Sonntag, 13. Januar 2008

மக்கள் கம்யூனிஸ எதிர்ப்பு கழகம்

மக்கள் கம்யூனிஸ எதிர்ப்பு கழகம்
People's Anti Communism League (PACL)


இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் எண்ணற்ற துயரை கொண்டுவந்த இந்த கம்யூனிஸ சிந்தனை, "மக்கள் போராட்டம்", "தொழிலாளர்கள் உரிமை", "எதேச்சதிகார எதிர்ப்பு", "பாஸிஸ எதிர்ப்பு", "புதிய ஜனநாயகம்" போன்ற வார்த்தை ஜாலங்களால் மக்களிடம் ஆதரவு தேட முயல்கிறது.

இதுவரை நடந்த வரலாற்றை எடுத்து பார்க்கும்போது,
மக்கள் போராட்டம் என்ற பெயரில் மக்களை போராட வைத்து இறுதியில் மக்களை அடிப்படை தேவைகளுக்கே போராட வைத்துவிட்டதை பார்க்கிறோம்.

தொழிலாளர்கள் உரிமை என்று தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு தேடி ஆட்சிக்கு வந்த பின்னால், தொழிலாளர்களுக்கு முதலீட்டிய அமைப்பில் இருந்த ஒரு சில உரிமைகள் கூட பறிக்கப்பட்டு அடிமைகள் போல ஆக்கப்பட்டதை வரலாறு சொல்கிறது.

பாஸிஸ எதிர்ப்பு என்ற பெயரில் மக்களிடம் வார்த்தை ஜாலம் காட்டி மக்களை தங்கள் பின்னால் வரவழைத்த பின்னால், தங்கள் எதிர்ப்பு கருத்துக்களை "மக்கள்" பெயரிலேயே கடுமையாக ஒடுக்கி பாஸிஸ அமைப்பையே இவர்கள் உருவாக்கினர், அதன் பெயரிலேயே எண்ணற்ற கொலைகளை செய்தனர் என்பதையும் பார்க்கிறோம்.

எதேச்சதிகார எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று பேசுபவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னால், மற்ற நாடுகளை எவ்வளவு கீழ்த்தரமாகவும் சுரண்டல் முறையிலும் அடிமைகள் போல நடத்தினர் என்பதனை சோவியத் யூனியன் யுக்ரேன் மற்றும் இதர இனத்தவரை நடத்தியதையும் சீன கம்யூனிஸ்டுகள் திபெத் கம்போடியா வியத்நாம் ஆகிய நாடுகளை நடத்தியதையும், நடத்துவதையும் இன்றும் தனது விஷக்கரங்களை மற்ற நாடுகள் மீது வீசுவதையும் பார்க்கிறோம்.

இன்றும் தமிழ்நாட்டில் புதிய ஜனநாயகம் என்று ஆளை ஏமாற்றும் முயற்சிகள் நடந்துவருகின்றன. எந்த கம்யூனிஸ, சோசலிஸ நாட்டில் ஜனநாயகம் இருந்திருக்கிறது? புதிய ஜனநாயகம் என்பது ஜார்ஜ் ஆர்வெல் சொல்வது போல நேர் எதிரான பொருளை கொண்டது. இவர்களது ஜனநாயகத்தில் யாரும் ஓட்டுப்பொறுக்க மாட்டார்கள். ஓட்டு இருந்தால்தானே பொறுக்குவதற்கு? தங்களது ஜனநாயக விரோத போக்கை இவ்வளவு வெளிப்படையாக சொன்ன பின்னாலும், இவர்களை ஜனநாயகவாதிகள் என்று யார் அழைப்பார்கள்?

என்னுடைய இன்னொரு பக்கத்தில், கம்யூனிஸ கொள்கை ஆரம்பம் முதலே தவறான கருத்துக்களால், தவறான சிந்தனைகள் மூலம் உருவான தவறான கொள்கை என்பதை காட்டியிருக்கிறேன்.

விவாதிக்க வந்த அனைத்து கம்யூனிஸ்டுகளும் தோல்வியடைந்து பின்னால், தோல்வி அடைந்தோம் என்று உணர்ந்ததும் வெறும் அவதூறில் இறங்கினர்.

தனி மரம் தோப்பாகாது என்பதன் காரணமாக, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ஒரு பரந்த இயக்கமாக இந்த மக்கள் இயக்கம் உருவாக வேண்டும் என்பதன் காரணமாகவும் எல்லா தரப்பு மக்களையும் இங்கே அழைக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள். நீங்கள் இந்த பதிவில் இணைய வேண்டும் என்பது என் அவா.

