Donnerstag, 17. Januar 2008

கம்யூனிஸ்டுகளின் போலித்தனத்தை அறிந்துகொள்வோம்.

கம்யூனிஸ்டுகளை அறிந்துகொள்வோம்.

1. சித்தாந்தத்திற்குச் சொந்தக் காரர்கள் என்று தம்மைப் பற்றிப் பீற்றிக் கொள்வார்கள். ஆனால் நியாயமான வாதங்களை முன்வைத்தால், அல்பவாதி, அசடு என்று தூற்றுவார்களே தவிர பதில் சொல்ல் மாட்டார்கள்.

2. விஞ்ஞான சோஷலிசம் என்று பிதற்றுவார்கள். மாறிவரும் விஞ்ஞானப் பார்வையில் புதிய கோட்பாடுகளும் , புதிய கண்டுபிடிப்புகளும் வந்து எப்படி பழைய கம்யூனிச சித்தாந்தங்கள் பொய்த்துப் போயின என்று விளக்கிச் சொன்னால் அது பற்றி மூசு விடமாட்டாரகள்.

3. சொந்த நாட்டில் தோன்றிய மகாபுருஷர்களையும் , மகாத்மாக்களையும், சமூக சேவகர்களையும் தலவைர்களயும் ஏளனம் செய்வார்கள் . ஆனால் சீனாவின் தலைவரே என் தலைவர், பேராசான் மார்க்ஸ் , அஞ்சாநெஞ்சன் ஸ்டாலின் என்று வரலாறு தெரியாமல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

4. தர்மபுரியில் மூன்று பேர் செத்தார்கள், குஜராத்தில் ஆயிரம் பேர் மரணம், தில்லியில் சீக்கியக் கலவரத்தில் 200 பேர் மரணம் என்று துக்கம் தரக் கூடிய நியாயம் கோரி நடக்க வேண்டிய போராட்டத்தை, திசை திருப்பி, இந்த அமைப்பில் நியாயம் கிடைக்காது என்று பிரச்சாரத்தில் இறங்கிவிடுவார்கள். இந்த துயர நிகழ்வுகள் தொடர்ந்த நிகழ்வல்ல, இந்த அமைப்பிலேயே இந்த துய்ரங்களுக்கு பரிகாரம் தேடவும், இந்த துயரங்கள் போல மீண்டும் நடக்காமல் இருக்க நாம் செய்யக்கூடியது பல இருக்கின்றன என்று பேசவே மாட்டார்கள். இந்த அமைப்பை அழித்து தங்கள்து எவரும் எதிர்த்து கேள்வி கேட்கமுடியாத அமைப்புக்கு ஆள் சேர்க்க, கேள்வி கேட்க உரிமையுள்ள அமைப்பை ஒழிக்க திட்டம் போடுவார்கள். ஆனால் ஸ்டாலினின் கீழ் , போல் போட்டின் கீழ் , மாவோவின் கீழ் நடந்த திட்டமிட்ட படுகொலைகளைப் பற்றி , தொடர்ந்து ஆட்சியாளர்களால் மக்கள் வேட்டையாடப் பட்டது பற்றி மூச்சு விட மாட்டார்கள்.

5. வாரிசு அரசியல் என்று கருணாநிதியையும், லாலு பிரசாதைட்யும் தூற்றுவார்கள். ஆனால் மாஓ தன் மனைவிக்கு அரசியலில் இடம் அளித்தது பற்றியோ, அதைத் கொடர்ந்து கலாசாரப் புரட்சி வெறியாட்டங்களைப் பற்றியோ எதுவும் பேச மாட்டார்கள். காஸ்ட்ரோ தன் தம்பிக்கு கியூபாவை தாரை வார்ப்பது பற்றியோ, கிம் இல் ஜாங் தன் மகனுக்கு வட கொரியாவைத் தாரை வார்த்தது பற்றியோ பேச மாட்டார்கள்.

6. ஜனநாயக மரபுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு , மக்கள் பிரதிநிதிகளை நாய்கள் பன்றிகள் என்று ஏசிவிட்டு , புதிய ஜனநாயகம், மக்கள் ஜனநாயகம் என்ற பெயரில் வேடமிட்டு நாடகமாடுவார்கள்.

