
பொதுவுடமை சமுதாயம் என்ற "உன்னதமான" நிலையிலிருந்து ஏன் இழிந்து பார்பாரிசம் ஆகும் என்பதற்கான எந்த விளக்கமும் இல்லை . முதலில் அது பொதுவுடமை சமுதாயமே அல்ல. ஆயிரக்கணக்கான பழங்குடி சமுதாயங்கள் எதிலும் பொதுவுடமை சமுதாயம் என்று இவர்கள் கற்பனை செய்யும் எதனையும் பார்க்கவே முடியாது .
அடுத்து குடும்பத்தின் தோற்றம் என்று எங்கல்ஸ் பிதற்றுவதை பார்ப்போம்.
இதுவும் லூயிஸ் மார்கன் கூறியதே. இதுவும் எங்கல்ஸ் சொந்தமாக கண்டுபிடித்ததோ அல்லது ஆராய்ந்ததோ அல்ல .
லூயிஸ் மார்கன் கூறியது வெறும் அறிவியல் தேற்றம் என்று மட்டுமே இருந்தால் யாரும் அதனை எவ்விதமாகவும் மாற்றலாம், தொடர்ந்து அதனை விவாதிக்கலாம் . அது குப்பை என்று தூக்கிப்போட்டுவிட்டும் போகலாம். சொல்லப்போனால் , லூயிஸ் மார்கனை இப்போது எத்தனை பேருக்குத் தெரியும்? ஏனெனில் அது குப்பை என்று அவருக்கு பின்னே வந்த ஏராளமான ஆய்வாளர்கள் தூக்கி எறிந்துவிட்டு போய்விட்டார்கள் .
ஆனால், அது ஒரு அரசியல் கட்சியின் கொள்கையின் அடித்தளமாக ஆகிவிட்டது என்றால், எங்கல்ஸ் ஞான திருஷ்டியில் கண்டுபிடித்து கூறியதை அப்படியே ஒப்புக்கொள்ளவும், அது விஞ்ஞானம் என்று வாதிடவும் , ஒரு பெரும் கூட்டம் கிளம்பிவிடும்.
சரி மார்கன் கூறியதை பார்ப்போம். (அதாவது எங்கல்ஸ் சுட்டு போட்டதை பார்ப்போம்)
The Consanguine Family
This is the first stage of the family and as such a primary indicator of our superior nature in comparison with animals. In this state marriage groups are separated according to generations. The husband and wife relationship is immediately and communally assumed between the male and female members of one generation. The only taboo is a sexual relationship between two generations (ie father and daughter, grandmother and father)..
எல்லா ஆண்களும் எல்லா பெண்களும் கூட்டாக யார் வேண்டுமானாலும் யாருடனும் செல்லலாம் என்ற நிலையில் உள்ள குடும்ப அமைப்பாம். பெற்றோர் குழந்தைகளுடன் உறவு வைத்துக்கொள்வது மட்டும் தடை செய்யப்பட்டதாம் . அதாவது ஒரு பழங்குடி சமூகத்தில் உள்ள எல்லோரும் யாருடன் வேண்டுமானாலும் இன்று படுத்துக்கொள்ளலாம். நாளை இன்னொருவருடன் படுத்துக்கொள்ளலாமாம்.
இது குடும்ப அமைப்பின் முதல் படியாம். இதுதான் புராதன பொதுவுடமை சமுதாயமான சேவேஜரி சமூகத்தின் குடும்ப அமைப்பாம் .
என்ன எழவுடா சாமி இது? பறவைகள் கூட ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பதை பார்க்கிறோம். குரங்குகளில் பல இனங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்று இருக்கிறது. அதெல்லாம் தனியுடமை சமுதாயத்தின் கீழேதான் வருகிறதா ? என்ன எழவுடா இது?
The Punaluan Family
The second stage extends the incest taboo to include sexual intercourse between siblings, including all cousins of the same generation. This prevents most incestuous relationships. The separation of the patiarchal and matriarchal lines divided a family into gentes. Interbreeding was forbidden within gens, although first cousins from separate gentes could still breed.
சகோதர சகோதரிகளுடன் உறவை தடுக்கும் உறவுமுறை
The Pairing Family
The first indications of pairing are found in families where the husband has one primary wife. Inbreeding is practically eradicated by the prevention of a marriage between two family members who were even just remotely related, while relationships also start to approach monogamy. Property and economics begin to play a larger part in the family, as a pairing family had responsibility for the ownership of specific goods and property. Polygamy is still common amongst men, but no longer amongst women since their fidelity would ensure the child's legitimacy. Women have a superior role in the family as keepers of the household and guardians of legitimacy. The pairing family is the form characteristic of barbarism, as group marriage is characteristic of savagery and monogamy of civilization. However, at this point, when the man died his inheritance was still given to his gens, rather than to his offspring. Engels refers to this economic advantage for men coupled with the woman's lack of rights to lay claim to possessions for herself or her children (who became hers after a separation) as the overthrow of mother-right which was "the world historical defeat of the female sex". For Engels, ownership of property created the first significant division between men and women in which the woman was inferior.
The Monogamous Family
This form evolved out of the pairing family in the transitional period between the middle and upper stages of barbarism at the dawn of civilization. It is based on the supremacy of the man, the express purpose being to produce children of undisputed paternity. Such paternity is demanded because these children are later to come into their father's property as his natural heirs. The wife has become more subservient and the dissolution of the marriage is only possible by the will of the husband. While we cannot speak of monogamy yet in the modern sense of the word, since men were still free to have extra-marital sex as much as they wished to, Xenophon in his Oeconomus pointed out that such behavior was seen as degrading for men, and that it could harm their public image as it was frowned upon. While the Monogamous Family is not yet based on "sex-love", and is better referred to as hetaeristic, its emphasis on legitimacy and inheritance did form the basis for the monogamous relationship.
மேலே எல்லாம்
stages என்று எழுதியிருப்பதை பாருங்கள். இவ்வாறு குடும்ப அமைப்புகளை பிரிப்பதே தவறு . குடும்ப அமைப்புகள் ஒரே காலகட்டத்தில் பல்வேறுவிதமான முறைகளில் இருக்கலாம். இப்போதும் உலகெங்கும் பல்வேறுவிதமான குடும்ப அமைப்புகள் இருக்கின்றன. ஏன் தொழில்மயமான ஐரோப்பாவிலும் , அமெரிக்காவிலும் பல்வேறுவிதமான திருமண உறவுகளை பார்க்கலாம். polyandry, polygamy, polyamorous என்று பலவிதமான முறைகளில் திருமணமும் குடும்பங்களும் இருக்கின்றன . ஏன் ஓரின சேர்க்கையாளர்கள் திருமண உறவுகொண்டு குடும்பம் நடத்துவதும் அமெரிக்காவில் காணக்கூடியதே .
இவைகளை குடும்பத்தின் பரிணாம நிலைகள் என்று சொல்வது போல அபத்தம் ஏதுமில்லை!
இதைவிட பெரும் அபத்தம், குடும்பத்தையும் சொத்தையும் இணைத்து, தனியுடமைக்காகத்தான் குடும்பம் உருவானது என்ற் பிதற்றுவது.
சுருக்கமாக விக்கியில் உள்ளதை இங்கே மேற்கோள்
Family and property
Engels' ideas on the role of property in the creation of the modern family and as such modern civilization begin to become more transparent in the latter part of Chapter 2 as he begins to elaborate on the question of the monogamous relationship and the freedom to enter into (or refuse) such a relationship. Bourgeois law dictates the rules for relationships and inheritances. As such, two partners, even when their marriage is not arranged, will always have the preservation of inheritance in mind and as such will never be entirely free to choose their partner. For Engels, a relationship based on property rights and forced monogamy will only lead to the proliferation of immorality and prostitution.
The only class, according to Engels, which is free from these restraints of property, and as a result from the danger of moral decay, is the proletariat, as they lack the monetary means that are the basis of (as well as threat to) the bourgeois marriage. Without property to consider, the proletariat (male and female) is free to enter as well as dissolve any marriage whenever they wish to. Monogamy is therefore guaranteed by the fact that theirs is a voluntary sex-love relationship.
The social revolution which Engels believed was about to happen would eliminate class differences, and therefore also the need for prostitution and the enslavement of women. If men needed only to be concerned with sex-love and no longer with property and inheritance, then monogamy would come naturally.
தனியுடமைக்கும் குடும்பத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த கற்பனைகள் எங்கல்ஸ் தன்னுடைய பொதுவுடமை கனவுக்காக , கிடைத்த ஆராய்ச்சிகளை கழுத்தை பிடித்து நெரித்து வளைத்து தன் கொள்கைக்கு ஆதாரம் காட்டுகிறார்.
கணவன் மனைவி விவாகரத்து ஆகும்போது யாரிடம் என்ன சொத்து போகலாம் என்று
"பூர்ஷ்வா" க்கள் சட்டம் எழுதுவது, தனியுடமையை காப்பாற்றுவதற்காக குடும்பம் இருக்கிறது என்பதன் நிரூபணமாம் . அட கண்றாவியே.
குழந்தைகள் , பெண்கள் ஆகியோரை பாதுகாக்கத்தானே இந்த சட்டங்கள் இருக்கின்றன?
இதிலும் பெரிய கண்றாவி இருக்கிறது. அதாவது தொழிலாளர்கள் கையில் எந்த விதமான சொத்தும் இல்லாமல் இருப்பதால் , அவர்கள் திருமண உறவு கொள்வது மட்டுமே அன்பு, காதல், பாலுறவு மீது அமைந்த புனிதமான திருமணமாக இருக்குமாம்.
எப்போதையா தொழிலாளர்கள் எந்தவிதமான சொத்தும் இல்லாமல் இருந்தார்கள்?
எப்போதையா தொழிலாளர்கள் எந்தவிதமான சொத்தும் இல்லாமல் இருப்பார்கள்
( ஓகே ஓகே, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் போலிட்பரொ உறுப்பினர்கள் தவிர மற்றெல்லோருக்கும் சொத்து கிடையாது .. சரியா ?)
எத்தனைதான் சொத்து இல்லாமல் இருந்தாலும், கணவன் மனைவி உழைத்து சேமித்த பணத்தில் வாங்கிய பொருட்களை பிரித்துக்கொள்ள ஒரு அமைப்பும் சட்டமும் விதிமுறைகளும் வேண்டுமே ?
கம்யூனிஸ புரட்சி வந்ததும், வர்க்க பேதங்கள் அழிந்து, விபச்சாரம் செய்வதற்கு தேவையில்லாமல் , பெண்ணடிமை இல்லாமல் போய்விடுமாம்.
போனபோ என்று ஒரு குரங்கினம் இருக்கிறது. அந்த குரங்கினத்தில் பெண் குரங்குகள் பாலுறவை தங்களுக்கு வேண்டிய பொருட்களை பெற்றுக்கொள்ள உபகரணமாக உபயோகிக்கிறார்கள் . படித்துப்பாருங்கள்.
அந்த குரங்கினங்களில் வர்க்க பேதம் இருக்கிறதா? என்னய்யா கூத்து இது?
இந்த உளறலையா இந்த கம்யூனிஸ்டுகள் தினந்தோறும் தெண்டனிட்டு வணங்குகிறார்கள்? கஷ்டம் கஷ்டம் !
Dienstag, 27. November 2007
| [+/-] |
குடும்பம் தனியுடமை அரசு ஆகியவற்றின் தோற்றம்- எங்கல்ஸ் புத்தக விமர்சனம் |
Dienstag, 20. November 2007
| [+/-] |
மகஇக விவாதம் - நண்பர் தியாகுவுக்கு என் பதில்கள் |
நண்பர் தியாகு எனக்கு எழுதிய பதிலுக்கு நன்றிகள்.
அவருக்கு என் பதில்கள்
மக இக அவதூறுக்கு பதில் - தமிழ் மணிக்கு
//அதாவது பு.ஜவில் மரியாதை குறைவா யாரை திட்டுறாங்க ஓட்டு பொறுக்கிகளான சுயநல அரசியல் வாதிகளை மக்கள் விரோதிகளை அவனை திட்டுனா உனக்கு ஏய்யா கோபம் வருது இதான் கேள்வி நீ யாரு மக்கள் விரோதியா உன் சித்தாந்தம் என்ன என்று எங்காவது சொல்லி இருக்கியா பெரிசா பேச வந்துட்டாரு டவுசர் பாண்டி மாதிரி
//
அதே!
நீங்கள் இந்த மக்கள் பிரதிநிதிகளை மரியாதை குறைவாக திட்டலாம்
ஆனால், மக்கள் பிரதிநிதிகளின் பத்திரிக்கைகள், பெரும்பான்மை மக்களின் பத்திரிக்கைகள் நக்ஸல்பாரி பயங்கரவாதிகளை மரியாதை குறைவாக திட்டுவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது!
டவுசர் பாண்டி என்றால் என்ன?
//
ஆகா சொல்லிட்டாரய்யா சொல்லிட்டாரு
அதாவது மக்கள் ஆயுதம் தூக்கிடுவாங்களாம் எங்கள் பின்னே வந்து சரி ஏன் ஆயுதமோ அல்லது ஒரு எதிர்கருத்தோ உருவாகிறது அத பத்தி இந்த கட்டுரையில் எங்கயாவது அய்யா நீங்க அறிவுக்கண்ண தொரந்து பேசி இருக்கீங்களா?
//
இல்லை மக்கள் ஆயுதம் தூக்கமாட்டார்கள்.
எதிர்கருத்து உருவாவது எல்லா ஜனநாயகத்திலும் உள்ள ஒரு விஷயம். எதிர்கருத்து இல்லையேல் ஜனநாயகம் இல்லை. ஏன் மனிதனே இல்லை. ஆனால், எதிர்கருத்து இருப்பவனை சுட்டுத்தள்ளவேண்டும் என்பது இந்திய குணமும் அல்ல, மனித குணமும் அல்ல.
//
ஏன் உருபெருக்கி காட்டுகிறார்கள் என கேட்டு அதற்கு விடையும் கொடுத்து இருக்கு ஆசிரியர் குழு இவரது காமாலை கண்ணுக்கு தெரியலை.
சித்தாந்தாத்துடன் ஆயுதம் தாங்க முற்பட்ட குழுவின் மேல் உங்க எரிச்சல் தற்செயலானது இல்லை தேவை ப்படும் போது ஆயுதம் தாங்க இந்து வெறி குழுவான உங்களுக்கு ஒரே ஒரு நக்சல் பாரி இருக்கான்னாலே பேதி ஆகிடுது அதுக்கு என்ன செய்வது. நாங்க எதிர் புரட்சியை
அடக்குவது பற்றி பேசுகிறீர்கள் பரவாயில்லை அப்போ உங்க வாயால இதை புரச்சிகர கும்பல் என ஒத்துகிட்டதுக்கு .( மக்களை திரட்டாமல் ஆயுதம் தூக்குவது உதவாது என்ற நிலைபாட்டை மக இக கொண்டி ருந்தாலும் . ஆயுதம் தாங்கும் குழுக்களின் மேல் அவுத்து விடப்படும் அதி பயங்கர அடக்குமுறையும் அச்சுருத்தலும் தனது ஓட்டை மொள்ளமாறித்தனத்தை மறைப்பதற்குத்தான் என சொல்லத்தான் இந்த கட்டுரையே எழுதப்பட்ட்டு உள்ளது.)
கவலை படாதீங்க கைத்துப்பாக்கிகளின் எண்ணிக்கை உங்களை மாதிரி ஆட்களாலலதிகமாக்கப்படும்
//
"எதிர்புரட்சி" என்பது உங்களது வார்த்தை. அப்படித்தான் நீங்கள் கூறுவீர்கள் என்று எனக்கு தெரியும். உங்களை எதிர்ப்பவர் எல்லோரும் "புரட்சிக்கு" எதிரானவர்கள் என்றுதானே கூறுவது வழக்கம்? அதனால்தான் அப்படி எழுதினேன். அது உங்களை "புரட்சியாளர்கள்" என்று நான் கூறுவதாக தயவு செய்து எடுத்துக்கொள்ளவேண்டாம்.
மக்களை திரட்டி ஆயுதம் தூக்கவைக்கவேண்டும் என்று மக இகவின் நிலைப்பாடு என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி. அதனைத்தான் நீங்கள் பதிலெழுதாக என்னுடைய பதில்களிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அதனைத்தான் இப்போது கொல்வதா பின்னாலே கொல்வதா என்பதுதான் இரண்டு கொலைகார கூட்டங்களுக்கு இடையேயான வித்தியாசம் என்று குறிப்பிட்டிருந்தேன்.
//
தீவிர வாதம் என்பது அய்யா என்ன சொல்றீங்க அறிவால எடுத்துட்டு போயி கூட்டத்துல பேரணிபோறவங்களை வெட்டினாங்களே அது மிதவாதமா
அமைதியா பேரணி நடத்திய மருத்துவ மாணவர்களை போலீஸை ஏவி அடிட்த்து நொருக்க சொன்னால் அது மிதவாதமாம்.இந்த மிதவாதத்தைதான் அரசியல் கட்சிகள் செய்கிறதாம் .
அப்புறம் வெடிகுண்டு வீசி கொல்றாங்களே ஒரு கட்சிக்குள்ளயே இருக்கும் ஆட்களை இதெல்லாம் எந்த வகையான மிதவாதம்னு அய்யாதான் சொல்லனும் அய்யா தமிழ் பெல்லு சரியா சொல்லு?
தீவிர வாதம் என்றால் என்னன்னு மொதல்ல சொல்லிடுங்க ஏன்னா பு,ஜவில் எழுதப்பட்ட கட்டுரை தீவிர வாதத்தை ஆதரிப்பதல்ல .
ஆனால் அரசு அமைப்பு அதை ஏன் உருபெருக்கி காட்டுது என்பதை பற்றியகேள்வி எழுப்பு அதுக்கு பதில் அளித்து உள்ளது .
அய்யா நீங்க என்ன செய்து இருக்கீங்கன்னா . இந்த கட்டுரை என்னமோ தீவிர வாதத்தை ஆதரித்தூ எழுதப்பட்டதா எடுத்து உங்க மூளையை செலவழிச்சுட்டீங்க
//
புதிய ஜனநாயகம் என்ற பத்திரிக்கையில் எழுதப்பட்ட கட்டுரை, தீவிரவாதத்தை ஆதரிக்காத கட்டுரை என்பது பொய். தாங்கள் பின்னாலே ஆயுதம் தூக்கும் பயங்கரவாதிகள் ஆவோம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள கட்டுரை. நீங்களே அதனை மேலே ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.
//தீவிரவாதநிலை பாட்டை யாருங்க ஆதரிப்பாங்க உங்க்களுக்கென்ன லூசா
//
மிகச்சரியான கேள்வி. தீவிரவாத நிலைப்பாட்டை யார் ஆதரிப்பார்கள்? ஆதரிக்கும் புஜ, நீங்கள் எல்லோரும் லூஸா என்பது நீங்கள்தான் கூறவேண்டும்.
//
அய்யா என்னங்க சொல்றீங்க தீவிரவாதம் இருக்குன்னா அதை வெளிய ககாட்டாதாமாம் அப்படியே அமுத்தி வச்சுக்குமாம் இதெல்லாம் அரசின் கையில் இருக்கு என்று நீங்க சொன்னா நாங்க கேட்டுகனுமா ? தனது மகன் அழகிரியின் ஆட்கள் செய்த அட்டூலியத்தையே இந்த அரசு மூடவோ மறைக்கவோ முடியாமல் தவித்ததை நாம் பார்த்தோமே?
//
காரணம் ஜனநாயகமும் சுதந்திர பத்திரிக்கைகளும்.
//
தீவிரவாதம் உருவானது ஏன் என்றேல்லாம் யோசிக்காமல் அதை பெரிதாக்குவதற்கு செய்யும்
செயலில் அதன் காரணங்களில் ஏன் அக்கரை காட்டவில்லை என்பதுதான் கேள்வி.
தீவிரவாதம் தவறுதான் அதன் காரணங்கள் தவறல்ல
அதை மறைக்கும் மறுக்கும் நீங்கள்தான் தீவிரவாதி
//
அழகிரி செய்தது தீவிரவாதம் என்று நீங்கள்சொன்னால், அதனை தண்டிக்காமல், அவர் என்ன காரணங்களால் அதனை செய்யும்படி தூண்டப்பட்டார் என்று கட்டுரை எழுதி, அவரை விடுதலை செய்வீர்களா?
தீவிரவாதத்தின் காரணங்கள் என்னவாக இருந்தாலும், நியாயமான காரணங்களாகவே இருந்தாலும், ஒரு அப்பாவியின் உயிரை எடுக்க எந்த ஒரு தீவிரவாதிக்கும் உரிமை இல்லை.
//
போலீசைப் பொறுத்தவரை தனது கேள்விக்கிடமற்ற அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும், தனது கிரிமினல் நடவடிக்கைகளை மறைத்துக் கொள்வதற்கும் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் அது பயன்படுத்திக் கொள்கிறது. மிகவும் அபாயகரமான பணியில் இராப்பகலாக ஈடுபட்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே, காடுகளிலும் மலைகளிலும் ""அவுட்டோர் ஷூட்டிங்'' நடத்துகிறது. தான் நடத்திய, நடத்தப் போகிற எல்லா "போலி மோதல்' கொலைகளையும் மறைப்பதற்கான திரைச்சீலைகளாக இவற்றைப் பயன்படுத்துகிறது.
//
போலீஸ் கட்டற்ற அதிகாரம் கொண்டதல்ல. அது ஆளும் மக்கள் பிரதிநிதிகளின் சொல்லுக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டது. போலீஸ் கட்டற்று மக்களை அச்சுறுத்தினால், ஓட்டுக்களை இழக்கப்போவது ஆளும் கட்சிதான். ஆகவே, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால், மக்கள் நிச்சயம் ஆளும் கட்சியை தூக்கி எறிவார்கள். இது பலமுறை தமிழ்நாட்டில் நடந்துள்ளது. ஆகவே மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு அஞ்சுகிறார்கள். மக்கள் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் என்பதால், தீவிரவாதத்தை ஒடுக்க மக்கள் பிரதிநிதிகள் முனைகிறார்கள்.
//ஹய்யோ ஹய்யோ போலீசின் அடக்குமுறை எத்தனை தடவை இந்த நாட்டில் நடந்து இருக்கு எத்தனை முறை மக்கள் தூக்கி எறிந்து இருக்காங்கன்னு ஒரு லிஸ்டு போட்டு சொல்லுங்க பார்ப்போம்
//
நிறைய. போலீஸ் பேயாட்டம் ஆடினார்கள் என்பதால், பல தொகுதிகளில் பல கட்சிகள் தோற்றிருக்கின்றன.
//
திமூக ஆட்சியில் போலீஸ் அராஜகம் என்று அதிமுக சொல்லும்
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையா இருக்கிற போலிஸை எல்லாம் பந்தாடும்
அதே மாதிரி அதிமுக ஆட்சியில் போலீஸ் அராஜகம் னு திமுக சொல்லும்
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையா இருக்கிற போலிஸை எல்லாம் பந்தாடும்
இது ஒரு ஜெயின் மாதிரிதான் போகுதுன்னு உங்க மண்டையில் ஏறவில்லையா
இடையில் பாதிக்கப்படும் சாதாரண தொண்டன் சாகிரது கண்ணுக்கு தெரியலையா?
வாச்சாத்தியில் பெண்கள் கற்பழிக்கப்பட்டதற்கு என்ன எதிர்வினை மக்கள் செய்தார்கள்
//
உண்மைதான். அதற்காகத்தான் ஜனநாயகம் தேவை.
அதிமுக ஏன் போலீஸ் அராஜகம் என்று சொல்கிறது? அதன் மூலம் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்க முயல்கிறது. திமுக அரசை போலீஸை கட்டுப்படுத்த வைக்கிறது. இப்படி எதிர்கட்சிகள் சுதந்திரமாக குரல் எழுப்பவும், பத்திரிக்கைகள் அராஜகத்தை வெளிப்படுத்தவும் இருக்கும் சூழ்நிலைதான் ஜனநாயகம்.
மக்களுக்கு எது தேவை என்று எனக்குத்தெரியும் என்றுதான் எல்லா கட்சிகளும் சொல்லும்.
அது உண்மையிலேயே மக்களுக்கு தேவையா இல்லையா என்று உரசிப்பார்க்க எதிர்கட்சியும், பத்திரிக்கைகளும் வேண்டும்.
எதிர்கட்சியே இல்லாத ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்கவே கூடாது. சோசலிசம், கம்யூனிஸம், பாஸிஸம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், ஈரானின் மத அரசு, போப்பாண்டவரின் புனித அரசு என்று எந்த பெயரில் சர்வாதிகாரம் வந்தாலும் எதிர்க்கவேண்டும்.
//
இத்தனை பயங்கரமாகச் சித்தரிக்கப்படும் பெரியகுளம் சம்பவத்தில் நடந்திருப்பது என்ன? 3 பேர் சில ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குண்டு வெடிப்பு, போலீசுடன் மோதல், உயிரிழப்பு என்று எதுவும் நிகழவில்லை. கைது செய்த போலீசாருக்கோ ஒரு சிராய்ப்புக் காயம் கூட ஏற்படவில்லை. போலீசின் சட்டம் ஒழுங்கு பார்வையின் படியேகூட இது மிகவும் சாதாரணமான குற்றம்தா ன்.
//
இல்லை. நிச்சயம் இல்லை. ஆயுதம் ஏந்தியவனை தண்டிப்பது வேறு. ஆயுதம் ஏந்துவதை தன் கொள்கையாக கொண்ட இயக்கத்தினை ஒடுக்குவது வேறு. இதில் போலிசாரை நோக்கிச் சுட்டு அதில் இருவர் உயிரிழக்கவில்லையே என்று உங்களுக்கு மிக வருத்தம் போலிருக்கிறது. நீங்கள் என்ன போன பிறவியில் ரத்தக் காட்டேரியாக இருந்தீர்களோ? அல்லது இப்போதுமே அப்படித்தானா? சாதாரண மனிதரைக் கேட்டால் 'நல்ல வேளை யாரும் யாரையும் சுடவில்லை. அதற்கு முன் ஆயுதங்களைக் கைப்பற்றி விட்டார்கள்' என்று போலிசாரைப் பாராட்டவே செய்வார்.
//
ஒடுக்குவது சரி என சொல்லும் நீங்கள் தான் அவர்களை விட இரத்த காட்டேறியின் தந்தையாக இருந்து இருக்கீங்க்க. இங்கே நீங்க பயப்படுவது ஆயுதத்துக்கு இல்லை சித்தாந்தத்துக்கு என புரிய வச்சா புரிஞ்சுப்பீங்களா
ஆனா ஒடுக்குவது ஆயுதத்தை என்ற பேரால் சித்தாந்தை என்பதையும் புரிய வச்சால் புரிஞ்சுப்பீங்களா?
//
அதனைத்தான் நானும் சொல்கிறேன். மக்கள அஞ்சுவது ஆயுதத்துக்கு இல்லை. கொலைவெறி சித்தாந்தத்துக்கு.
//
மாட்டீங்க மாட்டீங்க ஏன்னா ஒரே போடாக ஆயுதம் தூக்குபவன் தீவிரவாதி இதான் பேசுவீங்க
கீறல் விழுந்தா ரெக்காடு மாதிரி
//
ஆயுதம் தூக்குபவன் எல்லோரும் தீவிரவாதி அல்ல. தீவிரவாத சித்தாந்ததின் கீழ் மக்களை ஆயுதம் தூக்கவைப்பவன் தான் தீவிரவாதி.
//
அதாவது வன்முறைக்கு தனிநபர் வன்முறை கூட்டு வன்முறை பொரியல் வன்முறை என என்னென்ன பேரெல்லாம் வச்சு இருக்கீங்க .
அதாவது அப்பாவிகளை ரெளடிகளை அனுப்ப்பி கொல்லும் கயவாளித்தனத்தை மன்னித்து விடுவீர்Kஆள் அது அபாயமானதல்ல. இதானே உங்க கருத்து என்னய்யா நியாயம்.
வன்முறை மூலம் போலிஸ் அதிகாரத்தை கைப்பற்ற கூடாதுன்னு சொல்றீங்களே
மதுரையில் அதைத்தானே அழகிரி செய்துகிட்டு இருக்கான் .
