டோண்டுவின் போலித்தனம் - கம்யுனிசம்
பார்ப்பினியத்துடன் முரன்படும் கம்யுனிசம்
என்ற தலைப்பில் நண்பர் அசுரன் எழுதிய பதிவை ஒரு நண்பர் மேற்கோள் காட்டியிருந்தார்.
அதற்கான பதில்கள் இங்கே.
அசுரனும் விவாதிக்க வரலாம்.
//டோண்டுவின் போலித்தனம் - கம்யுனிசம்
பார்ப்பினியத்துடன் முரன்படும் கம்யுனிசம
போலி என்று பரவலாக அறியப்படுபவரால் அவதியுற்றதாக பிரபலமான டோண்டு அவர்கள் கம்யுனிசம் பற்றிய எனது சமீபத்திய பதிவிற்க்கு எதிர்வினையாக ஒரு பதிவை இட்டிருந்தார். அது மிகச் சிறப்பாக பார்ப்பினியம் என்பதன் மக்கள் விரொத தன்மையை அம்பலப்படுத்தும் விதமாக, பார்பினியம் சொந்த செல்வில் சூனியம் வைத்துக் கொள்ளும் விதமாக இருந்தது. அதே போன்ற வேறு சில சொ.செ.சூ டைப் டோண்டுவின் பழைய பதிவுகளை ஏதோ மிகச் சிறந்த கம்யுனிச எதிர் வாதமாகக் கருதி டாலர் செல்வன் அவர்களும் முத்தமிழ் குழுமத்தில் இட்டிருந்தார். சொ.செ.சூவை வேறு யாரையும் விட மிகச் சிறப்பாக டாலர் செல்வன் தனக்குத்தானே செய்கிறார் என்பதை அவரே ஒத்துக் கொண்டதுதான். ஆனால் இந்த தடவை தான் மட்டும் இல்லாமல் தனது நண்பர்களுக்கும் இந்த விசயத்தில் அவர் உதவி செய்து அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டார். திரு டாலர் செல்வன் செய்வது பல நேரங்களில் - அவரை அம்பலப்படுத்துவதாகட்டும், அவரது நண்பர்களை அம்பலப்படுத்துவதாகட்டும் - நமது வேலையை பாதியாக குநந்த்துவிடுகிறது. ஆகவே அவருக்கு முதற்கண் எனது நன்றிகளை தெரிவித்து டோண்டுவின் கட்டுரைகளில் எந்த இடங்களிலெல்லாம் சொ.செ.சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்பதை கீழே பார்ப்போம். //
நண்பர் டோண்டு என்ன எழுதினார் என்பது எனக்கு தெரியவில்லை. மேலும், இந்த பதில்கள் நண்பர் அசுரன் கொடுத்திருக்கும் பதில்களுக்கு மறுமொழியாக எழுதப்பட்டுள்ளன.
அந்த இணைப்பை நண்பர்கள் தெரிவித்தால் நலமுண்டு.
//**************************
இயற்கை முரனும், பார்ப்பினியமும்:
டோண்டுவின் வாதப்படி கம்யுனிசம் மனிதனின் இயற்கை பண்புக்கு மாறாக செல்கிறது என்கிறார். இப்படி மொக்கையாகத்தான் சொல்கிறாரே ஒழிய குறிப்பாக எந்த விசயத்தில் என்று சொல்லவில்லை. ஏனெனில் கம்யுனிசம் சில விசயங்களில் இயற்கை இயல்புக்கு மாறாகத்தான் செல்கிறது. ஆனால் கம்யுனிசம் மட்டும் அப்படிச் செல்லவில்லை. கம்யுனிசத்தைவிட ஏகாதிபத்திய முதலாளித்துவம் இன்னும் பல மடங்கு இயற்கை இயல்புகளூக்கு மாறாக செல்கிறது. இன்னும் சொன்னால் இயற்கையுடன் முரன்பட்டு அதன் மீது எதிர்வினைகளைச் செலுத்தி தனது வாழ்க்கையை வசதி செய்து கொள்வதில் தான் மனிதன் மற்ற மிருகங்களிடமிருந்து வேறுபடுகிறான். ஆக மனித நாகரிமடைந்ததன் அடிப்படையே இயற்கையுடன் முரன்பட்டதுதான்.
மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு உண்டு என்பதை கம்யுனிசம் மறுக்கிறது என்பதுதான் டோ ண்டு சொல்லும் கம்யுனிசத்தின் இயற்கை மறுப்பு போக்கு என்றால், இந்த வாதத்தில் அம்பலமாவது பார்ப்பினியம்தான். அதுதான் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு உண்டு என்று வரையறுத்து இன்றுவரை ஒரு பெரும்பகுதி மக்களை அடிமை சிந்தனையில் பூட்டிவைத்துள்ளது. அனைவரும் அர்ச்சகர் பற்றிய கருத்து கேட்டபொழுது பிற சாதி ஆட்களே கூட புனிதம் சுத்தம் என்று பிறப்பால் தம்மை தாழ்த்திக் கொண்டார்கள். இந்த சமூக அபிப்ராயத்தின் மூல வேர் பல்லாயிரமாண்டு பார்ப்பினிய கொடுங்கோன்மையில் புதைந்துள்ளதை மனதில் கொள்க.//
சமத்துவம் என்பது பல்வேறு விதங்களில் வரையறுக்கப்படலாம். உதாரணமாக சட்டத்தின் முன்னால் அனைத்து மனிதர்களும் சமம். அல்லது கடவுளின் முன்னால் அனைத்து மனிதர்களும் சமம். அல்லது கட்சியின் முன்னால் அனைத்து மனிதர்களும் சமம் என்று பலவேறு சமத்துவங்களை கொண்டுவரலாம்.
இது செயற்கையான சமத்துவம். அல்லது ஒரு வசதிக்காக நமக்கு நாமே செய்துகொள்ளும் சமத்துவம்.
ஆனால், இயற்கையில் மனிதர்கள் சமம் அல்ல. அது ரியாலிட்டி. அசுரனும் நானும் ஒன்றல்ல. அல்லது டோண்டுவும் அசுரனும் சமமல்ல. ஒரு காட்டில் பிறந்த இரு மனிதர்கள் கூட ஒன்றல்ல. ஒரே குடும்பத்தில் ஒரே டி.என்.ஏவை கொண்டு பிறக்கும் இரட்டையரும் கூட சமமல்ல. இயற்கையில் ஒரு நாயும் மற்றொரு நாயும்கூட சமமல்ல.
சமமில்லாத இந்த குணம்தான் நம்மை ஒவ்வொரு தனிமனிதராகவும் ஆக்குகிறது.
எல்லோரும் மற்றவர்களின் குளோனாக இருந்தால் கூட ஒரு காலத்துக்கு பின்னால், ஒவ்வொருவரும் ஒரே மாதிரி ஒரே வேலையை செய்து ஒரே மாதிரி சிந்தித்து ஒரே மாதிரி ஒரே நேரத்தில் பாத்ரூம் போவதில்லை.
//ஆக அந்த விசயத்தில்தான் கம்யுனிசம் இயற்க்கையை மீறுகிறது எனில் நல்லதுதானே. இது ஒரு வகை justification. இந்த வாதம் சிலருக்கு ஏற்புடையதாக இருக்காது. அவர்களுக்காக நியுட்ரல் ground-ல் இருந்து கொண்டு வேறுவிதமான வாதத்தை வைக்கிறேன். அதவாது இந்த பார்ப்பினியம், கோப்பினியம் போன்ற வாதங்களை விடுத்து பொதுவாக இயற்கையை மீறிப் போவது புதிய விசயமா அல்லது ஏற்கனவே பரவலாக பழக்கத்தில் உள்ள விசயமா அல்லது கெட்ட விசயமா அல்லது நல்ல விசயமா என்பதை பார்ப்போம்.
ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல, இயற்கையுடன் முரன்பட்டு அதன் மீது எதிர்வினைகளைச் செலுத்தி தனது வாழ்க்கையை வசதி செய்து கொள்வதில் தான் மனிதன் மற்ற மிருகங்களிடமிருந்து வேறுபடுகிறான். ஆக, அது ஒன்றும் புதிய விசயமல்ல. நெருப்பு கண்டுபிடித்த காலத்தில் ஆரம்பித்தது இந்த முரன்பாடு. இன்னும் கோட்பாடக சொன்னால் மனித சமூகத்தின் வளர்ச்சியின் ரகசியமே அவன் இயற்கையுடன் முரன்பட்டு தன்னை தொடர்ந்து வளர்த்துக் கொள்வதில்தான் உள்ளது.//
இல்லை. மிருகங்கள் கூட இயற்கையை உபயோகப்படுத்தவும், வளைக்கவும், தெரிவு செய்யவும், அதனோடு முரண்படவும் முனைகின்றன. விவசாயம் செய்யும் எறும்புகள் உண்டு http://en.wikipedia.org/wiki/Leafcutter_ant
குச்சியை உபயோகப்படுத்தும் காகங்கள் உண்டு. இன்னும் உருவாக்கப்பட்ட கருவிகளை உபயோகப்படுத்தும் கொரில்லாக்களும் உண்டு.