கம்யூனிஸ்டுகளது ஏ.கே.47களுடன் நாம் போராட முடியாது. ஆனால், அவர்களது தவறான கருத்துக்களுடன் போராட முடியும்.

அவர்கள் கொண்டுவரும் அபத்தமான கட்டுரைகளை கட்டுடைத்து அவர்களுக்கே காட்டுவோம்.

இதன் பின்னால் போய்விடக்கூடிய அப்பாவி இளைஞர்களை காப்பாற்றி தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் சுதந்திரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் அரணாய் விளங்குவோம்.

நீங்கள் திமுக ஆதரவாளராக இருக்கலாம், அதிமுக ஆதரவாளராக இருக்கலாம், காங்கிரஸ் ஆதரவாளராக இருக்கலாம், பாரதிய ஜனதா ஆதரவாளராக இருக்கலாம், அல்லது முன்னாள் கம்யூனிஸ்டாக இருக்கலாம்.

நாம் எல்லோரும் மற்றவர்களது ஜனநாயக உரிமைகளை மதிப்பவர்கள். மக்களது ஓட்டுக்களை, அவர்களது தேர்வுகளை மதிப்பவர்கள். மக்கள் ஓட்டுப்போடும் தேர்தலில் தோற்றால், அவர்களது எண்ணத்துக்கு செவி சாய்த்து மாற்றுகட்சியினர் பதவியில் இருக்கவும், அவர்கள் தங்களது செயல்திட்டங்களை நடத்தவும் அனுமதிப்பவர்கள். மாற்றுகட்சியினரது திட்டங்களில் குறை இருப்பதாக நாம் கருதினால் அந்த குறைகளை மக்களிடம் எடுத்துச் செல்பவர்கள். அதே போல நமது செயல்திட்டங்களில் குறை இருந்தால், மாற்றுகட்சியினர் நம்மைப் பற்றி குறை சொல்லவும் ஜனநாயக ரீதியில் அனுமதிப்பவர்கள்.

ஆனால், கம்யூனிஸ்டுகள் அப்படி அல்ல. தங்களது கருத்து ஒன்றே சரி. மற்றவர்கள் கருத்து அனைத்தும் தவறு. அதுமட்டுமல்ல, தங்களை தவிர வேறொருவரும் மக்களிடம் எந்த கருத்தையும் கூறக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் கொண்டவர்கள். இதனால் தான் அவர்களது ஆட்சிகள் உலகம் முழுவதும் சர்வாதிகாரத்தனம் கொண்டிருந்தன. அதனையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று வார்த்தைஜாலத்தில் மறைத்தவர்கள்.

தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பல்வேறு துறைகளில் இந்த கம்யூனிஸ்டுகள் ஊடுருவி தங்களது ஜனநாயக எதிர்ப்பு பிரச்சாரத்தையும், பயங்கரவாத பிரச்சாரத்தையும் செய்துவருகின்றனர். தங்களது பயங்கரவாத செயல்களை வார்த்தைஜாலங்களில் மறைத்து நியாயப்படுத்தியும் வருகின்றனர். அதுமட்டுமல்ல, இவர்களை தவிர மற்றவர்கள் அனைவரையும் பயங்கரவாதம் என்று கூசாமல் சொல்லவும் நியாயப்படுத்தவும் செய்கின்றனர்.

இவர்களது செயல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி இந்த கொள்கை குப்பை, ஜனநாயக விரோத, மக்கள் விரோத கொள்கை என்பதனை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.

வாருங்கள்.

இந்த பக்கத்தை குறித்துக்கொள்ளுங்கள்
http://anticommies.blogspot.com/

17 Comments:

Anonym said...

அசுரன் , ஜமாலன் போன்றவர்களின் இணைப்புகளை "விவாதிப்பவர்கள் " என்று பட்டியல் இட்டிருக்கிறீர்கள். "விவாதத்தைத் தவிர்பப்வர்கள்" அல்லது " வசைபாடுபவர்கள்" என்று பட்டியலிட்டால் பொருந்தும் அல்லவா?
பழைய அனானி

Anonym said...

