Dienstag, 15. Januar 2008

ஏன் கலைஞர் தன்னை கம்யூனிஸ்டு என்று கூறிக்கொள்கிறார்?

பொதுப்புத்தியில் கம்யூனிஸமும் கம்யூனிஸ்டுகளின் திட்டங்களும்.

இன்றைக்கு பலரும் தன்னை கம்யூனிஸ்டு என்று குறிப்பிட்டுக்கொள்வதை பார்க்கிறோம். என்ன காரணமாக இருக்கும்? முதலாவது இந்தியாவில் பலரும் கம்யூனிஸத்தை ஆழ்ந்து படித்து, அலசி, பல்வேறு சிந்தனையாளர்களுடன் விவாதித்து, அறிவியல் கண்டுபிடிப்புகளில் அவற்றை உரசிப்பார்த்து கம்யூனிஸமே சிறந்த தத்துவம் என்று கண்டடைந்தவர்கள் அல்ல. அப்படி உரசிப்பார்த்தவர்களில் ஒருவர் கூட கம்யூனிஸ்டாக தொடர்ந்ததும் இல்லை. ஆயிரக்கணக்கானவர்கள் அப்படி கம்யூனிஸ கொள்கையை துறந்து வெளியேறியிருக்கின்றனர். கம்யூனிஸ கொள்கையை துறந்த பலர் தீவிர வலதுசாரி என்று சொல்லும் அளவுக்கு திசை திரும்பியவர்களும் உள்ளனர்.

ஆனால், பொதுப்புத்தியில் கம்யூனிஸ்டு என்பவன் ஒரு நல்லவர், அவர் ஏழைகளுக்காக பாடுபடுகிறார், அவர் தொழிலாளர்கள் நல்ல ஊதியம் பெறவேண்டும் என்று போராடுகிறார், வலிமையுள்ள பணக்காரர்களை எதிர்த்து ஒரு ராபின்ஹூட் போல ஏழைகளுக்காக போராடி அவர்களுக்கான உரிமைகளை, பணத்தை நிலத்தை பெற்றுத்தருகிறார் என்ற பிம்பம் இருக்கிறது. இதுதான் கம்யூனிஸ தத்துவம் சொல்கிறது என்றும் பொதுப்புத்தியில் பிம்பம் இருக்கிறது.

இதனாலேயே கலைஞர் கருணாநிதியும், மற்றவர்களும், "இதுதான் கம்யூனிஸ்டு என்றால், நானும் ஒரு கம்யூனிஸ்டுதான்" என்று கூறுகிறார்கள். அவர் கூறுவது சரியானதும் உண்மையானதும் ஆகும்.

பொதுப்புத்தியில் இப்படி ஒரு பிம்பம் இருப்பதால், கம்யூனிஸ்டுகள் வன்முறையை கையில் எடுத்து கொலை, கொள்ளை, ரயில் தண்டவாள கவிழ்ப்பு, பொதுமக்களையும் போலீஸ்காரர்களையும் தாக்கி கொல்லுவது, பெரிய மக்கள்தலைவர்களை கொல்வது, சந்தையில் வெடிகுண்டு வெடிப்பது என்று ஆயிரக்கணக்கான பயங்கரவாத செயல்களை செய்தாலும், இதெல்லாம் ஏழைகளுக்காக, தொழிலாளர்களுக்காக என்ற பொதுபிம்பமும், அதன் ஊடாக, ராபின்ஹூடின் வன்முறையை நியாயப்படுத்தும் தொனியில் கட்டுரைகளும் எழுதப்படுகின்றன. அப்படி எழுதுபவர்கள் நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம் தாங்கள் இருக்கிறோம் என்றும் தங்களை தாங்களே நம்பிக்கொள்கிறார்கள்.

