Samstag, 7. März 2009

சீனா நேபாள் மாவோயிஸ்டுகள் என்றாலே கம்யூனிஸ்டு கும்பல் பம்முவது ஏன்?

இந்த பதிவு மக இக கும்பலையும் சிபிஎம் கும்பலையும் திட்ட அல்ல. பாராட்ட எழுதப்பட்டது.

ஈழப்பிரச்னையில் முதல் குற்றவாளி சீனாவும் பாகிஸ்தானும். இது ஊர் அறிந்தது. ரகசியம் கூட அல்ல.

இந்த செய்திகள் எல்லா பத்திரிக்கைகளிலும் வெளிவந்திருக்கின்றன. சீனா ஏதோ இலங்கையில் மட்டும் இதனை செய்யவில்லை. டார்பர் பிரச்னையின் ஆணி வேரே சீனாதான். சீனாவுக்கு எண்ணெய் கிணறுகளை தருவதற்காக, சூடானுடன் போட்ட ஒப்பந்தத்தின்படி டார்பரிலிருந்து கருப்பினத்தவரை துரத்துவதற்கு அச்சாரம் போட்டதும், மக இக, சிபிஎம் துரோகக்கும்பலின் இரவல் தாய்நாடான சீனாவினால்தான்.

பாகிஸ்தான் சீனா சொல்படி நடக்கும் எடுபிடி. ஆகவே இதன் மூலாதாரம் சீனாவே. இங்கே இந்தியாவை ஆளும் முதுகெலும்பற்ற காங்கிரஸ் கட்சியும், இந்திய அமைப்புகளும் ஏதோ பயங்கரமான பலம் கொண்டவர்கள் போலவும், அவர்கள் வேண்டுமென்றே இலங்கையில் ஈழத்தவரை கொன்று குவிக்கிறார்கள் போலவும் சிபிஎம் மக இக கும்பல் படு பயங்கர பிரச்சாரம் செய்துவருகிறது.

பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சோனியா காந்தியின் காலடியில் கிடப்பது போலவும் அதனாலேயே ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவது போலவும் இங்கே படு கேவலமான அரசியலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

சோனியாவுக்கோ அல்லது இங்கே இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கோ நீண்ட தொலைநோக்கு இல்லை போன்ற எத்தனையோ குற்றங்களை அவர்கள் மீது சுமத்தலாம். பாகிஸ்தானின் நேரடி நடவடிக்கை மூலம் மும்பையில் நடந்த பயங்கரவாத செயல்களுக்கு எப்படிப்பட்ட எதிர்வினையை இந்திய அரசு, காங்கிரஸ் அரசு செய்தது என்பதை நினைத்துப்பார்த்தால், எந்த அளவுக்கு கையாலாகாத ஒரு அரசு இந்தியாவை ஆள்கிறது என்பதை உடனே உணரலாம்.

அப்படி பாகிஸ்தானுக்கு எதிராகக்கூட ஒரு செயலை செய்ய வக்கற்ற ஒரு அரசு, இலங்கையில் சீனாவுக்கு எதிராக களமிறங்க்கும் என்று எந்த காரணத்தினால் இங்கே கம்யூனிஸ்டுகள் எதிர்பார்க்கிறார்கள்?

சீனாவின் ஆளும் பாசிஸ்டுகள் இன்று உலகத்தை ஆக்கிரமிக்க இம்பீரியலிஸ்டுகளாக உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். ஜப்பானின் தீவுகளிலிருந்து, இந்தோனேஷியா, பர்மா, அருணாசல பிரதேசம், சிக்கிம் என்று எதையும் விட்டு வைக்காமல் இடம் பிடி சண்டையில் இறங்கி வருகிறார்கள்.

அதன் நீட்சியே இன்று நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் மூலம் ஆட்சியை கைப்பற்றியதும். இதில் ஏதோ பாட்டாளி வர்க்க புரட்சி என்று தமிழ்நாட்டில் பம்மாத்து பண்ணும் மருதைய்யர்கள், சிபிஎம் வர்க்கப் புரட்சியாளர்களுக்கு வேண்டுமானால் இது ஒரே பொரற்சியாக இருக்கலாம், ஆனால், geopolitics பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு இது என்னவென்று தெரியும். பச்சை இம்பீரியலிஸம்.