//இதே விசயத்தை(அதாவது இயற்கை உணர்வுகளுக்கு மாறாக மனித சமூகம் செல்வதை) இன்னுமொரு சென்சிடிவான விசய்த்தை எடுத்து விளக்குகிறேன். அந்த காலத்தில், புரதான பொதுவுடமை சமூகத்தில் கூட்டமாக புணர்வதுதான்(உடலுறுவு கொள்ளூதல்) மனித சமூகத்தின் இயல்பு. அதாவது இஸ்டம் போல, எப்பல்லாம் தோணுதோ அப்போ, யாருடனும்.//
இல்லை. சுத்த பேத்தல். இது எந்த காலகட்டத்திலும் இருந்ததில்லை.
கூட்டமாக புணரும் பழங்குடியினர் என்பது மேற்கத்திய மானுடவியலாளர்களின் ஃபேண்டசியில் உதித்த ஒன்று. உதாரணமாக லூயிஸ் மார்கன் என்ற (தற்போது முழுவதுமாக உதாசீனம் செய்யப்படும் ) ஆய்வாளர் கூறிய தவறான தகவல்கள் அடிப்படையிலேயே எங்கல்ஸ் தன்னுடைய இந்த பிதற்றலை எழுதினார்.
மனிதர்கள் குரங்குகளிடமிருந்து வந்திருந்தால், குரங்குகளின் ஏதேனும் ஒரு வழியில்தான் மனிதர்கள் வந்திருக்கவேண்டும்.
எந்த குரங்குகளிலும் இப்படிப்பட்ட கட்டற்ற பாலுறவு கிடையாது.
திடீரென்று இவர்கள் கற்பனையில் உதிக்கும் புராதன பழங்குடி கட்டற்றபாலுறவு வந்து திரும்ப காணாமல் போகும் மாயம் என்ன என்று தெரியவில்லை.
//குடும்பம் உருவான கதை:
இந்த உடலுறுவு அல்லது இனப்பெருக்க உறவு விசயத்தில் மனிதனின் இயற்கையான உணர்வு எதிர் பாலினம் யாராயிருந்தாலும் உறவு கொள்வது. நாம் கூட தெருக்களில் பார்க்கலாம். நேற்றுவரை பால் கொடுத்த தாய் பன்றியை கொஞ்சம் வயதுக்கு வந்தவுடன் விடலைப் பன்றிகள் உறவுக்கு கூப்பிடுவதை. இந்த இயற்கை உணர்வுக்கு மாறனதுதான் குடும்பம் என்ற கட்டமைப்பு. சமூகம் என்பது எல்லா விலங்குகளுக்கும் பொருந்தும் விசயம் ஆனால் குடும்பம் எனும் நாகரிக அடையாளம் மனிதனுக்கு மட்டுமே உரிய விசயம். அது மனிதனின் ஆரம்ப கால உணர்வுக்கு மாறான, இயற்கை உணார்வுக்கு மாறான விசயம். //
விலங்குகள் என்று எல்லா விலங்குகளையும் ஒரே கூண்டில் அடைக்கமுயலும் அசட்டுத்தனம் இது. நாம் சற்றே வந்த பாதையைத்தான் பார்க்கவேண்டுமே தவிர, அமீபாக்களுக்கா நாம் போக முடியும்?
குடும்பம் என்பது குரங்களிலேயே இருக்கும்போது அது எப்படி மனிதர்களிடம் இயற்கைக்கு மாறான விஷயமாக இருக்கும்? மறுபடி லூயிஸ் மார்கன் பிதற்றியது இன்னும் தொடர்கிறது.
குடும்பம் / குடும்ப உறவுகள் ஆகியவை குழந்தைகளை பாதுகாப்பதற்கு உதவுவதற்காக உருவானவை. அதனை கட்சி கொள்கைக்காக தனியுடமை பொதுவுடமை என்று பிதற்றி திரிந்தால் என்ன செய்வது?
//இந்த இயற்கை உணர்வை மீறுவதில் மனித சமூகம் நமது டோ ண்டுவைப் போல உப்பிச் சப்பில்லாத வாதம் செய்து கொண்டிருக்கவில்லை. பல்வேறு அனுபவங்களுக்கு பிறகு தாய் வழியில், தந்தை வழியில், ஒன்னு விட்ட தங்கை, ஒன்னு விட்ட தம்பி என்று பல வடிவங்களில் பால் உறவு கொள்ளவதை மனிதன் கட்டுப் படுத்தி இயற்கைக்கு முரனாக சென்றான். அதாவது ஒட்டு மொத்த சமூகத்துக்கு அனுகூலமாக இருப்பதற்க்காக பாலுறுவுகளில் மனிதன் இயற்கைக்கு முரனாக சென்றான், கட்டுப்பாடுகளை கொண்டு வந்தான். இங்குதான் குடும்பம் என்ற அமைப்புக்கான மூல வேர் உயிரியல் ரீதியாக ஆரம்பமாகிறது. அப்புறம் குடும்பம் என்பது தனியுடமை சமூகத்தில் ஆழமாக வேரூன்றியது வேறு வரலாறு.//
டாபூ என்பது ஒவ்வொரு பழங்குடிக்கும் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறானது. அதற்கும், தனியுடமை/ பொதுவுடமை கற்பனைகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை.