ஆனால், கம்யூனிஸ கட்சிகளில் உள்ளவர்கள் கலைஞர் கருணாநிதியை கம்யூனிஸ்டு என்று ஒப்புக்கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள். ஏன் சொல்லப்போனால், மற்ற கம்யூனிஸ்டு கட்சியில் உள்ளவர்களை, அவர்கள் கம்யூனிஸ்டு என்று கூட ஒப்புக்கொள்ளமாட்டார்கள். கம்யூனிஸ கட்சிகள் ஒரு கல்ட் போன்றவை என்பதற்கு அவைகள் எப்படி கட்சி கட்டுகின்றன என்பதை பார்த்தாலே தெரியும். தாங்கள் சார்ந்திருக்கும் கிறிஸ்துவ பிரிவில் உள்ளவர்கள் மட்டுமே உண்மையான கிறிஸ்துவர்கள், நாங்கள் மட்டுமே சொர்க்கத்துப் போவோம் என்று பேசும் கிறிஸ்துவர்கள் போல, தாங்கள் சார்ந்திருக்கும் இஸ்லாமிய பிரிவில் உள்ளவர்கள் மட்டுமே உண்மையான முஸ்லீம்கள், நாங்கள் மட்டுமோ சொர்க்கத்து போவோம் என்று பேசும் முஸ்லீம்கள் போல இவர்களிலும் ஏராளமான பிரிவுகள் உண்டு. தாங்கள் மட்டுமே உண்மையான மார்க்ஸிய கம்யூனிஸத்தை புரிந்துகொண்டுள்ளோம், எங்களால் மட்டுமே உண்மையான கம்யூனிஸ சமுதாயத்தை அமைக்கமுடியும் என்று பிதற்றி மற்றவர்களை வன்முறை மூலம் ஒடுக்கவும் முயல்வதை, முயன்றதை வரலாறு கூறுகிறது.

ஆனால், இன்றைக்கு கலைஞர் கருணாநிதி அவ்வாறு தன்னையும் கம்யூனிஸ்டு என்று கூறிக்கொள்வது கம்யூனிஸத்துக்கு ஒரு விளம்பரம், அது கம்யூனிஸத்தை புனிதப்பிம்ப இடத்தில் உட்கார வைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். அதனால், போர்த்தந்திர முறையில் திமுகவினரை அனுசரித்தும், திமுகவில் இருப்பவர்களை தங்கள் கட்சிக்குள் இழுப்பதற்காகவும், அதனை பயன்படுத்திக்கொள்வார்கள். இதுதான் கம்யூனிஸ்டுகளின் இரட்டை நாக்கு.

கம்யூனிஸ்டுகள் உலகெங்கும் ஒரு குறிப்பிட்ட செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அது என்னவென்று பார்த்தோமானால், அதன் மூலம் யார் பயன்பெறுவார்கள் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

அது திட்டமிட்ட பொருளாதாரம். அதாவது அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகள், எந்த பொருளை எந்த தொழிற்சாலை எவ்வளவு தயாரிக்க வேண்டும் என்று திட்டமிடுவார்கள். அதனை மக்கள் உற்பத்தி செய்யவேண்டும். அவ்வளவுதான். ஒரு மனிதனுக்கு பொருளாதார சுதந்திரம் இருக்கக்கூடாது. அவன் ஒரு பொருளை தயாரித்து மற்றவர்களிடம் விற்றால் அது தடைசெய்யப்படும். இதுதான் சோசலிஸ கட்டுமானம்.

இது எவ்வளவு பெரிய சீரழிவை உலகெங்கும் கம்யூனிஸ அமைப்புக்குள் சிக்கிக்கொண்ட மக்களுக்கு கொண்டுவந்தது என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. இதுதான் கம்யூனிஸம். இதனை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கலைஞரிடம் கேட்டுப்பாருங்கள். இல்லை என்று சொல்லிவிடுவார்.

இந்த கம்யூனிஸ சோசலிஸ அமைப்பின் மூலம் பலனடைவது யார்? கம்யூனிஸ்டு கட்சியிலும், மேல்மட்ட குழுவிலும், போலிட்பரோவிலும் உட்கார்ந்திருக்கும் அதிகார வர்க்கம் மட்டுமே இதன் மூலம் பலனடையும். மற்றவர்கள் எல்லோரும் இவர்களுக்கு அடிமைகள். எதிர்த்தால், வர்க்க எதிரி. ஒத்துழைக்கவில்லை என்றால் பிற்போக்குக்காரன். இந்த அதிகார வர்க்கத்தின் கீழ் அடக்குமுறையில் இருக்க முடியாது என்று தொழிலாளர்கள் தனியே தொழிற்சங்கம் வைக்க முடியாது. ஏதேனும் ஒரு அதிகாரி கிறுக்குத்தனமாக ஆணையிட்டு எத்தனையோ பொதுமக்கள் அழிந்தாலும், அது "ஆம்லெட் செய்யவேண்டுமென்றால், முட்டைகளை உடைத்துத்தான் ஆகவேண்டும்" என்று உதாசீனம் செய்யப்பட்டுவிடும். இதுதான் கம்யூனிஸம்.