7. வாழ்வாதாரம் பறிக்கப் படுகிறது என்று விவசாய மக்களைத் தூண்டிவிட்டு, தொழிற்சாலைகள் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போடுவிட்டு, அவர்கள் குலத்தொழிலை விட்டு விலகி படித்து வேறு வேலை தேடிக் கொள்ளும் முயற்சியில் மண்ணை அள்ளிப் போடுவார்கள். ஆனால் இவர்கள் மட்டும் படித்து, பட்டம் பெற்று சொகுசாக இருப்பார்கள்.

கம்யூனிஸ்டுகள் பற்றிய உங்களது கருத்துக்களையும் எழுதுங்கள்.

கம்யூனிஸ பயங்கரவாதம் உண்மையானது. கீழே இருக்கும் விக்கிபீடியா வரைபடத்தை காணுங்கள். இந்திய நாட்டு எல்லைகள் இங்கே குறித்துள்ளது போல இல்லை. (நக்ஸலைட்டு வேலை!)

30 Comments:

Anonym said...

நன்று

Anonym said...

தமிழ்மணி,

இந்த இடங்களிலெல்லாம் மிகத்தீவிரமாக கிறிஸ்துவ பிரச்சாரமும் நடத்தப்படுவதையும் குறித்து கொள்ளுங்கள்

said...

நன்றி அனானி1, அனானி2

flood செய்யும் கம்யூனிஸ்டு அனானிக்கு ஒரு வார்த்தை.

இதுதான் உங்களது தெறமையா? இதுதான் உங்களது விவாதமா?

பரிதாபம்..

said...

மேலும் நிறைய ஃபளட்டிங்க்.

said...

என்ன, நம்ம பனியன் தியாகு,ஆணிவேர் ராஜவனஜ்,தீரன் ஸ்பார்டகஸ் போன்ற ம க இ க பொலிட் பீரோ ஆசாமிங்களை ரொம்ப நாளா காணோம்?கம்யூனிஸ்ட்களை இப்படி கிழி கிழி னு கிழிக்கறீங்க?ஒரு மூஞ்சிக்கும் பதில் சொல்ல துப்பு இல்லையே?

பாலா

Anonym said...

ஆமா அது என்ன பனியன் தியாகு?

said...

என்ன பண்றது பாலா.

பேச முடிந்தால் பேசியிருப்பார்கள்.

பேசி பார்த்தார்கள். அவர்கள் சொல்லுவதை "சொல்லுங்கண்ணா" என்று கேட்டுகொள்ளவேண்டும். அதுதான் விவாதம் என்று நினைக்கிறார்கள்.

ஆதாரம் கேட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்?

அவர்கள் சொன்னது தவறு என்று ஆதாரம் காட்டினால், அவர்கள் என்ன செய்வார்கள்?

said...

//ஆமா அது என்ன பனியன் தியாகு//

அனானி அய்யா,

அதுவா?எம் மக்கள் எல்லாம் வெறும் கோவணத்தோடு பாடுபடுவதைக் கண்டு ஒரு நாள் தியாகு அய்யா பொங்கி எழுந்தார்.திருப்பூர்ல ஒரு ஜட்டி/ பனியன் கம்பெனியில் சேர்ந்து எம் மக்களுக்காக ஜட்டி/பனியன் தயாரிக்க ஆரம்பித்தார்.தோழர்கள், இப்ப வீர வணக்கம் போடுவதற்கு, தியாகு அய்யா கைப்பட தயார் செய்யும் செஞ்ஜட்டி மற்றும் சேப்பு பனியன் தான் போடுவாங்க.அதனால தோழர்கள் தியாகு அய்யாவை, செல்லமா, "பனியன் தியாகு"ன்னு சொல்லுவாங்க.

பாலா

Anonym said...

அப்ப அவர் ஒரு குட்டி முதலாளி என்று சொல்லுங்க...

said...

பொதுவுடமை என்ற வார்த்தையை போன்ற ஒரு உலகமகா ஏமாற்று வார்த்தை இல்லை. பொதுவுடமை என்று இவர்கள் சொல்வது போல எல்லா பொருட்களையும் எல்லோரும் பொதுச் சொத்தாக வைத்திருப்பது என்பது ஏமாற்றுவேலை.