அவரது ஆட்கள் அடித்து நொருக்க போலீஸ் வேடிக்கை பார்க்க இதெல்லாம்
ஆட்சியை மக்களில் பேரால் ஆட்சிக்கு வந்தவர்கள் செய்யும் வேலையா
இது சகஜம் போல உங்க அகராதியில்
நீங்க நியாயமான ஆளுன்னா இதையும் அல்லவா கண்டிக்க வேண்டும்
அதெப்படி தனிநபர் பயங்கரவாதம் என சொல்றீங்க
தினகரன் ஆபிசுக்கு போனது தனிநபரா.
தன் அப்பா ஆட்சியில் இருக்கிறார் என்ன செய்தாலும் கேட்க ஆள் இல்லை என
ஆணையிடும் ஒரு தனிமனிதனா அங்கே சென்றால் இல்லையே ?
ஆட்சி அதிகாரத்தை கையில் வச்சுகிட்டு என்னவேணா செய்யலாம் என செய்யும் ஒரு கும்பலே அல்லவா போயிருக்கு அது இன்னைக்கு மட்டுமா போகுது அன்று சேலத்தில் மாணவிகளை பஸ்சோடு எரித்தது மதுரை வில்லாபுரத்தில் கவுன்சிலர் லீலாவதியை கொன்றது. ஒரு முன்னாள் அமைச்சரை வான்க்கிங் போகையில் போட்டு தள்ளிய
இதுக்கு பேர் தனிநபர் பயங்கர வாதமா ? நல்ல கூத்து தமிழ் பெல்
ஆக இதெல்லாம் சமூகத்தின் கேன்சராக உங்களுக்கு ஏன் தெரியவில்லை
//
மேலே நீங்கள் எழுதியதை படியுங்கள். மக்கள் அஞ்சுவது அழகிரிக்கு அல்ல. திமுகவின் கொள்கையும் வன்முறை கொள்கை அல்ல. காங்கிரஸின் கொள்கையும் வன்முறை கொள்கை அல்ல. மக்கள் ஓட்டுப்போட்டு திமுகவை பதவியிலிருந்து நீக்கினால், அவர்கள் மௌனமாக "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று இறங்கி வெற்றிபெற்ற கட்சிக்கு வழி விடுகிறார்கள். ஆனால் அழகிரி விஷயம் எதிர்கட்சியால் உபயோகப்படுத்தப்படும். அழகிரியை காப்பாற்றிய தந்தை கருணாநிதியால் தமிழ்நாட்டுக்கு நீதி கிட்டுமா? என்று எதிர்கட்சியால் பேசப்படும். அதனால், திமுகவுக்கு கிடைக்கும் வாக்குக்கள் குறையும். இதுதான் ஜனநாயகம்.
திமுக தோற்றதும், திமுகவுக்கு ஓட்டுப்போட்ட அனைவரையும் திமுக தலைவர் ஆயுதம் தூக்க சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நாடு தாங்குமா? அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் அவர் வைத்துக்கொள்ளலாம். பாட்டாளிவர்க்க புரட்சி, சோசலிஸ கட்டுமானத்துக்கான புரட்சி என்று ஏதோ குப்பை பெயர். இருந்துவிட்டு போகட்டும். அவர் கூப்பிடுகிறார் என்றால் உயிரை விட இன்று கோடிக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். 30 சதவீத ஓட்டுக்களை அவர் தமிழ்நாட்டில் பெறுகிறார். அவர் அழைத்தால் எத்தனை பேர் ஆயுதம் தூக்க தயாராக இருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள். ஆனால், அவர் அவ்வாறு கூப்பிடுவதில்லை. தன்னுடைய கருத்துக்களை நம்பி, மீண்டும் தேர்தலில் நின்று மக்கள் நம்பிக்கையை பெற்று ஆட்சிக்கு வரத்தான் அவர் விரும்புகிறார். அதே போலத்தான் அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும்.
கருத்துக்கள் மூலம் வெல்லமுடியாதவனே ஆயுதம் தூக்குகிறான். உங்கள் கருத்துக்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் ஆயுதத்தின் மூலம் அரசதிகாரம் என்று பேசுகிறீர்கள். உங்கள் கொள்கை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை. அதனால்தான் நீங்கள் இப்படி என்னை தமிழ் பெல் என்று எழுதுகிறீர்கள். இவ்வாறு எழுதுவதன் மூலம் என்னை அவமானப்படுத்தி, நீங்கள் வெற்றிபெற்றுவிட்டதாக நினைத்துக்கொள்கிறீர்கள்.
//
அய்யா நீங்க சொல்றீங்க எந்த ஆட்சி அதுக்காக நீக்கப்பட்டதுன்ற விபரத்தை தரமுடியுமா
சும்மா ஜோசியக்காரன் மாதிரி படும் டும் டும் ன்னு பேசபடாது.
மக்கள் கையில் கன்ரோல் எல்லாம் இல்லை . ஓட்டு போட்டது ஒருத்தனுக்கு அவன் கட்சி மாறி போனா ஒன்னும் செய்யமுடியாது அதான் நிலை இன்று
//
இருந்தது. இருக்கிறது.
எதிர்காலத்திலும் இருக்கும் என்று நம்புகிறேன்.
விவசாயிகள் தற்கொலைக்காக தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை அடைந்தது. காங்கிரஸ் வெற்றிபெற்றது.
பட்டினி சாவுக்காக காங்கிரஸ் ஒரிஸ்ஸாவில் தோல்வியுற்றது. பிஜு ஜனதாதளம் ஆட்சி பெற்றது.
பட்டினி சாவுக்காக காங்கிரஸ் தோற்று, திமுக ஆட்சி பெற்றது. எத்தனை எத்தனையோ நடந்திருக்கிறது.
//
முதல்ல உனக்கு வெக்கம் இருக்கா இல்லையா நாட்டில் லஞ்சம் மொள்ளமாரித்தனம் எல்லாம் இருக்கு அதை தட்டிகேட்காதேன்னு சொல்வதற்கு .
எல்லாம் மாறும் மாறும் ஓட்டு மட்டும் போடுங்கன்னு சொல்வதற்கு உனக்கு சொரணை இல்லையா?
//
ஓட்டுப்போடுவது மட்டுமே ஜனநாயகம் அல்ல. அவ்வாறு புரிந்துக்கொண்டதுதான் நீங்கள் செய்யும் முதல் தவறு. ஜனநாயகம் என்பது, லஞ்ச ஊழலை வெளிக்கொணரும் பத்திரிக்கைகள், வேலை நிறுத்தம் செய்ய உரிமை உள்ள தொழிலாளர்கள், பொருளாதார சுதந்திரம் கொண்ட மனிதர்கள், அரசியல் சுதந்திரம் கொண்ட மனிதர்கள், அந்த சுதந்திரத்தை சுதந்திரமாக ஓட்டுக்களில் பதிவு செய்ய உரிமை உள்ள மக்கள் இதுதான் ஜனநாயகம்.
//
அட தமிழ் பெல்லே தமிழ் நாட்டில் நடப்பதை பத்தி கருத்து சொன்னா நீ ஏன் லெனினிசம் சோசலிசம் என ஜல்லி அடிக்கிற .
தமிழ் நாட்டில் நடக்கும் பிரச்சனைக்கு பதில் சோவியத்தில் நடந்த விசயங்கள
இதுக்கு பதில் சொல்ல துப்பு இல்லை வந்துட்டு சோவியத் இரஸ்யாவை தூக்கிட்டு
//
லெனினிசம் சோசலிஸம்தான் குறிக்கோள் என்றுதானே அதன் அடிப்படையில்தானே நீங்கள் இந்திய அமைப்பை விமர்சனம் செய்கிறீர்கள்? அப்போது அதனை பேசுவதில் என்ன தவறு?
இதற்கு வரிக்கு வரி பதில் கூறியுள்ளேன்.
//
அம்பது வருசம உங்களை மாதிரி நாதாறி பயலுவ பேச்சை கேட்டு சீரழிந்து விட்டது நாடு எலிக்கறி சாப்பிட்டு சாகும் விவசாயிகளிம் ஓட்டு போடுன்னா அவன் உன் மண்டையில் நச்சுன்ன்னு போடுவான். வங்கிக்க.
மக்களிடம் என்ன பேசவேண்டும் என்பதை நீ கத்து தந்து பேசும் நிலமையிலா தோழர்கள் இருக்கிறார்கள் .
//
மக்களில் ஒருவன் நான் பேசுவதற்கு நீங்கள் கூறும் பதில்களே எந்த அளவுக்கு மக்களை மதிக்கிறீர்கள் என்பதை காட்டுகிறதே.
எலிக்கறி சாப்பிட்ட தமிழர்கள் காங்கிரஸை தூக்கி எறிந்து திமுகவை உட்காரவைத்தார்கள். அது ஜனநாயகத்தின் மூலம்தான் சாத்தியமாயிற்று. மனிதக்கறியை சாப்பிடும் நிலைக்கு சீன மக்களை தள்ளிய மாவோ சாகும் வரைக்கும் அரசிலிருந்து தள்ள முடியவில்லையே?
//
சுதந்திரம் இருக்கிறதாம் சுதந்திரம் தொழில் முனைவோரும் தொழிலும் ஆகாதென்று சொல்வதாகவும் . நாட்டை உடனே சோசலிச கொள்கை புகுத்தனும் என்றும் எவன் சொன்னது .
உனக்கு நாடு எப்படி இருக்குதுன்னு தெரியுமா அரை முதலாளித்துவம் அரை நிலபிரபுத்துவம் எனும் வரையறைக்கு இந்தியா இருக்கு எனவும் மூன்றாம் உலக நாடுகளுக்கு புதிய ஜனநாயக புரட்சி மட்டுமே தீர்வாக இருக்கும் என்றும் மாவோ சொன்னதை படிச்சாவது இருக்கியா.
சீனா அதிகாரவர்க்க கும்பல் கையில் போயிட்டா எல்லாமே பொய்யாகிடுமா
//
சீனாவும் இப்போது கம்யூனிஸ்டு இல்லை என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. மனிதக்கறி சாப்பிடும் அவலத்துக்கு சீன மக்கள் தள்ளப்பட்ட நிலைக்கு பின்னர்தான் சீனர்கள் முழித்துக்கொண்டார்கள். சோசலிஸம், மாவோயிஸம் பேசினால், சீனாவே அழிந்துவிடும் என்றுதான் அமெரிக்காவுக்கு போய் பிச்சை எடுத்தார்கள். அவ்வாறு அமெரிக்காவில் பிச்சைஎடுக்கவேண்டாம் என்று எதிர்கருத்து சொல்லக்கூட சீனாவில் மக்களுக்கு உரிமை இல்லை. அந்த நிலைக்குத்தான் மாவோ சீனாவை தள்ளி வைத்திருந்தான்.
//
விபத்து நடந்தால் போக்குவரத்து விதிகள் தப்புன்னு சொல்லுவாய் போலிருக்கு
//
அதே.
ஜனநாயகத்தினால், பத்திரிக்கை சுதந்திரத்தால், வெளியே வரும் ஊழல்களையும் அராஜகங்களையும் காட்டி, இந்திய ஜனநாயகமே தப்பு என்று நீங்கள் வாதிடுவதும் அதே.
//
வார்த்தைகள் மூலம் சொன்னாத்தான் ஓட்டு போடு சரியா போகும்னு சொல்ற
ஓட்டு போட்டா சரியாகலை வேற என்ன தீர்வுன்னா சோசலிட இரஸ்யா தப்புங்கிற
சரிடா என்னதான் தீர்வு வச்சு இருக்கன்னு கேட்டா நான் விமர்சனக்காரன் என்னிடம் சித்தாந்தம் தீர்வு எல்லாம் இல்லைங்கிற அப்புறம் என்ன மயிருக்கு நீ அடுத்தவனுக்கு புத்தி சொல்ல வந்துட்டன்னு கேட்கிறேன்.
//
மீண்டும் சொல்கிறேன். வெறும் ஓட்டு மட்டுமல்ல ஜனநாயகம்.
நான் எப்போது என்னிடம் தீர்வு இல்லை என்று சொன்னேன்? அது என்னுடைய தீர்வும் அல்ல. சாதாரண பொதுமக்களின் சாதாரண அறிவு.
நீங்கள் பதில் கூறிய இந்த பதிவின் இறுதியிலேயே அதனையும் குறித்திருந்தேன். படித்துப்பாருங்கள் மீண்டும்.
//
அடப்பாவி விவசாயிகள் தற்கொலை செய்துகிட்டா அராங்கத்த கலைச்சு இருக்காங்க
எப்ப எங்க ஏப்பா தமிழ் மணி கஞ்சா கிஞ்சா அடிச்சுட்டு இத எழுதினியா ?
இனிமே உனக்கு பதில் கொடுத்தேன் நான் டாராகிடுவென் போல
//
மேலே எழுதியிருக்கிறேன். ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் இந்த காரணத்தினாலேயே அரசுகள் மக்களால் கலைக்கப்பட்டுள்ளன.
மேலே தொடர்ந்து எழுதிய என்னுடைய பதில்களுக்கும் பதில் எழுதியிருக்கலாம். ஆனால், அந்த பதில்கள் உங்களை "டாரா" ஆக்கிவிடும் என்றால், உங்களது விரக்தியை புரிந்துகொள்ள முடிகிறது.
Montag, 19. November 2007
| [+/-] |
நண்பர் ரயாகரனுடன் உலகமயமாதல் விவாதம் |
கம்யூனிஸ வார்த்தைகளை போட்டு எழுதப்பட்டிருப்பதால், இந்தகட்டுரையையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறேன்.
//உலகமயமாதலில் : நவீன அடிமைத்தனங்களின்றி சுதந்திரமான சொர்க்கமில்லை
பி.இரயாகரன்
14.11.2007
நான் எமுதிய 'உலகமயமாதலில் : நவீன அடிமைத்தனங்களின்றி சுதந்திரமான சொர்க்கமில்லை" என்ற புதிய நூல் கீழைக்காற்றின் ஊடாக வெளிவர உள்ளது. அநேகமாக சென்னை புத்தக கண்காட்சியில் பெறமுடியும். இதை நான் நேற்றுத் தான் எழுதி முடித்திருந்தேன். அந்த நூலின் முன்னுரை.
முன்னுரை
நீ மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவன் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். இதுவே உலகமயமாதல் என்ற பொருளாதாரத்தின் அடிப்படையான இயங்கு விதி. வெளிப்பார்வைக்கு இது உருத்தெரியாத ஒன்றாக உருத்திரிந்து இயங்குகின்றது. தனிமனித சுதந்திரம், தனிமனித தெரிவு, இருப்பதைக் கொண்டு எப்படியும் வாழ்வென்கின்றது. இதுதான், இப்படித்தான் உலகம் என்கின்றது. இதை மாற்ற முடியாது என்கின்றது. இதை இயற்கையானது என்கின்றது. இதையே மனித ஜனநாயகம் என்கின்றது. மனித சுதந்திரம் என்கின்றது. இதன் உள்ளாhந்த சமூக விதியை கற்றுக்கொள்ளாதே என்பதே, இதன் பொருள். //
உலகமயமாதல் என்றால் என்ன என்பதை முதலில் விளக்கிவிட்டு, அதன்பின்னே உங்களது விமர்சனத்தை வைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
globalization என்னும் உலகமயமாதல் என்பது புதியதான ஒன்றுஅல்ல. ரோமானியர்கள் இந்தியாவின் மிளகை வாங்கிக்கொண்டு சென்றதும், அவர்கள் அதற்கு பதிலாக தங்கமோ அல்லது அவர்களிடம் இருந்த வேறு விதமான பொருட்களையோ கொடுத்ததற்கு முன்னமே இந்த உலகமயமாதல் ஆரம்பித்துவிட்டது. பக்கத்து கிராமத்திடம் உள்ளதை உங்கள் கிராமத்தில் இல்லாததை பக்கத்து கிராமத்திலிருந்து வாங்குவதிலிருந்தே இது ஆரம்பித்துவிட்டது.
இன்று அது வேகமாகவோ அல்லது இன்னும் வலிமையாகவோ ஆகியிருக்கிறது என்று சொல்லலாமே தவிர அது புதிய ஒன்று என்று சொல்ல முடியாது.
அது வேகமாக ஆனதற்கு அடிப்படை நாடுகளிடையே வியாபாரம் அதிகரித்ததுதான். வியாபாரம் என்றாலே ஒருவன் மகிழ்ச்சியை அனுபவிப்பதும் மற்றொருவன் துன்பத்தை அனுபவிப்பதும் என்று எப்படி நீங்கள் வரையரை செய்கிறீர்கள்? இதன் உள்ளார்ந்த சமூக விதி என்பதுதான் என்ன? என்னிடமிருப்பதை கொடுத்து என்னிடம் இல்லாததை வாங்குவதுதான் எல்லோரும் செய்வது. அதுதான் வியாபாரம். எனக்கு ஒரு பாடபுத்தகம் வேண்டுமென்றால், நானே அதனை உட்கார்ந்து எழுதி பிறகு அதனை படிக்கமுடியுமா? அதனை வேறொருவர் பலருக்கும் பயன்படும் விதத்தில் பதிப்பித்து வேண்டுபவர் வாங்கலாம் என்றால்தானே நான் போய் வாங்க முடியும்? இதிலென்ன புரியாத சமூக விதி?
//நவீன அடிமைத்தனம் என்பது, இப்படி நுட்பமானது. அது சிந்தனை முறையில் திணிக்கப்படுகின்றது. மனித அறிவியல் தற்குறித்தனத்தை புகுத்துகின்றது. சில பொருட்கள், பொருட்களைப் பற்றி கதைத்தல், நுகர்த்தல் என்ற எல்லைக்குள், மனித அறிவை மலடாக்கி நவீன அடிமைத்தனத்தை வாழ்வியலாக மாற்றிவிடுகின்றது. சமூகம் தன்னைச் சுற்றியுள்ள இந்த வட்டத்தை விட்டு, சுயமாக வெளியில் வரமுடியாது. அந்த வகையில், நவீன ஊடகவியல் மனிதனை தனது சொந்த சிறையில் பாதுகாப்பாக வைத்துள்ளது. //
நவீன ஊடகவியல் மனிதனை சொந்த சிறையில் வைத்துள்ளது என்றால், நீங்கள் புது ஊடகத்தை உருவாக்கலாமே? அவரவர் எழுதும் வசதிக்கென பிளாகும், இணையமும் கொண்டுவந்து மக்களை விடுவித்திருப்பதும் இதே உலகமயமாதலின் விளைவுதானே? அது இல்லையென்றால், எப்படி நீங்கள் எழுதியதை நான் படித்திருக்க முடியும்?
//அது தன்னைத் தானே இழிவுபடுத்துகின்றது. கற்றல், கற்றுக் கொள்ளுதல் என்பது, அறிவற்றவனின் வேலை என்கின்றது. சமூகத்தின் சாரத்தை தெரிந்து கொள்ளுதல், வாழத் தெரியாதவர்களின் முட்டாள்தனம் என்கின்றது. சமூக அவலத்தில் இருந்து சமூகத்தை விடுவிக்க முனைவதும் போராடுவதும், வேலையற்றவர்களின் கண்டுபிடிப்பு என்கின்றது.//
அப்படியா? நிச்சயமாக இல்லை. சொல்லப்போனால், ஏதோ நூலகங்களில் சிறைபட்டுக்கிடந்த கோடிக்கணக்கான புத்தகங்களை விடுதலை செய்து கிராமம் கிராமமாக இருக்கும் இண்டெர்நெட் மையங்களிலும் கிடைக்கும் வழியை செய்தது இந்த உலகமயமாதல்தானே?
//இப்படித்தான் நவீன அடிமைத்தனம் புகுத்தப்பட்டுள்ளது. பொருள் உலகில், மனிதன் தானும் ஒரு உயிருள்ள சடப்பொருளாக மாறிவிடுகின்றான். உணர்வுகளும், உணர்ச்சிகளும் வக்கிரமடைந்து விடுகின்றது. மனிதனோ மனித உணர்ச்சியற்ற, மிருக உணர்ச்சி கொண்ட நுகர்வு வெறியனாகி விடுகின்றான். நான் என்ற எல்லைக்குள், அனைத்தையும் தீர்மானிக்கின்றான். சுயநலமோ அவன் மேல் ஏறி உட்காருகின்றது. அனைத்தையும் இதற்குள்ளாக்கி, இதற்குள்ளாகவே பார்த்து சமூகத்தை இழிவாடுகின்றது. //
நுகர்வு என்பது வெறியா? எதனை தான் நுகரவிரும்புகிறோம் எதனை நாம் நுகர விரும்பவில்லை என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தெரியாதா? நிச்சயம் தெரியும். அவன் அதனை நான் என்ற எல்லைக்குள்மட்டும் செய்யாமல் உலகெங்கும் வாழும் அனைவரும் இந்த அறிவு பரவலில் ஈடுபடவேண்டும் என்றுதான் நூலகங்களில் சிறைப்பட்டுக்கிடந்த புத்தகங்களை விடுவித்தான். மின்னணு தொழில்நுட்ப புரட்சி, கணினி புரட்சியாகி, பின்னர் இங்கு கல்வியை பரவலாக்க முடிந்துள்ளது.
மேலும் நுகர்வு என்பதால்தான் ஒரு பொருளுக்கு மதிப்பு என்பது உருவாகிறது.
//மனித குலத்தின் சொந்த அவலத்தை கண்கொண்டு பார்க்க மறுக்கின்றது. மனிதனுக்கு எதிரான நடத்தையை, தனது வாழ்வுக்கான கூறாக பார்க்கின்றது. இப்படி உலகளவில் மக்களைச் சுரண்டி சூறையாடி வாழ்கின்ற ஒரு வர்க்கத்தின் சொர்க்கம் தான், உலகமயமாதலின் சுபீட்சம். இப்படி உருவாகும் சிலரின் சுபீட்சமோ, சமூக உயிரியான மனிதனுக்கு நரகத்தை உருவாக்குகின்றது. //
இங்கு சுபிட்சம் சிலருக்கானதாக இல்லை. இங்கே பலகோடி மக்கள் சமீபத்தில் 20 ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்குக் கீழிருந்து மத்தியதர வர்க்கமாகவும், ஏன் பணக்காரர்களாகவும் ஆகியிருக்கிறார்கள்.
//நவீன மனித அடிமைத்தனங்களே இன்று உலகமயமாகின்றது. இந்த அடிமைத்தனத்தை நாம் எங்கும் எதிலும் காணமுடியும். மனித அடிமைத்தனம் மீது, மனித இழிவுகள் புகுத்தப்படும் வரைமுறையற்ற தன்மை தான் உலகமயமாதலின் வீக்கம். //
உலகமயமாதல் மனிதனை தனது கிராமத்தின் அழுத்தும் கலாச்சாரத்திலிருந்தும், நகரத்தின் குறுகிய மொழி/இன கலாச்சாரங்களிலிருந்தும் விடுவிக்கிறது. கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு அது தெரியும்.
//உலகளாவில் உழைப்பு உருவாக்கும் சொத்துடமையை, சிலரின் சொத்தாக மாற்றுகின்றனர். அதை பாதுகாக்கும் சிலரின் அதிகாரம் வரை நீண்டு விரிந்தது தான், உலகமயமாதலின் சட்ட ஒழுங்கு. இதற்கு உட்பட்டது தான் அனைத்தும். தனிமனித சுதந்திரம் உட்பட ஜனநாயகம் அனைத்தும் இதற்கு கீழ்பட்டது தான். இதை மீறிய (தனிமனித) சுதந்திரம், ஜனநாயகம் என்று எதுவும், இந்த உலகமயமாதலில் கிடையவே கிடையாது. //
இங்கே சொத்துடமை பரவலாக்கப்படுகிறது. வெறும் நிலத்தை மட்டுமே எடுத்துக்கொண்டாலும், ஒருவருக்கு நிலத்துக்கு இருக்கும் தேவை உலகமயமாதலில் வெகுவேகமாக குறைந்துள்ளது. அதனால், நில உடமை பரவலாக்கப்பட்டுள்ளது.
//தனிமனித சுதந்திரம் என்பது ஒரு வர்க்கத்தைச் சார்ந்தது என்பது, சிலரின் வர்க்க நலன்களுடன் தொடர்புடையதாக மாற்றப்பட்டுவிட்டது. முன்பு தனிமனித சுதந்திரம் என்பது ஒரு வர்க்கத்தின் பொது நலன் என்ற மாயை கலைந்து, அதில் உள்ள சிலரின் நலன் என்ற எல்லைக்குள் குவிந்துவிட்டது. விரல்விட்டு எண்ணக் கூடிய சிலருக்காக, உலகம் வேகமாக சுருங்கிச் செல்லுகின்றது. //
இல்லை. எல்லோருக்கும் உலகம் வெகுவேகமாக சுருங்கி வருகிறது. அதனால்தான், தமிழக கிராமத்திலுள்ளவரின் மகன் ஐரோப்பாவில் கணினி பொறியியலாளராக இருக்கமுடிகிறது. அவ்வாறு இருப்பதும், ஒருவரோடு ஒருவர் பேசவும் ஆகும் செலவும் மிகமிக குறைந்து மக்களிடையே நெருக்கமும் அதிகரித்துள்ளது.
//இதனால் கஞ்சிக்கே வழியில்லாத மக்கள் கூட்டத்தின் வயிறோ, மேலும் மேலும் சுருங்கி வருகின்றது. மனித உழைப்பிலான அனைத்து வகை செல்வத்தையும், ஜனநாயகத்தின் பெயரிலும் சுதந்திரத்தின் பெயரிலும் திருடுவதே உலகமயமாதலின் பிழைப்பாகிவிட்டது. //
கடந்த 20 வருடங்களில் 20 சதவீத இந்திய ம்க்கள் வறுமைக்கோட்டிலிருந்து மேலெழுந்து மத்திய தர வர்க்கத்தினராகவும், பணக்காரர்களாகவும் ஆகியுள்ளார்கள். சமீபத்திய ஆய்வுகள், இந்தியாவும் சீனாவும் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக, வறுமை இல்லாத உலகத்தை மிகவும் நெருங்கிவிட்டோம் என்று கூறுகின்றன. ஒரெ விஷயம், இந்தியா தாமதமாக பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதுதான்.
//இந்த தனிமனித நலன் சார்ந்த ஒழுக்கக்கேட்டை பீற்றிக் கொள்கின்ற வக்கிரம் தான், பண்பாடாக கலாச்சாரமாக புணர்ந்து விடப்படுகின்றது. இந்த உலகமயமாதலில் கதாநாயகர்களின் நுகர்வு வக்கிரங்களை பார்த்தும், கேட்டும் ரசிக்கின்ற ரசிகர் கூட்டமாக, ஒரு கற்பனை உலகில் மக்களை சஞ்சரிக்க கோருகின்றனர். இப்படி மக்கள் கூட்டத்தை அற்ப உணர்வுக்குள் திணிப்பதையும், அதை உணர்வதையும் தான் தனிமனிதனின் சுதந்திர உணர்வு என்கின்றனர்.
இவை எல்லாம் எதற்காக? யாருடைய நலனுக்காக? நிச்சயமாக உழைத்து வாழ்கின்ற மக்களுக்காக அல்ல. இந்த வகையில் உலக பொருளாதாரம் என்பது, தேசிய பொருளாதாரம் முதல் ஒரு தனி மனிதனின் பொருளாதாரம் வரையிலான, அதன் சுயேட்சையை அனுமதிப்பதில்லை. தனிமனிதனின் சுயேட்சை முதல் ஒரு மக்கள் கூட்டத்தின் சுயேட்சையான எந்த செயற்பாட்டையும், அதன் இருப்பையும் தகர்ப்பது தான் உலகமயமாதலின் உட்சாரம்.
அதாவது யாரெல்லாம் செல்வத்தை வரைமுறையின்றி மக்களைத் திருடிக் குவிக்கின்றனரோ, அதற்கேற்ற பொருளாதாரக் கொள்கையே உலகமயமாதல். இதுவே உலகப் பொருளாதாரம். //
செல்வம் என்பது ஒரு நிரந்தர புள்ளி எண் அல்ல. அது ஒருவரிடமிருந்து மற்றொருவர் திருடுவதாலேயே ஒருவரிடமிருந்து மற்றவரிடம் சேர்கிறது என்பதும் அபத்தம்.