மனிதனுக்கு கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் ஆகியவை அத்தியாவசியமானவை. என்னுடைய கருத்துக்களை சொல்லவும், என்னுடைய நேரத்தில் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவும் எனக்கு சுதந்திரம் வேண்டும். இரண்டையுமே முழுதாக மறுக்கிறது கம்யூனிஸம்.

கம்யூனிஸத்தை குப்பை என்று ஒதுக்க, கம்யூனிஸம் பற்றிய ஆழ்ந்த அறிவோ அல்லது பரந்த படிப்போ கூட தேவையில்லை. கம்யூனிஸ்டு நாடுகள் செய்த கூத்துக்கள் தமிழ்நாட்டில் பரவலாக தெரிய வந்தாலே போதுமானது. ஆனால், அப்படி பரவலாக தெரிய வரக்கூடாது என்று கம்யூனிஸ்டுகள் பெரும் சிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால்தான், சோவியத் ஸ்டாலின் பற்றியோ, அல்லது போல்போட் பற்றியோ, மாவோவின் உண்மையான வரலாறோ தமிழில் வந்துவிடக்கூடாது, இந்திய ஊடகங்களில் வந்துவிடக்கூடாது என்று சிரத்தை எடுத்துக்கொண்டு அப்படி யாரேனும் ஏதேனும் ஒரு வரி எழுதிவிட்டால் கூட அந்த பத்திரிக்கை அலுவலகத்தின் முன்னே நின்று ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்று பிரச்னை பண்ணுகிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு ருசி என்பது தமிழ் பழமொழி. சோவியத் ரஷியா, கம்யூனிஸ்ட் சைனா, சிவப்பு கம்போடியா, வியத்நாம், கியூபா என்று உலகெங்கும் இந்த கொள்கை விளைவித்த கொடூரம் தெரிந்திருந்தும், இன்னமும் இதில் நம்பிக்கை வைத்திருப்பவர்களை கண்டால் பரிதாபமாகவே இருக்கிறது.

கம்யூனிஸம் ஒரு சர்வாதிகார சிந்தனை. ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்ற பெரும்பான்மையை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து அவர்களை நசுக்கி சக்கையாய் பிழிந்து ஆள ஒரு சிறு குழு போடும் திட்டம். அதுதான் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகளுக்கும் நல்லது என்று அவர்களிடமே பிரச்சாரம் செய்யும் ஒரு மனப்பிறழ்வு கொண்ட சிந்தனை.

உண்மையிலேயே கம்யூனிஸ்டுகளுக்கு தொழிலாளர்கள் மீதோ, விவசாயிகள் மீதோ, மக்கள் மீதோ ஏதேனும் நம்பிக்கையோ, பாசமோ உண்டா?
கம்யூனிஸ சிந்தனைகளை ஆழ படிப்பவர்கள் மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின் மாவோ போன்றோரின் வரிகளில் விவசாயிகள் மீது எப்படிப்பட்ட காழ்ப்புணர்வை கொண்டிருக்கிறார்கள் என்பதை படித்து திடுக்கிடலாம். தொழிலாளர்களுக்கு ஒன்றும் தெரியாது. மெத்த படித்த நாம்தான் அவர்களின் உள்ளே புகுந்து அவர்களை திசை திருப்பி அரசாங்கத்தை கவிழ்க்க அவர்களை தூண்டி நாம் ஆட்சியை கைப்பிடிக்க வேண்டும் என்று எழுதியிருப்பதை பார்த்து அதிரலாம். இவர்களது பொலிட்பரோவில் எவரும் விவசாயியோ, தொழிலாளரோ, நிலமற்ற கூலியோ கிடையாது. எல்லோரும் பெரிய குடும்பத்தில் பிறந்து நன்கு படித்து, துயரத்தின் வாடையே இல்லாமல் வளர்ந்தவர்கள். இது மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோவிலிருந்து இந்தியாவில் ஜோதிபாசு, புத்ததேவ பட்டாச்சாரியா, பிரகாஷ் காரத், பிருந்தா காரத், ராமமூர்த்தி, வினோத் மிஷ்ரா, நாகபூஷன் பட்நாயக், சிபிஎம்எல்லின் பட்டாச்சாரியா உட்பட அனைவரது பின்புலத்தை பார்த்தாலும் தெரியும். தொழிலாளர்களும், விவசாயிகளும் இவர்கள் ஆட்சிக்கு வர உதவிப்பொருள்களே அன்றி, ஆட்சியில் இருக்கப்போகிறவர்கள் அல்ல. இதனை வான்கார்ட் என்ற ஒரு கருத்தை வைத்து பூசி மொழுகுகிறார்கள். அதாவது இப்படி பணக்கார குடும்பத்தில் பிறந்து நன்கு படித்து விவசாயிகளுக்கு உழைப்பவர்கள் வான்கார்ட் என்ற முன்னோடிகளாம். விவசாயிகள் பிற்போக்கானவர்கள், தொழிலாளர்கள் விவரம் பத்தாதவர்கள். இவர்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும். ஆனால் காங்கிரஸில் காமராஜர் ஆட்சிக்கு வந்ததும், ஜனதாதளத்தில் தேவ கவுடா ஆட்சிக்கு வந்ததும், தொழிலாளராக இருந்து உயர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆட்சிக்கு வந்ததும், தலித்தாக கேரளாவில் பிறந்து ஜனாதிபதியாக உயர்ந்த நாராயணனும், கடற்கரை கிராமத்தில் பிறந்து இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல்கலாமும், தஞ்சாவூர் கிராமத்தில் பிறந்து தமிழக முதல்வராக உயர்ந்த கலைஞரும் கேவலமானவர்கள். இன்னும் கேட்டால், இவர் தரகு முதலாளி, அவர் அரைகாலனியவாதி, இவர் மடையன், அவர் முட்டாள், இவர் கோமாளி என்று அவதூறு மட்டும் அலுக்காமல் சலைக்காமல் திட்டுவார்கள்.