அப்படி சீனாவுக்கு ஐந்தாம் படை வேலை செய்வதற்கு என்றே இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உருவாக்கப்பட்டுள்ள ஐந்தாம்படைதான் கம்யூனிஸ்டுகள், மக இக துரோகிகள். இவர்கள் நாட்டை விற்பதற்கு என்றே உருவாக்கப்பட்ட பொறுக்கிகள்.

இலங்கையில் முதல் குற்றவாளிகளான சீனாவையும் பாகிஸ்தானையும் ஒரு வார்த்தை கூட எதிர்த்து சொல்லாமல் மருத்துவர் ராமதாஸை குறிவைக்க என்ன காரணம்?

இங்கே ஈழத்துக்கு ஆதரவாக உருவாகும் மக்கள் அலை மீது சவாரி செய்து தங்களுக்கு கப்பம் கட்டும் கும்பலை விஸ்தரிப்பதுதான் முதல் நோக்கம்.

மருத்துவர் ராமதாஸால் என்ன செய்யமுடியும்? சோனியாகாந்தியாலும், மன்மோகன் சிங்காலுமே ஒரு *** புடுங்க முடியாமல் சீனாவாலும் கம்யூனிஸ்டுகளாலும் கை கட்டப்பட்டிருக்கும்போது, என்ன *** மருத்துவர் ராமதாஸோ அல்லது கலைஞர் கருணாநிதியோ செய்துவிட முடியும்?

இங்கே ஈழத்தவர் மத்தியிலும் அப்பாவி தமிழர்கள் மத்தியிலும் அடாவடி செய்தும் இந்திய அமைப்புகளை ஏசியும், அடிதடியில் இறங்கியும் கலகம் செய்யும் இந்த கம்யூனிஸ்டுகள் இதே வேலையை சீனாவில் செய்து பார்க்கட்டுமே.. முட்டிக்கு முட்டி கழட்டப்பட்டு விடும். மூச்சு விடக்கூட முடியாமல் "எதிர்புரட்சிக்காரர்கள்" என்று பெயர் சூட்டப்பட்டு மூன்றாம் மனிதருக்கு தெரியாமல் காக்காய் சுடுவது போல சுட்டுத்தள்ளப்படுவிடுவார்கள்.

இந்த புண்ணாக்குகள் இங்கே இந்திய அமைப்பு கொடுக்கும் கருத்து சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்திய அமைப்புக்கு எதிராக மக்களை தூண்டிக்கொண்டிருக்கிறது.

இந்திய அரசியல்வாதிகள் பெரிய சத்திய சந்தர்களோ அல்லது ஒழுக்க சீலர்களோ அல்லதான். ஆனால், தமிழ்நாட்டில் மக்களின் ஓட்டுக்கள் போகும் என்ற சிந்தனை வரும்போது (அதேதான் ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்காகத்தான்) இன்று மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிப்பார்கள்.

அப்படி முயற்சி செய்யக்கூட முடியாத பிரச்னை இந்த இலங்கை பிரச்னை. இது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கட்டுக்கு மீறியது மட்டுமல்ல, இந்திய அரசியல்வாதிகளின் கட்டுக்கும் மீறியது. இங்கே அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையே இலங்கையின் ராணுவ முயற்சி என்பது பச்சை பிள்ளைக்கு கூட தெரியும்.

சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் எந்த காலத்தில் இந்தியா இணைந்து பங்கேற்றிருக்கிறது?

அதுவும் பாகிஸ்தானுடன்!

பாகிஸ்தானும் சீனாவும் இன்று இந்தியாவின் தெற்குக்கும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதை கையாலாகாத இந்திய காங்கிரஸ் அரசு பார்த்துகொண்டிருக்கிறது.


(சென்ற பதிவில் உள்ளது இங்கும் பொருந்தும் என்பதற்காக)


சீனாவின் ஜனாதிபதியுடன் நன்றியுடன் கைகுலுக்கும் மஹிந்த ராஜபக்சே







தமிழ்நாட்டில் ஈழ மக்களுக்காக கண்ணீர் வடிப்பதாக பாவலா பண்ணும் மக இகவினரது நெருங்கிய தோழர்கள் நேபாளத்தில் ஆட்சி பீடத்தில் இருக்கிறார்கள் என்று தமிழ்நாட்டில் நேபாள மாவோஒயிஸ்டுகளை வைத்து பேரணி நடத்தி கூட்டம் போட்டு ஜகஜ்ஜாலம் செய்தார்கள்.