//இந்த உலக பொருளாதாரம் என்பது உயர்வான இலாப நோக்கில், அனைத்தையும் சிலரின் தனிச்சொத்தாக்கும் வகையில் திட்டமிட்டப்படுகின்றது. இதற்கு வெளியில் மக்களின் தேவையையும், அவர்களின் அவசியத்தையும் அடிப்படையாக கொண்டு, எவையும் திட்டமிடப்படுவதில்லை. அப்படி எந்த அரசும் கிடையாது. இந்த சமூக அமைப்பில் அதிகாரத்தை பெற விரும்புகின்ற எந்த கட்சியும், எந்த அரசு சாராத அமைப்பிடம் கூட, மக்கள் நலத்திட்டம் எதுவும் கிடையாது. //
ஏதோ உச்சத்தில் உட்கார்ந்துகொண்டு மக்களுக்காக திட்டமிடுவது நிறுத்தப்படவேண்டும். மக்களுக்கு அரசியல் சுதந்திரமும், பொருளாதார சுதந்திரமும் கொடுத்தாலே போதும். மக்கள் அவரவர் தங்களுக்கான வேலைகளை பார்த்துக்கொண்டு போவார்கள். மக்கள்நலதிட்டத்தால்தான் மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பது அபத்தம். மக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல.
//இவர்களிடம் முதன்மையான (அரசியல்) நோக்கமாக இருப்பது, உலகமயமாதலின் கொழுக்கின்ற வர்க்கத்தின் நலன்களை பாதுகாத்தபடி, தாம் எப்படி பிழைப்பது என்பது தான். இந்த உலகமயமாதல் என்ற சமூக அமைப்பை ஏற்றுக்கொள்ளும் அனைவரினதும் அரசியல் நலன்களும் கூட, இதற்கு உட்பட்டதே. மக்கள் நலன் என்பது, இவர்களின் அரசியல் வேலைத்திட்டத்தில் ஒரு அரசியல் கூறாகக் கூட இருப்பதில்லை.//
உலகமயமாதலால் கொழுக்கின்ற வர்க்கம் என்பது நீங்களும் நானும்தான். சற்றே பார்த்தால் தெரியும். மூலதனம் இன்று தேச எல்லைகளை கடக்கிறது. ஜனநாயக விரும்பிகள் உழைப்பாளர்களும் தேச எல்லைகளை கடந்து சென்று உழைப்பு தேவைப்படும் இடத்தில் வேலை செய்ய உரிமைகலை கோரினார்கள். விரும்பியோ விரும்பாமலோ இன்று உலகெங்கும் அதுதான் நடந்துவருகிறது. தேச எல்லைகளை கடந்து மெக்ஸிகோ உழைப்பாளர்கள் அமெரிக்காவில் உழைப்பதும்,அமெரிக்கர்கள் ஐரோப்பாவில் உழைப்பதும், இந்தியர்கள் வளைகுடா, அமெரிக்கா என்று உலகெங்கும் உழைப்பதும் இன்று உலகமயமாதலால்தான் சாத்தியமாகி இருக்கிறது.
//மக்கள் கூட்டத்தை ஏமாற்ற, மக்களை பிரித்தாள முனைகின்றன. அரசியல் ரீதியாக இவர்கள் வைக்கின்ற கோசங்கள் முழக்கங்கள், மனிதன் தன்னை உணராத வகையில் வைக்கப்படுகின்றது. கடைந்தெடுத்த அரசியல் பொறுக்கிகளாகத்தான், இந்த சமூக அமைப்பினுள் அரசியல் செய்வோரின் நடத்தைகள் உள்ளன. //
ஆனால், கம்யூனிஸ்டுகள் இன்னும் உலகமயமாதலை எதிர்ப்பதன் மூலம், மக்களை பிரித்தாள முயற்சிக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, கிறிஸ்துவ அடிபப்டைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆகியோரும் இவ்வாறு வெளிநாட்டு உழைப்பாளர்களுக்கு உரிமைகள் கொடுக்கக்கூடாது என்று கோஷம் போடுபவர்களாகவும் இருக்கிறார்கள். சீன கம்யூனிஸ்டுகள் எவ்வாறு ஆக்கிரமிப்பாளர்களாகவும், பர்மா போன்ற நாடுகளில் மனித உரிமைகளை நசுக்குபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம்.
//இந்த உலகமயமாதலில் யாரெல்லாம் பொருட்களை வாங்கி நுகரும் வசதியும் வாய்ப்பும் உள்ளனரோ, அவர்களுக்கு மட்டும் உற்பத்தி என்பது உலகமயமாதல் சந்தை விதியாகும்.//
உற்பத்தி என்பது வாங்கி நுகருபவர் மையம் கொண்டதாகவே மனித குலம் தோன்றிய காலம் தொட்டு இருந்து வருகிறது. அதிகமாக ஒரு பொருளை விரும்புபவர்கள் அதிகமாகும்போது அதனை உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் அதிகமாவார்கள். அதிகமாக உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்வதால், அதிக பொருட்கள் சந்தைக்கு வரும். அதிக பொருட்கள் இருப்பதால், விற்பவர் சந்தை வாங்குபவர் சந்தையாகிறது. தரம் முக்கியத்துவம் பெறுகிறது. பொருள் விலை குறைகிறது.
// பொருட்களை வாங்கி நுகர முடியாத வகையில் சுரண்டப்படும் மனித குலத்தையிட்டு, உலகமயமாதல் சமூக அமைப்பு கவலைப்படுவது கிடையாது. இந்த சமூக அமைப்பை ஏற்றுக்கொண்ட கட்சிகள், கோட்பாடுகள் மற்றும் பொதுநல அமைப்புகள் அனைத்தும், இந்த சந்தை விதியை அனுசரித்து இதற்குள் செயல்படுகின்றது. இதனிடம் எந்த மனித முகமும், சமூக நலனும் இருப்பதில்லை. இது உலகமயமாதல் நோக்கில் நிர்வாணமானது//
பொருட்களை வாங்கி நுகர முடியாத வகைக்கு மனித குலம் மொத்தத்தையும் கொண்டு செல்லவே முடியாது. பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்த பின்னால், வாங்க ஆளில்லையெனில் தானாக விலை குறைகிறது. மக்கள் வாங்க முடியும் அளவுக்கு விலை குறைந்துகொண்டே போகும். தக்காளி உற்பத்தி அதிகமாக ஆகி, பல கோடி டன் கணக்கில் தக்காளி உற்பத்தி செய்துவிட்டு, விலையை 1000 ரூபாய் என்று வைத்து யாரும் வாங்கமுடியாமல் ஆக்குவார்களா? வாங்க முடியாது எனில் விலையை குறைத்துத்தான் ஆகவேண்டும்.
//இந்த உலகமயமாதல் அறிவியல் நோக்கு என்பது, பொருட்களை வாங்க முடியாதவன், பொருள் உலகில் வாழ தகுதியற்றவனாக பார்க்கின்றது. உலகமயமாதல் பொருட்களினாலானது. இலாபமே குறிக்கோளாக கொண்டது. இதற்குள்ளேயே நுகர்வு என்று தீர்மானிக்கின்றது. சுதந்திரம், ஜனநாயகம் என அனைத்தும் இதற்குள் அடிமையானதே. இதை மீறி பீற்றிக்கொள்ள எதுவும் கிடையாது. அற்ப வக்கிரத்தை கொட்டி, பீற்றுவதையே சுதந்திரம் என்கின்றன. //
லாபம் ஒரு நல்ல குறிக்கோள். லாபமே மேன்மேலும் பொருட்களின் விலையை குறைக்கிறது. பொருட்களின் விலை குறைய குறைய மேன்மேலும் மக்கள் நுகரவும் வாய்ப்பாகிறது.
//மனித பண்பாடு, கலாச்சாரம், கல்வி, மருத்துவம் என எதுவாக இருந்தாலும், உலகமயமாதல் என்ற தனிமனித நலனைச் சார்ந்த சந்தை விதிக்கு உட்பட்டதே. யாரெல்லாம் பணம் கொடுத்து இவற்றை பெறமுடியுமோ, அவர்களுக்கு மட்டுமான ஒரு உலகம் தான் உலகமயமாதல். இதற்கு வாழ வழியற்றவராக்கப்பட்டவர்கள், இந்த உலகமயமாதலில் வாழ முடியாது. //
உலகமயமாதல் தனிநபர் மையம் கொண்டது, அதே நேரத்தில் எல்லா தனிநபர்களையும் மையமாக கொண்டது. ஒரு நபரால் பணம் கொடுத்து பெற முடியும் விஷயம் மற்றவருக்கு தேவையாக இருந்தாலும், அது தற்போது பெற முடியாததாக இருக்கலாம். இதுதான் மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து இருந்துவருகிறது. அதிக உற்பத்தி, Automation ஆகியவை பொருளின் விலையை குறைத்துக்கொண்டே போகின்றன. ஒரு காலத்தில் பல கோடி கோடி பெறுமானமாக இருந்த கம்யூட்டர் இன்று காய்கறி விலை அளவு மலிந்தது உலகமயமாதலால்தான் சாத்தியமாயிற்று. இதுவே சிலுக்குவார் பட்டியில் கம்ப்யூட்டர் மையம் தோன்றவும் காரணமாயிற்று.
//இப்படி வாழ முடியாதவர்கள் யார்? உலகமயமாதலில் வாழக் கூடியவன் நுகரும் பொருட்களை, அதன் அடிகட்டுமானங்களை உற்பத்தி செய்பவன் தான். இப்படி வாழ முடியாதவனை உற்பத்திசெய்யும் உலகமயமாதல் என்பது, மனித உழைப்பு அதியுயர் இலாப எல்லைக்குள் வரைமுறையின்றி சுரண்டப்படுவதால் உருவாக்கப்படுகின்றது. உலகமயமாதல் உற்பத்தி செய்பவனுக்கும் கொடுக்கும் அற்ப கூலியில், அவன் உற்பத்தி செய்தவற்றை அவனே நுகர முடியாது போகின்றது. உண்மையில் ஒரு வர்க்கத்தின் நுகர்வுக்குரிய பொருளை உற்பத்தி செய்பவன், அதை நுகர முடியாது பிறிதொரு வர்க்கமாகின்றான். இதனால் மனித வாழ்க்கையே வர்க்கப் போராட்டமாகி விடுகின்றது. //
தவறு. ஒரு இடத்தில் உற்பத்தி செய்பவன் மறு இடத்தில் நுகர்பவனாக இருக்கிறான். நுகர்வதற்கு ஆட்கள் இல்லையேல், சமூகம், கலாச்சாரம், உணவு, சிற்றுண்டி விடுதி, பத்திரிக்கை, இண்டர்நெட், பிளாக் அனைத்தும் தேவையுமில்லை, இருக்கவும் இருக்காது.
--
Standard Disclaimer: ரயாகரனின் இந்த கட்டுரைக்கு மட்டுமே இந்த விமர்சனம். அவரது வேறெந்த கருத்துக்களையும் விமர்சிப்பதாக எடுத்துக்கொள்வது படிப்பவரின் மனநலத்துக்கு ஆபத்தானது.
Dienstag, 13. November 2007
| [+/-] |
ஜமாலனின் - அறிவு மற்றும் உணர்வு பற்றிய சில எடுகோள்கள் - மீதான கேள்விகள் |
உடல்தேடி அலையும் ஆதாம்களும், ஏவாள்களும் - அறிவு மற்றும் உணர்வு பற்றிய சில எடுகோள்கள்.
//
7. உயிர் என்பது ஒரு வேதிவினை. உடல் என்பது இவ்வினை நடைபெறுவதற்கான களம். உயிர்த்தலுக்கான வேதிமம் என்பது ஒருவருக்கு வாழ்வதற்கான மகிழ்வின் உணர்ச்சிகளை உருவாக்கும் புரதங்கள் (புரோட்டின்) ஆகும். உடல் 20 வகை புரதக் கூட்டுகளால்தான் உயிர் வாழ்கிறது. அதனால்தான் புரத அமிலங்களை உயிர்ம அமிலம் என்கிறோம். எனவே, உணர்ச்சிகள் என்பது ஒருவகை புரத அமிலங்களின் வினைபாடுகளே, அவ் அமிலங்கள் உருவாக்கும் வினையின் ஆற்றலே மூளையில் கட்டளைகளை உருவாக்கி நரம்புகளுக்கு செய்திகளை அனுப்புகிறது, அச்செய்திகளை பெற்ற நரம்புகள் ஒன்றை ஒன்று ஊடுறுவி ஏற்படுத்தும் முடிச்சுகளின் அமைப்பும், விளைவுமே நாம் பெறும் உணர்வுகள் ஆகும்.
//
விலங்குகளின் உணர்வுகள் வெறும் வேதிவினைகளே என்று கூறுகிறீர்கள். நம் உடல் ஒரு வேதியியல் சாலை என்றால், இந்த வேதிப்பொருட்கள் புரியும் வேதிவினைகளுக்கு ஏன் கவலைப்படுகிறீர்கள்
அதாவது ஒருவன் துயரமடைவதாக கருதுவதற்கும், சந்தோஷப்படுவதாக கருதுவதும், ஒரு பரிசோதனை குழாயில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் ஏதோ தனிமத்துடன் புரியும் வேதிவினை போன்றது என்றால் இதற்கு ஏன் உரிமை, மஞ்சுமெத்தையில் இருக்கும் வேதிவினை, கட்டாந்தரையில் இருக்கும் வேதிவினை என்று கவலைப்பட வேண்டும்? யாரேனும் பரிசோதனைக்குழாயில் இருக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துக்கோ அல்லது வேறேதும் புரத அமிலத்துக்கோ வேதிவினை புரிய சரியான தனிமம் கிடைக்கவில்லை என்று கவலைப்படுவார்களா?
//8. இந் நரம்புகளின் முடிச்சு கலைந்து விலகி பழைய நிலையை ஏற்படுத்தும்வரை நரம்புகள் இயக்கமற்றும் அல்லது ஒரேவகை இயக்கத்தை மட்டுமே கடத்தும் செயலை செய்வதால், நாம் தொடர்ந்து ஒரேவகை உணர்விற்கு ஆட்படுகிறோம். இதுவே நம்மால் புரிந்து கொள்ள முடியாததாக உணாவுகள் இருப்பதன் மர்மம். உணர்விற்கு ஆட்படும்போது நரம்புகளில் ஏற்படும் முடிச்சுகளால் மூளையின் செய்தி வினைகள் தடைப்படுவதால், மூளை அந்நேரத்தில் உடலின் இயக்கத்தை பதியவைக்க முடிவதில்லை. அத்துடன் மூளையில் ஏற்படும் அதீத ஆற்றலின் விளைவால் அதன் செயல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே, உணர்வுகளுக்கு ஆட்பட்டவர், உணர்வுகளில் இருந்து விடுபட்டவுடன் சற்று குழப்பமான நிலையிலும், தனக்கு ஏற்பட்ட உணர்வுகளின் சுவடை மட்டுமே உணர்ந்தவனாய், அவ்வுணர்வுகளை மீளவும் நினைவு படுத்த முடியாதவனாய் இருக்கிறான்.//
ஆகவே கம்யூனிஸ சமூகத்தில் எல்லோரும் ஒரே விதமான வேதிவினைகளே கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று இருக்குமா? வேறு வேதிவினைகள் நடந்துவிட்டால் அவர்கள் என்ன செய்யப்படுவார்கள்? மனிதர்களில் உடல்கள் கருத்துக்கள் எண்ணங்கள் ஆகியவைவெறும் வேதிவினைகளே என்பதால் அவர்கள் தீர்த்துக்கட்டப்பட்டால், அது சரியாக மற்ற வேதிவினைகளால் (மனிதர்களால்) புரிந்துகொள்ளப்படுமா?
//9. தோடர்ந்து ஒரேவகை உணர்விற்கு பழக்கப்பட்ட ஒருவரது நரம்பு மண்டலம், அவ்வகை உணர்விற்கான வினைகளை எளிமையாகவும், சுலபமாகவும் ஏற்கிறது. அவ்வுணர்விற்கான தூண்டல் காரணிகளையும் பழக்கப்படுத்திக் கொள்கிறது. காதலிப்பவரை பார்ப்பதும், அவர் பற்றி நினைப்பதும் காதல் உணர்வை தூண்டும் காரணியாக இருந்தால், அவர் சம்பந்தப்பட்ட எல்லாம் ஒருவகை வினைதூண்டும் திறப்பு செய்தியாக அல்லது அமிலமாக உடலில் சேகரமாகிறது. (காதலுக்கு 'அடிர்னிலின்' மற்றும் கிளைக்கோஜன்' - என்கிற இரு வேதிமங்கள் தேவை என்கிறது 'Cybernetics Msdely' என்கிற நூல்.) அவர் குறித்த நினைவே மகிழ்விற்கான அமிலத்தை சுரக்கிறது, இதையே காதலுக்கான வேதிவினையின் முதல்படியாக கொள்ளலாம்.//
ஆக காதல் பற்றிய கவிதைகளும் திரைப்படங்களும் வேதிவினைகளின் விளைவுகளே என்று கூறுகிறீர்கள். அதே போல உரிமைக்கும் ஏதேனும் வேதிவினை இருக்கிறதா?
//10. மனித இருத்தல் எப்பொழுதும் சாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது, தனது மரணம் பற்றிய பயமே மனிதனை கூட்டிணைவை தேடும் ஒரு சமூக மிருகமாக வைத்திருக்கிறது. இவ் இணைவின் அடிப்படையெ, தனது இனத்தை பெருக்குவதின் அவசியத்தையும், அதாவது இன வலிமையை உருவாக்க வேண்டிய தேவையையும் உருவாக்குகிறது. தனது மனதின் கட்டமைப்பில் செறிந்துள்ள (அல்லது கட்டமைப்பை உருவாக்கிய முக்கிய காரணியில் ஒன்றான மரண பயத்தின் மனோவியல் வன்முறையிலிருந்து தப்ப மனதை பிறருடன் வினைப்படுத்திக் கொள்வதும் அவசியமாகிறது. இனவலிமையை பெருக்கும் ஒரு சடங்காக திருமணமும் (அதனால்தான் இதனை வளமை பெருக்க சடங்கு என்கிறார்கள்), மனோவியல் வன்முறையை பகிர்வதன் மூலம் அதன் அழுத்தத்திலிருந்து தப்பும் ஒரு செயலாக காதலும் உருவான பிண்ணனியை இவ்வாறாக யூகிக்க முடிகிறது.//
ஆகவே, சாவு என்பது இல்லாமல் போனால், சமூகமும் அழிந்துவிடும் என்று சொல்கிறீர்கள். சமூகம் இருந்தால் அதன் விதிகளோடு ஒத்துப்போக வேண்டிவரும். ஆகவே கம்யூனிஸ சமூகத்தில் சாவு என்பது இல்லாமல் ஆகிவிடும் என்று புரிந்துகொள்ளலாமா?
//11.காதல் என்பது நம் சமூகத்தில் திருமண சடங்குடன் கறாறாக இணைக்கப்பட்டதின் விளைவு, காதலின் உடலியல் அடிப்படை சிதைவிற்கு உள்ளாகி விட்டது, அப்படியென்றால் காதலும், திருமணமும் வேறுவேறா? என்றால், காதலின் முடிவு திருமணமாக இருக்கலாம், ஆனால் காதல் என்பது திருமணத்தை மட்டுமே கொண்டமைந்த ஒரு செயல் அல்ல. காதலுக்கு பால் வேறுபாட்டைக்கூட நாம் முதன்மைப் படுத்த முடியாது, அதாவது ஆண்-பெண் என்கிற இணைமட்டுமே காதலிக்க முடியும் என்பதற்கு இனப்பெருக்கத்திற்கு அப்பால் வேறு எந்தவித விஞ்ஞான அடிப்படைகளும் இல்லை.//
இனப்பெருக்கம் என்பது விஞ்ஞான அடிப்படைதானே? அது போதாதா? ஒரு சில நேரங்களில் வேதிவினைகள் காரணமாக ஓரினப் பாலுறவு காதல்களும், இதர விலங்கினங்கள் மீது காதலும் தோன்றலாமா? அத்தகையை வேதிவினைகள் (மனிதர்கள்) கம்யூனிஸ சமூகத்தில் என்ன செய்யபடுவார்கள்?
//12. காதல் என்பது மனித நாகரீகத்தின் வளர்ச்சியை உருவாக்கிய முக்கிய காரணியாகும். அதனை மதங்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததன் மூலம் காதலை புனிதமானதாகவும், அதன் விளைவு திருமணம் என்பதாகவும், அறவியலின் குறியீட்டு திரளுக்குள் காதலை ஒடுக்கி (ஒழுக்கம் பேனும் எந்திரமாக்கி) ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கோட்பாட்டை பின்பற்றும் ஒரு செயலாக்கியது. காதலின் உடல் சார்ந்த இருப்பை, மனம் சார்ந்ததாக மாற்றி அமைத்து, காதல் என்பதை மனப்புனித அடிப்படையில் உருவாக்கியதில் காதல் இலக்கியங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. இவ்விலக்கியங்கள் காதல் வேதங்களின் அடிப்படைகளாக மதங்களால் வளர்க்கப்பட்டதின் அரசியலை புரிந்து கொள்ள முடிகிறது இவ்வாறாக.//
ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் பறவைகளும் விலங்கினங்களும் உண்டு. அந்த இணை இறந்துவிட்டால் கூடவே இறந்துவிடும் பறவைகளும் விலங்கினங்களும் உண்டு. அதுவும் மனிதநாகரிகத்தின் வளர்ச்சியின் காரணம்தானா? இவ்வாறு அந்த விலங்கினங்களும் பறவைகளும் இருப்பதுவும் மதங்களின் காரணமாகத்தானா?
//13. ஒருவரது காதல், இருத்தலுடன் இணையும் போது காதலின் அதீத தன்மை உருவாகுகிறது. லைலா-மஜ்னு (அரபியில் லைலா-மஜ்னு என்றால் இரவுப் பைத்தியம் என்று பொருள். சூஃபிகள் இதற்கு தரும் அர்த்தம் வேறுமாதிரியானது.), அனார்-சலீம், ஆண்டனி-கிளியோபாட்ரா, தேவதாஸ்-பார்வதி போன்றவர்களின் அல்லது இவ்வகை கதைமாந்தர்களின் காதல் உன்னதம் பற்றிய புனைவுகள் ஒரு சமூகத்தின் காதல் வேதிவினைகளையே மாற்றும் சக்தியை இவ்வாறே பெருகின்றன. உலக இலக்கியத்தில் உன்னத இலக்கிய அந்தஸ்துகளை பக்தி இலக்கியங்களைவிட காதல் இலக்கியங்களே பெற்றிருப்பதன் விஞ்ஞானமாக இதனை புரிந்து கொள்ளலாம். பக்தி என்பது ஒருவகை புணிதக்காதல்தான். இதில் இறையை பெண் உடலாகவும் மனிதத்தை ஆண் உடலாகவும் உருவகமாக்கி நிகழ்த்தப்படும் ஒரு காதலாகும்.//
பல்வேறு இடங்களில் இறையை ஆணாகவும் பாடும் மனிதனை பெண்ணாகவும் கருதிய பாடல்களும் உண்டே.
//14. அறிவு என்பது பதப்படுத்தப்பட்ட உணர்வு. பல்வேறு நிலைகளில் உருவாகும் உணர்வுகளின் வினைபாடுகள் உருவாக்கும் விளைபொருளாக அறிவு இருக்கிறது. அதனால்தான் சிந்தனையின் முதல்படியாக உணர்வே நமக்கு உருவாகுகிறது. ஒரு புரியாத உணர்ச்சியின் விளைவால் உருவாகும் வேதிப் படிமங்களே பிறிதோரு வினைக்கான வேதிமூலகங்களாக அமைகிறது. இவ்வாறு உருவாகி சேகரிக்கப்பட்ட பல வேதிமூலகங்களின் குறுக்க வினையாகவே அறிவின் வினை உருவாகுகிறது. இவ்வினையில், உணர்வுகளின் வடிவம் சுருக்கப் பட்டும்;, தேவையற்ற வேதிமங்கள் கழிக்கப்பட்டும் பதப்படுத்தப்பட்ட நிலையில் நடைபெறுகிறது. ஒரு வினைக்கான சூத்திரங்களாக அறிவு உருவாக்கப்படுகிறது, பிறிதோரு வேதிம வடிவில். ஆக, உணர்வு அறிவு எல்லாம் ஒருவகை உயிர் வேதிமச் சூத்தரங்களாக எழதப்படக்கூடிய சாத்திய்களைக் கொண்டவை. அப்புறம் கவிதைகளை compund-களாக எழுதவேண்டி வரலாம்.//
ஆகவே அறிவும் ஒரு வேதிவினையே என்ற் சொன்னால், அதனைப்பற்றியும் எந்த அலட்டலும் இல்லாமல், அழித்தொழித்து விடுவதத எதிர்கால கம்யூனிஸம் செய்யுமா? அதனைப்பற்றி கவலை என்னும் வேதிவினை மனிதர்கள் என்னும் வேதிவினை தொகுப்புகளின் உள்ளே வராமல் இருக்க, கம்யூனிஸ தலலவர்கள் என்ற வேதிவினை தொகுப்புகள் என்ன வேதிவினைகளைச் செய்வார்கள்?
//15. உணர்வு என்பது பிரிக்க முடியாதபடி அறிவின் முதல்படியாக உள்ளது. உணர்வுபூர்வமான செயல்கள் ஒரு கட்டத்தில் அறிவாக மலர்கிறது, பிறிதோரு நிலையில், அறிவின் பொருத்தப் பாட்டிற்கு ஒத்துப் போவதில்லை. (இங்கு, அறிவு என்பதை சரியானது-தவறானது என்கிற வாழ்நிலை அர்த்தங்களில் கூறவில்லை.) அதாவது, உணர்வின் வினை ஆற்றல் உயர்மட்ட நிலையை அடைந்தால், அதிலிருந்து உருவாகும் அறிவு என்பது சமூகப் பொருத்தமற்ற செயல்களைக் கூட ஊக்குவிப்பதாகிறது. இந்நிலையிலேயே, உணர்வுபூர்வமான செயல்கள் என்பது சமூக அங்கீகரிப்பை பெறுவதில்லை. பாமர உணர்வு என்பதன் விஞ்ஞானம் இவ் அடிப்படையிலேயே புரிந்து கொள்ளத் தக்கது.
இத்துடன் அறிவு-உணர்வு பற்றிய எடுகோள்கள் முடிகிறது.
- ஜமாலன் (1995)
Posted by ஜமாலன் at 12:35 PM
//
ஆகவே வேதிவினைகள் என்று உடலையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் இந்த அறிவும், சமூகப்பொருத்தமற்ற பல்வேறு செயல்களுக்கு அடித்தளம் ஆகிறது. ஆகவே உணர்வுப்பூர்வமாக பார்க்காமல் அறிவுப்பூர்வமாக பார்த்து (வேதிவினை புரிந்து), எந்த வேதிவினைகள் தங்கவேண்டும் எந்த வேதிவினைகள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று அறிவுப்பூர்வமாக வேதிவினை புரிந்து செயலாற்ற வேண்டும் என்று சொல்கிறீர்களா?
Montag, 12. November 2007
| [+/-] |
நண்பர் ஜமாலனுடன் அனானி1இன் கம்யூனிஸ விவாதம் |
ஜமாலனின் பின்னூட்டம் இங்கே. (முந்தைய பதிவிலும் அவரது பின்னூட்டம் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளது)
அதற்கான அனானி 1இன் பதில் இங்கே
Anonym said...
அன்புள்ள ஜமாலன்,
வணக்கம். நான் பழைய அனானி.
அனானிகளையும் இந்தப் பின்னூட்டத்தில் நீங்கள் இழுத்து ரெண்டு சாத்து சாத்தியிருப்பதால் இந்தக் கடிதம்.