இன்னும் ஆழமாக பார்த்தோமானால், கம்யூனிஸ்டு கட்சி தொண்டனுக்குக் கூட தெரியாத விஷயங்கள் கம்யூனிஸ்டு கட்சிக்குள் ஒரு சிலரால் திட்டமாக வகுக்கப்படுகின்றன. இவை உள்கட்சி ஆவணங்கள் என்று அவர்களாலேயே அழைக்கப்படுகின்றன. இங்கு, கம்யூனிஸ்டு கட்சி தற்போது எந்த போர்த்தந்திர முறைகளை பயன்படுத்தி மக்கள் நடுவே பிரச்சாரம் செய்யவேண்டும், மக்களை உள்ளே இழுக்கவேண்டும் என்றெல்லாம் திட்டமிடப்படுகின்றன. இவைகள் கம்யுனிஸ்டு கட்சி தொண்டனுக்குக் கூட தெரியாதவை. மக்களை நம்புவோம், மக்களுக்காகவே போராட்டம் என்றெல்லாம் பிதற்றும் கம்யூனிஸ்டுகள் மக்களை நம்பி இந்த ஆவணங்களை வெளியே விட வேண்டியதுதானே? விட மாட்டார்கள். இதற்காகத்தான் ஒரு சில பிரச்சார போர்தந்திர உத்திகள் உருவாக்கப்படுகின்றன.

பிரச்சார உத்திக்கு ஒரு உதாரணமும், போர்தந்திர உத்திக்கு ஒரு உதாரணமும் தருகிறேன்.

1) பெரியார் இருந்தபோது அவரை கடுமையாக விமர்சித்த கம்யூனிஸ்டுகள் இன்று பெரியாரை அரவணைத்துக்கொள்வது. தற்போது, பார்ப்பனர்களது பூணூலை அறுக்கிறேன் என்று கிளம்பி திராவிட கழகத்தினரை விட தீவிரமாக பார்ப்பன எதிர்ப்பு கொண்டவர்கள் தாங்கள் என்று காட்டிக்கொண்டு திராவிட கழகத்தில் உள்ள இளைஞர்களை கவரும் திட்டம்.

2) சாதாரணமாக மக்கள் தங்கள் பிரச்னைகளுக்காக ஊர்வலம் சென்றாலோ அல்லது கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றாலோ, அதன் நடுவே ஊடுருவி இருந்துகொண்டு அரசாங்கத்து ஊழியர்களையும், போலீஸையும் ஆயுதங்கள் மூலம் தாக்குவது. இதன் மூலம், போலீஸ் திருப்பி தாக்குவதன் மூலம் பொதுமக்களை போலீஸ் தாக்க வைப்பது. இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிலிருந்து இளைஞர்களை தங்களது ஆயுத புரட்சிக்கு அழைத்துக்கொள்வது.