இந்த நேபாள மாவோயிஸ்டுகள் அமெரிக்காவின் கைக்கூலிகள், சீனாவின் கைக்கூலிகள் என்பதை பற்றி நான் முன்னரே எழுதியிருக்கிறேன்.

இலங்கையில் மிகவும் உக்கிரமாக போர் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே ஒரு நாட்டுக்கு விஜயம் செய்தார் என்றால் அது இந்தியா அல்ல பாகிஸ்தான் அல்ல.. ஏன் சீனா கூட அல்ல. அது நேபாளம்.

மேலே காணும் புகைப்படங்கள் நேபாளத்திற்கு விஜயம் செய்த மகிந்த ராஜபக்சேவை கொண்டாடி நேபாள மாவோயிஸ்டுகள் அளித்த வரவேற்புத்தான்.

இதனை தமிழ்நாட்டு போலி தலித்தியம் பேசும் பார்ப்பன கம்யூனிஸ்டுகள் மூச்சே விடமாட்டார்கள். இஸ்ரேலுக்கு அமெரிக்கா போகிறது, அமெரிக்காவுக்கு இந்திய பிரதமர் போகிறார் என்றால் வரிந்து கட்டிக்கொண்டு ஜம்பம் பேசும் உண்மை கம்யூனிஸ்டுகள் நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் மகிந்த ராஜபக்சேவுக்கு ரத்தினக்கம்பளம் அளித்து வரவேற்றதை பேச மாட்டார்கள்.

சரி மகிந்த ராஜபக்சேவுக்கு ஆயுதங்கள் வாரி வழங்குவது யார்? இந்தியாவா? அதுதான் இல்லை.

பச்சையாக சொல்லப்போனால், இந்த மக இக, சிபிஎம் கம்யூனிஸ்டுகளின் இரவல் தாய்நாடான சீனாதான்.

Beijing began selling larger quantities of arms, and dramatically boosted its aid fivefold in the past year to almost $1 billion to emerge as Sri Lanka's largest donor. Chinese Jian-7 fighter jets, antiaircraft guns, JY-11 3D air surveillance radars and other supplied weapons have played a central role in the Sri Lankan military successes against the Liberation Tigers of Tamil Eelam (or "Tamil Tigers"), seeking to carve out an independent homeland for the ethnic Tamils in the island's north and east.

Beijing even got its ally Pakistan actively involved in Sri Lanka. With Chinese encouragement, Pakistan — despite its own faltering economy and rising Islamist challenge — has boosted its annual military assistance loans to Sri Lanka to nearly $100 million while supplying Chinese-origin small arms and training Sri Lankan air force personnel in precision guided attacks.




இதோ சீனா அளிக்கும் ஆயுதங்களால் கொல்லப்படும் தமிழ் குழந்தைகள்..

சீனாவை கண்டியுங்களேன் கம்மி துரோகிகளே..

பசில் ராஜபக்சே பேசும்போது எங்களுக்கு சீனாவும் பாகிஸ்தானும் வியத்நாமும் ரசியாவும் ஆதரவளிக்கும்போது எந்த இந்தியாவுக்கும் பயப்படமாட்டோம் என்று தெளிவாகவே அறிவித்து உள்ளார்.

ஆனால், இந்த சந்தடியில் கூறுகெட்ட கம்யூனிஸ்டுகள் சீனாவையோ ரசியாவையோ யாரும் திட்டிவிடக்கூடாது என்று உதவாக்கரை இந்திய அரசாங்கத்தையும் கையலாகாத காங்கிரஸ் கட்சியையும் திட்டுகின்றனர்.

உண்மையில் இந்த கம்யூனிஸ்டுகளின் தயவில்தான் இந்த காங்கிரஸ் அரசே நடந்துகொண்டிருந்தது. அப்போது நேபாளத்தில் சீனா உட்கார்ந்தபோது சீனாவுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் ஆதரவாக காயை நகர்த்தியவர்கள் இந்த கம்யூனிஸ்டுகள். அதே காலத்தில்தான், சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையில் ஆயுதங்களை கொட்ட ஆரம்பித்தார்கள். இந்திய அரசின் கைகளை கட்டிப்போட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால், சீனாவுக்கும்பாகிஸ்தானுக்கும் ஆதரவாகவும் இந்தியாவை ஒழிப்பதற்குமே அரசியல் செய்யும் கம்யூனிஸ்டுகள் அதனைத்தான் செய்திருப்பார்கள் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.