உங்கள் பின்னூட்டத்தின் முதல் பாரா தி மு க மேடைப்பேச்சின் "அழகையும்" " ஆணவத்தையும்", " அவசரத்தையும் " ஒருங்கே கொண்டிருந்தது. அபத்தத்தைக் கூட ரசிக்கும்படியாய் வெளிப்படுத்தமுடியும் என்ற தி மு க தத்துவத்தை முதல் பாராவில் நிரூபித்திருக்கிறீர்கள்.
1. ஓட்டை ஜனநாயகத்தின் கீழ் தான் "தெஹல்கா" நடத்திய ஆய்வு வெளிவந்திருக்க முடிந்திருக்கிறது. ரஷ்யாவில் ஓட்டை ஜனநாயகம் வந்தபிறகு தான் கொஞ்சமேனும் ஸ்டாலின், லெனின் அட்க்குமுறைகள் "தெஹல்கா" ஆய்வு போல வெளிவந்திருக்கின்றன. எனவே ஓட்டை ஜனநாயகம் ஆதரிக்கத் தக்கதே. சர்வாதிகாரத்தின் கீழ் சீனாவில் தியனன்மன் அடக்குமுறை, ஃபலுன் காங் அடக்குமுறை , திபெத் ஆக்கிரமிப்பு பற்றிய "தெஹல்கா" ஆய்வு வரவேண்டுமெ என்றால் சீனாவில் குறைந்தபட்ச ஓட்டை ஜனநாயகமாவது வரவேண்டும் என்று நீங்கள் சொல்வதாய் இதை நான் புரிந்து கொள்கிறேன். அதற்கு முயலுங்கள் அல்லது முயலும் சக்திகளுக்குத் துணையாய் இருங்கள். சர்வாதிகாரத்துக்கும் , ஓட்டை ஜன்நாயகத்திற்கு போட்டி என்றால் ஓட்டை ஜனநாயகத்திற்கே நாம் ஓட்டுப் போட வேண்டும் இல்லையா? ஏனென்றால் ஓட்டை ஜனந்நயகத்திலிருந்து உண்மையான ஜனநாயகத்திற்கு எப்போதாவது போகலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சர்வாதிகாரத்தின் கீழ் அந்த வாய்ப்பு இல்லை.
2. பொது மக்கள் என்று யாரும் இல்லை என்று தெரிவித்த கருத்துக்கு நன்றி. இனிமேலேனும், மக்கள் கலை இலக்கியம், மக்கள் ஜனநாயகம் என்ற வார்த்தையை விட்டு விடச் சிபாரிசு செய்யுங்கள். சோஷலிசத்தின் கீழ் யாருமே மலம் அள்ள வேண்டியிருக்காது, ஏனென்றால் எல்லொருக்குமே நிரந்தர மலச்சிக்கல் இருக்கும் என்று புரிந்து கொண்டேன்.
3. அப்பாவி மக்களை நக்சல்பாரிகள் கொன்றதில்லை என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டீர்கள். செத்தவர்களை விசாரிக்கவா முடியும்? நக்சல்பாரிகள் கொன்றால் அவர்கள் மக்கள் விரோதிகள் தான் என்று லேபல் ஒட்டிவிடலாம்.
4. உங்கள் வன்முறைப் பட்டியல் சுவாரஸ்யமானது. இந்திய சர்வதேச கொலைப் பட்டியலை விடவும் ஸ்டாலின் , மாஒ கொன்றவர்களின் எண்ணிக்கை அதிகம் அல்ல என்பதால், மாஒ ஸ்டாலின் செய்த கொலைகளைப் பற்றிப் பேசக் கூடாது என்பதும் கூட தர்க்க ரீதியாய்ச் சரியாய்த்தானிருக்கும். ஆனால் உங்கள் பட்டியலில் பாருங்கள் மிக கவனமாக தாலிபன் அரசு நிஅகழ்த்திய படுகொலைகளும், பாகிஸ்தானிலும் காஷ்மீரிலும் ஜிகாதிகள் பண்ணிய கொலைகளும் விடுபட்டிருக்கின்றன. ஒருவேளை ஸ்டாலின் ,மாஒ போல இஸ்லாமிய பயங்கரவாதிகளும் "எதிரிகளை" உன்னத நோக்கத்திற்காகக் கொல்வதாய் நீங்கள் நினைக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளலாமா?
5. நீங்கள் இட்ட கொலைப் பட்டியலில் இரண்டு விதமான கொலைகள் உள்ளன. ஒன்று போரின் போது நிகழ்ந்த கொலைகள் . இரண்டாவது தன்னுடைய மக்களை - ஏதோ ஒரு காரணத்திற்காக, முக்கியமாய் தம்மைக் காட்டிலும் கீழானவர்கள் (யூதர்கள், நாட்டின் பூர்வகுடிகள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் ) என்ற இனவாதக் காரணத்திற்காகக் கொல்லப் பட்டவர்கள். இப்படிப் பட்ட இனவாதக் கோட்பாட்டின் ஓர் அங்கம் தான் கம்யூனிசக் கொலைகள். யூதன் என்று ஒரு லேபிளுக்காக அல்லது சோஷலிச விரோதி என்ற லேபிலுக்காகக் கொல்லப் பட்டவர்கள் எல்லாம் தனக்குத் தான் மற்றவனின் உயிரை எடுத்து உலகைக் காப்பாற்றும் உரிமை இருக்கிறது , என்ற கோட்பாட்டின் கீழ்க் கொல்லப் பட்டவர்கள். போரில் கொல்லப் பட்டவர்களை இந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. ஏனென்றால் போர்க் கொலைகள் வரலாற்றில் நெடுக நிகழ்ந்து வருபவை.
6. மக்கள் நலனில் நாட்டம் உள்ள அரசு ராணுவத்திற்கும், காவல் துறைக்கும் எப்படி செலவு செய்யாமல் இருக்க முடியும்? நக்சல்பாரிகளின் கொலை வெறியிலிருந்து, திருட்டு, கொள்ளை போன்றவற்றிலிருந்தும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இல்லையா? சோஷலிச அரசில் ராணுவமும், காவல்துறையும் உதிர்ந்து போயிற்றா? சிறைச்சாலைகள் மூடப்பட்டு விட்டனவா?
7. இன்றைய வாழ்கை சிறந்தது என்று யாரும் வாதிடவில்லை. நிச்சயம் உழைக்கும் மக்கள் மட்டுமல்ல எல்ல மக்களும் வாழ்க்கை வசதிகள் பெற்று வாழ உரிய முயற்சிகள் செய்யப் படவேண்டும். ஆனால் வன்முறை மூலம் அந்த முயற்சிக்கான தடைகளை உருவாக்கிக் கொண்டிருப்பதால், மக்கள் வரிப்பணம், மக்கள் நலனிற்குச் செலவிட வேண்டிய வரிப்பணம், காவல் துறை முயற்சிகளில் வீணாகிறது.
8. என் கேள்வி ஏன் வாக்குரிமை அரசியலையும் உங்கள் ஆயுதமாய் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான். ஏற்கனவே பீஹார் போன்ற மாநிலங்களில் நக்சல்பாரிகள் வாக்குப்பெட்டி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்களே.
9. மார்க்சியம் மத நம்பிக்கையாய் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று நீங்கள் சொல்வது ஒப்புக் கொள்ளத்தக்கதே. மதம் வெறியாய் மாறி பயங்கரவாத தாலிபனாய் உருவாகாத வரையில் நிச்சயம் நம்பிக்கைகளுக்கு - அவை மூட நம்பிக்கையாய் இருந்தாலும் - ஜனநாயகத்தின் கீழ் இடம் உண்டு. ஜனநாயக சமூகம் நம்பிக்கைகளில் எது சரி எது தவறு என்று தீர்மானிப்பதில்லை.
நன்றி
பழைய அனானி.
12. November 2007 08:05
| [+/-] |
ஜமாலனுடன் என்னுடைய கம்யூனிஸ விவாதம் |
//ஜமாலன் said...
வாக்குப்பொறுக்கி அரசியலின் ஏகப்பிரதிநிதியாகி இந்திய ஓட்டை ஜனநாயகத்தை (பார்க்க தெகல்ஹா) தனது வாத்திறமையால் அடக்க வந்த வாதவூரான் நரியை பரியாக்கி மாணிக்கவாசகத்தின் வாரிசாக.. இங்கும் தனது மாய்மாலங்களைக் காட்ட அல்ல ஆட்ட வந்துள்ள அணாணிகளக்கும் அவர்களக்கு மஞ்சம் விரிக்கும் அஞ்சா நெஞ்சன் அண்ணண் தமிழ்மணி அவர்களுக்கும்.
//
வாக்குப்பொறுக்கி அரசியலில் ஏகப்பிரதிநிதி நானல்ல. இந்தியாவில் ஓட்டுப்போடும் அனைவரும் வாக்குப்பொறுக்கி அரசியலின் பிரதிநிதிகளே.
மற்றபடி, மாய்மாலங்கள்,ஆட்டவருவது, மஞ்சம் விரிப்பது, அஞ்சாநெஞ்சன், அண்ணன் ஆகிய உங்களது வசையாடல்களை நிராகரிக்கிறேன். இவைகள் உங்களது வாதங்கள் அல்ல என்பதால், உதாசீனம் செய்கிறேன்.
//
முதலில் நான் ம.க.இ.க. இல்லை. என்றாலும், ம.க.இ.க.-வின் பிரச்சாரகராக தாங்கள் மீள்பதிவிட்ட பகுதிகளுக்கு பாராட்டுக்கள். இல்லாவிட்டால் அதை நான் படித்திருக்க வாய்ப்பில்லை. நன்றி.
//
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணவேண்டும் அல்லவா, நன்றி.
//
உங்க பஞ்சாயத்தில் நீங்கள் என்னையும் இழுப்பதால். இந்தமாதிரி ஒன்டே மாட்செல்லாம் பலகாலமா விளையாண்டு வெறுத்த விட்டதால். ஆட்டைக்கு நா போறதில்ல. இருந்தாலும், மாஞ்சு மாஞ்சி வரிக்க வரி எதிர்த்து எழுதப்பட்டுள்ள உங்களின் வாதத்திறமை கண்டு மெச்சியே இது எழுதப்படுகிறது. எல்லா வரிகளின் இறுதியையும் பேசாமல் "இல்லை" என்கிற சொல்லை மட்டும் இணைத்திருந்தாலே எல்லா கட்டுரைகளையும் மறத்துவிடலாம். அது எதுவாக இருந்தாலும். ஆணால் நீங்கள் அப்படி செய்யாமல் மெனக்கெட்டு தட்டச்சு செய்த அந்த விரல்களுக்கு தங்க காப்புதான் போட வேண்டும்.
//
இல்லை நான் உங்களை இழுக்கவில்லை. நீங்கள்தான் முதலில் என் பதிவில் வந்து பதில் எழுதினீர்கள். ஆகவே உரையாடுபவர்கள் வரிசையில் உங்கள் பெயரையும் கொடுத்து மரியாதை செய்திருக்கிறேன்.
//
உங்கள் மொத்த கட்டுரையும் ஒரே ஒரு தர்க்கத்தின் மீதுதான் கட்டப்பட்டிருக்கிறது. அது.. நக்சல்பாரிகள் அப்பாவியான மனிதர்களை கொல்லும் கொலைவெறியர்கள் என்பது. மார்க்சிய-லெனினியு-மாவோசியம் என்பது அரசுக்கும் அதிகார மற்றும் ஆளும் கேடுகெட்ட பின்-முன்-நவ காலனிய தரகு முதலாளிய நிலபிரபுத்துவ சக்திகளுக்கும் எதிரானது. அது அப்பாவி மக்களக்கு அல்ல. அப்பாவி மக்களை அது கொன்றதும் இல்லை.
//
நக்ஸல்பாரிகள் மட்டுமல்ல, கம்யூனிஸ சித்தாந்தமே அப்படிப்பட்டதுதான்.
அந்த சித்தாந்ததின் கீழே தான் இருப்பதாக கூறும் அனைவருமே வன்முறை மூலம் அதிகாரத்தை பெறுவதை அடித்தளமாகவும், தான் கொண்ட கொள்கையாகவும் கொள்பவர்கள். கார்ல்மார்க்ஸ், எஞ்செல்ஸ், ரோஸா லக்ஸம்பர்க், லெனின், ட்ராட்ஸ்கி, மாவோ, ஸ்டாலின், போல்போட் என்று நீளும் வரிசையில் உள்ள அனைவருமே வன்முறை மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதை முக்கியமானதொரு அடித்தளகொள்கையாக கொண்டவர்கள்.
நான் உயரிய நோக்கத்திற்காக கொல்கிறேன் என்றுதான் எல்லா வன்முறையாளர்களும் கூறுகிறார்கள். அப்பாவி மக்கள் என்பது ஆயிரக்கணக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக மந்திரியின் மகனாகவோ, அல்லது ஏழையின் மகனாகவோ, புரட்சிக்காரனின் மகனாகவோ, அல்லது கொலைகாரனின் மகனாகவோ பிறந்த அனைவரும் சேர்ந்ததுதான். வீரப்பனின் மனைவிக்கும் இந்த நாட்டில் தேர்தலில் நிற்கவும் ஓட்டுக்களை கேட்கவும் சுதந்திரம் உண்டு. அவர் வீரப்பனின் மனைவி என்பதற்காகவே கொல்லப்பட்டால் எதிர்த்து குரல் கொடுக்கவும் இந்த நாட்டில் உரிமை உண்டு. அந்த உரிமை இருக்கவேண்டும். அதற்காகத்தான் ஜனநாயகம்.
//
பொதுமக்கள் என்று பேசுவது ஒரு மாய்மாலம். பொதுமக்கள் என்றெல்லாம் யாரும் இல்லை. நமக்கிடையே பொதுவானது என்று எதுவம் இல்லை எனும் போது எப்படி பொதுமக்கள் இருப்பார்கள். ஒருவன் மலம் அள்ளுகிறான் ஒரவன் மலர்படக்கை குத்துவதாக புகார் கூறிக்கொண்டுள்ளான் இதில் எது பொது. தவிரவும் பொதுமக்கள் என்பது மக்களை ஏய்க்க முதலாளித்துவம் கண்டுபிடித்த ஒரு யுத்தி. அப்பதான் தனது வயித்து வலியெல்லாம் பொதுமக்கள் வலியாக காட்டி ஏய்த்து ஏப்பம் விடலாம்.
//
பொதுவானது இருக்கும்போதுதான் பொதுமக்கள் என்பது வினோதமான வாதம். அப்படி பொதுவானது என்று பார்த்தால், எல்லோருக்கும் மூளை இருக்கிறது, கை கால் இருக்கிறது உயிர் இருக்கிறது என்று சொல்லலாம். மலம் அள்ளுபவனாக இருந்தாலும் மலர்படுக்கையில் புரள்பவனாக இருந்தாலும் அவன் மனிதனே. மலம் அள்ளுபவனுக்கும் மலர் படுக்கையில் படுக்க விரும்பினால், அதற்காக தன் தொழிலை மாற்றிக்கொள்ள விரும்பினால் அதற்கான உரிமையும் வாய்ப்புக்களும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட எல்லோருக்குமான வாய்ப்புக்கள் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஜனநாயகம். ஒரு குடிசையில் தாழ்த்தப்பட்டவனாக பிறந்தாலும் இங்கு ஜனாதிபதி ஆகலாம், அல்லது ஒரு பன்னாட்டு கம்பெனியின் முதலாளி ஆகலாம், சிறந்த விஞ்ஞானி ஆகலாம் என்பது இந்த ஜனநாயகம் கொடுக்கும் உறுதிமொழி. அது முழுவதும் நிறைவேற்றப்பட்டுவிட்டதா என்றால் நிச்சயம் இல்லை. ஓரளவுக்கேனும் நிறைவேற்றப்பட்டுள்ளதா எனில், நிச்சயம் ஆமாம் என்றுதான் கூறவேண்டும்.
பொதுமக்கள் என்று ஒன்றும் இல்லை என்று நீங்கள் கூறுவதன் காரணம் எனக்கு விளங்குகிறது. அதாவது ஒருவன் தொழிலாளியாக உழைத்து ஓடாக போகவேண்டும். அப்படி அவன் புதியதாக எதையாவது கண்டுபிடித்தோ அல்லது சிறப்பாக வேலை செய்தோ, தன் மூளையை உபயோகித்தோ முதலாளியாக ஆகி அவன் பலருக்கு வேலை வாய்ப்பை கொடுக்க முனைந்தால், அவன் கொல்லப்பட வேண்டும். அவன் அப்போது கேடுகெட்ட முதலாளி ஆகிவிடுகிறான்.
//
சரி நக்சல்பாரிகள் இதுவரை எத்தனை பொதுமக்களைக் கொன்றார்கள்? எந்த பொதுமக்கள் உங்களிடம் வந்த பிராது கொடுத்தார்கள்? வன்முறை போராட்டம் என்பதெல்லாம் ஒரு உடலின் உட்செறிக்கப்பட்டள்ள உணர்வுகள். நீங்களோ நானோ பிறக்கும் பொழுதே லட்சக்கணக்கான சக உயிரணுக்களை கொண்றுதான் பிறக்கிறோம். ஒரே ஒரு விந்தணு நானோ அல்லது நீங்களோ மற்ற லட்சக்கணக்கான விந்தனுவை வாலால் அடித்து கொண்று விட்டுத்தான் கருப்பையில் நுழைகிறோம். ஆக, அப்பழக்கற்ற அமைதி என்கிற மாயையை உருவாக்க வேண்டாம். மனிதனுக்கள் உட்செறிக்கப்பட்டிருக்கும் வன்முறை என்பது பல வடிவங்களைக் கொண்டது. அவற்றை அடியோடு ஒழிப்பதற்கான திட்டம்தான் மார்க்சியம்.இப்பொழுது நீங்கள் எழுதும் மறுப்பும் அதன் ஒரு வடிவம்தான்.
//
கொல்லப்பட்டவர்கள் எப்படி பிராது கொடுப்பார்கள். தினந்தோறும் செய்திகள் வருகின்றன. கம்யூனிஸ்ட் என்று தங்களை கூறிக்கொள்ளும், நேபாள மாவோயிஸ்டுகளிலிருந்து, பெங்கால், ஜார்க்கண்ட், பிகார், ஆந்திரா தமிழ்நாடு என்று பரவும் நக்ஸல்பாரிகளிலிருந்து, உல்பா கம்யூனிஸ்டுகளிலிருந்து, வடகிழக்கு பயங்கரவாதிகளிலிருந்து நடுத்தெருவில் சந்தையில் என்று குண்டுவைக்கும் பயங்கரவாதிகள், துர்கா பூஜை பந்தலில் குண்டுவைக்கும் கம்யூனிஸ்டுகள் என்று தினந்தோறும் செய்திகள் வருகின்றன. அவைகள் எல்லாம் தீர்க்கப்படவேண்டிய வர்க்க எதிரிகளே என்று நீங்கள் சொன்னால், நான் வேறென்ன சொல்லமுடியும்?
அப்பழுக்கற்ற அமைதி என்பது ஒரு ஜனநாயக நாட்டில் எப்போதும் இருக்கமுடியாது. இருக்கவும் கூடாது. மயானத்திலும், எல்லோரும் ஒரேமாதிரி சிந்திக்க "பழக்கப்போகும்" கம்யூனிஸத்திலோ, அல்லது இயேசுவின் இரண்டாம் வருகை அரசாங்கத்திலோதான் அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற அமைதி இருக்கும்.
கம்யூனிஸ்டுகளின் வன்முறையை நீங்கள் விளக்குவது அலாதியானது. அதாவது உலகெங்கும் வன்முறை இருக்கிறது. விந்தணுவிலிருந்து வன்முறை இருக்கிறது ஆகவே கம்யூனிஸ்டுகள் வன்முறை செய்வது சரியானது என்ற விளக்கத்தை சற்றே நீங்கள் எதிர்க்கும் வன்முறைகளுக்கும் பொருத்தி "ஓக்கே" சொல்வீர்களா?
மனிதனுக்குள் வன்முறை என்று ஏதும் இல்லை. பெரும்பாலான மக்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்திசைந்து மற்றவரை மதித்தே வாழ விரும்புகிறார்கள். ஒருசிலர் கம்யூனிஸ்டுகளை போல இருக்கலாம். அதற்கு என்ன செய்யமுடியும்? மற்றவர்கள் மீது வன்முறையை பிரயோகிக்காதவரை உங்களை சகித்துக்கொள்ளவேண்டியதுதான்.
//
ஒருவன் மற்றவனை கொல்வது தர்க்கரீதியாக தவறு என்றால் எதற்காக போலிஸீம் கோர்டும் தண்டனையும். நக்சலைட்டகளைக் கொல்வதும் ஒரு வன்முறைதானே. இன்றைய அமைப்பே மனநோய் கொண்ட அமைப்புதான். இல்லாவிட்டால் கருவில் இருக்கம் குழந்தையை உருவி சூலாயுதத்தால் குத்தி நெருப்பில் இரத்தம் சொட்ட சொட்ட காட்டுவார்களா? இந்த மனநோயாளிகளை உங்கள் வாக்குப்பெட்டி அரசு என்ன செய்தது? உங்களது மக்கள் காவலர்கள்தான் என்ன செய்தார்கள்?
//
தெஹெல்கா இந்த இந்தியாவின் திறந்த சமூகத்தில்தான் சாத்தியமாக ஆகியுள்ளது. அது இன்னும் பலரை இவர்களை வெறுக்க தூண்டும். மனிதர்களின் மனத்தில் உள்ள மனிதாபிமானமே மக்களை மதம், கருத்து தாண்டி அப்பாவியாக கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கவும், அப்படி அப்பாவிகளை கொன்றவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்லவும் வைக்கிறது.
தெஹெல்காவுக்கு எந்த இந்தியா சுதந்திரம் கொடுக்கிறதோ அதே சுதந்திரத்தின் வழியாகத்தான் உங்களோடும் நான் விவாதித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு கம்யூனிஸ நாட்டில் எனக்கு இந்த சுதந்திரம் இருக்குமா? கம்யூனிஸ நாடோ சோசலிச நாடோ இதே போல படுகொலைகளை நிகழ்த்தியபோது, அதன் பத்திரிக்கை வாய் கட்டப்பட்டிருந்தது.மக்களின் கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் மக்களிடம் இருக்கும் மனிதாபிபான உணர்வும் நசுக்கப்பட்டது.
//
நக்சல்பாரிகள் மக்களை கொல்வதில்லை. அதனால்தான் அரசு அவர்களை கொல்கிறது. அதனை நியயாப்படுத்தி நீங்கள் தம்பட்டமும் அடிக்கறீர்கள். அல்லது நரேந்திர மோடி போல மக்களைக் கொன்றால் அரசும் அதிகார ஆயுதத்தால் பயமுறுத்தப்பட்ட மக்களும் வாக்களித்து மோடியை மீண்டும் மீண்டும் ஆட்சியல் அமர்த்துவார்கள். இது ஜனநாயகம் இல்ல ஆயுத பலமும் பணமும் கொண்ட பணநாயகம். சாதி மத பலமில்லாமல் உங்கள் ஓட்டுக் கட்சிகள் மக்களைத் திரட்ட தயாரா?
//
சாதி மத பலமில்லாமல் ஓட்டுக்கட்சிகள் மக்களை திரட்டித்தான் வருகின்றன. கண்களை சற்றே திறந்து பார்த்தால் தெரியும். தலித்துகள் மட்டுமே திருமாவளவனுக்கு ஓட்டு போடுவதில்லை. தனியாக அவர் தேர்தலில் நின்றபோது தலித்துகளின் எண்ணிக்கையையும் தாண்டி அவருக்கு ஓட்டு விழுந்தது. வன்னியர் அனைவரும் பாமகவுக்கு வாக்களிப்பதில்லை. பாமகவுக்கு வாக்களிக்கும் அனைவரும் வன்னியர்களும் அல்லர். எம்ஜியார் என்ன சாதி மத பலத்துடன் தமிழ்நாட்டில் நின்று வெற்றி பெற்றார்? மம்தா பானர்ஜி எந்த சாதி மத பலத்துடன் மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக போராடி வருகிறார்?
//
1969-ல் துவங்கிய நக்சல்பாரிகளின் எழுச்சிக்கு பிறகு நக்சல்பாரிகளால் கொல்லப்பட்டவர்களைவிட அரசால் கொல்லப்பட்ட நக்ஸலைட்டுகளே அதிகம். என்கவுண்டர் என்கிற தொழில் நுட்பமே ஆந்திர நக்சலைட்டுகளுக்கு எதிராக கியூ பிராஞ்சால் உருவாக்கப்பட்டதுதான். உதாரணமாக ஒரு கிரிமினல் என முத்திரைக் குத்தப்பட்ட வீரப்பனை முன்வைத்து எத்தனைப்பேரைக் கொன்றது இந்த அரசு. வீரப்பனால் கொல்லப்பட்வர்களைவிட அரச பயங்கரவாதத்தால் செத்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். யூனியன் கார்பைடு கொன்றவர்களைவிட, அமெரிக்க அணு ஆயுதம் கொன்றதைவிட, இந்திரா கொலையில் கொல்லப்பட்ட சீக்கியர்களைவிட, குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களைவிட, ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களைவிட, சாதி இந்துக்களால் கொல்லப்பட்ட தலித்துகளைவிட, நாகரீகம் என்கிற பெயரால் கொல்லப்ட்ட ஆதிவாசிகளைவிட ஸ்டாலினும் மாவோவும் கொன்றதாக சொல்லப்படும் மக்கள் எண்ணிக்கை ஒன்றும் அதிகமில்லை. இது எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை அல்ல. வன்முறை என்பது வரலாற்றினை நகர்த்தி்க் கொண்டிருக்கும் பற்சக்கரம். வன்முறை என்பது ஒரு தொடர் விளையாட்டு அதனை அரசே முன் நின்று துவக்கியது. ஆட்டத்தை பாதியி்ல் நிறுத்த அரசும் தயாரில்லை அவர்களும் தயாரில்லை.
//
வீரப்பனை முன்வைத்து என்கவுண்டரில் சாதாரண அப்பாவி மக்கள்கொல்லப்பட்டனர் என்ற விஷயமும் வந்தது இந்த சுதந்திர ஜனநாயகத்தில்தான். ஆனால், சோசலிஸ்டுகளின் ஆட்சியில் சீனாவில், அப்பாவி உகைர் மக்கள் கொல்லப்பட்டதும், அப்பாவி திபெத் மக்கள் கொல்லப்பட்டதும், நம் ஊர் கம்யூனிஸ்டுகளின் மனத்தில் கூட எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையே? அது ஏன்? திபெத் மக்கள் கொல்லப்பட்டது அவர்களுக்கு நல்லது என்று மவுண்ட் ரோடில் இருக்கும் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கை தலையங்கம் எழுதியதே, அது ஏன்? ஏனெனில், கம்யூனிஸத்துக்காக அப்பாவி மக்களை கொல்வது சரி என்பது உங்களுக்கு மனத்தில் ஏறி உங்களது மனிதாபிமானத்தை கொன்றுவிட்டது.
//
மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசு இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் செலவழிப்பதன் முரண்பாடு ஏன்? வீரப்பனை ஒழித்ததுபோல் ஏன் நக்சல்பாரிகளை ஒழிக்க முடியவில்லை. அப்படியே கம்யூனிஸத்தை ஒரு மதமாக நாங்கள் நம்பினாலும் அதனை நடைமுறைப்படுத்த உங்கள் ஜனநாயகத்தில் உரிமை இல்லையா? கம்யூணிஸம் அடிப்படையில் கொலைவெறித் தத்துவம் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? அப்படியென்றால் வைணவர்களையும் சமண பெளத்தர்களைக் கொன்ற சைவத்தை என்னவென்பது? எல்லா மதங்களும் கொலைவெறித் தத்துவங்கள்தான் என்று நீங்கள் கூறத்தயாரா? உடனே மதம் வேறு மதவெறி வேறு என்று ஜல்லியடித்தால் நீங்கள் கம்யூணிஸம் நல்ல தத்துவம் என்று ஒத்துக் கொள்ள வேண்டி வரும். அதற்காவது தயாரா?