இது போன்ற கேவலமான உத்திகள் கட்சியின் உள்ளே பொலிட்பரோ என்னும் கும்பலால் திட்டமிடப்படுகின்றன. இது போன்ற பல்வேறு திட்டங்கள் இவற்றின் ஆவணங்களில் காணலாம். இந்த கட்சிகளுக்கு எங்கே யாரிடமிருந்து பணம் வருகிறது போன்றவைகளிலிருந்து ஆயிரக்கணக்கான விஷயங்கள் இந்த உள்கட்சி ஆவணங்களில் உள்ளன.

கம்யூனிஸ்டுகள் மட்டுமே தொழிலாளர்களுக்காக உழைக்கிறார்கள், அல்லது கம்யூனிஸ்டுகள் மட்டுமே விவசாயிகளுக்காக உழைக்கிறார்கள், ஏழைகளுக்காக பாடுபடுகிறார்கள் என்று மக்களுக்கு தோன்றவேண்டும் என்பதற்காக மிகவும் சிரத்தை எடுத்து, அப்படி தொழிலாளர்களுக்காக, விவசாயிகளுக்காக, ஏழைகளுக்காக பாடுபடுபவர்களை அவதூறு செய்வதும், அவர்களை கேவலப்படுத்துவதையும் ஒரு முக்கியமான தொழிலாகவே கம்யூனிஸ்டுகள் செய்கிறார்கள்.

ஆனால், கம்யூனிஸ்டுகளை அவ்வாறு திரும்பி அவதூறு செய்ய யாரும் விரும்புவதில்லை என்பதால், இவர்கள் தூற்றுவது மட்டுமே நிலைத்துவிடுகிறது.

இதனால்தான் ஏழைகளுக்கும் நிராதரவானவர்களுக்கும் உழைத்த, உழைக்கின்ற அன்னை தெரசா, ராமகிருஷ்ண மடம், திமுக அதிமுக தொழிற்சங்கங்கள், காங்கிரஸ் தொழிற்சங்கங்கள், கம்யூனிஸம் சாராத விவசாயிகள் சங்கங்கள் ஆகியவை இவர்களால் அவதூறு செய்யப்படுகின்றன.

உண்மையிலேயே மக்களுக்கு நலம் செய்யக்கூடிய பல திட்டங்கள் கம்யூனிஸ்டுகளால் அவதூறு செய்யப்படுகின்றன. இருக்கும் சமூக சூழ்நிலையிலேயே நாம் நன்றாக வாழ்ந்துவிட முடியும் என்று பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் நினைப்பது கம்யூனிஸ்டுகளுக்கு ஆபத்தானது. ஆகவே, அவர்கள் தற்கால சூழ்நிலை, சமூக நல திட்டங்கள், மக்களுக்கு நல்லது செய்வதன் மூலம் ஜனநாயக ரீதியில் வாக்குக்களை பெற்று ஆட்சி வரவும், மற்ற கட்சிகள் செய்யாத நல்ல விஷயங்களை செய்ய முனைகிற கட்சிகள் தொடர்ந்து அவதூறு செய்யப்படுகின்றன. அவர்களது குடும்ப விஷயங்கள், அவர்களது தனிமனித விஷயங்கள் (உதாரணம் -சரத்குமார் மது அருந்துபவர்) போன்ற விஷயங்கள் ஊதி பெரிதாக்கப்பட்டு ஜனநாயக அரசியல்வாதிகள் மீது வெறுப்பு மக்களிடையே வளர்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கம்யூனிஸ பிதாமகர்களான ஸ்டாலின், மார்க்ஸ், லெனின், மாவோ, போல்போட், கிம் இல் ஜுங் (இவர்கள் மது அருந்தமாட்டார்களா?) போன்ற அசிங்கங்கள் கையை தூக்கி போஸ் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள், அவர்கள் சொன்னதெல்லாம் வேதவாக்கு, அவர்கள் உலகமகா புனிதர்கள் என்பது போல எழுதப்படுகின்றன.