உண்மையில் எல்லா பொருட்களும் தொழிற்சாலைகளும் அரசாங்கத்தில் உள்ள கட்சியினருக்கும், அதிகாரிகளுக்கு சொந்தம்.

இவர்கள் நடத்தும் சோசலிஸ தொழிற்சாலையில் அடிமை மாதிரி வேலை செய்யும் தொழிலாளியும் போலிட்பரோவில் உட்கார்ந்திருக்கும் சொறிநாயும் ஒன்றா?

சோசலிஸம் என்பது அரசாங்கதில் உள்ளவர்கள் மட்டுமே முதலாளியாக இருக்க அனுமதிக்கப்படும் குரோனி கேப்பிடலிஸம்.

அவ்வளவுதான்.

Anonym said...

//சோசலிஸம் என்பது அரசாங்கதில் உள்ளவர்கள் மட்டுமே முதலாளியாக இருக்க அனுமதிக்கப்படும் குரோனி கேப்பிடலிஸம்.
//
அதுதான் சீனாவில் நடக்கிறது.

said...

Animal farm (George Orwell)என்ற புத்தகம் படிங்கள். அதில் கம்யூனிச சித்தாந்தம் எவ்வாறு சர்வாதிகாரமாக மாறுகிறது என்பது பற்றி விளக்க படும்.

said...

நன்றி சதுக்கப்பூதம்.

அன்பர் நாராயணன் எழுதி வைத்திருப்பது போல, தாங்கள் ஆடுகள் என்று புரிந்துகொள்ளும் ஆடுகள்தான் மந்தையிலிருந்து விலகும்.

said...

சதுக்கப்பூதம்,

கம்யூனிஸத்தின் தத்துவ கோளாறுகள் பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதுங்களேன்.

இந்த பதிவிலேயே போட்டு ஒரு விவாதத்துக்கு நண்பர்களை அழைக்கலாம்.

நன்றி

Anonym said...

இந்த பகுதிகளில் நக்ஸலைட்டுகளே கிறிஸ்துவ பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்களா?

Anonym said...

தமிழ்நாட்டு நக்ஸலைட்டுகளுக்கு கிறிஸ்துவ தன்னார்வ நிறுவனங்கள் மூலமாக வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது. அது கேள்விப்பட்டிருக்கிறேன்.

Anonym said...

பாலா சார்,

இந்த பனியன் தியாகு தோழர் தன்னோட வலைப்பூவுல இது குத்தம், அது குத்தம், இது சொட்டை, அது நொட்டைன்னு வரிக்கு வரி புலம்பித் தள்ளியிருக்காரு. நீங்க சொல்றதப் பார்த்தா, இவரோட பனியன் - ஜட்டி கம்பெனில வேல பார்க்குற தொழிலாளிங்களுக்கு ஒழுங்கா சம்பளம் குடுக்காம தொந்தி வளர்க்குறாரோன்னு சந்தேகமா இருக்கே? இந்தக் குட்டி முதலாளிதான் ஏழை பாழைங்களுக்காக ரத்தம் கொதிச்சு அவ்வளவு எழுதியிருக்காரோ?

என்னமோ போங்க, உண்டியல் குலுக்கி அதுல கோல்டு ஃபிளேக் சிகரெட் குடிக்கிற கம்மூனிச ஆட்களப் பார்த்திருக்கேன். இந்த மாதிரி குட்டி முதலாளியா உக்காந்துக் கிட்டு அம்புட்டையும் ஆட்டையப் போடுற கம்மூனிசவாதிய இப்போதான் உங்க புண்ணியத்துல பார்க்குறேன்.

அடுத்ததா ஐ எஸ் ஓ ல, சாஃப்ட்வேர் கம்பெனில வேல பாத்துக்கிட்டே கம்மூனிஸம் பேசுற தோழரோட தோலயும் கொஞ்சம் உரிச்சுருங்களேன்.

said...