இலங்கையில் இந்த பிரச்னைகளுக்கு ஆரம்ப வேரே கம்யூனிஸ்டுகள்தான். ஆனால் அதனை வெற்றிகரமாக காங்கிரசுக்கு எதிராக திருப்பியிருக்கிறார்கள்.

இந்த பக்கா திசை திருப்பும் முயற்சியில் அவர்கள் வெற்றியடைந்துவிட்டார்கள் என்றே கூறலாம்.

33 Comments:

said...

test

Anonym said...

Nach ati!

Anonym said...

இந்த முக்கியமான பதிவுக்கு நன்றி.

சோனியாவோ, காங்கிரஸ் மன்மோகன் சிங் அரசோ இந்தியாவை வலிமை வாய்ந்த வல்லரசாக காட்ட விரும்பவில்லை என்பது மட்டுமல்ல. இந்தியா வல்லரசாக ஆகக்கூட இல்லை என்பதுதான் உண்மை.

இங்கே வல்லரசாக ஆகவேண்டும் என்று பேசினாலே, வல்லரசு வேண்டாம் நல்லரசு வேண்டும் என்று இந்தியாவை வடிவேலு ரேஞ்சுக்கு நல்லவனாக ஆக்கிவிட்டார்கள் கம்மிகள்.

இன்றைக்கு எவன் அடித்தாலும் தாங்கும் நல்லவன் நிலைக்கு வந்ததுக்கு கம்மிகளே காரணம்

இந்த லட்சணத்தில் இலங்கையிடம் பேசக்கூட பிரணாபுக்கு வக்கில்லை. அதுமட்டுமல்ல, பிரணாப் சொல்வதை இலங்கை மதிக்கக்கூட மாட்டேன் என்கிறது.

இப்படி இருக்கும்போது இந்தியா ராணுவ உதவி வழங்குகிறது என்றெல்லாம் இந்திய எதிர்ப்பாளர்கள் இந்திய தமிழ் மக்களை இந்தியாவுக்கு எதிராக திருப்ப முயற்சி செய்து ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

Anonym said...

அப்பப்பா,,..

said...

வழக்கம்போல எதிர்குத்தும் கம்மிகளுகு நன்றி
உங்களது பதட்டம் நன்றாகவே தெரிகிறது.

said...

அதியமான்,

இவர்கள் பதிவுக்கு சென்று கருத்து எழுதச்சொல்கிறீர்கள். ஆனால், இவர்களோ எனது கருத்துக்கள் அனுமதிக்கப்படாது என்று தொடைநடுங்கிக்கொண்டே அறிவித்தவர்கள். பின்னே எப்படி அங்கு சென்று கருத்து எழுதுவது?

Anonym said...

தமிழ்மணி,
வினவு தளத்தில் யார் வேண்டுமானாலும் கருத்து பதியலாம். உங்களுக்கு உங்கள் கருத்தில் நம்பிக்கை இருந்தால், உங்கள் பெயரிலேயே..கவனிக்க தமிழ்மணி என்ற உங்கள் பெயரிலேயே பின்னூட்டமிட துணிவிருந்தால் அங்கே வந்து உங்கள் பிளாகர் ஐடியிலிருந்து பின்னூட்டமிடுங்கள் . இந்த அழைப்பை தட்டிக்கழிப்பது உங்கள் உரிமை, ஆனால் அப்போது தொடைநடுங்கி யாரென்று .....

said...

நீங்களும் சொந்த ஐடியிலிருந்தே போடலாமே?

வினவு தளத்தை நடத்துவது அசுரன் கும்பல். அது ஏற்கெனவே என்னுடைய பின்னூட்டங்களை தடை செய்திருக்கிறது.

தொடைநடுங்கி யார் என்பது ஏற்கெனவே தெரிந்த உண்மை. புதிதாக தெரிய அவசியமில்லை.

Anonym said...

பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று சொன்னது நீங்கள், நான் வினவில் அனுமதிக்கிறார்கள், அதை அறிவித்துமிருக்கிறார்கள் என்கிறேன். நீங்கள்தான் பின்னூட்டமிடுகிறீர்கள் என்பதை மக்கள் அறிய உங்கள் ஐடியை பயன்படுத்த சொன்னேன். மறுப்பதன் மூலமாக உங்களுது பயத்தை அல்லது தயக்கத்தை ஒப்புக்கொள்கிறீர்கள்.