நாம் இவர்களும் ஒரு கட்சியினர் என்று நினைக்கிறோம். அதனால், இவர்களது கருத்துக்களை அனுமதிக்கிறோம். இவர்கள் மற்ற கட்சியினரை அவதூறு செய்வதையும், எல்லா கட்சியினரும் அவதூறு செய்கிறார்கள் அதே போல இவர்களும் செய்கிறார்கள் என்று அனுமதிக்கிறோம். இவர்கள் விளிம்புநிலையில் அரசியல் செய்பவர்களாக இருப்பதால், இவர்களை நாம் பொருட்டாக மதித்து பதிலும் சொல்வதில்லை. மற்ற கட்சியினரும் இவர்களுக்கு பதில் சொல்லி இவர்களை பெரிய ஆளாக ஆக்க விரும்புவதில்லை.

யாரும் இவர்களுக்கு பதில் சொல்வதில்லை என்பதால், தாங்கள் சொல்வதற்கு எவனாலும் பதில் சொல்ல முடியாது என்று இவர்களாக நினைத்துக்கொண்டுவிட்டார்கள். (ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும் என் பதில் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடிவிட்டார்கள். உண்மையிலேயே அதிமுகவினரும் திமுகவினரும் இவர்களது கொள்கையை ஆராய்ந்து கிண்டினால் இரண்டு நாள் தாங்குவார்களா?) இளையதாக முள்மரம் கொள்க என்று அய்யன் வள்ளுவன் வாக்கு. அதனால், வளரும்போதே, இந்த முள் மரத்தை வேரோடு பிடுங்கிவிடவேண்டும் என்று இந்த கட்டுரைகளை எழுதுகிறேன்.

21 Comments:

Anonym said...

//சாதாரணமாக மக்கள் தங்கள் பிரச்னைகளுக்காக ஊர்வலம் சென்றாலோ அல்லது கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றாலோ, அதன் நடுவே ஊடுருவி இருந்துகொண்டு அரசாங்கத்து ஊழியர்களையும், போலீஸையும் ஆயுதங்கள் மூலம் தாக்குவது. இதன் மூலம், போலீஸ் திருப்பி தாக்குவதன் மூலம் பொதுமக்களை போலீஸ் தாக்க வைப்பது. இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிலிருந்து இளைஞர்களை தங்களது ஆயுத புரட்சிக்கு அழைத்துக்கொள்வது.
//
atapaavingala!

said...

சாயந்திரம் நேரம் முந்திரியை கொறித்துக்கொண்டு, வைனை சிப்பிக்கொண்டு, அது ஜீரணமாக சேகுவேரா டிஷர்ட் போட்டுக்கொண்டு கால்ப் ஆடிக்கொண்டு தான் கம்யூனிஸ்ட் என்று கூறும் நபர்கள் ஏராளம் உண்டு...அவர்கள் அப்படி கூற காரணம் குற்ற உணர்ச்சியாகவும் இருக்கலாம்..அல்லது அது ஒரு பேஷன் ஸ்டேட்மெண்டா இருப்பதாலும் இருக்கலாம்.

கூகிளில் பதிவெழுதி பன்னாட்டு கம்பனிகளின் ஏகபோகத்தை தகர்ப்பதாக முழக்கமிடும் தோழர்கள், சாஃப்ட்வேர் கம்பனிகளில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு சாப்ட்வேர் பொறியாளர் / நடுத்தர வர்க்கத்தை திட்டி தீர்க்கும் தோழர்கள் என பல முரண்பாடுகள் நிரம்பிய மனிதர்களை கொண்டதுதான் கம்யூனிசம்.

தாம் பின்பற்றாத ஒன்றை மக்களுக்கு போதிக்கும் இவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்பது ஆய்வுக்குரியது.

said...

நன்றி அனானி
நன்றி செல்வன்

கம்யூனிஸ எதிர்ப்பு இயக்கம் ஒன்று ஆரம்பித்திருக்கிறேன்
வருகை தாருங்கள்.

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...

யாரோ ஒருவர் இந்த பதிவில் flood செய்ய விரும்புகிறார்.

:-))

said...

இந்த பொதுபுத்தி உலகின் மிகபெரிய முதலாளித்துவ நாடான அமெரிக்காவிலும் உண்டு. சேகுவாரா டி சர்ட்டும் போஸ்டர்களும் இளைஞரிடம் மிக பிரபலம். அதுகூட இந்த பொதுபுத்தியினால்தான்.