//
உங்களைப்போன்று புரியாத வார்த்தைகளை எழுதும் கம்யூனிஸ்டுகளை பார்த்து, இளைஞர்கள் உங்களை பெரிய அறிவுஜீவிகள் என்று நினைக்கிறார்கள். கம்யூனிஸ்ட் என்றால் ஏதோ புத்திசாலி என்பது போன்ற பிரமையை இங்கே கம்யூனிஸ்டுகளும், கம்யூனிஸ்டு ஆதரவாளர்களும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதனால், தன்னை புத்திசாலி என்று காட்டிக்கொள்ள ஒரு அப்பாவி இளைஞர் கூட்டம் திசை தவறி உங்களிடமும் நக்ஸல்பாரிகளிடமும் சேர்கிறது.
கம்யூனிஸம் அடிப்படையில் கொலைவெறி தத்துவம் தான். வன்முறை மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று சொல்லும் எல்லா கொள்கைகளும் கொலைவெறி தத்துவங்கள்தான்.
ஒரு மதத்தில், இந்த தெய்வத்தை கும்பிடாதவன் கொல்லப்பட வேண்டும் என்று இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் அது கொலைவெறி தத்துவம்தான்.
வர்க்க எதிரிகளை கொல்லுவது சரி என்று மார்க்ஸிஸம், கம்யூனிஸம் கூறுகிறது. ஆகவே அது ஒரு கொலைவெறி தத்துவம்.
//
காலை எழுந்தவுடன் கம்யூணிஸம் ஒழிக. மார்க்ஸ் ஒழிக என்ற பஜனைப்பாடுவதும் ஒருவகை மனநோய்தான். இது அம்ணிஸயா இல்லை பரோணியா.
//
காலையில் எழுந்ததும், கம்யூனிஸம் வாழ்க, மார்க்ஸ் வாழ்க என்று பஜனை பாடுவதும் ஒரு மனநோய்தான். இது நீங்களே உங்களுக்கு செய்துகொண்டால் பரவாயில்லை. ஆனால், சோசலிஸம் வந்ததும், எல்லோரையும் வரிசையில் நிற்கவைத்து சீனத்தில் செய்வது போல, வரிசையில் நிற்கவைத்து, ஒரே மாதிரி மாவோவின் சிவப்பு புத்தகத்தை தூக்கி இறக்கி கம்யூனிஸம் வாழ்க, மார்க்ஸ் வாழ்க மாவோ வாழ்க என்று கோஷம் போட வைப்பதற்கு இவைகளை எதிர்ப்பது பரவாயில்லை, இல்லையா?
//
பயங்கரவாதத்தை அரசு விடுமா? உங்கள் அதீத தர்க்கத்தை அரசுக்கு எதிராக முன்வையுங்களேன். காந்தியின் கதை என்ன? வன்முறை வேண்டாம் என்றார் என்பதற்காக அவருக்கே வன்முறை பரிசாக தரப்பட்டது. உத்தமனாகக் கருதிக் கொண்டு மற்றதை கொலை வெறி மூர்க்கம் என்று பிணாத்துவதில் பயனில்லை. நீங்கள் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை உங்கள் எதிரிதான் தீர்மானிக்கிறான். நீங்களோ நானோ அல்ல. இன்றைய வாழ்க்கை உங்களுக்கு சிறந்தது. ஆணால் அடிப்படை உழைக்கும் மக்களக்கு? அந்த பிரச்சனைக்கு நாம் ஏன் போக வேண்டும் என்கிறீர்களா? இதனை பேசாமல் மேலோட்டமாக நீங்கள் மறுப்பு என்று எதையாவது எழுதிக் கொண்டிருக்க முடியாது.
//
அடிப்படை உழைக்கும் மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியான உணவையோ ஒரே மாதிரியான பழக்க வழக்கங்களையோ அல்லது ஒரே அளவு சம்பளத்தையோ வாங்கிக்கொண்டிருக்கவில்லை. சென்னையில் இன்னொருவரின் காரை ஓட்டி சம்பாதிப்பவரும், திருத்துறைப்பூண்டியில் கூலி விவசாயியும் ஒன்றல்ல. ஒரே சம்பளத்தையோ ஒரே வசதி வாய்ப்பையோ அல்லது ஒரே வாழ்க்கையையோ, தங்கள் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான கல்வியை பெறக்கூடியவர்களோ அல்ல. ஆனால் ஒவ்வொருவரும், தங்களுக்கு அடுத்து என்ன செய்தால் நன்றாக வாழலாம் என்றும், தன் குழந்தைக்கு என்ன நன்மை என்று உணரக்கூடியவர்கள். தங்கள் குழந்தை என்ன படித்தால் வாழ்க்கையில் சிறப்பாக வாழலாம் என்று தெரிந்தவர்கள். அதற்கு நம்மால் உதவ முடிந்தால், கல்வியை பரவலாக்குவதும், வாய்ப்புகளை பரவலாக்குவதும்தான்.
அவர்களிடம் போய் "உங்களுக்கு காலை மாலை சாப்பாடு போடுகிறேன், ஆனால், நான் சொல்லும் பணக்காரர்களை எல்லாம் நீங்கள் கொல்லவேண்டும்" என்று சொன்னால், போங்கடா என்று போய்விடுவார்கள். இதனைத்தானே நீங்கள் சொல்கிறீர்கள்? எல்லா பணக்காரர்களையும் தொழிற்சாலை முதலாளிகளையும் கொல்லவேண்டும், அதுதான் புரட்சி, அதற்கப்புறம் எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்கப்படும், வீட்டில் விளக்கெரியும், நீங்கள் சொல்வதை இலக்கியம் என்று எல்லோரும் படித்து புல்லரிக்கவேண்டும், இதுதானே? (போல்போட் இன்னும் பல விஷயங்களை செய்தான். அவற்றை இங்கே எழுதினால், படுகேவலமாகிப்போகும். )
வன்முறை வேண்டாம் என்று சொன்னவர் வன்முறையால் இறந்தால், வன்முறை வெற்றி பெற்றுவிட்டதாக அர்த்தமா?
அவர் தானே வன்முறையில் இறங்கினால்தான் அவரது கொள்கை தோற்றதாக அர்த்தம்.
நீங்கள் என்ன ஆயுதத்தை எடுக்கப்போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். உங்கள் எதிரி தீர்மானித்தான் என்றால், ஆயுதத்தை பிரயோகிக்கும் முன்னாலேயே அவன் ஏற்கெனவே வெற்றிபெற்றுவிட்டான் என்றுதான் பொருள்.
//
உங்களைப்போல வரிக்குவரி எதிர்த்து எழுதுவது என்பது நேரவிரயம்தான். காரணம் விவாதத்திற்கானதோ அல்லது உரையாடுவதற்கானதோ அல்ல உங்கள் மறுப்பு. அது தனது கருத்தை திணிப்பதற்கான முயற்சி. அது பேச்சல்ல போதணை. அதை கேட்டு திருந்தக்கூடிய அணாணிகளும் அல்லக்கைகளும் அல்ல நாங்கள். நாங்கள் என்பது மார்க்சியம் என்கிற நீங்கள் ஒவ்வா என ஒதுக்கும் மதத்தை நம்புபவர்கள். அழகாக திருவண்ணாமலையில் ஒரு தோட்டம் வாங்கி ஆசிரமம் நடத்தலாம். வரிவிலக்கும் உண்டு. நீங்கள்லாம் கூறி திருந்துற ஜன்மங்கள் நாங்க கிடையாது. அம்புடுத்தான். அதுக்கமேலே ஒரு வார்த்தைய நான் நகட்டுல.
உள்ளேன் அய்யா!!!!!! அட்டெண்டன்ஸ் போட்டாச்சு போறுமா?
12. November 2007 03:20
//
எனக்கு நேரவிரயம் இல்லை. இது உரையாடல்தான். உரையாடும் வரைக்கும் உங்களிடமிருந்து நானும் என்னிடமிருந்து நீங்களும் தெரிந்துகொள்கிறோமோ இல்லையோ, நமக்குள்ளாகவே ஒரு உரையாடலை நிகழ்த்துவோம். அது பயனுள்ளது.
அட்டெண்டன்ஸ் போதாது. மேலும் வாருங்கள்.
Mittwoch, 7. November 2007
| [+/-] |
நண்பர் ஸ்டாலினுடன் பழைய அனானி விவாதம் |
இந்த பதிவில் நடக்கும் விவாதம் பற்றி நண்பர் ஸ்டாலின் இந்த பதிவு எழுதியிருக்கிறார்
அந்த பதிவு இங்கே
கம்யூனிச சமூகம்: ஒரு கண்ணாமூச்சி விவாதம்
அதற்கு பதிலாக நண்பர் தியாகு விவாத பின்னூட்டத்தில் எழுதியது இங்கே தனி பதிவாக தரப்படுகிறது
----
ஸ்டாலின் எழுதுகிறார்
//தமிழ்மணி ஒன்றுமே அறியாத பச்சைமண்ணாக இது எப்படி இருக்கும், அது எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பிகிறார், நமது தோழர்களும் அதற்க்கு நேர்மையான பதிலளிக்கின்றனர், தமிழ்மணியோ கருத்து குருடர் என்றாலும் காரியக் குருடர்.
அவர் ஒரு பக்கம் ஏதோஅறிந்து கொள்ள விருப்பப்படுபவர் போல் கேள்விஎழுப்பிகொண்டே, இன்னொரு பக்கம் அனானியாகாவும் இன்னும் பல பெயர்களிலும் மார்க்சியத்தை அவதூறு செய்து வரும் பின்னூட்டங்களை அயோக்கியதனமாக அனுமதித்துக்கொண்டிருக்கிறார்.
//
பழைய அனானி:
அன்புள்ள ஸ்டாலின், மார்க்சியத்தைக் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் கருத்துக் குருடர்கள், அயோக்கியர்கள் என்றால் அது அவதூறு இல்லை. உங்கள் கருத்தில், நாகரிகமாக மார்க்ஸின் கோட்பாடுகளை முன்வைத்து தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இன்னமும் என் கேள்விகளுக்கு, மார்க்சியக் கோட்பாடு மீதான என் விமர்சனத்திற்கு உங்களிடமிருந்தோ, ஜமாலன், அசுரன், தியாகு, இன்னபிற எவரிடமிருந்தும் ஒழுங்கான பதில் இல்லை.
நான் சொன்னதைத் தொகுத்து :
1. புராதனக் கம்யூனிசம் என்பது தவறு. அப்படி ஒரு கம்யூனிசச் சமூகம் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. பிறக்கும் போதே இருப்பவன் இல்லாதவன் என்று தான் பிறந்தானா மனிதன் என்று தியாகு கேட்டிருந்தார். ஆமாம். ஏனென்றால் ஒரு குழந்தை பிறக்கும் போதே அதன் தாய், தந்தை குடும்பம் என்று கொண்டு தான் பிறக்கிறது. ஆதிகாலச் சமூகத்திலும் ஓர் இனக்குழு இயற்கை வளங்களில் உடைமையால் வளம் பெற்றிருக்கும். வேறு சில இனக்க்குழுக்கள் வசதிக் குறைவாய்த்தான் இருந்திருக்கும்.
2. உற்பத்தி உறவுகள் சமூகச் சூழலைத் தீர்மானிக்கின்றன என்பதும் தவறு. சமூக சூழலுக்கு பல காரணிகள் இருக்கலாம். இயற்கை வளம், தொழில் நுட்ப வளர்ச்சி, கல்வி, ஜனநாயகப் பண்பு, வலுவான அரசு என்று பல காரணிகள் உண்டு. உற்பத்தியில் வெறுமே மூலதனம், தொழிலாளியின் உழைப்பு மட்டுமே காரணிகள் அல்ல. பொருளாதாரத்தில் Components Theory என்று ஒன்று உண்டு. உதாரணமாக ஒரு தேநீர்க் கடையில் தேநீர் தயாரிக்க பால், சர்க்கரை, தேயிலை என்ற பயன் பொருட்கள் இல்லமல், கடை வாடகை, மூலதனத்டிற்கான வட்டி என்று பல உண்டு. தொழிலாளியின் உழைப்பினால் தான் உபரி மதிப்புத் தோன்றுகிறது என்பது அபத்தம். என்றும் கூறியிருந்தேன். தொழிலாளி தன் உழைப்பை விற்கிறான் அதன் கூலியைப் பெற்றவுடன் உற்பத்திக்கும், அவனுக்கும் இருக்கும் தொடர்பு முடிந்து போகிறது. இன்றைய தொழிற்சாலைகளில் பல தொழிலாளர்களின் வேலை வெறுமே நட் போல்டுகளை பாவிப்பதோடு நின்று விடுகிறது.
3. கண்டுபிடிப்புகளுக்கு தொழிலாளி காரணம் என்று தியாகு சொல்வதும் தவறு. உதாரணமாக டெலிபோன் கண்டுபிடிப்புக்கு கிரகாம் பெல் காரணம். அவர் தொழிலாளியல்ல. இன்று உள்ள செல்பேசி தொழில் நுட்பம் எந்தத் தொழிலாளியும் கண்டுபிடித்ததல்ல. ஒரு விஞ்ஞானக் கதைகள் எழுதியவரின் கற்பனையில் உதித்து , விஞ்ஞான அடிப்படையின் உண்மையால் ஆய்வுக்கூடத்திற்கு கண்டுபிடிப்பு சென்று உருவானது. கணிதக் கண்டுபிடிப்புகள் பல தனிமனிதனின் சிந்தனை சாதனைகளே. சந்திரசேகர், தொடங்கி, ராமானுஜம் வரையில் இதற்கான உண்மைகளைக் காணலாம். தொழிலாளி தன் செயலில் உள்ள சில நுணுக்கங்களை எப்படி சீர் செய்ய முடியும் என்று சொல்லலாம் அவ்வளவு தான். மார்க்ஸில் இந்த கண்டுபிடிப்பு- தொழிலாளி உறவு பற்றி எங்கும் சொல்லப் படவில்லை. தொழிலாளியை வியந்து ஏத்தும் வகையில் தியாகு இந்த குறிப்பை சொல்லியிருக்கலாம்.
ஸ்டாலின்:
//
இது ஏதோ தற்செயலாய் நடக்கவில்லை, தோழர்.ஆசாத்தினுடைய தளத்தில் துவங்கப்பட்ட விவாதத்தை கட்-காப்பி-பேஸ்ட் செய்து தனது தளத்தில் போட்டு அங்கு அனானிகள் வந்து ஆட்டம் போடுவதற்கு முதலில் வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தார் தமிழ்மணி.
மார்க்சியத்தை பற்றி ஏற்கனவே அவதூறு செய்ய முயன்று தோற்க்கடிக்கப்பட்டதுகளும், மூக்குடைபட்டு போனதுகளும், அனானிகளாக வந்து அங்கு மூக்கை சிந்தி போட்டன, இப்பேர்பட்ட அரசியல் நேர்மை கொண்ட, ஒன்றுமறியாத பச்சைமண்ணான தமிழ்மணிக்கு நமது தோழர்களும் சலிக்காமல் பதில் சொல்லிகொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்மணி மார்க்சியத்தை பற்றி என்னவிதமான அடிப்படை புரிதல்களை வைத்திருக்கிறார். சமூகங்கள் வர்க்கங்களாக பிரிந்திருக்கின்றன என்பதனை ஏற்றுக்கொள்கிறாரா, இல்லையா? வர்க்க சுரண்டல்கள் இருப்பதை ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா? இது போன்ற அடிப்படையான கேள்விகளை நமது தோழர்கள் அவரிடம் எழுப்பியிருக்க வேண்டும்.
//
பழைய அனானி:
அனானியாய் வந்து ஆட்டம் போடுவது என்பதன் பொருள் எனக்குப் புரியவில்லை. வலையுலகில் எல்லோருமே அனானிகள் தான். கருத்துகள் தான் முக்கியம். மெய்ப்பொருள் காண்போமே. நான் இதுவரை வலைப்பக்கம் வந்ததில்லை.
வர்க்கங்களாய் பிரிந்திருப்பதை ஏற்றுக் கொள்கிறோமா என்ற கேள்விக்கு பகில் : ஆமாம். ஆனால் மார்க்சிய வாதிகள் சொல்லும் வர்க்கமும் நான் சொல்லும் வர்க்கமும் ஒன்றல்ல்ல. கீழ் மத்தியதரவர்க்கம், மேல் மத்தியதர வர்க்கம் என்று நகர்ப்புற மக்களை பிரிக்கலாம். முதலாளி தொழிலாளி வர்க்கம் என்ற கருத்தாக்கத்திற்கு இன்றைய நிலையில் எந்தப் பொருளும் இல்லை. தன் உழைபையும் ஒரு பொருள் போலச்சந்தையில் விற்கும் தொழிலாளிதான் இங்கே உண்டே தவிர தொழிலாளி வர்க்கம் என்று எதுவும் இல்லை. அதனால் தான் உபரி மதிப்பு என்ற கருத்தாக்கமும் பொருளற்றது என்று சொன்னேன்.
சுரண்டல் என்பது மார்க்சியக் களிம்பேறிய அர்த்தமற்ற வார்த்தை. ஆனால் அநீதிகள் இருக்கின்றன என்று ஒப்புக் கொள்கிறேன். இந்த அநீதிக்கு பொருளாதாரத்தால் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் தான் காரணம் என்று ஒப்புக்கொள்ளமாட்டேன். சமூக ஆக்கத்தில் இந்த அநீதிகளைப் போக்கத்தான், நமக்கு நாமே ஒரு ஜனநாயக அமைப்பைக் கட்டி எழுப்பி, பிரதிநிதிகளை நியமித்து நம்மை நாமே ஆண்டுகொள்கிறோம். சட்டரீதியாகவும், ஜனநாயகமுறையில் வன்முறை தவிர்த்தும் இந்த அநீதிகளைக் களைய முயன்று வருகிறோம். இது ஒரு முடிவில்லாத பயணம். ஆனால் ஜனநாயக மறுப்பும், சர்வாதிகாரமும், சோஷலிசக் கனவுகளும் நீதி நோக்கிய இந்தப் பயணத்தில் தடைக்கல்களே ஆகும்.
ஸ்டாலின் :
//
மேலும், இன்றைய சமூக அமைப்பு முறையை கேள்விக்குட்படுத்தாமல், கம்யூனிச சமூக அமைப்பு முறையை பற்றி பேசுவதென்பதோ, புரிந்து கொள்ள முற்படுவதோ இயங்கியலுக்கே எதிரானதாகும்.அது ஒரு நிகழ்ச்சி போக்கிலிருந்து அந்த நிகழ்ச்சியை துண்டித்து பார்ப்பதை போன்றதாகும்.
//
பழைய அனானி:
பதில்களைத் தயாராக வைத்துக் கேள்விகளைக் கேட்கிற நண்பரே, இயங்கியல் என்பது என்ன? ஹெகல் கருத்தாக்கத்தில் மூன்று நிலைகளைச் சொன்னார். இதன் வழியாக ஒரு சமூக அமைப்பு முனே தான் செல்ல முடியும் என்பது அவர் இயங்கியல் பார்வையாய் இருந்தது. அபப்டி பார்க்கப் போனால், ரஷ்யாவில் சோஷலிசம் தோல்வியுற்றது கூட முன்னேறிய இயங்கியல் பாய்ச்சல் என்று தான் சொல்ல வேண்டும். அதை ஏற்றுக் கொள்வீர்களா?
சும்மா இயங்கியல் என்று ஒரு அர்த்தமற்ற வார்த்தையைப் போட்டு பயமுறுத்தாதீர்கள். ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசுக்கும், பாகிஸ்தான் ராணுவ அரசிற்கும் என்ன இயங்கியல் விளக்கம் உள்ளது?
ஸ்டாலின்:
//
மார்க்சையும் அவரது வரலாறு பொருள்முதல்வாத ஆய்வு முறையையும், சமூக வரையறுப்புகளையும் பற்றி எங்கெல்சு குறிப்பிடும் போது, உயிரியல் துறையில் டார்வினுடைய பரிணாமவாததத்துடன் ஒப்பிடக்கூடியது மார்க்சினுடைய சமூக பரிணாமவாதம் என்று குறிப்பிட்டார். இப்படிப்பட்ட பரிணாம வழிவருகின்ற உச்சமான உயர்ந்ததொரு சமூகத்தை அதற்கு முந்தைய மற்றைய சமூகத்திலிருந்து துண்டித்து பார்க்கவோ இந்த அமைப்பு முறைகள் மாறிவந்த சமூக மாற்றத்துக்கு அடிப்படையான அம்சத்தை தவிர்த்துவிட்டு பார்க்கவோ முடியாது.
ஆனால் அப்படி பார்ப்பதற்குத்தான் தமிழ்மணி ஆசைப்படுகிறார். அவர் கம்யூனிஸ்டுகள் படைக்க விரும்பும் பொன்னுலகம் எப்படியிருக்கும் என்பதுதான் அவருடைய ஆசையாக இருக்கிறதேயொழிய, அது எதிலிருந்து எப்படி முகிழ்த்தெழுகிறது, என்னவிதமான தீமைகளையெல்லாம் துடைத்தழிககிறது. மார்க்சியம் முன்வைக்கும் விஞ்ஞான சோசலிச கோட்பாடு எப்படிப்பட்டது இது எதுவும் அவருக்கு தேவையில்லை அவருக்கு வேண்டியதெல்லாம் கம்யூனிச சமூகம் எப்படியிருக்கும் என்பதுதான்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகம், சுதந்திரம், சட்டநெறிகள், சமூக ஒழுக்கங்கங்கள் பற்றி இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் இருக்கும் மதிப்பீடுகளிலும் கருத்துருவாக்கங்களும்தான் எல்லா காலங்களிலும் இருந்து வந்திருக்கின்றதா என்பதனை நாம் யோசிக்க வேண்டும், மாறி வந்திருக்கிறது என்றால் எப்படி மாறியது என்பதனையும் யோசிக்க வேண்டும், இப்படி நம்முடைய பழைய மதிப்பீடுகளையும் இன்றைய சமூகத்தையும் பற்றி கேள்வி எழுப்பாமல் கம்யூனிச சமூகத்தை பற்றி பேசுவது என்பது வெற்று அரட்டையாகத்தான் இருக்கும்.
//
பழைய அனானி:
எங்கல்ஸ் சொல்லிவிட்டால் அது வேதவாக்கா? ஏங்கல்சிற்குப் பின்னால் வந்த தத்துவவாதிகள், பொருளாதார நிபுணர்கள் சொன்னதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டீர்களா? நிய்யுட்டனுடன் நின்றிருந்தால் விஞ்ஞானம் வளர்ந்திருக்குமா?
ஸ்டாலின் :
//
எனவேதான்
"முதலாளித்துவ சொத்துடைமையின் மீது கட்டி எழுப்பட்டிருக்கின்ற, சட்ட நெறிமுறைகளையும், சுதந்திரம் போன்றவற்றை பற்றி உங்கள் மதிப்பீடுகளை கேள்விக்குட்படுத்தாமல் எங்களிடம் வாய்ச்சண்டைக்கு வராதீர்கள்” என்று மார்க்சிய ஆசான்கள் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் குறிப்பிட்டார்கள்.
நாம் இதுவரை என்னென்ன சமூக அமைப்பு முறைகளை கடந்து வந்திருக்கிறோம், இப்போது எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம், மார்க்சும் எங்கெல்சும் இந்த சமூக அமைப்பு முறைகளை எப்படி வரையறுத்தார்கள், எதன் அடிப்படையில் அதனை பெயரிட்டு அழைத்தார்கள்? உதாரணமாக முதலாளித்துவ சமூகம் என்றால் அதனை ஏன் அப்படிச் சொல்கிறார்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய சமூகம் என்பது எல்லா மனிதர்களும் வாழக்கூடிய அளவில் திருப்திகரமானதாக இருக்கிறதா? இல்லை இது மாற வேண்டுமா? மாற்றம் என்றால் எப்படிப்பட்ட மாற்றம்? சோசலிச மாற்றம் என்று குறிப்பிட்டால் அதன் அம்சம் என்ன? முதலாளித்துவ சமூக அமைப்பு முறைக்கு பிறகு கம்யூனிசம் என்றால் இடையில் எதற்கு சோசலிசம்?
இப்படி பல கேள்விகளுக்கு பதில் தேடாமல், கம்யூனிச சமூகத்தை பற்றி அறிந்து கொள்ள ஆசைபடுகிறேன் என்று தமிழ்மணி சொல்வதில் ஒரு கதை கேட்கும் மனோபாவம்தான் இருக்கிறதேயொழிய தர்க்கபூர்வமான தேடல் இல்லை.
//
பழைய அனானி:
சமூக மாற்றம் என்பது பெரிய வார்த்தை. அப்படிப் பட்ட மாற்றங்கள் யாரும் விரும்பைல்லை. நிச்சயமாய் சோஷலிச மாற்றத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அல்பேனிய, ரஷ்யா, சீனா, கொரியா என்று பல நிரூபணங்கள் வந்துவிட்டன. மனிதர்களின் வாழ்க்கையில் அவர்கள் பொருளாதார நிலை உயர , கண்டுபிடிப்புகளும் தொழில் அபிவிருத்தியும் தான் ஒரே வழி.
Dienstag, 6. November 2007
| [+/-] |
நக்சல்பாரி 'அபாயம்": அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா? ம க இ க தலைமைக்கு மக்களில் ஒருவனின் பதில் |
துப்பாக்கிகள் வெடிகுண்டுகளுடன் ஜூன் 25 ஆம் தேதியன்று கைதான "தோழர்கள்" பழனிவேல், வேல்முருகன், முத்தமிழ்செல்வன் ஆகியோரும் பிறகு ஜூலை 8 ஆம் தேதியன்று கார்த்திக் ஈஸ்வரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதனை பற்றி புலம்பி புதிய ஜனநாயகம் பத்திரிக்கை ஆகஸ்டு 2007 ஆசிரியர் குழு எழுதிய தலையங்கம்:
//நக்சல்பாரி 'அபாயம்": அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா?//
இந்த கட்டுரைக்கு என் பதில்
//நக்சல்பாரி 'அபாயம்": அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா?//
கடந்த ஜூன் 25ம் தேதியன்று பெரியகுளம் முருகன்மலைப் பகுதியில் மாவோயிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த 3 தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழனிவேல், வேல்முருகன், முத்தமிழ்ச்செல்வன் என்ற இந்த 3 பேரிடமிருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசு கூறுகிறது. மற்ற சிலர் தப்பிவிட்டதாகக் கூறி, சிலருடைய புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறது, போலீசு. ஜூலை 8ம் தேதியன்று இரவு சுந்தரமூர்த்தி, கார்த்திக், ஈஸ்வரன் ஆகியோர் திருப்பூரில் கைது செய்யப்பட்டு, போலீசு விசாரணைக்குப்பின் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.
தப்பியவர்களைப் பிடிப்பதற்கு மதுரை மற்றும் பிற நகரங்களிலும் ""கியூ'' பிரிவு உளவுத்துறைப் போலீசு வீடுவீடாகச் சோதனை நடத்தியிருக்கிறது.
வீரப்பனின் பிணத்தைச் சுட்டுக் கைப்பற்றிய விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் எங்கும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
""தமிழகமெங்கும் 70 பேர் கொண்ட 70 ஆயுதக் குழுக்கள்!'', ""பெரியகுளத்தில் ஏ.கே47 துப்பாக்கிகள், ஆயுதப் புதையல்கள், லேப் டாப் கம்ப்யூட்டர்கள்'', ""ஆயுதப்படையில் சேருவதற்குத் தயாராக 600 மாணவர்கள்'' என்று விஜயகாந்த் சினிமாவை விஞ்சும் வகையில் திரைக்கதை எழுதுகின்றன, பத்திரிகைகள். "நக்சல் வேட்டை' என்று போலீசு அராஜகத்தைக் கொண்டாடுவது, விஜயகுமாரையும் உளவுத் துறை போலீசு அதிகாரிகளையும் ஏதோ உயிருக்குத் துணிந்த வீர சாகச நாயகர்களாகச் சித்தரிப்பது, கைது செய்யப்பட்ட தோழர்களை "அவன், இவன்' என்று ஏகவசனத்தில் எழுதுவது என நாலாந்தரமான போலீசு எடுபிடிகளாகவும் பரபரப்புக்காகப் பச்சைப் பொய்களைப் புனைந்து எழுதும் பேனாத்தரகர்களாகவுமே பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
//
அடேங்கப்பா, உங்கள் பத்திரிக்கையில் மற்ற எல்லோரையும் மிக மரியாதையுடன் விளித்துவிட்டீர்கள்! உங்களை மரியாதையுடன் அவர்கள் குறிப்பிடவில்லை என்பதுதான் ரொம்ப குறை!