//நீங்களும் சொந்த ஐடியிலிருந்தே போடலாமே?//

ம.க.இ.க ஆதரவாளன் என்பதைவிட உங்களுக்கு என்னைப்பற்றி தெறிவதற்கு ஒன்றுமில்லை. எனக்கு சொந்த பிளாகுமில்லை

said...

//மறுப்பதன் மூலமாக உங்களுது பயத்தை அல்லது தயக்கத்தை ஒப்புக்கொள்கிறீர்கள்.
//

நிச்சயமாக உங்கள் பதிவுகளில் போடமாட்டேன். வேண்டுமானால் இந்த பதிவிலேயே உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

என்னுடைய பழைய பதிவுகளையும் அதில் பின்னூட்டங்களையும் பாருங்கள்.

ஒன்று உங்களுக்கு பழைய விவாதங்கள் தெரியாது. இல்லையேல், உங்கள் கும்பல் என்னுடைய பின்னூட்டங்களை நிராகரித்த கதை புரியாது.

முழுமையாக படித்துவிட்டு வாருங்கள். யாருக்கு தயக்கம், தொடைநடுங்கித்தனம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

இந்த பதிவில் எழுதியவற்றுக்கு இங்கேயே பதில் தரலாம்.

நான் உறுதி தருகிறேன். நீக்கமாட்டேன். மட்டுறுத்தமாட்டேன்.
போதுமா?

Anonym said...

இன்னமும் பாதிக் கிணத்துக்க தான் நீங்க இருக்கீங்க/.

Anonym said...

உங்கள் நண்பர் அதியமான் இப்படி சொல்லியிருக்கிறாரே
********************
ரொம்ப டென்ஸனாக வேண்டாம் நண்பரெ. மருதையர் போன்ற சொல்லாடல்களை தவிர்க்கலமே.

ம‌.க.இ.கா, சி.பி.அய்/எம் போல சீனாவை அப்படியே ஆதரிப்பதில்லை.

ஆயுத வியாபாரம் அனைத்து நாடுகளும் செய்வதுதான். இந்தியாவும் கூட செய்கிறது.
ராஜ தந்திரமும் இணைகிறது. இதில் என்ன புதிய விசியம்.

வினவு தளத்தில் ஹிட்கள் பற்றி ஏன் வீண் விவாதங்கள். அது ஒரு கோடியானாலும் இங்கு எந்த புரட்சியும் வரப்போவதில்லை.

அத்தளத்தில் விவாதம் தொடரலாமே. நான் அவ்வப்போது பின்னூட்டம் இடுகிறேன். நீங்களும் வருக.

நேபாள‌த்தில் மாவோயிஸ்டுக‌ள் ஜ‌ன‌னாய‌க‌, ச‌ந்தை பொருளாதார‌ பாதைக்கு வித்திடுவ‌து, அனைத்து இட‌ங்க‌ளிலும் ந‌ட‌க்கும்தான். இந்தியா மாவோயிஸ்டுக‌ள் ம‌ற்ற‌ குழுக்க‌ள்
அதை பார்த்து பாட‌ம் க‌ற்றால் ச‌ரி. எத‌ற்க்கா போர‌ட்ட‌ம் என்று அர்த‌மில்லாம‌ல் போய்விடும்.

ம‌.க‌.இ.க‌ தோழ‌ர்க‌ளை நான் ம‌திக்கிறேன். க‌டும் பெருளாதார‌ நெருக்க‌டிக‌ள், வாழ்க்கை சிக்க‌ல்க‌ள் இடையிலும் நேர்மை ம‌ற்றும் அறச்சீற்றம் கொண்ட‌வ‌ர்க‌ள்.
உணார்சி மிக்க‌ இளைஞ‌ர்க‌ள். அவ‌ர்க்ள் எதிர்க‌ள் அல்ல‌. வ‌ழி த‌வ‌றிய‌ அய்டிய‌லிஸ்டுக‌ள். கால‌ம் ச‌ரி செய்து விடும். பெரிசா அல‌ட்டிக்க‌ தேவையில்லை.
ஆர்.எஸ்.எஸ் இலும் இதே போன்றா இள‌ம் அய்டிய‌லிஸ்டுக‌ள் உள்ள‌ன‌ர்.
கொள்கைக‌ள் / பார்வைக‌ள் தாம் வேறு. ஆனால் அடிப்ப‌டை குண‌ங்க‌ள்
ம‌ற்றும் அர்ப‌ணிப்பு, வைராக்கிய‌ம் ஒரே மாதுரிதான்.