குரங்குகளிலேயே இன்ஸஸ்ட் அவாய்டன்ஸ் உண்டு. சற்றே அறிவியல் புத்தகங்களை படித்து பார்த்தால் தெரியும். இது ஜெனடிக். சும்மா கற்பனைகளிலும் பேண்டஸிகளிலும் உலவுபவர்கள், பாலுறவுக்கு இணை கிடைக்காதவர்கள் பாண்டஸி செய்துகொள்வதுதான் இதெல்லாம்.
இன்ஸஸ்ட் அவாய்டன்ஸ் உள்ள குரங்குகள் எல்லாம் தனியுடமை குரங்குகளா அல்லது பொதுவுடமை குரங்குகளா? நான் முன்னமே சொன்னது போல ஒரு பொதுவுடமை நாயைக்கூட கண்டுபிடிக்க முடியாது. நாய்கள் எவ்வளவு டெரிடோரியலான விலங்குகள் என்பது தமிழ்நாட்டு தெருக்களில் பார்த்தாலே தெரியுமே? இதெற்கெதற்கு ஜெர்மானிய மாட்டுச்சாணம்?
//டோண்டு அவர்கள் இந்த விசயத்தில்(குடும்பம், பாலுறவு விசய்த்தில்) மீண்டும் நாம் இயற்கை உண்ர்வுக்கு மாறலாம என்று வாதிட்டு அறிவுரை சொல்லட்டும் அதை அவரது தொண்டரடி பொடிகள் வேண்டுமானால் follow செய்யட்டும். நமக்கு கவலையில்லை.
இப்படி ஒரு அதி முக்கியமான விசயத்திலேயே அட்ஜெஸ்ட் செய்துதான், இயற்கை உணர்வுக்கு மாறாக சென்றுதான் மனித சமூகத்தின் வரலாறே ஆரம்பிக்கிறது. குடும்பம் எனும் ஒரு அதி உன்னதமான ஒரு மனித சமூக அமைப்பு/இயற்கை உணர்வுக்கு மாறான அமைப்பு நடைமுறைக்கு வந்த கதையே இப்படித்தான் இருக்கிறது. கம்யுனிசம் மனித சமூகம் மொத்ததையும் ஒரே குடும்பமகா மாற்றும் ஒரு super குடும்பம். இதுவும் நீண்ட காலப் போக்கில் தான் ஏற்ப்படும். புரட்சி நடந்த மறு நிமிடே கம்யுனிசம் வந்துவிடும் என்பது டூபாக்கூர். அதனடிப்படையில் செய்யப்படும் வாத, எதிர் வாதங்களை புறக்கணீக்கவும்.//
பேண்டஸி இன்னும் பிய்த்துக்கொண்டு ஊற்றுகிறது. எளிய ஆங்கிலத்தில் மரபணு அறிவியல் எவ்வாறு சமூகத்தையும், சமூக பழக்க வழக்கங்களையும் பாதிக்கிறது என்று படித்து பார்க்கலாம். ஒரு குரங்கு தன்னுடைய குழந்தையைத்தான் பார்த்துக்கொள்ளும். எந்த காலத்திலும் மற்ற குரங்கின் குழந்தையை தன்னுடைய குழந்தையாக பார்த்துக்கொள்ளாது. ஒரு குரங்கு தனக்கு குழந்தை இல்லாத போது, ஜீன்கள் உருவாக்கும் தன்னுடைய தாய்மை உணர்வை./தந்தைமை உணர்வை தணித்துக்கொள்ள ஒரு குட்டியை அடாப்ட் செய்யலாம். ஆனால், எப்போதுமே தன்னுடைய ஜீன்கள் எந்த குழந்தையிடம் அதிகம் இருக்கிறதோ அதனை கவனிப்பதுதான் ஜீன்களின் ஆணை. மீறிப்பார்க்கலாம். அல்லது எதிர்கால கம்யூனிஸ்ட் சமூகத்தில் எல்லோரும் ஜீன் மாற்று அறுவை சிகிச்சை செய்து எல்லோரும் எல்லோருடைய குழந்தையையும் தன்னுடைய குழந்தையாக கருதும் படி மூளை சலவை செய்யலாம்.