//
மாவோயிஸ்டுகள் தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் மாபெரும் அபாயம் போல ஒரு சித்திரம் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது.
//
இப்படியே மாவோயிஸ்டுகளை விட்டால், அது தமிழகத்தை சூழ்ந்திருக்கும் மாபெரும் அபாயமாக ஆகிவிடுவார்கள் என்பது சரியான கூற்று. ஏமாந்த இளைஞர் உங்களுடைய ‘கவர்ச்சிக் காட்சிகளை’ நம்பி உங்கள் பின்னே போய் துப்பாக்கி ஏந்தி எவராவது ஒரு கிராம வாசியைச் சுட்டுத் தள்ளிக் கிரிமினலாக மாறிப் பின் போலிசால் சுடப்பட்டு இறக்க நேரிடும் அவலத்தைத் தவிர்க்கவும்தான் உங்களால் ஏற்படக் கூடிய அபாயம் எல்லாம் உருப்பெருக்கிக் காட்டப் படுகிறது என்று ஒருமுறையாவது தோன்றியதோ உங்களுக்கு? அதெப்படித் தோன்றும். பிரச்சினையாக இருந்துதானே பழக்கம் உங்களுக்கு. விடையாக இருந்தே பழக்கமில்லையே. இந்த முறை விடை உங்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்குவதுதான் ஏனெனில் நீங்கள் மற்றவர்களை அதே வழியில்தான் அணுகுகிறீர்கள்.
// எனினும் இந்தத் "தேடுதல் வேட்டை'க்குத் தலைமை தாங்கும் விஜயகுமார், நாஞ்சில் குமரன் போன்ற போலீசு அதிகாரிகள் ""அச்சப்படும் அளவுக்கு தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் வளர்ந்துவிடவில்லை'' என்று கூறுகின்றனர். கியூ பிரிவு எஸ்.பி. அசோக்குமார் ""தமிழகத்தில் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 25 முதல் 35 வரை இருக்கலாம் என்பது எங்கள் கணக்கு'' என்று பேட்டி கொடுக்கிறார். ""கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்கள் மிகச் சாதாரணமானவை'' என்றும் போலீசே கூறுகிறது.
பிறகு ஏன் இந்த ஆரவாரம்? பெரியகுளத்தில் வேட்டை, குற்றாலத்தில் வேட்டை, கொடைக்கானலில் வேட்டை, தருமபுரியில் வேட்டை என்று விஜயகுமாரின் காட்டு சீன் ஸ்டில்கள், சினிமா ஸ்டில்களைப் போல அன்றாடம் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்படுவது ஏன்? பெரியகுளத்தில் நிரந்தரமான அதிரடிப்படை முகாம் எதற்கு?
//
ஏனெனில் ஆயுதம் தாங்க முற்பட்டுவிட்ட ஒரு குழு இன்றைக்கு ஒரே ஒரு கைத்துப்பாக்கிதான் வைத்திருக்கிறது என்று தூங்கவா முடியும்? இளையதாக முள்மரம் கொல்லவேண்டும் இல்லையா? மேலும் ஒரு இடத்தில் உள்ள கும்பல் கையில் ஆயுதம் பெரிதாக இல்லை என்பதால் இதர காடுகளில் அவர்களே போன்றவர் இல்லை என்று எடுத்துக் கொள்ள முடியுமா? அல்லது மேலும் கனரக ஆயுதங்களள எங்காவது ஒளித்து வைத்து இருப்பீர்கள் என்று அவர்கள் யோசிக்கக் கூடாதா? நீங்கள் போலிஸ் அதிகாரியாக இருந்தால் எதிராளி தன் அலுவலக வாயிலில் கன ரக பீரங்கி, டாங்கி மேலும் அணு ஆயுதத்துடன் வந்து நின்ற பிறகுதான் செயலில் இறங்கலாமா வேண்டாமா என்று யோசிப்பீர்களோ? அல்லது உங்கள் ஆட்சியில் எதிர்புரட்சியில் இறங்குகிறது ஒரு ஆயுதக்குழு என்றதும், நீங்களும், கையை கட்டிக்கொண்டு கனரக பீரங்கி டாங்கியுடன் வரும்வரை "தோழர்கள்" என்று மரியாதையுடன் அழைத்து, சும்மா ஐந்து பேர்கள் கைத்துப்பாக்கியை வைத்திருக்கிறார்கள், இதற்கு போய் என்ன அலம்பல் என்று சும்மா இருப்பீர்களா?
//
இது போலீசின் வழக்கமான விளம்பர மோகம் அல்ல; மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் அரச பயங்கரவாதம். "நக்சல்பாரி' என்ற சொல்லைக் கேட்டாலே மக்களுக்கு அதிரடிப் படையின் கொடூரமுகம் நினைவுக்கு வரவேண்டும் என்பதும், அவர்கள் அஞ்சி நடுங்கி ஒதுங்க வேண்டும் என்பதும்தான் இந்த நடவடிக்கையின் முதல் நோக்கம்.
இரண்டாவதாக, இது தீவிரவாத ஒழிப்பில் மன்னனை விஞ்சிய ராஜவிசுவாசியாகத் தன்னைச் சித்தரித்துக் கொள்ள கருணாநிதி மேற்கொள்ளும் முயற்சி. ""தமிழகத்தைத் தீவிரவாத அபாயத்திலிருந்து காப்பாற்றி அமைதியான வாழ்க்கையை அளிக்கும் வல்லமை எனக்கு மட்டும்தான் உண்டு. கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் தலைவிரித்தாடுவதுடன், சட்டம்ஒழுங்கு சீர்குலைந்துவிடும்'' என்பது ஜெயலலிதா நிரந்தரமாக முன்வைத்துவரும் பாசிச அரசியல். துக்ளக் முதல் இந்து வரையிலான பார்ப்பனப் பத்திரிகைகளால் வழிமொழியப்படும் பிரச்சாரமும் இதுதான்.
//
மக்களது ஓட்டுக்களை நம்பி இருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரவாத அபாயத்திலிருந்து தமிழக மக்களை காப்பற்றவே முனைகின்றன. இதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்? வெறும் ஆயுதங்களை நம்பி பத்து பேரை சுட்டு, ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்று நினைப்பவர்களை நினைத்து, அவர்களது பிளவுண்ட மனநிலையை நினைத்து மக்களும் அரசும் அஞ்சுவதில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்? துக்ளக் இந்து ஆகிய பத்திரிக்கைகள் மட்டுமா தீவிரவாத எதிர்ப்பு நிலைப்பட்டை கொண்டிருக்கின்றன? எல்லா மையநீரோட்ட பத்திரிக்கைகளும் ஊடகங்களும் தீவிரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டைகொண்டிருக்கிறன. ஒரு மாற்றுக்கு, தீவிரவாத ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருக்கும் பத்திரிக்கைகளை வரிசைப்படுத்துங்களேன். அவைகள் எவ்வளவு மக்களால் படிக்கப்படுகின்றன என்பதையும் காட்டுங்களேன்.
//
தற்போது ஜெயலலிதாவின் ஆசி பெற்ற விஜயகுமாரை "நக்சல் ஒழிப்பு நடவடிக்கையின்' தலைவராக நியமித்திருப்பதன் மூலம் "வசிட்டன் வாயால் பிரம்மரிஷிப் பட்டம்' வாங்கத் துடிக்கிறார், கருணாநிதி. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக தமிழகத்தைப் பேணுவதற்கும், ஆளும் வர்க்கங்களின் மனம் கவர்ந்த அமைதிப் பூங்காவாக மாநிலத்தை "மார்க்கெட்டிங்' செய்வதற்கும் நக்சல் வேட்டை என்னும் இந்த ஊதிப்பெருக்கப்பட்ட நடவடிக்கை திமுக அரசுக்குத் தேவைப்படுகிறது.
//
மறுபடி யோசியுங்கள். நீங்கள் சொலவது போல இல்லை. தமிழகத்தில் நக்ஸல்பாரிகள் இருக்கிறார்கள் என்பது வெளிநாட்டு மூலதனம் தமிழகத்துக்கு வருவதற்கு கேடானது. நக்ஸல் பிரச்னை இருக்கிறது என்று சொன்னாலே வரக்கூடிய மூலதனமும் வராது. இருந்தும் நக்ஸல் பிரச்னையை வெளியே சொல்லி அதனை ஒடுக்கமுயற்சிக்கும் அரசை பாராட்டவே வேண்டும். அலங்காரக் கொண்டையில் ஈறும் பேனும் இருப்பது எப்படியும் தெரிந்து விடும். பிறகு மாநிலத்துக்கு வேண்டிய பெரும் தொழில் மயமாகுதல் எல்லாம் தடைப் படும், பிறகு இந்த இரண்டாம் தர கம்யூனிச அரசுகள், மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் இருக்கின்றனவே அவற்றைப் போல உலக வங்கி, டாட்டா, மிட்டல் என்று பலரிடம் போய் கையேந்தி நிற்க வேண்டி வரும். இப்போது உலக முதலாளிய நிறுவன அமைப்பாளர்கள் தாமே தேடி வருகிறார்கள். நாளை கருணாநிதி அவர்கள் அலுவலக வாயிலில் போய்க் கையேந்தும் நிலை வருவதைத் தடுக்கத்தான் இப்படி ஊக்கமாக நடவடிக்கை எடுக்க முன்வருகிறார். இதிலென்ன பெரிய மர்மம்? இதில் என்ன தவறு காண முடிகிறது உங்களால்?
//
போலீசைப் பொறுத்தவரை தனது கேள்விக்கிடமற்ற அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும், தனது கிரிமினல் நடவடிக்கைகளை மறைத்துக் கொள்வதற்கும் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் அது பயன்படுத்திக் கொள்கிறது. மிகவும் அபாயகரமான பணியில் இராப்பகலாக ஈடுபட்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே, காடுகளிலும் மலைகளிலும் ""அவுட்டோர் ஷூட்டிங்'' நடத்துகிறது. தான் நடத்திய, நடத்தப் போகிற எல்லா "போலி மோதல்' கொலைகளையும் மறைப்பதற்கான திரைச்சீலைகளாக இவற்றைப் பயன்படுத்துகிறது.
//
போலீஸ் கட்டற்ற அதிகாரம் கொண்டதல்ல. அது ஆளும் மக்கள் பிரதிநிதிகளின் சொல்லுக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டது. போலீஸ் கட்டற்று மக்களை அச்சுறுத்தினால், ஓட்டுக்களை இழக்கப்போவது ஆளும் கட்சிதான். ஆகவே, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால், மக்கள் நிச்சயம் ஆளும் கட்சியை தூக்கி எறிவார்கள். இது பலமுறை தமிழ்நாட்டில் நடந்துள்ளது. ஆகவே மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு அஞ்சுகிறார்கள். மக்கள் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள் என்பதால், தீவிரவாதத்தை ஒடுக்க மக்கள் பிரதிநிதிகள் முனைகிறார்கள்.
//
இத்தனை பயங்கரமாகச் சித்தரிக்கப்படும் பெரியகுளம் சம்பவத்தில் நடந்திருப்பது என்ன? 3 பேர் சில ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குண்டு வெடிப்பு, போலீசுடன் மோதல், உயிரிழப்பு என்று எதுவும் நிகழவில்லை. கைது செய்த போலீசாருக்கோ ஒரு சிராய்ப்புக் காயம் கூட ஏற்படவில்லை. போலீசின் சட்டம் ஒழுங்கு பார்வையின் படியேகூட இது மிகவும் சாதாரணமான குற்றம்தான்.
//
இல்லை. நிச்சயம் இல்லை. ஆயுதம் ஏந்தியவனை தண்டிப்பது வேறு. ஆயுதம் ஏந்துவதை தன் கொள்கையாக கொண்ட இயக்கத்தினை ஒடுக்குவது வேறு. இதில் போலிசாரை நோக்கிச் சுட்டு அதில் இருவர் உயிரிழக்கவில்லையே என்று உங்களுக்கு மிக வருத்தம் போலிருக்கிறது. நீங்கள் என்ன போன பிறவியில் ரத்தக் காட்டேரியாக இருந்தீர்களோ? அல்லது இப்போதுமே அப்படித்தானா? சாதாரண மனிதரைக் கேட்டால் ‘நல்ல வேளை யாரும் யாரையும் சுடவில்லை. அதற்கு முன் ஆயுதங்களைக் கைப்பற்றி விட்டார்கள்’ என்று போலிசாரைப் பாராட்டவே செய்வார்.
//
தினகரன் பத்திரிகை மீது பட்டப்பகலில் போலீசின் முன்னிலையில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். 3 ஊழியர்கள் கொல்லப்பட்டிருந்தும், அந்த வன்முறை வெறியாட்டம் மறுக்க முடியாதவண்ணம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தும், ""தாக்குதலுக்குக் கருத்துக் கணிப்புதான் காரணம்'' என்று கூறி, சட்டமன்றத்திலேயே அதனை நியாயப்படுத்தினார், கருணாநிதி.
அண்ணன் அழகிரிக்கு 2% தான் ஆதரவு என்று எழுதியதற்காக ஒரு பத்திரிகை அலுவலகத்தை ஊழியர்களுடன் சேர்த்துக் கொளுத்தலாமாம். அழகிரி ஆதரவாளர்களின் கோபத்துக்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். ஆனால், ஒரு இலட்சம் விவசாயிகளைத் தற்கொலைக்கும், பல ஆயிரம் முஸ்லிம்களையும் தலித் மக்களையும் படுகொலைக்கும், கோடிக்கணக்கான மக்களைப் பட்டினிக்கும் தள்ளும் இந்த அரசமைப்புக்கு எதிராக ஆயுதமேந்துவது தீவிரவாதமாம்!
//
தினகரன் அலுவலகத்தில் நடந்தது அழகிரியின் வன்முறை. அது தனிநபர் வன்முறை. தனிநபரான அழகிரியை தண்டிப்பது என்பது வேறு. வன்முறையை தன் வழியாக கொண்டு பல இளைஞர்களை சேர்த்துக்கொண்டு வன்முறை மூலம் போலீஸ், பொதுமக்கள், என்று அச்சுறுத்தி அதிகாரத்தை கைப்பற்ற விரும்பும் இயக்கத்தை தடுப்பது என்பது வேறு.
இந்த அரசைத் தேர்ந்தெடுத்தது இந்த மக்கள்தானே? திரும்பத்திரும்ப இதே கட்சிகளைத் தேர்ந்தெடுப்பதை விடுத்து இடது சாரிக் கட்சிகளையோ, பொதுவுடைமைக் கட்சிகளையோ தேர்ந்தெடுக்கக் கூடாதென்று யார் கையைப் பிடித்துத் தடுத்தார்கள்? அவர்கள்தானே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணாதுரை, மு.கருணாநிதி, சோனியா, லல்லுப் பிரசாத் யாதவ் என்று அவரவர் ஜாதி விசுவாசத்துக்கு ஏற்ற மாதிரியோ, கொடுக்கும் வாக்குறுதிகளுக்கோ வாக்களிக்கிறார்கள்? அடுத்த முறை நல்ல கட்சியாகப் பார்த்து வாக்களிக்கச் சொல்லிப் பிரச்சாரம் செய்யுங்களேன்?
//
மூன்று இளைஞர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்கள் என்ற குற்றத்துக்காகத் தமிழகமெங்கும் மாவோயிஸ்டு அமைப்பினர் மீது தேடுதல் வேட்டை நடத்துகிறது போலீசு. சிவகங்கையில் நட்ட நடுவீதியில் ரிமோட் குண்டு வைத்து தி.மு.க. நகராட்சித் தலைவரை தி.மு.க.காரனே கொலை செய்கிறானே, அந்தப் படுகொலைக்கு என்ன காரணம்? அன்று உள்ளாட்சித் தேர்தலையும், இன்று கூட்டுறவுத் தேர்தலையும் ரத்து செய்ய வைத்த வன்முறைக்கான காரணம் என்ன? தமிழ் நாட்டையே கொள்ளைக் காடாக்கி வரும் கழக வீரப்பன்கள் மீது எந்த அதிரடிப்படை ஏவப்பட்டிருக்கிறது?
//
நிச்சயம் ஏவப்படும். அவ்வாறு ஏவப்படும் அதிரடிப்படையின் பெயர் மக்களது ஓட்டுக்கள். அந்த ஓட்டை பொறுக்க அரசியல் கட்சிகள் அலையும்வரைக்கும், மக்கள் கையில் கண்ட்ரோல் இருக்கும். அது அடுத்த தேர்தலில் தெரியும். ஒரு ஆளும் கட்சிக்கு தன் ஆளும் கட்சி ஆட்கள் வெற்றி பெற்ற வெறியாட்டத்தை கட்டுப்படுத்தும் தேவை இருக்கிறது. அந்த தேவையைப் புரிந்துகொள்ளாத ஆட்சி வெகுவிரைவில் மக்களால் வாக்குக்கள் மூலம் நீக்கப்படும். நீக்கப்பட்டும் இருக்கிறது தமிழக வரலாற்றில்.
//
"நக்சல் ஒழிப்பு' நடவடிக்கையில் காட்டப்படும் இந்தத் தீவிரத்தில் ஒரு சதவீதமாவது "தீண்டாமை ஒழிப்பு', "லஞ்ச ஒழிப்பு', "மதவெறி ஒழிப்பு' நடவடிக்கைகளில் காட்டப்பட்டதுண்டா? காடு மலையெல்லாம் தேடி அலைய வேண்டிய தேவையே இல்லாமல் கண்முன்னால் காட்சி தரும் இந்தக் கிரிமினல் குற்றங்களை ஒழிக்க ஒரு அமைதிப்படையாவது ஏவப்பட்டதுண்டா?
//
தீண்டாமை ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பு, மதவெறி ஒழிப்பு ஆகியவையும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்தான். ஆனால், ஒரு திருடனை பிடிக்காத போலீஸாருக்கு இன்னொரு கொலைகாரனை பிடிக்க தார்மீக உரிமை இல்லை என்ற இது போன்ற அபத்த வாதங்களை முன்வைப்பதில் உங்களுக்கே வெட்கமாக இல்லையா?
மேலும், எப்போதிருந்து இந்த மாற்றம்? சமூக சீர்திருத்தம் என்பது திரித்தல் வாதம் என்றும் புரட்சி வழியே சரியான வழி என்றும்தானே சொல்லிவந்தீர்கள்? சமூக சீர்திருத்தம் செய்வதன் மூலம் இந்தியாவை மாற்றிக்காட்டிய காந்தி உங்களுக்கு எதிரியாகத்தானே இருந்தார்? இந்தியாவில் எந்த சமூக சீர்திருத்தங்களில் கம்யூனிஸ்டுகள் இருந்திருக்கிறார்கள்? புரட்சி வந்தால் போதும் எல்லாம், பூத்து குலுங்கிவிடும் என்பதுதானே இதுவரை உங்களது கோஷமாக இருந்துவந்திருக்கிறது? அமைதி வழியே, மக்கள் திரளைப் பேச்சினால் மனம் மாற்றி அறவுணர்வால் ஊக்குவித்துத் தம் பின்னே திரட்டிச் சமூக சீர்திருத்ததை செய்து உலகை மாற்றிக்காட்டிய காந்தி, நாராயணகுரு போன்றவர்களை உங்களது எதிரிகளாகத்தானே வரித்துக்கொண்டிருந்தீர்கள்? இப்போது மனமாற்றம் வந்த காரணம் என்ன? அல்லது இது ஒரு டெம்பரரி அம்னீசியாவா? அல்லது புகை மூட்டப் போர்த்தந்திரமா?
//
"வன்முறையா மென்முறையா' என்பதல்ல பிரச்சினை. இந்த அரசமைப்பில் ஐக்கியமாகி, அரசு சன்மானங்களைப் பொறுக்கித் தின்னவும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தரகு வேலை செய்யவும், மக்கள் சொத்தைக் கொள்ளையடித்துப் பங்கு போட்டுக் கொள்ளவும் ஆயுதம் ஏந்தி மோதிக்கொள்வதில் ஆளும் வர்க்கத்துக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.
//
என்ன சீனாவை பற்றி சொல்கிறீர்களா? அப்படியே சீனாவின் மாவோயிச சோசலிச அரசை எப்படி இவ்வளவு துல்லியமாக வருணித்தீர்கள்! நேரே போய் அனுபவம் நிறையவோ? அந்த வரிகளை மேற்கோள் காட்டுகிறேன் - ‘இந்த அரசமைப்பில் ஐக்கியமாகி, அரசு சன்மானங்களைப் பொறுக்கித் தின்னவும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தரகு வேலை செய்யவும், மக்கள் சொத்தைக் கொள்ளையடித்துப் பங்கு போட்டுக் கொள்ளவும்’. இதில் இன்னொரு அம்சம் பாருங்கள். இந்த ரஷ்யாவின் அரசும் இதே போலத்தான் இருக்கிறது- ஆனால் அவர்கள் சோவியத், லெனினியம், சோசலிசம் என்று சும்மா வார்த்தை ஜாலமெல்லாம் காட்டாமல் நேரடியாக ‘சாவரின் டெமாக்ரசி’ என்று சொல்லி விடுகிறார்கள். யாருடைய சாவரினிடி என்பது தெளிவில்லை. கேஜிபியின் சாவரினிடி என்பது உங்களுக்குத் தான் தெரியுமே. நீங்கள் புரட்சி நடந்ததும் செய்யப் போகிற முதல் வேலையே இந்த கேஜிபியை நகல் எடுத்து ஒரு ரகசியப் போலிஸ் அமைப்பைக் கட்டுவதுதானே?
// மக்கள் யுத்தக் குழுவினர் சந்திரபாபு நாயுடுவுக்கு வைத்த குண்டைக் காட்டிலும், சிவகங்கையில் வைக்கப்பட்ட ரிமோட் குண்டுதான் நவீன தொழில்நுட்பம். அவ்வாறிருந்தும் சிவகங்கையில் தேடுதல் வேட்டை கிடையாது, காரணம், இது திமுக ஆட்சி என்பது மட்டுமல்ல; இத்தகைய வன்முறைகள் எதுவும் ஆளும் வர்க்கத்துக்கு எதிரானவையல்ல என்பதுதான் அடிப்படைக் காரணம்.
மாறாக, ""இந்த கொள்ளைக்கார அரசமைப்பைத் தூக்கியெறிவதற்காக ஆயுதம் ஏந்தவேண்டும்'' என்று கூறுவதனால்தான், ஜனநாயகத்தின் எல்லாத் தூண்களும் "தீவிரவாதிகள்' என்று முத்திரை குத்தி நக்சல்பாரிகள் மீது பாய்ந்து படுங்குகின்றன.
//
அதெப்படி, கொள்ளைக்கார அரசமைப்பை தூக்கி எறிவதற்கு கொலைகார அமைப்புதான் வேண்டுமா?
மக்கள் வாக்களிக்கிறார்களே. அவர்களிடம் சொல்லுங்கள். அடுத்த முறை தேர்தலில் நின்று யாராரைக் கொல்லப் போகிறீர்கள், எப்படி, எத்தனை ஆயிரம் பேரைக் கொன்றால் எவ்வளவு மாறுதல் வரும் என்று பட்டியல் போட்டு வைத்திருப்பீர்களே அதையெல்லாம் எடுத்து விடுங்கள் மேடைகளில். எவ்வளவு ஆதரவு திரண்டு வருகிறது என்று பார்க்கலாம்.
முதலாவது, இது கொள்ளைக்கார அமைப்பு அல்ல. கொள்ளைக்கார அமைப்பு என்பது சோசலிஸம். இது ஜனநாயக அமைப்பு. இங்கு ஆளும் கட்சியின் அச்சுறுத்தல் இல்லாமல், மக்கள் தாம் விரும்பும் கட்சிக்கு ஓட்டுப்போடலாம். தங்கள் சாதிக்கட்சிக்கு ஓட்டுப்போடலாம். தங்கள் மதக்கட்சிக்கு ஓட்டுப்போடலாம். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் கட்சிக்கும் ஓட்டுப்போடலாம். மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நினைத்தும் எந்த கட்சிக்கும் ஓட்டுப்போடலாம். அது மக்கள் விருப்பம். அல்லது திமிர் பிடித்துத் தேர்ந்தெடுக்கப் பட எந்த வாய்ப்பும் இல்லாத ஒரு கோமாளிக்குக் கூட வாக்களிக்கலாம். நீங்கள் தேர்தலில் நின்றால் உங்களுக்குக் கூட ஒரு நூறு ஓட்டுகள் விழுந்தாலும் விழும், யார் கண்டது? நின்று பாருங்களேன்? என்ன குறைந்து விடும்? நீங்களோ ஒன்றும் சத்திய சந்தர் அல்ல. அறம், தருமம், நேர்மை இதெல்லாம் உங்கள் கருத்துப்படி பூர்சுவா மாயங்கள். தேர்தலில் நாளை நிற்கலாம். அடுத்த நாள், (தோற்றதும்) , மறுபடி ஆயுதப் போராட்டமே வழி என்றும் அறிவிக்கலாம். இதெல்லாம் மக்களுக்கு ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. அரசியல் வாதி என்றாலே பொய் சொல்வார் என்பது அவர்களுக்குத் தெரியும். உங்களுக்குத்தான் மற்றவர்கள் எல்லாம் பொய்யர்கள் நாம் மட்டும் சத்தியவான் என்று ஒரு பிரமை இருக்கிறதே.
தைரியமாகத் தேர்தலில் போட்டி இட்டு வானத்தை வில்லாக வளைப்போம் என்று பொய் சொல்லுங்கள். ஏற்கனவே அப்படித்தானே கற்பனை கம்யூனிஸ சமுகம் பற்றி சொல்லி இளைஞர்களை மூளைச்சலவை செய்துகொண்டிருக்கிறீர்கள்? ஒரு பக்கம் இயேசுவின் இரண்டாவது வருகை என்ற பொன்னுலகம் வருகிறது என்று அமெரிக்க ஆதரவாக கிறிஸ்துவர்களை உருவாக்க கூட்டம் சேர்க்கிறார்கள். நீங்கள், கம்யூனிஸ பொன்னுலகம் வருகிறது என்று கூட்டம் சேர்க்கிறீர்கள். என்ன வித்தியாசம்? பைத்தியக்காரனை சுற்றியும் பத்துப்பேர்!
//
குறிப்பாக, தனியார்மயதாராளமயக் கொள்கைகளை எதிர்த்துக் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்கள், நாளை கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்டு விடுவார்களோ என்ற அச்சம்தான் ஆளும் வர்க்கங்களை நடுங்கச் செய்கிறது. துப்பாக்கிகாடுபயிற்சி என்பதல்ல எதிரிகளின் அச்சத்துக்குக் காரணம். மார்க்சியம்லெனினியம்மாசேதுங் சிந்தனை என்ற கம்யூனிசச் சித்தாந்தம்தான் அவர்களை அச்சுறுத்துகிறது. கம்யூனிசப் புரட்சியாளர்களின் உறுதியும் விடாப்பிடியான முயற்சியும் அவர்களுக்குப் பீதியூட்டுகிறது.
//
காமெடி கீமடி பண்ணலையே? தனியார் மயக்கொள்கைகளை எதிர்த்து கிளர்ந்தெழுகிறார்களா ? எங்கே? எல்லோரும் தனியார் மயத்தை ஆதரிக்கிறார்கள். அதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகுவதை வரவேற்கிறார்கள். மார்க்ஸியம் லெனினியம் மாசேதுங் சிந்தனை என்ற கான்ஸர் இந்த இளைஞர்களை வழிதவறிப்போகவைத்து, வளரும் தொழில்நுட்பம், பொருளாதாரத்தை பாதிக்கிறது என்பதனை மக்கள் புரிந்துகொண்டே இருக்கிறார்கள். கம்யூனிஸ புரட்சியாளர்களின் மடத்தனமும், பைத்தியக்காரத்தனமும் மக்களுக்கும் அரசில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பீதியூட்டுகிறது.