//இந்த பனியன் தியாகு தோழர் தன்னோட வலைப்பூவுல இது குத்தம், அது குத்தம், இது சொட்டை, அது நொட்டைன்னு வரிக்கு வரி புலம்பித் தள்ளியிருக்காரு.//

அனனி அய்யா,

ஆமாங்க.இந்த ம க இ க நக்சல் கம்யூனிச மூஞ்சிகளுக்கு இருப்பது அசுர வாய் தான்.24x7 திறந்தே இருக்கும்.24 மணி நேரத்துல 15 மணி நேரம் யாரையாவது/எதையாவது திட்டிக் கொண்டிருக்கும்; 3 மணி நேரம் ஓசி சிலி பீஃப்/சாராயம்/பீடி, சந்தா வசூல் ஜோரா இருந்தா, சிக்கன் பிரியாணி/ஸ்காட்ச் விஸ்கி/கோல்ட் ஃப்ளேக், அடிக்க செலவு பண்ணுவாங்க,மீதி 6 மணி நேரம் குறட்டை.திட்டுவது தான் அவங்க தொழில்;உருப்படியா ஏதும் செய்ததா சரித்திரமே கிடையாது.

//நீங்க சொல்றதப் பார்த்தா, இவரோட பனியன் - ஜட்டி கம்பெனில வேல பார்க்குற தொழிலாளிங்களுக்கு ஒழுங்கா சம்பளம் குடுக்காம//

என்னது, தொழிலாளிகளுக்கு சம்பளமா?கிண்டல் செய்யாதீங்க.தொழிலளிகளோட அறிவுப் பசிக்கு மட்டும் தீனி போடுவாங்க இந்த சொறியனுங்க;எல்லாருக்கும் புதிய கலாசாரம் என்ற கேவலமான பத்திரிகயை படிக்க கொடுப்பாங்க.அது போதாதா தொழிலாளிகளுக்கு?உண்மையில் சொல்லப்போனா இந்த மூஞ்சிகளால் "உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்னா"ன்னு அம்போன்னு நின்ன தொழிலாளிகளின் நிலமைதான் பரிதபாமானது.

பாலா

Anonym said...

I think Thiagu is labour union leader, not a kutti muthalali.

said...

//I think Thiagu is labour union leader, not a kutti muthalali//

Dear Anony,
You are right.This cutlet, is indeed a labour union thug;he doesnt do any work other than mouthing ma ka e ka propaganda material and promoting violence.These kind of cutlets are like parasites and termites that eat away the society's foundation.
These blokes use the lenience available to them under democratic dispensation but turn violent when faced with dissent from people.Most of their victims are ofcourse gullible,uneducated people,easy to be duped.Therefore these guys have a vested interest in keeping people generally,uneducated and uninformed.
Very sorry state of affairs indeed.What to do?

Bala

Anonym said...

Thamizmani had done wonderful service.

Before he arrived Thamizmanam, these guys have been bad mouthing everyone and challenging everyone for a debate.

After Thamizmani had debated with them, they do not ask anyone to debate with them..

Way to go thamiz!

said...

//Thamizmani had done wonderful service.

Before he arrived Thamizmanam, these guys have been bad mouthing everyone //

Dear Anony,

You are right.Hats off to Thamizmani.He took these johnnies head on and made them run away seeking shelter.These thugs are generally frustrated impotent swines who have never done anything good in their lives and generally go about bad mouthing society.Yes, we do need a revolution,but not of the kind that these imbeciles are clamouring for.we need a revolution for good education for all;any one who knows the quality of education one obtains in state run institutions will spit on them.yet these thugs will ask for more state run schools in the name of social equity.Look at the icons of these frustrated fellows;Lenin,Stalin,pol pot, each one of them a first rate swine and murderer.It is time the socity takes notice of these fringe, ultra left, lunatics and put them in the place they belong, asylums.

Bala

said...

Bala and Annoys,

Pls moderate your language and stop personalised attacks and name calling. We shall discuss and write about issues, facts and view points with logic and objectivsim only. all these name callings or attacking personally is not only indecent, unfair but also counter-productive. the MaKaIKa thozarhal will continue to ignore such kind of attacks as malice and useless and the purpose of the debate will be lost in the cheap fights.

Even if Asuran & Co indulges in cheap name calling or generalising all those who differ with them as agents of 'imperialism' or bourgouse, we need not to reply in kind. ultimately all these will be useless and counter-productive.