வளர்க. உருப்படியான முயற்சி. இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைத்து அரசியல் சார்புடையவரையும் அழைத்தது சரியான செயல், பெருமை தரும் செயல்.
தம் நாடு சீனாவின் கைக்கூலியாக மாறாமல் தடுக்கும் எளிய தேசிய உணர்வு உள்ள எவருக்கும் இந்த அழைப்பின் நன்மை புரியும். மேலும் இந்தியாவை உடைக்கப் பெரிதும் முயன்று வரும் இதர ஏகாதிபத்தியங்களின், பண்பாட்டு அழிப்பு முயற்சிகளின் ஏவலர்கள், டவாலிகள், ஐந்தாம்படைகள் இந்த முயற்சியைப் பார்த்து வயிறெரிவர், இதை அழிக்க முயல்வர் என்றும் கருதுகிறேன்.
இதை உரமான மனம் உள்ளவர்கள் கட்டி வளர்த்து இந்திய ஜனநாயகத்தை ஒரு வலுவான மக்களாதரவு ஆட்சியாக மலர வைக்க உதவ வேண்டும் என்று விரும்புகிறேன். கேட்பார்களா?
அனானி-2

said...

நன்றி பழைய அனானி
நன்றி அனானி-2

உங்கள் ஆதரவும், ஆசிகளும் இந்த முயற்சிக்கு தேவை.

வாசகர்களுக்கு நன்றி

Anonym said...

எப்படி இந்த முயற்சிக்கு உதவுவது என்பதையும் தெரிவிக்கலாமே?

said...

கம்யூனிஸத்தை எதிர்கொள்ளவும்,
கம்யூனிஸ பிரச்சாரத்தின் பொய் பற்றியும்,
என்ன செய்யவேண்டும் என்பதனை பற்றியும்
நண்பர்கள் எல்லோரையும் எழுத அழைக்கிறேன்.

அவற்றை தனித்தனி கட்டுரைகளாகவே பிரசுரிக்கிறேன்.

அனானியாக எழுத விரும்புபவர்களும் இங்கே ஏதேனும் ஒரு பெயரை வைத்துக்கொண்டு எழுதலாம்.

said...

Good initiative, I will contribute whatever I can

said...

தமிழ்மணி அய்யா,
இந்த ம க இ க எனப்படும் தீவிரவாத நக்சல் கம்யூனிச பொறிக்கி கும்பலோட குறிக்கோள் என்ன என்பதில் எனக்கு சந்தேகம் எழுகிறது.எதுக்கு சொல்றேன்னா கம்யூனிசத்துக்கும் கலை,இலக்கியத்துக்கும் அமாவாசைக்கும்,அப்துல்காதருக்கும் உள்ள சம்பந்தம் மாறின்னு சொல்வாங்க.அப்படியிருக்க இந்த மூஞ்சிகள் கலை,இலக்கியம் என்று கூப்பாடு போடுவதன் ரகசியம் என்ன?
புரட்சி புரட்சின்னு அலையும் இந்த மூஞ்சிகளின் உண்மையான குறிக்கோள் என்ன?நாட்டையே சுடுகாடாக மற்றி அதில் மகிழும் வெறி பிடித்தவர்களாக இவர்கள்?இல்லை,வெறும் ஓசி சிலி பீஃப் சாப்பிடுவதற்க்காக ஒரு பிழைப்பு வேண்டும் என்ற சில்லறை பொறிக்கித்தனம் தான் நோக்கமா?உங்க புரிதலை சொல்லுங்களேன்.

பாலா

said...

கம்யூனிஸ்டுகளின் கேவலமான பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.

Anonym said...

அன்புள்ள பாலா,
ம க இ க வின் இலக்கிய முயற்சிகளின் சாம்பிள் தான் ம க இ க-காரர்கள் பின்னூட்டமாய் இட்டிருக்கிறார்கள் போலும்.
பழைய அனானி

said...

//ம க இ க வின் இலக்கிய முயற்சிகளின் சாம்பிள் தான் ம க இ க-காரர்கள் பின்னூட்டமாய் இட்டிருக்கிறார்கள் //

பழைய அனானி அய்யா,
ஆமாங்கய்யா.நம்ம தமிழ்மணி அய்யா தவறு செய்து விட்டார்.இந்த நக்சல் தீவிரவாத மக்களின் கலை/ இலக்கிய படைப்புக்களை வெட்டி இருந்து விட்டார்.அட அட, என்ன கலை, என்ன இலக்கியம்.அடேங்கப்பா.நம்ம அசுரன்,பனியன் தியாகு,தீரன் ஸ்பார்டகஸ்,தாடி ஜமாலன் கொண்டாடும் இலக்கியத்தின் தரம் உலகப் பிரசித்தி பெற்றது.