//ஆக, உடலுறவு விசயத்தில் இயற்கைக்கு மாறாக சென்று அது இன்றைய குடும்பமாக பரிணமித்து, பிறகு இன்று வரை மனித சமூகம் பல வித மாற்றங்களைக் கண்டு, இன்றைக்கு தனியுடமை சமூகத்தின் கடைசி கட்டத்தில் வந்து நிற்கிறது. இந்த நேரத்தில் வந்து ஒரு அரதப் பழசான வாதத்தை வைத்து தானும் அம்பலமாகி, தனது தத்துவமும் அம்பலமாகி, வாதத்திலும் தோல்வியடையும் டோண்டுவின் நிலை உண்மையில் பரிதாபத்திற்க்குரியதுதான். //
இது போன்ற அரதப்பழசான வாதத்துக்கு என்ன செய்வது?
//நியுட்ரல் க்ரவுண்டிலும்கூட அவரது வாதம் ஒரு இட்லி, கெட்டி சட்னிக்கே ஆப்(off) ஆகி விட்டது. ஆம்லெட் ஆப்பாயில், சில பல புல் மீல்ஸ்கள் ரேஞ்சுக்கேல்லாம் தேறாதா கேசாக அவரது வாதம் உள்ளது.
சரி, இவ்வளவு வாதம் செய்து இயற்கை முரனாகா செல்வது மனித இயல்புதான் என்பதை நிறுவிய பிற்ப்பாடு இன்னொரு விசயம் சொல்லவேண்டியுள்ளது.//
சொல்லுங்கள
//அதாவது ஒரு கம்யுனிச சமூகத்தில் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு இருக்கும் என்பது ஒரு பொய். ஆக இந்த விசயத்தில் கம்யுனிச சமூகம் இயற்கைக்கு விரோதமாக செல்கிறது என்பதே டூபாக்கூர்த் தனமான ஒரு கற்பனைதான். அப்படிச் சென்றாலும் தவறில்லை என்று கூறத்தான் மேலெயுள்ள வாதங்கள்.
ஒரு கம்யுனிச சமூகத்தில் ஏற்றத்தாழ்வு என்பது பூகோளம், நிறம், உடலியல் ரீதியாகத்தான் இருக்குமேயொழிய. அறிவு விசய்த்தில், அனைவருக்கும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதால், வள்ரும், வாழும் சூழ் நிலைக்கேற்ப்ப எந்த துறையில் வேண்டுமானாலும் கற்று எல்லாருமே தான் சம்பந்தப்பட்ட துறையில் சூப்பர் ஜினியஸாகத்தான் இருப்பார்கள். அதனால் இவர் கூறுவது போன்ற(திறமை) ஏற்றத்தாழ்வு இருக்காது. இதுவும் சிறிது காலம் எடுத்து சில, பல தலைமுறைகள் கடந்த பிற்ப்பாடு ஏற்ப்படும் ஒரு நிலை. அதனால் இன்றைய ஏற்றத்தாழ்வான சுரண்டல், சமூகத்தை வைத்து அந்த முன்னேறிய சமூகத்தை எடைப் போட்டால் திருவாளர் டோ ண்டுவைப் போல பார்ப்பினியப் பார்வையில் போய் விழுந்து கிடப்பீர்கள். //
பூகோளம், நிறம், உடலியல் ரீதியான சிறுசிறு மாற்றங்களே, ஏற்றத்தாழ்வுகளே, மிகப்பெரிதாக ஆம்ப்ளிபை ஆகி பெரிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். கடந்த கால சரித்திரத்தை படித்தவர்கள் இதுபோன்ற தவற்றினை செய்யமுடியாது. வெறும் கற்பனை கோட்டைகளில் வசிப்பவர்களுக்கு என்ன சொன்னாலும், எத்தனை புத்தகங்களை எடுத்துக்கொடுத்தாலும் புரியாது.
அறிவு விசயத்தில் எல்லோரும் ஒரே மாதிரியாக என்னாளும் இருக்க முடியாது. அறிவு என்பது வெறுமே படிப்பதும், ஞாபகம் வைத்துக்கொள்வதும் மட்டுமல்ல. என்னதான் பல கோடி தலைமுறைகள் கழித்து பார்த்தாலும் எல்லோரும் சூப்பர் ஜீனியஸாக இருக்கவே முடியாது. எல்லோரும் சூப்பர் ஜீனியசாக இருந்தால், எல்லோருமே முட்டாள்களாகத்தான் இருப்பார்கள். ஏனெனில், சூப்பர் ஜீனியஸ் என்பது மற்றவர்களை வைத்துத்தான்.