Thamizmani has been extremely polite and decent in spite of repeated personal name callings and slander. that is the correct attitude which we should try to follow even when provoked unfairly.

i knew many die hard marxists who are basically honest and sincere, dedicated to their cause ; only their idealogy and means are wrong and lead to hell. but i respect them, only differ with them. same with many RSS and DK friends who are sure of their self-righteusness. only when such people become emotional, the damage and slander starts.

We Indians have been fiercely debating and arguing about communism and capitalism since 1930s or so. and all this reached a perak in 70s. talk, talk and more talk. Pls try the excellent book :
'Argumentative Indian' by Amartya Sen.

Anonym said...

அதியமான்,
Name calling and personal attacks of Asuran and co is done in very self righteous way.

They think they are absolutely right and all who differ with them are enemies of people and deserve no respect.

Even when the are proved wrong, they refuse to change their ways.

Poor blokes

said...

//i knew many die hard marxists who are basically honest and sincere//

Dear Athiyaman,
You are right;many of the naxalites and communists are sincere and intense in their beliefs;but then, so are bin laden's gang of terrorists who sincerely go about killing innocent people without batting an eyelid.Such sincereity and honesty in a group of people without basic human values, create destruction of horrendous proportion.Such sincerity should never be venerated, not even tolerated.These guys are a bunch of terrorists;period.sincere may be,but sincere venomous snakes.Infact I would call their sincerity, as dangerous fanaticism.
Let us try and call a spade ,a spade without worrying about whether the spade will feel bad.after all, the communist spades do just that;keep on abusing people and never do any work.

bala

said...

நன்றி அதியமான், நன்றி பாலா, நன்றி அனானிஸ், நன்றி ரகமி

பாலா சொல்வது உண்மைதான் என்று கருதுகிறேன்.

இவர்கள் சின்ஸியராக இருப்பதனால், இவர்களை பாராட்டமுடியாது.

கொள்கை கெட்டது. ஆகவே சின்ஸியராக கொலைகள் செய்வார்கள்.

அதனைத்தான் மாவோயும், லெனினும், ஸ்டாலினும், போல்போட்டும் செய்ததை பார்த்தோம்.

நான் முன்னமே சொன்னது போல, இந்த நல்லவர்கள் கொலை செய்ய காரணம், அவர்கள் கொண்டிருக்கும் கொள்கை.

அந்த ஓட்டை கொள்கையை நான் விமர்சனம் செய்கிறேன். அவர்கள் ஓடிவிடுகிறார்கள்.

அவர்களுக்கே தெரிகிறது. கொள்கை அரதப்பழசான ஓட்டை என்பது. அதனால்தானே ஓடுகிறார்கள்.

கொள்கை ஓட்டை என்று தெரிந்திருந்தும் கொலை செய்ய ஆரம்பிக்கும்போதுதான் அவன் கொடூரன் ஆகிறான். அதன் பின்னால் அவனுக்கு விமோசனம் கிடையாது.

Anonym said...

ஒன்று கவனித்தீர்களா? பிஜேபி ஆளும் மாநிலங்களில் இந்த பிரச்னை இல்லை. இதுவரை காங்கிரசும், லல்லுவும், கம்யூனிஸ்டுகளும் ஆண்ட மாநிலங்களில் எல்லாம் நக்ஸ்லைட் பிரச்னை.

பாஜகவுக்கு ஓட்டுப்போடுங்கள். கம்யூனிஸ்டுகளை துரத்துங்கள்.

said...

2010-ல் இந்தியாவின் 30%, நக்ஸ்ல்களின் கட்டுபாட்டில் இருக்கும் என்பது இந்திய ராணுவத்தின் கணிப்பு. தீரத்துடன் செயல்பட வேண்டும். நக்ஸலிசம் எந்த பின்ணனியுடன் வந்தாலும் வேரிலேயே அமிலத்தை ஊற்ற வேண்டும்.

said...

ஹரி,
அது கம்யூனிஸ்டுகளின் மூளைச்சலவைக்கு எதிராக எவ்வளவு பொதுமக்கள் எழுகிறார்கள் என்பதை பொறுத்தது.

தொடர்ந்து கம்யூனிஸ்டுகளின் அலம்பல்வாதத்தை தோலுரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

அது அப்பாவிகளுக்கு இவர்களை எதிர்கொள்ள நல்ல கருவிகளை தரும்.

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.