ஜ‌ன‌னாய‌க‌ நாட்டில் இவ‌ர்க‌ளுக்கும் இட‌முண்டு. எல்லை மீறும் போதுதான்
த‌டுக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள். அத‌வாது ஃபாசி வ‌ழிமுறைக‌ளை கையாண்டால். ம‌ற்ற‌ப‌டி ப‌ல‌ முக்கிய‌ த‌ருணங்க‌ளில் க‌ள்ப்ப‌ணி செய்யும் உண்மையாள‌ர்க‌ள்தாம்.
****************

இதற்கு உங்கள் பதில்

said...

the answer is already given. Can not you understand tamil?

said...

why do you put negative mark for this post?
If you have guts, tell me the reason!

If not it just shows that you are desperate to remove this from the "vasakar parinthurai"

Shame on you. But again what is to expect from chinese stooges?

said...

தமிழ்மணி இது என்ன கிறுக்குத்தனமான கேள்வி, உங்க பதிவு புடிக்கலன்னா அமுக்கத்தானே மைனஸ் ஓட்டு இருக்கு நான் கூட நேத்து ரெண்டுவாட்டி இன்னிக்கு ஒரு வாட்டி அமுக்குனேன். நீங்க வேணுன்னா தமிழ்மணத்துக்கு லெட்டர் போட்டு உங்க பதிவு பட்டையில இருக்குற மைனஸ் ஒட்ட எடுத்துற சொல்லுங்க :-(

said...

வினவு கும்பல் இருக்கட்டும் தல என்னோட நீங்க விவாதிக்க ரெடியா?

என்னோட கேள்வி
1) உங்களுக்கு என்ன கம்யூனிச அலர்ஜியா?
2) நீங்க என்ன ஆர்எஸ்எஸ் கார்ரா இல்ல் எந்த அமைப்பு
Actualஆ வாட் இஸ் யுவர் Problem

said...

நன்றி செம்புலன்,

உங்களுக்கு ஏன் இந்த பதிவு பிடிக்கலை? அதனை சொல்லுங்க..

Anonym said...

என்னய்யா கொடுமை இது! இவ்வளவு பேரு எதிர்த்து குத்துராய்ங்க. ஆனா ஒரு எதிர்ப்பு கமெண்ட் கூட இல்லை!

முகமூடி கிளியுதேன்னு பதட்டம்தான்..

வெல்டன் தமிழ்மணி

said...

நன்றி அனானி
தெரிந்ததுதான்..

said...

உண்மைத்தமிழன் பதிவில் எழுதியது..

அன்பரே,

தேர்தல் கூத்துகளுக்காகவும் சுயப்பிரதாபங்களுக்காகவும் இங்கே தகுதிக்கு மீறி அலம்பல் செய்யும் தமிழக இந்திய அரசியல்வாதிகளை கண்டு காயாதீர்கள்.

ஈழத்தில் நடக்கும்போரில் இலங்கைக்கு இந்திய ஆயுதங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. அங்கே நடக்கும் போர் சீனா நடாத்துவது. பாகிஸ்தான் போலவே இலங்கையும் சீனாவின் காலனி ஆக ஆகிவருகிறது. (சொல்லப்போனால் ஆகிவிட்டது) அதனை தடுக்கக்கூடிய வலிமை இந்திய அரசுக்கு இல்லை. இங்கே இந்திய அரசாங்க அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசினால் உங்களுக்கு விஷயம் தெரியும். இது ஜியோ பாலிடிக்ஸ். ஆப்பிரிக்காவில் சூடான் டார்பரை அடக்குவதற்கும், அங்குள்ள கருப்பினத்தவரை துரத்துவதற்கும் சீனாதான். இலங்கையில் ஈழப்போராட்டத்தை நசுக்கி அங்கு திரிகோணமலை, ஹம்பன்டோடா துறைமுகங்களை ஆக்கிரமிக்கவும் இந்தியாவை சுற்றி வளைக்கவும் முனைவதும் சீனாதான்.
http://search.japantimes.co.jp/cgi-bin/eo20090304bc.html
இந்த ஜப்பான் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த கட்டுரையை பாருங்கள். இது வினவு இணையப்பக்கம் மாதிரி யாரும் கேள்வி கேட்கமுடியாத உளறல்கள் அல்ல. ஜப்பான் டைம்ஸ் இதழ் பரிசோதித்து பார்க்காத செய்திகளை வெளியிடாது.