இப்போதுதான் பொருளாதாரத்தை கழுத்திபிடித்து திருகி இந்தியாவில் தொழில்முனைவோர்களையும், தொழில்துவங்குபவர்களையும் கழுத்தில் கயிறு போட்டுகட்டி, இவ்வளவுக்கு மேல் உற்பத்தி செய்யக்கூடாது, இங்குதான் இவன் தான் தொழில்துவங்க வேண்டும் என்று லைசன்ஸ் கோட்டா சாம்ராஜ்யம் அழிந்து தொழில்முனைவோர்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று வேலைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இன்று "வேலை காலி இல்லை" போர்டுகள் தொழிற்சாலைகளின் முகப்புகளை அலங்கரிக்கவில்லை. இன்று உண்மையிலேயே தொழிலாளர்கள் எந்த தொழிலுக்கும் போவதற்கான சுதந்திரம் பெற்றிருப்பதால், அவர்களது வலிமை அதிகரித்துள்ளது. இவர்கள் தனியார் மயத்தை எதிர்க்கிறார்களா? எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்?
ஆமாம், கஞ்சா அல்லது ஸ்பீட் ஏதாவது சாப்பிட்டு விட்டு இந்தத் தலையங்கம் எழுத வந்தீர்களா என்ன? மார்க்சியம், லெனினியம், மாவோயிசச் சித்தாந்தம் அவர்களை அச்சுறுத்துகிறதா? சோவியத் ரஷ்யா என்று ஒரு பெரிய மண் கோட்டை 1989 இல் தகர்ந்து பொடியானது, நினைவிருக்கிறதா? இன்று லெனினின் சிலைகள் கிழக்கைரோப்பா முழுவதும் காலில் உடைந்து தலை குப்புறக் கிடக்கின்றன, அதாவது தெரியுமோ? செய்தித்தாள்கள் படிக்கிறீர்களோ? இல்லை அதெல்லாமும் கற்பனை வாழ்க்கைதானா? மாவோயிசம் என்று ஏதோ சொன்னீர்களே, அந்த மாவோவின் சாம்ராஜ்யமே இன்று கலகலத்துப் போய் கம்யூனிஸ்டு கட்சியில் பூர்சுவாக்கள் சேர்வது தவறில்லை, மேலும் சொத்துரிமை கொடுக்காது மக்களை ஊக்குவிக்க முடியாது என்று சொத்துரிமை உண்டு என்று அறிவித்துள்ளது, மேலும் முதலாளியம் என்பது ஒன்றும் ரத்தக் காட்டேரி இல்லை என்று கூறி அமெரிக்காவோடு கூட்டு சேர்ந்து இருபதாண்டுகள் ஆகிவிட்டன, அதுவாவது தெரியுமா?
//
இதனை மறைத்துக் கொண்டு, "வேலையில்லாத பட்டதாரிகளும் விரக்தியுற்ற இளைஞர்களும்தான் நக்சல்பாரிகளாக மாறிவிடுவதாக'க் கதையளக்கிறார்கள். "இந்த சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் நக்சலியம் ஒழிந்துவிடும்' என்று கனாக் காண்கிறார்கள். வேலையின்மை, வறுமை காரணமாக நக்சலியம் பரவுகிறது (திருட்டு, விபச்சாரம் போன்ற கிரிமினல் குற்றங்கள் பரவுவதைப் போல) என்று கூறுவதன் மூலம் நக்சல்பாரி அரசியலையே கிரிமினல் குற்றமாகச் சித்தரிக்கிறார்கள்.
//
வேலையில்லா பட்டதாரிகளும் விரக்தியான இளைஞர்களும்தான் நக்ஸல்பாரிகளாகவும், மத பயங்கரவாதிகளாகவும், ஆனார்கள். சமூகத்தில் வேலைவாய்ப்பு பெருக பெருக நக்ஸலிசம் மட்டுமல்ல, பொதுவாகவே எந்த எதிர்ப்பு அரசியல் உணர்வும் குறைகின்றது.
நக்ஸல்பாரி அரசியல் கிரிமினல் குற்றம்தான். ஏனெனில், ஒரு இயக்கம் என்ன காரணத்தினாலும் இன்னொரு மனிதனது உயிரை பறிக்க உரிமை அற்றது. அது நக்ஸல்கள் கொல்வதாக இருந்தாலும், அது மத பயங்கரவாதிகள் குண்டு வைப்பதாக இருந்தாலும் அது ஒன்றுதான்.
வன்முறையை தன் வழியாகப் பகிரங்கமாக அரசியலாக ஏற்கும் ஒவ்வொரு இயக்கமும் கடுமையாக ஒடுக்கப்படவேண்டும். வார்த்தைகள் மூலம் தங்களது வாதத்தை சொல்ல முடியாவதவர்கள், வரப்போகும் கற்பனை கம்யூனிஸ சமுதாயத்திற்காகவோ, அல்லது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பொன்னுலகுக்காகவோ, உழைத்துப் போராடி வாழும் பொதுமக்களைக் "களையெடுப்பதையோ" அல்லது மதவெறி காரணமாக, தன் மதத்தை சாராதவர்களை கொல்வதையோ ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. அத்தகைய இயக்கங்களை வளரவும் விடக் கூடாது.
நீங்களோ இத்தகைய கொலைகளை உங்களது கொள்கை வழியில் சரியானது என்று முழுமனதாக நம்புகிறீர்கள்.
இப்படிக் கொலை வெறிக் கொள்கையைத் தாமே கொண்டு உள்ளவர்கள் எந்த தார்மீக அடிப்படையில் அல்லது என்ன தர்க்கப்படி இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் நடக்கும் வன்முறையை கண்டிக்க உரிமை பெறுகிறீர்கள்? நீங்கள் இன்னமும் நினைத்தவர்களை எல்லாம் கொல்லும் சக்தியைப் பெறவில்லை என்பதால் உங்கள் படுகொலைத் திட்டங்கள் நெறியற்றவை என்பது மறைந்து விடுமா என்ன?
//
விரக்தியுற்றவர்கள்தான் நக்சல்பாரிகளாகிறார்கள் என்ற கூற்று உண்மையாயிருப்பின், தற்கொலை செய்து கொண்ட ஒரு லட்சம் விவசாயிகளும் நக்சல்பாரிகளாகியிருக்க வேண்டும். நக்சல்பாரிகளை உந்தித் தள்ளும் உணர்ச்சி, விரக்தி அல்ல; அது சமூக அநீதிகளுக்கு எதிரான ஆவேசம். அவர்களை வழிநடத்துவது மார்க்சியம்லெனினியம் என்ற அறிவியல் பார்வை. நக்சல்பாரிகள் சமூகத்தைத் தம் தோளில் சுமப்பவர்கள், மக்கள் நலனுக்காகத் தம் சொந்த வாழ்வின் இன்பங்களைத் தாமே முன்வந்து துறப்பவர்கள். நக்சல்பாரிகள் விரக்தியுற்ற இளைஞர்களுமல்ல, கம்யூனிசம் சோற்றால் அடித்தால் செத்துவிழும் கொள்கையுமல்ல.
//
தற்கொலை செய்துகொண்ட விவசாயி ஒரே ஒருவராக இருந்தாலும், அந்த அரசு கலைக்கப்படும் இதே இந்திய மக்களால். கலைக்கப்பட்டும் இருக்கிறது.
ஆனால், கலைக்கவே முடியாத, ராணுவ சர்வாதிகாரத்தின் கீழ், செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சத்தினால் செத்த சோசலிஸ விவசாயிகள் பற்றி அதே நேர்மையுடன் உங்களால் எழுத முடியுமா?
முட்டாள்கள் தடுக்கி விழுவார்கள் என்று சொல்கிறோம் என்று வையுங்கள். உடனே அனைத்து முட்டாள்களும் தடுக்கித்தான் விழுவார்கள் என்று சொல்கிறோம் என்றா எடுத்துக் கொள்வது? அபாரமாகத்தான் வேலை செய்கிறது உங்கள் கற்பனை? (அது நையாண்டி. ஏதோ உண்மையிலேயே பாராட்டுகிறேன் என்று கருத வேண்டாம். உங்களால் சின்ன வாதங்களையே பின்பற்ற முடியவில்லை என்பது எனக்கு ஓரளவு உங்கள் மன ஆரோக்கியம் பற்றிக் கவலைப் பட வைக்கிறது. ஆந்திராவிலும், ஒரிஸ்ஸாவிலும் நக்சல்பாரிகளாக ஆனவர்களில் பட்டினியைச் சந்தித்த விவசாயிகளில் யாருமே இல்லையா என்ன? கட்டாயம் இருப்பார்கள்-
நக்ஸல்பாரிகள் சமூக அநீதிகளால் உருவாகிறார்கள் என்று நீங்கள் சொல்லிக்கொள்வது ஒரு சந்தர்ப்ப வாதம். நக்ஸ்ல்பாரிகள் தங்களது கொலைகளை நியாயப்படுத்திக்கொள்ள சொல்லும் ஒரு சாக்கு. அவ்வளவுதான்.
என்னுடைய வருத்தம் என்னவாக இருந்தாலும், மற்றொரு அப்பாவி மனிதன் மீது என்னுடைய வன்முறையை பிரயோகிப்பது சரியல்ல என்று ஒப்புக்கொள்ளும் அமைப்புதான் மக்களது அமைப்பு. அந்த அமைப்பாக நீங்கள் ஆகும்போது அதுபற்றி பேசலாம்.
ஆனால், மத பயங்கரவாதிகள் கூறுவதும், மார்க்ஸிய பயங்கரவாதிகள் கூறுவதும் ஒன்றேதான் என்னும்போது இன்னும் உங்கள் இரு கூட்டங்கள் மீதும் மக்களுக்குப் பயம்தான் அதிகரிக்கிறது. மத பயங்கரவாதிகள் கூறுகிறார்கள் ‘நீ நான் கும்பிடும் தெய்வத்தை வணங்காதவன் என்ற குற்றம் இழைப்பவன். அதனால் உன்னைக் கொல்வது நியாயமானது.’
கம்யூனிஸ பயங்கரவாதிகள் கூறுகிறார்கள்‘நீஎன்னுடைய கற்பனை உலகத்தை அங்கீகரிக்காதவன். அதுவே உன் குற்றம், அதனால் உன்னை களையெடுப்பது நியாயமானது. உன்னைக் கொல்வோம்.’ இவ்வாறான வாதங்கள், மேலும் மேலும் சமூக அநீதிகளைத்தான் கொண்டுவரும். கொண்டு வந்திருக்கிறது.
ஏனேனில் மார்க்சியம் கிறிஸ்துவ இறையியல் போன்று, கற்பனையில் பொன்னுலகம் படைக்கும் கற்பனைவாதம், கருத்துமுதல்வாதம். இதை மக்கள் மீது திணித்தே தீர்வேன் என்னனம் நக்ஸல்பாரிகள் சமூகத்தின் கேன்ஸர்கள். மக்கள்நலனுக்காகச் செய்கிறோம் என்று அந்த மக்களையே கொன்று புதைகுழிக்குள் அனுப்புபவர்கள். அவ்வாறு கொன்றபின்னால், அந்த பிணத்திடமே, உன் நலனுக்காகத்தான் உன்னை கொன்றோம் என்று சொல்லும் பிளவாளுமை கொண்ட மனநலம் பிசகியவர்கள். கம்யூனிஸம் சோற்றால் அடித்தால் செத்துவிழும் கொள்கையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்ன செய்வது? எல்லா மனம் பிறழ்ந்தவர்களும் தங்களே வரித்துக்கொண்ட உலகத்தில் நியாயவான்களாகவே இருக்கிறார்கள்.
//
நக்சல்பாரிகளின் அரசியலைத் தவறு என்று யாராலும் வாதாட முடியாது. நக்சல்பாரி இயக்கத்தின் ஒரு சாதாரணத் தொண்டன் எழுப்பும் அரசியல் கேள்விக்கு எந்த ஓட்டுப் பொறுக்கித் தலைவனாலும் பதில் சொல்ல முடியாது. நக்சல்பாரிகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது. எனவேதான் அச்சுறுத்துகிறது, அவதூறு செய்கிறது, மக்களிடமிருந்து தனிமைப்படுத்த முயற்சி செய்கிறது.
//
மனநலம் பிறழ்ந்தவர்கள் என்று சொல்லி நான்கு வரிகள் தாண்டுவதற்குள் அதை நிரூபிக்க ஒரு வரியை எழுதி விட்டீர்கள். முன்னால் சொல்லிய படி உண்மையிலேயே உங்களுக்கு நகைச்சுவை உணர்வு கூடுதல்தான். ‘நக்சல்பாரிகளின் அரசியலைத் தவறு என்று யாராலும் வாதிட முடியாதா’? ஏன்? எது தடுக்கும்? நான் இதோ வாதிட்டுக் கொண்டிருக்கிறேனே. இந்தியாவில் உள்ள சிறு நில விவசாயிகளில் 90 சதவீதத்துக்கு மேல் உங்களை மறை கழண்டவர்கள் என்றுதானே கருதுகிறார்கள். இல்லாவிடில் எதற்கு நேற்று வந்த அரசியல் வாதி பின்னாலெல்லாம் ஓடுகிறார்கள். (உதா: விஜய்காந்த், ராகுல் காந்தி, ப்ரியங்கா, தயாநிதி மாறன்) பல பத்தாண்டுகளாகத் தொண்டை வறளக் கத்திக் கொண்டு, காகிதத்தில் மசியைத் தடவி லட்சக்கணக்கான காகிதங்களை வீணாய் அடித்து உங்கள் புராணத்தை விற்கப் பார்க்கிறீர்கள், ஒரு பயல் லட்சியம் செய்கிறானா? ஐயா, நாற்பதாண்டுகளாக அலைகிறீர்கள் அரசியல் அதிகாரம் வேண்டும் என்று, சரி ஒரு மாதம் ஆண்டு பாருங்கள் என்று உங்களைக் கூப்பிட்டு ஒரு முனிசிபாலிடியாவது, பஞ்சாயத்தாவது கொடுக்கிறார்களா? உங்கள் அரசியல் உதவாக்கரை அரசியல் என்பதால்தானே அதை அலட்சியம் செய்கிறார்கள். அவர்கள் ‘அட போங்கப்பா, பொழைப்பத்த பசங்க’ என்று விரலால் தள்ளுகிறார்களே, அதில் எந்தப் பகுதி உங்களுக்கு இன்னமும் புரியவில்லை?
நக்ஸல்பாரி அரசியல் தவறு என்று நான் வாதாடுகிறேன். நான் கேட்ட கேள்விகள் இங்கே இருக்கின்றன. நக்ஸல்பாரி இயக்கத்தின் எந்த ஒரு கொலைவெறியனாலும், தலைவனானாலும் அவற்றுக்கு பதில் சொல்ல முடியாது.
அதனால்தான், என்னை போன்ற பொதுமக்களை நக்ஸல்பாரி இயக்கங்கள் கொலைவெறி கொண்டு துப்பாக்கி எடுத்து வன்முறைமூலம் வாயை மூடவைக்க முயல்கின்றன
ஓட்டுப்பொறுக்கித் தலைவனே இந்தியாவின் உன்னதமான தலைவன். அவனே மக்களின் ஓட்டுக்களை ஒவ்வொன்றாக பொறுக்க விழைகிறான். ஒவ்வொரு ஓட்டுக்கும் அவன் தன்னை மக்களின் பிரதிநிதியாக ஆக்கிக்கொள்ள வேண்டியவன். அவனே உண்மையான மக்கள்தலைவன். அல்ல, அந்தச் சொல் தவறான சொல், அவனே மக்கள் பிரதிநிதி.
மக்கள் வீசும் ஓட்டுக்களை பொறுக்கும் உன்னத மக்கள் பிரதிநிதிகளுக்குத் தலைவணங்குகிறேன்.
//
பெரியகுளம் சம்பவத்தையொட்டி நக்சல்பாரிகளுக்கு எதிராக அரசும் ஊடகங்களும் மேற்கொண்டு வரும் பொய்ப்பிரச்சாரத்தை நாம் முறியடிக்க முடியும். ஆனால், மேற்கூறிய பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லையென்றோ, மாவோயிஸ்டுகளின் "ஆயுதப் போராட்டத்துக்கான' நியாயத்தை தமிழக மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் என்றோ அதற்குப் பொருள் அல்ல. பெரியகுளம் சம்பவத்தையொட்டி மாவோயிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையே இதற்குச் சான்று கூறுகிறது.
""மாவோயிஸ்டுகளின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் மறைத்து விட்டு அவர்களை வெறும் ஆயுத மோகம் கொண்ட தீவிரவாதிகளாகக் காட்ட ஊடகங்கள் முயற்சிக்கின்றன''... ""ஆயுதப் போராட்டத்திற்கான சிறிய தயாரிப்புகளையே பெரும் பயங்கரவாதமெனச் சித்தரித்துப் பயங்கரவாத பீதியை உருவாக்கி வருகிறது கருணாநிதி அரசு'' என்று கூறும் அந்த அறிக்கை, ""மாவோயிஸ்டுகள் யார், அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள்?'' என்று சுருக்கமாக விளக்குகிறது.
"மாவோயிஸ்டுகள் யார், அவர்களுடைய கொள்கை என்ன, அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள்' என்பதையே மக்களுக்கு விளக்கிப் புரியவைக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் ஒரு அமைப்பு, ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கிவிட்டதாகக் கூறுவது சிறுபிள்ளைத்தனம் என்பதை விளக்கத் தேவையில்லை. தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் இவர்கள் சுற்றி வளைத்துக் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறை.
//
"ஆயுதப் போராட்டத்திற்கான சிறிய தயாரிப்புகளையே".. ஓஹோ பெரிய தயாரிப்புகள் செய்யும் போது போலீசுக்கு சொல்லி அனுப்புவார்களா?
ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்று விளக்கும் ஒரு கட்சி ஆயுதப்போராட்டத்தை துவங்கிவிட்டதாக நினைக்காமல் என்ன செய்யமுடியும்? சற்றே எழுதியதை படித்து பார்த்தால், எழுதியதன் அபத்தம் விளங்கும்.
//
பேருந்து எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக சனவரி, 2000இல் தோழர் ரவீந்திரனை போலீசு காவலில் வைத்து சித்திரவதை செய்து சுட்டுக் கொன்று விட்டு, அதனை மோதல் கொலை என்று புளுகியது போலீசு. அது தி.மு.க. ஆட்சிக்காலம். பின்னர், நவம்பர், 2003இல் தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாரத்தில் 26 தோழர்கள் கைது செய்யப்பட்டு பொடாவில் சிறை வைக்கப்பட்டனர். தோழர் சிவா சுட்டுக் கொல்லப்பட்டார் அது ஜெயலலிதா ஆட்சிக் காலம். இப்போது பெரியகுளம் சம்பவம்.
பெரியகுளத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி மாவோயிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை எதுவும் கூறவில்லை. ஆனால், முன்னர் ரவீந்திரன் கொலை செய்யப்பட்டபோதும், ஊத்தங்கரையில் 26 பேர் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்ட போதும், மக்கள் ஆதரவு அடித்தளம் கூட இல்லாமல் ஆயுதக் குழுக்களைக் கட்டும் இவர்களுடைய சாகசவாதம் பற்றி நாம் விமரிசித்தோம். மாவோயிஸ்டுகள் கோபப்பட்டார்கள். தருமபுரி மாவட்டத்தில் ஏராளமான மக்களைத் திரட்டியிருப்பதாகவும், அம்மாவட்டம் ஒரு ஆயுதப்போராட்ட முனையாக உருவாகியிருப்பதாகவும் வலிந்து வாதாடினார்கள்.
//
இதன்மூலம் நீங்கள் சொல்வது தெள்ளென தெரிகிறது. மக்களை வெறியேற்றி அவர்களை முழுநேர கொலைகளுக்குத் தயார் செய்யவேண்டும் பிறகுதான் ஆயுத போராட்டம் என்ற உங்கள் உளறல் உங்களை நன்றாகவே காட்டிக்கொடுக்கிறது.
ஆகவே ஆயுதம் தாங்கிக் கொல்வது உங்களுக்கு தவறான செயல் இல்லை. ஆகவே, அவர்கள் இன்றைக்கே கொல்வேன் என்று சொல்கிறார்கள். நீங்கள் சற்று காலம் கழித்து கொல்லலாம் என்று சொல்கிறீர்கள். அவ்வளவுதான்.
ஆகவே நீங்கள் இருவருமே ஒரே வன்முறை குட்டையில் ஊறும் விஷ மட்டைகள்.
பிறகு ஏன் போலிஸ் உங்களையும், மாவோயிஸ்டுகளையும் கொல்வது தவறு என்று சொல்கிறீர்கள்? உங்கள் கொள்கையையேதான் உங்கள் பால் திருப்புகிறார்கள் போலிசார்?
//
தற்போது பெரியகுளம் பகுதி! இங்கே மாவோயிஸ்டு அமைப்பிற்கு மக்கள் மத்தியில் அரசியல் ரீதியான செல்வாக்கு ஏதும் இல்லை. அன்றைய சம்பவத்தில் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததற்காக அந்த வட்டாரத்து மக்கள் யாரும் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி இல்லை.
""மலைத்தொடர்கள், காட்டுப் பகுதிகள், பாதுகாப்பான மறைவிடங்கள் கொண்ட காட்டுப்பகுதிகளாக இருந்தால் போதும்; அங்கே ஆயுதக்குழுக்களைக் கட்டிவிடலாம், ஆயுதப்போராட்டத்தைத் தொடங்கிவிடலாம்'' என்று சிந்திக்கும் அளவுக்கு புவியியல்தான் இவர்களை வழிநடத்துகிறது; அரசியல் வழிநடத்துவதாகத் தெரியவில்லை. அரசியல் கண்ணோட்டம் ஏதுமற்ற இந்த அசட்டுத்தனமான நடவடிக்கையை இவர்கள் தம்முடைய சொந்த விவகாரமாகக் கருதிக் கொள்கிறார்கள். ""நாங்கள் போராடுகிறோம், நாங்கள் தியாகம் செய்கிறோம், உனக்கென்ன நட்டம்?'' என்ற சாகசவாதிகளுக்கே உரித்தான மனோபாவம்தான் இவர்களுடைய சிந்தனையை வழிநடத்துகிறது.
""கம்யூனிஸ்டுகள் தம்முடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் மக்களுக்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டவர்கள்'' என்ற மிக எளிய உண்மை கூட, எதிரிகளின் அவதூறுப் பிரச்சாரம் தொடங்கிய பின்னர்தான் இலேசாக இவர்களுக்குப் புரியத் தொடங்குகிறது.
//
எந்த மக்களுக்கு "விளக்கம்" அளிப்பீர்கள்? கொல்லப்பட்டவர்களுக்கா? இன்னும் உயிருடன் இருக்கும் மக்களுக்கா? விளக்கம் அளித்து விட்டுச் சுட்டுத் தள்ளினால் சுடப்படும் மனிதருக்கு மிகவும் மகிழ்வாக இருக்கும் என்று கருதி விட்டீர்களோ? ஒரு முறை உங்கள் காலைப் பார்த்து உங்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளுங்கள். அதை விடப் பல் மடங்கு அதிகம் துன்பம் உயிரை இழப்பது என்பது. அதை ஒரு முறை அனுபவித்துப் பாருங்கள் புரியும்.
//
எனவேதான் ""மாவோயிஸ்டுகள் ஏன் ஆயுதம் ஏந்துகிறார்கள்?'' என்று தங்களுடைய அறிக்கையில் மக்களுக்கு விளக்கம் தருகிறார்கள். ""சிறப்புப் பொருளாதார மண்டலம், கோக், பெப்சி, ரிலையன்சு, குஜராத் படுகொலைகள்..'' என்று ஒரு நீண்ட பட்டியலைக் கூறி ""இத்தகைய பயங்கரவாதங்களை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதம் ஏந்துவது பயங்கரவாதமல்ல. அத்தகைய மக்கள் புரட்சிக்குத் தலைமை ஏற்கவே மாவோயிஸ்டுகள் ஆயுதம் ஏந்துகிறார்கள்'' என்கிறது அவர்களது அறிக்கை.
மேற்கூறிய பிரச்சினைகளுக்காக ஏற்கெனவே மக்கள் புரட்சி நடந்து கொண்டிருக்கிறதாம்! அதற்கு இவர்கள் தலைமை தாங்குகிறார்களாம்! புரட்சிக்குத் தலைமை தாங்கும் கம்யூனிஸ்டுகள், புரட்சியில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்குத் "தன்னிலை விளக்கம்' தந்து புரிய வைப்பதை நாம் இப்போதுதான் கேள்விப்படுகிறோம்.
//
நன்றி. இதே வகையாகத்தான் சற்று முன்னர் இதே கட்டுரையில் "தனியார் மயத்துக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்களை" பற்றி உங்கள் வரியும் இருந்தது. அதனால்தான் ஒரே குட்டையில் ஊறிய விஷ மட்டைகள் என்றும் நான் முடிவு சொன்னேன்.
//
சிறப்புப் பொருளாதார மண்டலமாக இருக்கட்டும், பிற தனியார்மய நடவடிக்கைகளாக இருக்கட்டும், அவற்றுக்கு எதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த அரசமைப்பின் வரம்புக்குள்ளேயே தத்தம் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பல்வேறு மக்கட்பிரிவினர் நடத்தும் இத்தகைய போராட்டங்கள் அவை போர்க்குணமிக்கவையாக இருப்பினும் பொருளாதாரப் போராட்டங்களே.
//
அவை பொருளாதார போராட்டங்கள் மட்டுமின்றி, ஓட்டுப்பொறுக்கி அரசியலின் காரணமாக உருப்படியான விளைவைத்தரும் போராட்டங்களாகும். மேலும் பொருளாதாரம்தான் அரசியல் என்பதுதானே உங்கள் இறைதூதரின் அடிப்படை வாதமே. அதை எப்படி மறந்தீர்கள்?
பொருளாதாரப் பிரசினைகளுக்கு பொருளாதாரப் போராட்டம் நடத்தாமல் மக்கள் என்ன செய்வார்கள்? உங்கள் புரட்சி வெடித்து மலர்ந்து இந்தியாவில் ஒரு சைபீரியாவையும், ஸ்டாலினையும், நள்ளிரவு கைதுகளையும் உருவாக்கும் வரை மக்கள் சகித்துக் கொண்டு, எந்த ஜனநாயகப் போராட்டமும் நடத்தாமல் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் இல்லையா? கம்யூனிஸ்டுகளுக்கு இன்றைய பிரசினைகளைத் தீர்ப்பதில், மக்களுக்கு உடனடி நிவாரண முயற்சிகள் வழங்குவதில் பிரசினை தான். ஏனென்றால் அது வெறும் சீர்திருத்தம் தான். மக்களுக்கக புரட்சி என்பது போய், புரட்சிக்காக மக்கள், புரட்சி வரும் வரையில் கஷ்டபடடுங்கள் என்று சாபம் வழங்கும் உங்கள் மனநோய்தான் மார்க்ஸிய-மாவோயிச மனநோயோ?
//
மறுகாலனியாக்க எதிர்ப்பு என்ற அரசியல் கண்ணோட்டமோ, இந்த அரசமைப்பைத் தூக்கியெறிய வேண்டுமென்ற இலட்சியமோ அத்தகைய போராட்டங்களுக்கு இல்லை. அத்தகைய அரசியல் முழக்கங்களை முன்வைத்து மக்களைத் திரட்டுவதுதான் கம்யூனிஸ்டுகளின் கடமை. புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுவது என்பதன் பொருள் இதுதான். இப்படிப்பட்ட புரிதலோ, இவ்வாறு மக்களைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கையோ மாவோயிஸ்டுகளுக்கு இல்லை.