ஒரு கூட்டத்தில் 100 பேர்கள் இருந்தால், அவர்களில் அறிவுத்திறனை அளந்தால், 95 சதத்தினர் சராசரியாகவும், மிக அதிக புத்திசாலியாக இரண்டு புள்ளி ஐந்தும், முட்டாளாக இரண்டு புள்ளி ஐந்தும் இருப்பார்கள். எல்லோருமே மிகச்சரியாக ஒரே அளவு புத்திசாலித்தனத்துடன் இருக்கவே முடியாது. வெறும் வசதி வாய்ப்புகளும் ஆர்வமும் மட்டுமே சூப்பர் ஜீனிஸஸ்களை உருவாக்கிவிடும் என்றால், ராமானுஜத்தை விட வசதி வாய்ப்பும், அவரை விட மிக அதிக அளவு கணித ஆர்வமும் கொண்டவர்கள் அவர் கண்டுபிடித்ததை ஏன் கண்டுபிடிக்கவில்லை?
மீண்டும் குரங்குகளுக்கு போவோம். எல்லா குரங்குகளும் ஒரே மாதிரியான வாய்ப்புகளையே ஒரே மாதிரியான கல்வியையே பெற்றாலும், நூறு குரங்குகளில் இரண்டு குரங்குகள் தவறு செய்யத்தான் செய்யும். இறந்து போகும். இரண்டு குரங்குகள் மற்ற குரங்குகளை விட புத்திசாலியாக இருக்கலாம். இதனால்தான் செக்சுவல் செலக்ஷன் வேலை செய்கிறது. குரங்குகளில் எந்த குரங்கு வலிமையானதாகவோ அல்லது அந்த சூழ்நிலையில் சந்ததியை உற்பத்தி செய்ய வலிமை கொண்டதாக பெண் குரங்குகளால் பார்க்கப்படுகிறதோ அந்த குரங்கிடமே பெண் குரங்குகள் செல்லும். இந்த சூழ்நிலையே, இப்போதுள்ள வலிமையான (most adoptive) குரங்குகள் அடுத்த சந்ததிக்கு தங்கள் ஜீனை அனுப்ப வாய்ப்பு பெறும்.
இப்படிப்பட்ட செக்சுவல் செலக்ஷ்னும், நேச்சுரல் செலக்ஷனும் எல்லா காலத்திலும் ஏதேனும் ஒரு வகையில் இருந்துகொண்டே இருக்கும். அது இருக்காது என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். இதே போலத்தான் ஜெஹோவாவின் சாம்ராஜ்யத்தில் எல்லோரும் சுபிட்சமாக இருப்பார்கள் என்று இன்னும் பலர் பேசிக்கொண்டுள்ளார்கள். நீங்கள் எழுதியதை ஒப்புக்கொள்வதற்கும் அவர்கள் கூறுவதை ஒப்புக்கொள்வதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
எல்லோருக்கும் வசதி வாய்ப்புகள் கிடைக்க வழி செய்யவேண்டும் என்பது நல்ல கோரிக்கை. அது சாக்ரடிஸிலிருந்து, பிளேட்டோவிலிருந்து, ராமனுஜரிலிருந்து, ஆடம்ஸ் ஸ்மித்திலிருந்து எல்லோரும் கூறியது.
//அடிமைச் சமூதாயத்தில் கூட அடிமைகளுக்கு சம உரிமை கொடுப்பதை ஏதோ இயற்கைக்கு மாறாக செல்லும் விசயம் என்பதாக பேசியிருப்பார்கள். நிலவுகின்ற ஒரு அமைப்பில் மாற்றம் கோரும் போதெல்லாம் அழுகிய பழைய சமுதாயத்தின் பிரதி நிதிகள் அவலட்சணமாக பேசுவது இயல்புதான். இதே கூட்டம் தலித்துக்களுக்கு உரிமை கேட்டு இந்தியாவில் போன நூற்றாண்டின் ஆரம்பத்தில் விவாதங்கள் எழுந்த போதும் இயற்கைக்கு முரனான கோரிக்கை என்பது போன்ற எதிர் வாதங்களை வைத்தனர். ஆகவே இதையேல்லாம் சட்டை செய்யாமல் எந்த ஒரு விசயத்தையும் அது மனித குலத்துக்கு அனுகூலமா இல்லையா என்ற ஒரு அளவுகோலைக் கொண்டு மதிப்பிடுவதுதான் சரியாக இருக்கும். //
அந்த வகையில் பார்த்தால் கம்யூனிஸம் நிச்சயம் மனித குலத்துக்கு அனுகூலமானது அல்ல.
//இது தவிர்த்து இன்னொரு விசயததையும் இயற்கைக்கு மாறான போக்கு என்று வாதிட்டார்கள் சிலர். அந்த பகுதிகளையும் இங்கு பகிர்ந்து கொண்டால் சரியாக இருக்கும்.
தனியுடமை மனிதனின் இயற்கையான உணர்வா?