Beijing began selling larger quantities of arms, and dramatically boosted its aid fivefold in the past year to almost $1 billion to emerge as Sri Lanka's largest donor. Chinese Jian-7 fighter jets, antiaircraft guns, JY-11 3D air surveillance radars and other supplied weapons have played a central role in the Sri Lankan military successes against the Liberation Tigers of Tamil Eelam (or "Tamil Tigers"), seeking to carve out an independent homeland for the ethnic Tamils in the island's north and east.

Beijing even got its ally Pakistan actively involved in Sri Lanka. With Chinese encouragement, Pakistan — despite its own faltering economy and rising Islamist challenge — has boosted its annual military assistance loans to Sri Lanka to nearly $100 million while supplying Chinese-origin small arms and training Sri Lankan air force personnel in precision guided attacks.

China has become an enabler of repression in a number of developing nations as it seeks to gain access to oil and mineral resources, to market its goods and to step up investment. Still officially a communist state, its support for brutal regimes is driven by capitalist considerations. But while exploiting commercial opportunities, it also tries to make strategic inroads. Little surprise thus that China's best friends are pariah or other states that abuse human rights.

இதுமாதிரி இந்தியா ஒரு பில்லியன் டாலரை இலங்கைக்கு தூக்கி கொடுக்குமா? கம்யூனிஸ்டுகள் வார்த்தையில் இந்தியாவே ஒரு பிச்சைக்கார நாடு. அதில் எப்படி ஒரு பில்லியன் டாலரை கொடுக்கமுடியும். இப்படி எய்த சீனாவை விட்டுவிட்டு, வேடிக்கை பார்க்கும் இந்தியாவை திட்டுவது ஏன்?

இந்த சீன அட்டூழியத்தை கம்யூனிஸ்டுகள் பேசட்டுமே. வாயே திறக்கமாட்டார்கள்.

சரி இப்படி நிலைமை இருக்கும்போது எப்படி மருத்துவர் அய்யாவோ, அல்லது கலைஞரோ இந்த நிலைமையை மாற்றமுடியும்? நாளை பாஜக ஆட்சிக்கு வந்தாலாவது சீனாவுக்கு எதிராக காய்கள் நகர்த்தப்படலாம். ஆனால் காங்கிரஸ் ஆட்சியிலோ அல்லது கம்யூனிஸ்டு ஆட்சியிலோ நடக்குமா? சிந்தித்து பார்க்கவேண்டும். சும்மா சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் கலைஞரையும் மருத்துவர் அய்யாவையும் திட்டுவது எதற்காக? சீனாவுக்கு எதிராக இலங்கையில் இந்திய படைகளை கொண்டு இறக்கமுடியுமா?

இன்று இலங்கைக்கு ஆதரவாக உலக சமுதாயத்தையே வளைத்து போட்டுவிட்டார்கள். ஐநா முதற்கொண்டு இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

ஆகவே மருத்துவர் அய்யாவோ கலைஞரோ இங்கு குற்றவாளிகள் அல்ல. சீனாவுக்கு வால் பிடிக்கும், இந்து ராம், சிபிஎம், சிபிஐ, மக இக கம்யுனிஸ்டுகளே முதல் குற்றவாளிகள்.

இந்த ஐந்தாம்படை துரோக கம்யூனிஸ்டுகளை திட்டினால், அது நியாயமானது.

Anonym said...

You are so right.

But everyone who post negative point for this, should give the reason for it..

said...

சொல்லுங்கள் "தோலர்களே"

நெகட்டிவ் குத்துவதற்கு காரணம் என்ன?

முகமூடி கிழிகிறதே என்ற் பயம் தவிர வேறொன்றும் இல்லையா?

Anonym said...

good post.

Anonym said...