கருநாநிதி (தவறாக எழுதவில்லை) எங்கே ஓட்டு கிடைக்கிறதோ எங்கே பைசா சம்பாதிக்க முடிகிறதோ அந்த தருணத்திற்கு தன்னைத் மாற்றிக் கொள்வார். இப்போது கம்யூனிசம் செத்துவிட்டது என்று அதன் ஆதர்ச தலைவர்கள் பாசுவும், புத்த்தேவும் ஒத்துக் கொண்டுவிட்டார்கள். அந்த செத்த கட்சியின் தொண்டர்களை இவர்பக்கம் இழுக்கத்தான் இந்த மாதிரி ஸ்டேட்மெண்ட் விடுகிறார் திருவாளர் கருநாநிதி

said...

நன்றி கால்கரி சிவா,

கலைஞர் அப்படி கம்யூனிஸ்டுகளை இழுத்தால் பரவாயில்லை. ஆனால், திமுக தொண்டர்களுக்கு கம்யூனிஸ்டுகள் வலை விரிக்கிறார்கள். அதற்காகத்தான் இந்த கட்டுரை

said...

தமிழ்மணி

கம்யூனிச எதிர்ப்பு பதிவு நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.நேரம் இருக்கும்போது நானும் கட்டுரை எழுதுகிறேன்.நன்றி

said...

நன்றி செல்வன்

உங்கள் கட்டுரையை எதிர்பார்க்கிறேன்

Anonym said...

Excellent piece of writing.
Keep it up!

It clarifies lot of things

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...

மீண்டும் flood

Anonym said...

பதட்டப்படும் கம்யூனிஸ்டுகள் பிதற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.

Anonym said...

இந்தக் கம்யுனிச நாய்கள் உதவாதுகள்.வர்ண தர்மம் இறைவனால் வகுக்கப்பட்டு நம்ம பாரத தேசத்துக்குச் சமூக ஒழுக்கம் கற்பிக்கப்பட்டது!இவங்களோ எல்லோரும் சமமமாம்.நாய்களே மாடு தின்னும் பறையனும் வெஜ்டிட் உண்ணும் பிரமணனும் ஒன்னா?
அமெரிக்கமாதிரி ஒரு ஜனநாயக நாடு இல்லைன்னா முஸ்லீங்கள் கொட்டம் அடக்கமுடியுமா?ஈராக்கை அடிச்சு நொருக்கனும்.ஈரனைக்குக் கொடுத்தமாதிரி.இஸ்ரேல் பாவம்!எவ்வளவு மக்கள் முஸ்லீம் பயங்கர வாதத்துக்காகச் சாகிறாங்க?புரியதா நாய்களே?தமிழ்மணி ஒங்க எதிர்பு அவசியமுங்க.தொடர்ந்து ஒரு புடி புடியுங்க.
அன்புடன்
முரளி மனோகர்.

Anonym said...

அன்புள்ள முரளி மனோகர்,
கொஞ்சம் எழுதியதைத் திருப்பிப் படித்திருந்தாலே உங்கள் அபத்தம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
முதன் முதலில் முஸ்லீம் மக்களின் கொட்டத்தைஅடக்கக் கிளம்பிய வஸ்தாது கம்யூனிச சோவியத் யூனியன் என்பது உங்களுக்குச் சௌகரியமாக மறந்துவிட்டது. இன்று இந்தியாவின் இடதுசாரிகள் என்னவோ முஸ்லீம் மக்களின் தோழர்களாய் வேடம் போடுகிறவர்கள் ஆஃப்கானிஸ்தானத்தில் சிவபுக் கொடி பறக்கிறது புரட்சி வந்து விட்டது என்று ஆலப் பறந்த அத்தியாயத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம். அமெரிக்கா இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு தீனி போடு வளர்த்ததன் காரணமே, சோவியத் யூனியன் ஆஃப்கானிஸ்தானத்தை ஆக்கிரமித்தது தான். அமெரிக்கா படையெடுத்தால் அது ஏகாதிபத்தியம், கம்யூனிஸ்டு நாடு படையெடுத்து ஆக்கிரமித்தால் அது புரட்சி அல்லவா? ஹங்கேரி முதல் தொடரும் கதை ஆயிற்றே.

பொலிட்பீரோ காரர்களும், சாமனியர்களும் சட்டத்தின் முன்னால் சமமாய் இருக்க வேண்டும் என்று தான் ஜனநாயகம் கோருகிறோம். கம்யூன்சச் சாதியம் ஒழிய வேண்டும் என்றால் ஜனநாயகம் அவசியம் அல்லவா?
சிந்தியுங்கள்
பழைய அனானி

said...