//
ஏன் இந்த அரசமைப்பை தூக்கி எறியவேண்டும்? ஏன் மக்கள் அவ்வாறு நினைக்கவேண்டும்? தெருமூலையில் விளக்கொளி இல்லை, தெருக்கள் சரியாக இல்லை என்பது மக்களின் கோரிக்கையாக இருந்தால், அவர்கள் ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் மக்களிடம் வந்து ஓட்டு பொறுக்க வரும் உன்னத மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்கிறார்கள். "அய்யா உனக்கு ஓட்டுப்போடுகிறோம். ஆனால் சாலையை சரி செய், சாலையில் விளக்கொளி போடு" என்று கேட்கிறார்கள். அல்லது அத்தனை நாட்கள் காத்திருக்கத் தேவை கூட இல்லை. ஐந்தாண்டுகளில் பல முறை அந்தப் பிரதிநிதியைச் சந்தித்துத் தம் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி வற்புறுத்த அந்த மக்களுக்கு உரிமையும், கடமையும் உள்ளன. அதை அம்மக்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது செயல் சாமர்த்தியம் சார்ந்தது. ஆயுதம் தாங்கி பெரும் போர் நடத்தச் சாமர்த்தியம் உள்ள வராக அம்மக்களைக் கற்பனை செய்கிறீர்கள், ஒரு சாதாரண எம் எல் ஏ வையோ அல்லது கார்ப்பரேசன் அதிகாரியையோ போய் விரட்டி வேலை வாங்கிக் கொள்ள அவர்களுக்கு முடியாதா? என்ன ஐயா கதை இது?
அந்த மக்கள் பிரதிநிதிகள் ஐந்தாண்டுகள் பிரதிநிதியாக இருக்கும்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றலாம், நிறைவேற்றாமல் போகலாம். அப்போது அந்த மக்களிடம் அந்த அரசியல்வாதி திரும்ப வந்துதான் ஆகவேண்டும். காலதாமதமாக நடக்கலாம். இந்த ஐந்தாண்டுகள் கழித்து அடுத்த ஐந்தாண்டுகளில் நடக்கலாம். ஆனால், நடக்கும். அந்த மக்களிடமிருந்து பிரச்னை இல்லாமல் வெற்றி பெற விரும்பும் மக்கள் பிரதிநிதி மக்கள் கேட்டுக்கொண்டதை நிச்சயம் செய்வார்.
ஆனால், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? புரட்சி வந்துவிடும். புரட்சி வரும் வரைக்கும் தெருவில் விளக்கொளி வராது. சாலை உருப்படியாக இராது. புரட்சி வந்ததும், ஆட்டமாட்டிக்காக எல்லா தெருக்களிலும் விளக்கு எரியும். எல்லா இடங்களிலும் புத்தம்புது சாலைகள் வந்துவிடும் என்று சொல்கிறீர்கள். அந்த புரட்சி வருவதற்காக எல்லோரும் உங்கள் கட்சியில் சேரவேண்டும் என்று சொல்கிறீர்கள். எவன் சேருவான் உங்கள் கட்சியில்? கையில் இருக்கும் கலாக்காய், மேலே இருக்கும் பலாக்காயை விட மேல் என்பது மக்களுக்கு தெரியாதா? அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்று ஒரு கும்பல் உங்கள் பின்னால் வரும். இறுதியில் மரணத்தை தழுவும். அது தியாகமாக உங்களால் பாராட்டப்படும். இது தேவையா? இன்றைக்கே அந்த தெருவிளக்கொளியை கொண்டுவர அதிகாரிகளை சந்தித்தும், பிரதிநிதிகளை சந்தித்தும் நீங்கள் ஏன் வேலை செய்யக்கூடாது?
எவ்வளவு குறைபாடுள்ளதாக இருந்தாலும் ஜனநாயகம் மக்களுக்கு நல்லது. குறைபாடுகள் இல்லாத ஜனநாயகம் உலகத்தில் எங்கும் இல்லை.
ஜனநாயகம் குறைபாடுகள் கொண்டிருக்கிறது என்று நீங்கள் சொல்வதை வைத்து கம்யூனிஸ அடக்குமுறையையையும் அராஜகத்தையும் ஆயுத போராட்டத்தையும் அனார்கியையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கனவு காண்கிறீர்கள்.
இந்த ஜனநாயகத்தின் குறைபாடுகளை அடையாளம் காணுங்கள். அதனை நீக்க ஜனநாயக முறைகளை நல்ல வழியே பின்பற்றி முயற்சி செய்யுங்கள். ஏதோ உங்களையே சாகச வீரர்களாகவும், வஜ்ஜிரம் போல உறுதி உள்ளவர்களாகவும் எல்லாம் பாரதம் பாடுகிறீர்களே, அந்த வீர தீர சாகசங்களை எல்லாம் இந்த சுண்டைக்காய் எம் எல் ஏக்களையோ, அரசு அலுவலர்களையோ, மந்திரிகளையோ கிடுக்கிப் பிடி போட்டு வாக்குறுதியை நிறைவேற்ற வைக்கும் செயல் சாமர்த்தியம் பெறப் பயன்படுத்துங்கள்.
ஆக்க பூர்வமாக அமைப்பை வளர்த்து விட முயலுங்கள். எப்போதும் எதை அழிக்கலாம் என்று அலையாதீர்கள். அது மனநோய். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ என்று நீங்கள் கட்டிச் சேர்க்கும் ஒவ்வொருவரும் ஒரு மனநோயாளிதான். நல்லதையே பார்க்கத் தெரியாத மடையர்கள். இருட்டையே ஒளி என்று வாதிட்ட மூடர்கள். அது அழிவுப் பாதை. நீங்கள் உங்களை அழித்துக் கொள்ள அனைத்து உரிமையும் உங்களுக்கிருக்கிறது. மக்களை அழிவுப்பாதையில் தள்ளாதீர்கள்.
அந்த உரிமை உங்களுக்குக் கிடையாது. நீங்கள் ஜனநாயக அமைப்பின் அனைத்துத் தற்காப்பு வழிகளையும் பயன்படுத்தி களை எடுக்கத்தான் படுவீர்கள்.
இந்த ஜனநாயகத்தின்மூலம் மக்கள் மேலும் வசதி வாய்ப்புகள் பெற முயற்சி செய்யுங்கள். இந்த ஜனநாயகத்தை அதன் மூலம் செழுமை படுத்துங்கள். அது உண்மையிலேயே மக்களுக்கு உழைப்பதாகும்.
//
மாறாக, மக்களை அரசியல் படுத்த ஒரு விபரீதமான முறையைக் கடைப்பிடிக்கிறார்கள், மாவோயிஸ்டுகள். தத்தம் கோரிக்கைகளுக்காக மக்கள் போராடும்போது அவற்றில் கலந்து கொண்டு, அப்போராட்டங்களையே போலீசுடனான மோதலாக மாற்றினால், நிராயுதபாணிகளான மக்களோ போலீசின் அடக்குமுறையை எதிர்கொண்டு செய்வதறியாமல் திகைத்து நிற்பார்கள்; இப்படியாக "அரசு என்பது அடக்குமுறைக் கருவி' என்ற உண்மையை மக்களுக்கு அனுபவபூர்வமாக புரிய வைத்து விடலாம் என்று நம்புகிறார்கள். இப்படியான செயல்கள் மூலம் அவர்கள் மத்தியிலிருந்து முன்னணியாளர்கள் சிலரைத் தமது "ஆயுதக் குழுக்களுக்கு' வென்றெடுக்கிறார்கள். இதுதான் மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்ட மாவோயிஸ்டுகள் வகுத்திருக்கும் வழிமுறை.
//
இது தவறு என்று சொல்வதற்கு மனம் நிறைந்த என்னுடைய நன்றி. இது ஒரு கேவலமான உத்தி மட்டுமல்ல, இது தீவிரவாதத்தையும் வன்முறைச் சூழலையும் ஒரு மாயச்சுழல் போல உருவாக்கும் உத்தி. அனார்க்கியை உருவாக்க விழையும் பயங்கரவாதிகள் செய்யும் உத்தி. அப்பாவிப் பொதுமக்கள் போலீஸால் சுடப்பட்டு சாவதில் தங்களது அரசியல் சக்தியை வளர்த்துக்கொள்ள விரும்பும் கேடுகெட்ட அரசியல்வியாதிகள் செய்யும் உத்தி.
//
சில சிறப்பான நிலைமைகளில் ஆந்திரம் மற்றும் தண்டகாரண்யாவின் பழங்குடி மக்கள் மத்தியில் தாங்கள் பெற்றிருக்கும் ஆதரவைக் காட்டி, அதனை மக்களின் ஆயுதப் போராட்டம் என்று சித்தரிக்கிறார்கள் மாவோயிஸ்டுகள். இதையே நாடு முழுவதற்கும் விரிவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
அந்த மக்கள் ஆதரவின் தன்மை என்ன? அது அரசியல் ரீதியான ஆதரவல்ல. ""நம்முடைய கோரிக்கைகளுக்காக நக்சல்பாரிகள் உயிரைக் கொடுக்கிறார்கள்'' என்ற அறவுணர்வின் அடிப்படையில் பழங்குடி மக்கள் வழங்கும் ஆதரவு. இத்தகைய ஆதரவு மக்களிடம் அரசியல் உணர்வை வளர்ப்பதில்லை. மாறாக, அதனை இல்லாமல் செய்து, மக்களை வெறும் பார்வையாளர்களாக்கி விடுகிறது.
//
பழங்குடிமக்கள் உதவி பெறவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்க உதவியும் அவர்களது நிலப்பாதுகாப்பும் தேவை என்பதை நானும் மறுக்கவில்லை. இது சேவை நிலையங்கள் கல்வி அமைப்புகள் மூலம் அந்த பழங்குடியினர் மத்தியில் அவர்களது கலாச்சாரம் மொழி ஆகியவற்றுக்கு பங்கம் நேராதவாறு அவர்கள் மத்தியில் கல்வியை அதிகரித்து, அதன் மூலம் அவர்களுக்கு தங்களுக்கு இந்திய நாட்டில் என்ன என்ன உரிமைகள் இருக்கின்றன என்று தெளிய வைப்பதன் மூலமே அவர்களது பிரதிநிதிகளும் அவர்களது குரலுக்கு செவி சாய்ப்பார்கள். அந்த வேலையை நீங்கள் செய்யலாமே? ஆயுதப் புரட்சி என்பது நூறாண்டு முயற்சி, அதைச் செய்யத் தயாராக இருக்கும் நீங்கள், ஒரு பத்தாண்டு முயற்சியில் இந்த ஆதிவாசிகளை எல்லாம் மேலேற்ற முடியும்.
//
சமீபத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் அறிவித்த "பந்த்'இல் ஆந்திரத்தில் எவ்வித சம்பவமும் இல்லை என்கின்றன பத்திரிகைச் செய்திகள். சட்டிஸ்காரிலோ தொலைபேசி கோபுரம் தகர்ப்பு, மின் கோபுரம் தகர்ப்பு என்பன போன்ற சில இராணுவ நடவடிக்கைகள்தான் நடந்துள்ளன. மக்களின் அரசியல் உணர்வை அமைப்பாக்கிக் காட்டுகின்ற போராட்ட வடிவமான "பந்த்' என்ற நடவடிக்கை, செயலூக்கமிக்க பங்கேற்பின் மூலம் அவர்களுடைய வர்க்க உணர்வை இன்னும் மேம்பட்ட தளத்துக்கு உயர்த்தவேண்டிய ஒரு அரசியல் நடவடிக்கை, அதன் பொருளை இழந்து ஆளும் வர்க்கத்துக்கு "தொந்திரவு தரும் நடவடிக்கையாக'ச் சுருங்கிவிட்டதை நாம் காண்கிறோம்.
ஆந்திரத்தில் தங்கள் அமைப்பிற்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக ஒப்புக் கொள்கிறார் மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், தோழர் சோனு. (பீப்பிள்ஸ் மார்ச், ஜூலை, 2007) ஆனால், இந்தப் பின்னடைவு குறித்தும்கூட அவர்கள் இராணுவ ரீதியாகப் பரிசீலிக்கிறார்களேயன்றி, அரசியல்ரீதியாகப் பரிசீலிப்பதில்லை.
""அங்கே மாவோயிஸ்டுகள் ஏற்கெனவே நிலைநாட்டியிருப்பதாகக் கூறிக் கொள்ளும் "மக்கள் அதிகாரத்தைப்' பாதுகாத்துக் கொள்ள மக்கள் போராடுகிறார்களா? ராஜசேகர் ரெட்டி அரசுடன் பேச்சுவார்த்தை நடந்தபோது இலட்சக்கணக்கில் திரண்ட மக்கள், பேச்சு வார்த்தையின்போதே போலி மோதல் கொலைகளை அரசு தொடங்கியபோது, அதனை எதிர்த்து அவ்வாறு மக்கள் அணிதிரளாதது ஏன்? மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மிகுந்த ஆந்திரத்துக்கு, கடுமையான மக்கள் எதிர்ப்புகள் இன்றி புஷ் விஜயம் செய்ய முடிவது எப்படி? சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஆந்திரம் முன்னிலை வகிப்பதும், நாயுடுவைக் காட்டிலும் தீவிரமாகப் புதிய தாராளவாதக் கொள்கைகளை ரெட்டி அமல்படுத்த முடிவதும், இவற்றுக்கெல்லாம் எதிராக நந்திக்கிராமுடன் ஒப்பிடத்தக்க வகையிலான மக்கள் போராட்டங்கள் எதுவும் ஆந்திரத்தில் நடைபெறாமல் இருப்பதும் ஏன்?'' என்பன போன்ற கேள்விகளை அவர்கள் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்வதில்லை.
//
நந்திக்கிராமத்தில் அனாதரவான ஏழைகளிடமிருந்து அரசு நிலங்களை அனியாய விலையில் கைக்கொண்டு டாடாவுக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து மம்தா பானர்ஜியிலிருந்து பாஜக வரை எல்லோருமே எதிர்க்கிறார்கள். குஜராத்தில் இதே போலப் பல தொழிற்சாலைகளுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கும் அவர்களது நலனுக்கு எந்த பங்கமும் வராத அளவுக்கு அவை நடந்தேறியுள்ளன. இதனை ஏன் ஏழைகளின் பிரதிநிதியாக காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகள் நந்திக்கிராமத்தில் அராஜகமான முறையில் செய்தார்கள்? ஏன் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ரேஷன் அரிசிக்காக ஏழைகள் மேற்குவங்காளத்தில் கலவரத்தில் இறங்கினார்கள்?
இந்த கேள்விக்குப் பதிலாக நீங்கள் அவர்களை போலி கம்யூனிஸ்டுகள் என்று கூறலாம். ஆனால், உங்களையும் போலி கம்யூனிஸ்டு என்று இன்னொரு "தூய கம்யூனிஸ்டு" கூட்டம் இப்போதும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.
ஏன் சிபிஎம் அப்படி மக்களை துச்சமாக மதித்தார்கள், மதிக்கிறார்கள் என்பதற்குப் பதில் இந்த கட்டுரையிலேயே உங்களது "எல்லாம் தெரிந்த " தொனியில் இருக்கிறது. தங்களிடம் மட்டும்தான் உண்மையான ‘விஞ்ஞான’பூர்வமான கம்யூனிஸம் இருக்கிறது. அதனால், மக்களுக்கு என்ன தேவை என்பது தங்களுக்கு மட்டுமே தெரியும் என்ற அராஜக எண்ணத்தில் இருக்கிறது. சற்றே சிந்தித்துப்பாருங்கள். ஃபார்முலாவை உச்சாடனம் செய்வது எளிது. உருப்படியாகத் தானாகச் சிந்திப்பது கடினம். கடின வேலையைச் செய்யுங்கள்.
//
""அடக்குமுறை இருப்பதால் மக்கள் திரளவில்லை, இல்லையென்றால் மக்கள் திரளுவார்கள்'' என்ற எளிய சூத்திரத்தைச் சொல்லி ஆறுதல் அடைந்து கொள்கின்றனர். வரலாறு நெடுகிலும் நடந்திருக்கின்ற மக்களின் அரசியல் ரீதியான எழுச்சிகளோ, நம் கண் முன்னே காஷ்மீரிலும், மணிப்பூரிலும் ஏன், நந்திக்கிராமிலும் அடக்குமுறைகளை மீறிக் கிளர்ந்தெழும் மக்கள் எழுச்சிகளோ கூட (அவை வேறு யார் தலைமையிலானவையாக இருந்தாலும்) மாவோயிஸ்டுகளுடைய கண்களைத் திறக்கவில்லை. ஏனெனில், அவர்களுடைய சுத்த இராணுவக் கண்ணோட்டம், மக்களின் அரசியல் முன்முயற்சி பற்றிக் கவலைப்படுவதில்லை. "தமது ஆயுத நடவடிக்கைகளுக்கு உதவுவது' என்ற கோணத்தில் மட்டுமே மக்களின் ஆதரவு குறித்துக் கவலைப்படுகிறார்கள்.
//
"அடக்குமுறை இருப்பதால் மக்கள் திரளவில்லை, இல்லையென்றால் மக்கள் திரளுவார்கள்'' இது சூத்திரமா? கம்யூனிஸ்டுகள் எதையும் தலைகீழாகத்தான் புரிந்துக்கொள்வார்களோ?
அடக்குமுறை அதிகமாக அதிகமாக மக்கள் அடக்குமுறைக்கு எதிராக திரளுவார்கள். அடக்குமுறை இல்லையேல், எதனை எதிர்த்து மக்கள் திரளுவார்கள்?
அடுத்து, மக்கள் எழுச்சி என்றால் என்ன? நீங்கள் சொல்வதையெல்லாம் மக்கள் எழுச்சி என்றால், ஐம்பது பேர் கூட்டம் சேர்த்துக்கொண்டு நான்கு பேரை கொலை செய்தால் அது மக்கள் எழுச்சியா? பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள்ளே வந்து, அங்கிருக்கும் பர்தா அணியாத பெண்கள் மீது ஆசிட் ஊற்றுவது மக்கள் எழுச்சியா? அப்படியானால், மு க அழகிரி கூட்டம் சேர்த்து தினகரன் அலுவலகத்தில் இருந்த மூன்று கம்ப்யூட்டர் என்ஜினியர்களை கொலை செய்தது, கிளர்ந்தெழும் மக்கள் எழுச்சியா? மக்கள் எழுச்சிக்கு என்ன இலக்கணம் வைத்திருக்கிறீர்கள்? டியனன்மேன் சதுக்கத்தில் மாணவர்கள் போராடியது மக்கள் எழுச்சியா? இல்லையென்றால் ஏன்? எப்படி?
//
""மாவோயிஸ்டுகளின் கொள்கைகளை மறைத்து விட்டு அவர்களை வெறும் ஆயுத மோகம் கொண்ட தீவிரவாதிகளாகக் காட்ட ஊடகங்கள் முயல்கின்றன'' என்று மாவோயிஸ்டு தமிழ் மாநிலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஊடகங்கள் அவதூறு செய்வது இருக்கட்டும், உண்மை நிலவரமென்ன? "" ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதுதான் ஒரு அமைப்பை புரட்சிகர அமைப்பு என்று மதிப்பிடுவதற்கான முன் நிபந்தனை'' என்று மாவோயிஸ்டு அமைப்பினர் கொண்டிருக்கும் கருத்துக்கும், சிறுபிள்ளைத்தனமான பெரியகுளம் ஆயுதப்போராட்டத் தயாரிப்புக்கும் வேறென்ன பொருள்? "புரட்சிகர அரசியலின் பௌதிக வடிவமே துப்பாக்கிதான்' என்று கருதும் சிந்தனைதானே இதில் வெளிப்படுகிறது!
//
புரட்சிகர அரசியலின் பௌதிக வடிவமே துப்பாக்கிதான் என்றுதானே நீங்கள் தினந்தோறும் தெண்டனிட்டு வணங்கும் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் மாவோ ஆகியோரும் கூறியிருக்கிறார்கள்? அவர்கள் மார்க்ஸிய, எங்கலிஸ, லெனினிய மாவோயிஸ அறிவியற்பூர்வமான விஞ்ஞானப்பூர்வமான புரட்சி பாதையில்தானே செல்கிறார்கள்?சரி விஞ்ஞானப்பூர்வம் என்ற தலைப்பில் அவ்வப்போது கொள்கையை மாற்றிக்கொள்ளலாம் என்றால், எது திரித்தல்வாதம், எது விஞ்ஞானப்பூர்வமான முன்னெடுப்பு என்பதனை வித்தியாசப்படுத்தி காட்ட ஏதேனும் டெஸ்ட் ட்யூப், பரிசோதனைகள் வைத்திருக்கிறீர்களா?
//
""அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம்தான் ஆயுதப்போராட்டம் என்பதையும், அரசியல் போராட்ட அனுபவத்தினூடாக ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை மக்கள் உணரச் செய்ய வேண்டும்'' என்று நாம் கூறுவதையும் மாவோயிஸ்டு அமைப்பினர் ஏளனத்துடன் மறுக்கிறார்கள். ""மக்கள் ஆயுதப்போராட்டத்துக்குத் தயாராகத்தான் இருக்கிறார்கள். சும்மா எத்தனை நாள் பேசிக்கொண்டே இருக்க முடியும்? நாம்தான் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்'' என்று அரசியலையே வீர வசனமாகச் சுருக்குகிறார்கள்.
மக்களைப் புரட்சிக்கு அணியமாக்குவதும், தலைமை தாங்குவதும்தான் கம்யூனிஸ்டுகளுக்குரிய பணியே அன்றி, மக்களின் சார்பாகப் புரட்சி செய்வதல்ல. புரட்சி என்பது ஆளும் வர்க்கங்களுடன் புரட்சியாளர்கள் "ஒண்டிக்கு ஒண்டி' நடத்தும் சண்டையும் அல்ல. ஆனால், மக்களுக்கு விடுதலையை "வழங்கப் பொறுப்பேற்றிருக்கும்' இடது சாகசவாதம் இப்படித்தான் கருதிக் கொள்கிறது.
//
ஆக முன்னரே சொன்னதுபோல கொலைகளுக்கு மக்களை தயார்படுத்திவிட்டுத்தான் கொலை செய்யவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இடதுசாரி சாகசவாதிகள் என்று நீங்கள் கூறும் அவர்களோ இன்றே கொலை செய்யலாம் என்று சொல்கிறார்கள். எப்போது கொலை செய்யலாம் என்பதுதான் உங்களிடையே இருக்கும் வித்தியாசம், இல்லையா?
//
வலது சந்தர்ப்பவாதிகளான போலி கம்யூனிஸ்டுகள் புரட்சிக்கு இழைக்கும் துரோகம் எளிதில் அம்பலமாகிவிடுகிறது. ஆனால், இடது சாகசவாதமும் புரட்சிக்கு இழப்பைத்தான் ஏற்படுத்துகிறது என்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை. சிறையையும் சித்திரவதையையும் சந்திக்கும் அந்தத் தோழர்களின் தனிப்பட்ட இழப்பாக மட்டுமே இது புரிந்து கொள்ளப்படுகிறது.
""பயங்கரவாதப் படையான அதிரடிப்படையை அனுப்புவதன் மூலம் மாவோயிஸ்டு புரட்சியாளர்களை மட்டுமல்ல, இச்சமூக அமைப்பை எதிர்த்துப் போராடும் அனைவரையும் மிரட்ட முயற்சிக்கிறார் கருணாநிதி'' என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது, மாவோயிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழு.
உண்மைதான். ஆளும் வர்க்கத்தின் அடியாட்படையான அரசு எந்திரமும் அதிரடிப்படையும் மக்கள் அனைவரின் பொது எதிரி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், அந்த எதிரிப்படை தன்னை நாயகனாகச் சித்தரித்துக்கொள்ளவும், தன்னுடைய பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொள்ளவும், புரட்சியாளர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவும் மாவோயிஸ்டுகளின் இந்த நடவடிக்கை எதிரிக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இது புரட்சிக்கு ஏற்படும் இழப்பு என்பதை இனிமேலாவது அவர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்களா என்பதுதான் கேள்வி.
— ஆசிரியர் குழு
//
"நடவ்டிக்கை எடுக்க" வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பது தான், சாகசக் காரர்களின் மீது இவர்கள் குற்றச்சாட்டு. மக்களைக் கொலைசெய்த படுபாவிகள் வெறும் சாகசக்காரர்களாய் ஆகிவிட்டார்கள். கொலை செய்யப்பட்ட மக்கள் மீது துளியும் அனுதாபமோ, மனிதாபிமானமோ இல்லாமல், புரட்சி ஏற்படுத்த இந்த மடமக்கள் தடையாய் இருக்கிறார்கள் , இந்த அரசு எப்படி ஆளும்வர்க்க,நவகாலனிய, தரகு முதலாளித்துவ புண்ணாக்கு என்று புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்று மக்கள் மீது பாவம் இவர்களுக்குக் கோபம். மக்களை மாக்களாய் எண்ணுபவர்கள் இவர்கள் தானே தவிர தம் கொள்கைகளை மக்களுக்கு விளக்கிப் பேசி ஜனநாயகத்தில் பங்கெடுக்கச் செய்து அவர்களின் ஆதரவில் ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் அல்ல. இந்த கொலைவெறியர்களும் ஒப்பிடுகையில் கலைஞரும், ஜெயலலிதாவும், கோவில் கட்டிக் கும்பிட வேண்டியவர்கள். மக்களை மதிப்பவர்கள்.
அதிரடிப் படையை அனுப்பி மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசிற்கு இருக்கிறது. இந்த புரட்சிவசனகர்த்தாக்களின் ஆயுதக் கிடங்கிலிருந்தும், கொலைவெறியிலிருந்தும் மக்களைக் காப்பாற்றி , உண்மையான ஜனநாயகத்திற்கு அரணாக இருக்குமாறு அதிரடிப் படையை அனுப்பிய கலைஞரை மனதாரப் பாராட்டுவோம்.
துப்பாக்கி முனையில் அரசியல் அதிகாரம் பிறகிறது என்று திருவாய் மலர்ந்தருளிய வன்முறை ஜார் மாஓவின் வழி வந்தவர்கள் இந்த புரட்சிக்காரர்கள். ஓட்டுப் போட்டு மக்கள் தேர்ந்தெடுப்பவர்கள் எல்லாம், ஆளும் வர்க்கத்தின் கைப்பாவையாம். ஓட்டெல்லாம் தேவையில்லை, வெடிக்காய் வியாபாரம் பண்ணி புரட்சியை விலைக்கு வாங்குவதற்காக, அப்பாவி மக்களை பலியிடும் இவர்கள் புரட்சிக் காரர்களாம்.
ஆளும் வர்க்கம் என்று ஒன்றும் இல்லை. பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரசும், மாயாவதியும், லல்லுபிரசாத் யாதவும், நாளைக்கு பிகாரில் ஆட்சிக்கு வரக்கூடிய சிபிஎம்-எலும் ஆளும் வர்க்கம் இல்லை. இவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள். மக்கள் ஓட்டுப்போட்டால் ஜெயிக்கிறார்கள். மக்கள் ஓட்டுப்போடவில்லை என்றால், தோற்கிறார்கள். மக்கள் பிரச்னைகளை மேற்கொண்டு மக்களிடம் சென்றால் அவர்கள் ஓட்டுப்போடுவார்கள். இல்லையேல் போய் வா என்று அனுப்புவார்கள்.
புரட்சி என்ற பெயரில் கொலைகளும், ஆள்மறைவும், உழைப்ப்பு முகாம்கள் என்ற பெயரில் திறந்த வெளிச்சிறைச்சாலைகளும், மாற்றுக் கருத்துகளை முடக்கி, மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை கொன்று நாட்டைப் பிணக்காடாக்கிய ஸ்டாலின், மாஓவின் வாரிசுகள் என்று தமிழ்நாட்டில் வேர் ஊன்றலாகாது என்று ஒவ்வொரு தமிழரும் சபதம் மேற்கொள்வோ. நாமார்க்கும் குடியல்லோம் என்று உரைத்த கவிஞன் அடிமைத்தனத்துக்கு எதிராய் உரைத்த கவிஞன் வாழ்ந்த நாடு தமிழ் நாடு, எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்த மரபு தமிழ் மரபு. அறிவுக்கும், உணர்விற்கும், மனிதாபிமானத்துக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான மாஒயிச, ஸ்டாலினிச கொடுங்கோன்மை கருத்துகளுக்கு இங்கே இடம் இல்லை
வாழ்க ஓட்டுப்பொறுக்கி அரசியல்!