இது தவறான ஒரு கூற்று. மனித குல வரலாற்றை எடுத்துக் கொண்டால், பொது வுடைமைதான் அவனது இயல்பான உணர்வாக இருக்கிறது. வேட்டையாடி உணவு தேடும் பண்டைய புரதான பொதுவுடைமை சமுதாயத்தில் மனிதன் குலமாக, கூட்டமாக வாழ்ந்தான். அங்கு ஒவ்வொரு மனிதனும் தான் சேகரித்து வந்த உணவை பொதுவில் வைத்துத்தான் பகிர்ந்தனர்.
//
ஆதாரம்?
மீண்டும் குரங்கையே எடுக்கிறேன். ஒரு பொதுவுடமை குரங்கை காட்டமுடியுமா? குரங்கு தேடி தின்கிறது. அது பகிர்ந்து உண்பதில்லை. ஒரு பறவை தான் தின்று மீதத்தை தான் தன் சகோதரர்களுக்கு தருகிறது. பகிர்ந்து உண்பதில்லை. கூட்டமாக தேடி உண்ணும் விலங்குகளையே எடுத்துக்கொள்வோம். வேட்டையாடும் ஓநாய்கள் ஒரு விலங்கை அடித்து கொன்று தின்கின்றன. பொதுவாகவேதான். ஆனால், கொன்ற பின்னால், தின்பதற்கு ஒவ்வொரு ஓநாயும் ஒன்றோடு ஒன்று அடித்துக்கொள்ளும். அதே போல வயது முதிர்ந்த, வலிமையற்ற ஓநாய்களுக்கு வேட்டையாடிய ஓநாய்கள் மாமிசத்தை கொண்டுவந்தும் கொடுக்காது.
விலங்குகளே அப்படி இருக்கும்போது, தானாக மனித சமுதாயம் உருவானபோது பொதுவுடமை சமுதாயத்தில் இருந்தார்கள் என்பது வெறும் கற்பனை.
//மனித மூளை வளர்ச்சி அடைந்ததில், இவ்வாறு பகிர்ந்து கொடுப்பதற்க்காக அவன் சிந்தித்தது(மூளையை கசக்கி) ஒரு முக்கிய காரணீயாக இருந்தது என்பது ஆய்வு முடிவுகள்(டார்வினின் கட்டுரை), இந்த விசயத்தில் தவறு செய்யாமல் இருக்க கடவுளர்களை உருவாக்கி பகிர்ந்து கொடுப்பது சரிசமமாக எல்லருக்கும் கிடைக்க அந்த குறிப்பிட்ட கடவுள் உதவ வேண்டும் என்று வேண்டுகிறார்கள். இது குறித்த தோ. பரமசிவனின் 'பண்பாட்டு அசைவுகள்' என்னும் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைத் தருகிறேன்:
""ஒவ்வொரு கட்டத்திலும் சமூகச் தேவைகள் மாற மாற, தெய்வங்களும் அவற்றின் பண்புகளும் மாறின, உதாரணமாக, வேட்டைச் சமூகத்தில் வேட்டையாடப்பட்ட விலங்குகள் ஊர்ப் பொது மன்றத்தில் கொண்டு வரப்பட்டு அந்த இனக்குழு மக்களால் தமக்குள் சமமாக அல்லது வேலைக்குத் தகுந்த அளவில் பங்கீடு செய்யப்பட்டன, இப்பங்கீடு தெய்வத்தின் பெயரால் செய்யப்பட்டது. பங்கீடு சரியாக இல்லாவிட்டால் தெய்வம் தண்டிக்கும் என்பது இனக்குழு மக்களின் நம்பிக்கை. இப்பங்கீட்டுத் தெய்வத்தைப் பற்றிய தொல்லெச்சம் போன்ற செய்திகள் பழைய இலக்கியங்களிலும் புராணங்களிலும் காணப்படுகின்றன, தமிழிலக்கியத்தில் இத்தெய்வம் பால்வரை தெய்வம் (பால்-பிரிவு) என்று கூறப்பட்டுள்ளது. இத்தெய்வத்தின் விருப்பத்தின் பேரில்தான் ஒர் ஆணும் பெண்ணும் சந்தித்து உறவு கொள்கின்றனர் என்பது பழந்தமிழர் நம்பிக்கை. ஆரியரின் ரிக் வேதத்தில் 'ரித' என்னும் பங்கீட்டுத் தெய்வம் மறைந்தது பற்றிய புலம்பல்கள் இடம் பெறுகின்றன. கிரேக்கர் இப்பங்கீட்டுத் தெய்வத்தை 'மீர'(more) என்று அழைத்ததாகக் கிரெக்கத்தின் பழைய புராணங்கள் பேசுகின்றன.""