அயோ ரொம்ப பயமா கீதுபா இந்த தமிலு, மணி ஆட்டிகினு வந்து நாயம் சொல்றதால இங்க இருக்குற அல்லா கம்மீனிஸ்டுங்க மொகமுடி கீஞ்சு, சாயம் வெள்து காணாம பூடுவாங்க.. இன்னா ஒன்னு, இந்த பிளாக ஒரு நாளைக்கு பண்ணன்டேகால் பேரு படிக்கறதுனால (அதுல நான் மூணு தபா) நெற்யா பேருக்கு தெற்றதில்ல அதனால ஜனங்களே அல்லாரும் புண்ணுட்டம் போடுங்க, குறிபா மைனஸ் ஓட்டு குத்துற கம்மி(நாட்டி)ங்க, கொஞ்சம் காறி துப்பிட்டு போங்களேன்...இப்ப நான்யில்ல.... த்தூ! ரிப்பீட்டு
அர டிக்கெட்டு! hat gesagt...த்தூ!

said...

ஏம்பா மூணுதபா?

ஆமா மூணுதபா படிச்சியே, இதில என்னா புரிஞ்சிகிட்ட?

Anonym said...

Over the past couple of years, the Chinese have been keeping up the pressure on India in indirect ways — the traditionally active arms supply channel which supplies weapons and explosives to the north-eastern insurgent groups. The trade routes in the region are fluid, particularly where the Myanmar and China borders meet. In recent months, intelligence sources say the Chinese have managed to increase the flow of funds into these groups.

Diplomatically, India has raised the issue with the Chinese during almost every major conversation, but this has been strenuously denied by the Chinese government, which says that they do not interfere in India’s internal affairs. But one of the reasons why the Indian security agencies have raised suspicions is that there are no markings on the weapons which have been picked up by them from the north-east. But a more careful study shows the weapons to be Chinese made, sources said.

சீனா இன்று எல்லா அடக்குமுறை நாடுகளுடனும் நல்லுறவு கொண்டுள்ளது. இங்கே மார்க்ஸிஸ்ட் கட்சி இஸ்ரேலுடன் உறவை முறித்துக் கொள்ளவேண்டும் என்று பேசுகிறார். ஆனால் சீனாவிற்கு இஸ்ரேலின் மந்திரி ஒல்மர்ட் போய் நல்லுறவை வளர்க்கிறார். இஸ்ரேலிடமிருந்து ஆயுதத்தையும், தண்ணீர் தொழில் நுட்பத்தையும் சீனா பெற்றுக் கொள்கிறது. சீனா வடகிழக்குப் பகுதிகளில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கும் ஆயுதம் சப்ளை செய்கிறது.

அதில்லாமல் சூடானுக்கு கறுப்பின முஸ்லிம் மக்களைக் கொல்லவும் ஆயுதம் சப்ளை செய்கிறது. சூடானின் அதிபர் மீது உலக நீதி மன்றம் போர்க்குற்றவாளி என்று குற்றம் சுமத்தி கைது செய்யக் கோரியுள்ளது. ஆனால் சீனா அதனை எதிர்க்கிறது.

Sudan has also acquired K-8 trainer aircraft, Q-5 attackers and FN-6 portable ground-to-air missiles from China.

said...

thanks anony

Anonym said...

உங்களுக்கு ஆதரவா பேசுனா பிளாகர் ஐடி கேக்க மாட்டீங்களோ... சரிதான் தனக்குதானே எப்படி கேக்குறது?

Anonym said...

நீங்கள் சார்ந்த கட்சி எது? எந்த பகுதியில் பணியாற்றுகிறீர்கள்? உங்களை நேரில் சந்தித்து பேச முடியுமா?

said...

makkalil oruvan!

said...

ம க இ க ஆதரவாளரே, என் பழைய பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படியுங்கள். புரியும்.

Anonym said...

இதெல்லாம் தெரிந்த விஷயங்கள்தானே?

தெரிந்துதானே கம்யூனிஸ்டுகள் இந்தியாவுக்கு எதிராகவும் இந்தியாவை உடைப்பதற்கும் கடுமையாக உழைத்துகொண்டிருக்கிறோம்.

காஷ்மீர் போராட்டத்தை ஆதரிப்போம். ஆனால் திபெத் போராட்டத்தை எதிர்ப்போம்.

ஏனெனில் காஷ்மீர் போராட்டம் இந்தியாவை உடைக்கும். திபெத் போராட்டம், சீனாவை பாதிக்கும்.

அவ்வளவுதான். கொடுத்த காசுக்கு இது கூட செய்யவில்லை என்றால், நாங்கள் நன்றிகெட்டவர்களாக ஆகி விடுவோமே?

said...

உண்மை கம்யூனிஸ்டுதான் நீங்கள்