பாலா

said...

:-))

said...

பொதுவுடமை என்ற பதிவில் எழுதிய மறுமொழி

அன்புள்ள நண்பருக்கு,

உங்கள் கட்டுரையில் பாதி உண்மை பாதி பொய். உதாரணமாக Infant mortalityயில் இந்தியா பின் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால், சிதம்பரம் நிதி மந்திரி ஆக ஆனபின்னால், மோர்ட்டாலிட்டி அதிகரித்திருப்பது போன்ற பிரமையை உங்கள் எழுத்து கூறுகிறது. அப்படி இல்லை. சொல்லப்போனால், 2000இலிருந்து தொடர்ந்து infant mortality வெகுவேகமாக இந்தியாவில் குறைந்து வருகிறது. இப்போது இன்ஃபண்ட் மோர்ட்டாலிட்டி ஆயிரத்தில் 34. பாகிஸ்தான் சோமாலியா போன்ற நாடுகளை விட இது மிக மிக குறைவு.

நீங்கள் எழுதும்போது ஆதாரத்துடன் எழுதுங்கள். ஆகவே, நீங்கள் கூறுவதை சரி பார்க்க உதவும்.

அடுத்தது, நீங்கள் இன்றைய ஆட்சியாளர்களை குறைகூறுவது என்பது வேறு, அதனை பொதுவுடமை என்று வேஷம் கட்டிக்கொண்டு, பொதுவுடமை ஆதரவாளராக கூறுவது என்பது வேறு.

http://pothuvudaimai.blogspot.com/2008/01/blog-post.html

said...

பாலா

கம்யூனிஸம் பற்றிய நல்ல ஆய்வுக்கட்டுரையை எழுதி தாருங்களேன்.

இந்த பதிவில் தனியாகவே போட்டுவிடலாம்.

Anonym said...

ம க எ கவுக்கு வாழ்த்துக்கள்

Anonym said...

கட்டுரையை எப்படி உங்களிடம் அனுப்புவது?

said...

மா சிவக்குமார் பதிவில் எழுதியதை இங்கே பதிகிறேன்.
--
பொதுவுடமை என்பதே தவறான கொள்கை. அது பற்றிய நீண்டவிவாதம் நண்பர்கள் அசுரன், தியாகு, அரசு பால்ராஜ், ஸ்டாலின் ஆகியோருடன் நடந்ததை என் பதிவில் பதிந்து வைத்திருக்கிறேன்.

பொதுவுடமை இருந்ததும் இல்லை. இருக்கப்போவதும் இல்லை. மார்க்ஸின் கற்பனையில் தோன்றிய யுடோபியா. எல்லா உடோபியாக்களை போலவே அதுவும் ஒரு அடிப்படை இல்லாத வக்கிரமான உடோபியா.

அவ்வாறு இல்லை நீங்கள் என்று கருதினால், அது தொடர்பாக விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

Anonym said...

அதியமானும் அவன் அம்மாவின் பலூனும்

நம்ம அதியமான் தனது அம்மா ஒரு குளித்து கொண்டிருக்கும்போது முலைகளை காட்டி அம்மா அவைகள் என்ன என்று வினவினான். அவனது அம்மா பதிகூற இயலாமல் அவனது அப்பாவிடம் போய் கேட்குமாறு கூறி விட்டாள்

மறுநாள் அதியமான் குடும்பமாக காலை உணவின் போது அப்பாவிடம் அம்மாவின் முலைகளை காட்டி "அப்பா அவைகள் எதற்கு" என்றான். அதற்கு அப்பா "அடேய் அவைகள் பலூன்களடா, உங்க அம்மா இறந்த பிறகு அவைகளை ஊதினால் உங்க அம்மா மிதந்து கொண்டே சொர்க்கத்திற்கு சென்று விடுவார்கள்" என்றார்.

சில நாட்கள் கழித்து அதியமான் அவசர அவசரமாக அப்பாவிடம் ஓடி "அப்பா! அம்மா இறந்து கொண்டிருக்கிறார்கள்" அன்றான், "என்னடா சொல்கிறாய்' என்றார் அப்பா. "ஆமாம்பா, நம்ம சித்தப்பா அம்மாவோட பலூன்களை ஊதிகிட்டு இருக்கிறார், நம்ம அம்மாவும், ஆ ஆ சொர்க்கமே தெரியுதுனு பினாத்திகிட்டு இருக்கறாங்க" என்றான்