//
இன்னொரு கற்பனை. வேட்டையாடியவர்கள் தங்கள் உணவை பகிர்ந்து உண்டிருக்கலாம். ஆனால், அதிலும் எது ருசியான பாகமோ அதற்கு போட்டி இருந்திருக்கத்தான் செய்யும்.
rita பற்றிய பக்கம் http://www.purifymind.com/EasternIdeas.htm
We notice some very important concepts developing during this period, which provide the bedrock of later philosophy. The concept of Rita, which literally means the "course of things", with Varuna as its custodian, is the precursor to monotheism and monism. It stands for inviolable cosmic order or the law in general and the immanence of justice. Dr. Radhakrishnan compares it to the universals of Plato. The universal is prior to the particular, and so Vedic seer thinks that Rita exists before the manifestation of all phenomena. The "shifting, series of the world are the varying expressions of the constant Rita". The word Dharma subsequently subsumes this concept and, in a way, replaces the word Rita.
இதற்கும் பங்கீடுக்கும் என்ன சம்பந்தம்? பொதுவுடமை சமுதாய வேர்களை கண்டுபிடிக்கவேண்டும் என்று அலைந்து லூயிஸ் மார்கனில் எங்கல்ஸ் தேடுவதற்கும், ரிக் வேதத்தில் பரமசிவன் தேடுவதற்கும் வித்தியாசமில்லை.
//
Quote from Darwin:
""In this book I argue that the origins of human intelligence are linked to the acquisition of meat, especially through the cognitive capacities necessary for the strategic sharing of meat with fellow group members. Important aspects of the behavior of some higher primates--hunting and meat sharing and the social and cognitive skills that enable these behaviors--are shared evolved traits with humans and point to the origins of human intelligence.""
டார்வின் அத்தனைக்கும் ஒரு முதலாளித்துவ அறிஞர்.//
அதென்ன முதலாளித்துவ அறிஞர்? அறிவியலில் முதலாளித்துவம் கம்யூனிஸம் என்றெல்லாம் ஏதும் இல்லை.
//மனிதன் மந்தை உணர்ச்சி உடையவன், தனி மனித வாதம் என்பது தனியுடைமை சமூகத்தின் உத்திரவாதமில்லா நிலை உருவாக்கிய ஒரு இயல்பை மீறிய உணர்ச்சிதான். அதனால்தான் பாதுகாப்பான உணர்வடையும் போதெல்லாம் மனிதன் தனது பொதுமை நாட்டத்தை வெளிப்படுத்துகிறான்.
ஆக, மீண்டும் அதே விசயம்தான். பிரச்சனை இயற்க்கைக்கு மாறாக போவதா அல்லது இயந்து போவதா என்பது அல்ல. மனித குலத்தின் நலனை அடகு வைத்துச் செல்வதா அல்லது அதை முன்னிறுத்தும் விசயங்களை செய்வதா என்பதுதான்.//
தனிச்சொத்து எது, பொதுச்சொத்து எது என்பது மனிதனின் பொது அறிவிலேயே தோன்றும் விஷயம். தன்னுடைய வீடு தனிச்சொத்து, தான் இருக்கும் வீதி பொதுச்சொத்து என்பது அவனுக்கு தெரியும்.
தமிழ்நாட்டு கிராமங்களில் வீட்டின் அமைப்பை பார்த்தால் இன்னொன்றும் தெரியும். தனிச்சொத்தான திண்ணை பொதுச்சொத்தாக வைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். இன்னொன்றும் தெரியும், பொதுச்சொத்தும் இல்லாமல் தனிச்சொத்தும் இல்லாமல் இரண்டு வீடுகளுக்கு இடையேயான இடம் பெண்கள் கூடிப்பேசும் இடமாக பயன்படுத்தப்படுவதையும் பார்க்கலாம்.
இதெல்லாம், ஜெர்மனியிலிருந்து வந்த மாட்டுச்சாணங்கள் சொல்லித்தான் தெரியவேண்டும் என்று இல்லை.
மிக வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அரசாங்கம் செய்யவேண்டிய வேலைகளை தனியார் மயப்படுத்திவருகிறார்கள். ஏனெனில், அங்கு தனியார் மயமாக்கப்பட்டபின், மக்களுக்கு சேவைகள் அதிகம் கிடைக்கின்றன என்று கண்டிருக்கிறார்கள். மேலும் வெறும் தனிச்சொத்தெல்லாம் கொடுமையும் இல்லை. பொதுச்சொத்தெல்லாம் புனிதமும் இல்லை. எது பொதுச்சொத்தாகும் எது தனிச்சொத்தாகும் என்பதெல்லாம், வசதியையும் சந்தர்ப்ப சூழ்நிலையையும், வளர்ச்சியையும், pragmatism ததையும் பொறுத்தது.
parting shot
"Good people will do good things, and bad people will do bad things. But for good people to do bad things -- that takes religion. -- Steven Weinberg"
அதனையே சற்று மாற்றி
Good people will do good things, and bad people will do bad things. But for good people to do bad things -- that takes ideology. - Thamizmani
என்று சொல்கிறேன