//பொலிட்பீரோ காரர்களும், சாமனியர்களும் சட்டத்தின் முன்னால் சமமாய் இருக்க வேண்டும்//

பழைய அனானி அய்யா,
ம க இ க பொலிட் பீரோவில அசுரன்,பனியன்/ஜட்டி தியாகு,மருதையன்,ஜமாலன்,ஸ்பார்டகஸ்,ஸ்டாலின் வெளியே மிதக்கும் அய்யா அனைவரும் மெம்பர்களா,இல்லை அவர்களும் சாமானியர்களா??

பாலா

said...

முரளி மனோகர் என்பவர் பார்ப்பனர்கள் எழுதுவது போல எழுதி வஞ்ச புகழ்ச்சி பண்ணி பார்த்திருக்கிறார். பாவம், நேரடியாக விவாதத்திற்கு வந்து பேசினால் நன்றாக இருக்கும்.

கம்யூனிஸ்டுகளுக்காக பரிதாபப்படுகிறேன்.

--
நன்றி பழைய அனானி
-
நன்றி பாலா.

அதனை அவர்களிடம் தான் கேட்கவேண்டும்

Anonym said...

Great writeup

Please translate this into English

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...

//சாயந்திரம் நேரம் முந்திரியை கொறித்துக்கொண்டு, வைனை சிப்பிக்கொண்டு, அது ஜீரணமாக சேகுவேரா டிஷர்ட் போட்டுக்கொண்டு கால்ப் ஆடிக்கொண்டு தான் கம்யூனிஸ்ட் என்று கூறும் நபர்கள் ஏராளம் உண்டு...அவர்கள் அப்படி கூற காரணம் குற்ற உணர்ச்சியாகவும் இருக்கலாம்..அல்லது அது ஒரு பேஷன் ஸ்டேட்மெண்டா இருப்பதாலும் இருக்கலாம்.

கூகிளில் பதிவெழுதி பன்னாட்டு கம்பனிகளின் ஏகபோகத்தை தகர்ப்பதாக முழக்கமிடும் தோழர்கள், சாஃப்ட்வேர் கம்பனிகளில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு சாப்ட்வேர் பொறியாளர் / நடுத்தர வர்க்கத்தை திட்டி தீர்க்கும் தோழர்கள் என பல முரண்பாடுகள் நிரம்பிய மனிதர்களை கொண்டதுதான் கம்யூனிசம்.

தாம் பின்பற்றாத ஒன்றை மக்களுக்கு போதிக்கும் இவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்பது ஆய்வுக்குரியது.

//

நன்றி செல்வன்

அறிவுஜீவி பம்மாத்துக்காக கம்யூனிஸ்டு என்று தன்னை சொல்லிகொள்பவர்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை.

நாளைக்கு கேபிடலிஸ்டு என்று சொன்னால்தான் அறிவுஜீவி பம்மாத்து பண்ணலாம் என்றால், தங்களை கேபிடலிஸ்டு என்று சொல்லிக்கொள்வார்கள் இவர்கள்.

ஒரு சிலர் எதுவும் சரியில்லை என்றும் புருவத்தை தூக்கிவைத்துக்கொண்டு அலைவார்கள். இவர்களை பற்றியும் நான் கவலைப்படுவதில்லை.

இயக்கம் சார்ந்து அமைப்பு ரீதியாக செயல்படும் சிபிஎம், சிபிஐ, மக இக, எஸ். ஓஸி போன்றவர்களே ஆபத்தானவர்கள். அதனால்தான் அவர்களோடு மட்டுமே வாதிடுகிறேன்.

மற்றவர்களோடு அதியமான் பேசுவதுபோல பேசுவது என்னைப் பொருத்த மட்டில் நேரம் வீண்.

ஆனால் அதியமான் பேசுவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இன்று பொதுக்கருத்தாக "சுரண்டல்" உபரி மதிப்பு என்ற ஓரிரு ஜார்கன்களை வைத்துக்கொண்டு அதது கும்மி அடிக்கிறது. அவர்களை நேரடியாக குறுக்கு கேள்வி கேட்டு ஓட வைப்பதும் தேவையான வேலைதான்.

அதியமானுக்கு தலைவணங்குகிறேன்.

said...

Thanks Thamiz.