Samstag, 5. Januar 2008

மாற்று எரிபொருள் எதிர்ப்பு: இந்திய மக்களுக்கு எதிரான கம்யூனிஸ்டு துரோகத்தின் தொடர்ச்சி

இந்தியாவில் மாற்று எரிபொருளாக பயோடீஸலை உற்பத்தி செய்ய காட்டாமணக்கு பயிர் செய்யவும், அதனை உபயோகித்து பயோடீஸலை உற்பத்தி செய்து கார்களுக்கு பெட்ரோலுக்கு மாற்றாக உபயோகிக்கவும் ஒரு திட்டம் உள்ளது. இது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.

அதற்குள்ளாகவே, இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் நல்லது நடந்துவிட்டால் என்ன செய்வது, ஏழைகள் குறைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதட்டத்துடன் ஜூலை புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் கம்யூனிஸ்டுகள் அலறியுள்ளனர்.
அது இங்கே கீழே குறிப்பிடப்பட்டு அதன் விமர்சனமும் எழுதப்பட்டுள்ளது.

இந்த விமர்சனத்தை படிக்கும் முன்னர் வாசகர்கள் கீழ்க்கண்ட இணையப்பக்கங்களை படித்துக்கொள்வது நலம். ஏனெனில் அப்போதுதான், இந்த இந்திய மக்களின் துரோகிகள் எவ்வாறு உண்மையை திரிக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவியலும்.

பயோடீஸல் என்றால் என்ன?
http://en.wikipedia.org/wiki/Biodiesel

காட்டாமணக்கு எண்ணெய் பற்றி
http://en.wikipedia.org/wiki/Jatropha

காட்டமணக்கைவிட அதிகம் பயோடீஸல் செய்யக்கூடிய அல்கே
http://en.wikipedia.org/wiki/Algaculture

பிரேசிலில் மாற்று எரிபொருளான பயோடீஸல் (அல்கஹால்)உபயோகப்படுத்தும் கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை பற்றிய பிபிஸி கட்டுரை
http://news.bbc.co.uk/1/hi/business/4581955.stm

மாற்றுப் பயிர் - மாற்று எரிபொருள்:
ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும்
ஏகாதிபத்திய சதி!


காட்டாமணக்கு சாலையோரங்களில் கேட்பாரின்றி வளரும் புதர்செடி. கிராமங்களில் இதனை வேலியாக நட்டு வைப்பதுண்டு. அதன் நச்சுத் தன்மையை ஆடுமாடுகள் கூட அறிந்திருப்பதால், இச்செடியை முகர்ந்து கூட பார்க்காமல் விலகிச் சென்று விடும். அப்பேர்ப்பட்ட நச்சுச் செடியான காட்டாமணக்கைப் பயிரிட்டு பணம் சம்பாதியுங்கள் என்ற ஆட்சியாளர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.


நச்சுச்செடியால் பூமி நஞ்சாகிவிடுமா என்ன? அல்லது விளக்கெண்ணெய் ஆமணக்கிலிருந்து உருவாக்கப்பட்டு இந்தியாவில் காலம் காலமாக உபயோகிக்கப்பட்டுவருவது உங்களுக்கு தெரியுமா? அது விஷம்தான். அதற்காக என்ன இப்போது? எல்லோரையும் அதனை குடிக்கவா சொல்கிறார்கள்?

மயிலாடுதுறையை சவூதி அரேபியாவாக மாற்றிக் காட்டப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர், நெல் பயிரிடுவதை விட்டு மாற்றுப் பயிர் முறைக்கு மாறச் சொல்லி விவசாயிகளுக்கு உபதேசிக்கிறார். 2004ஆம் ஆண்டிலேயே தஞ்சை மாவட்டத்தில் மக்காச்சோளமும், காட்டாமணக்கும் பயிரிட்டு விவசாயத்தை முன்னேற்றத் திட்டம் தீட்டினார், அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன், காட்டாமணக்கும் மக்கா சோளமும் பயிரிட்டு ஏற்றுமதி செய்ய சிறப்பு விவசாய மண்டலங்களை நிறுவ வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்.


நல்ல ஆலோசனை

விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னேற்றி விடுவதில் ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்களே; ஒருவேளை, நாட்டு மக்களாகிய நாம்தான் இன்னமும் பத்தாம்பசலித்தனமாக இருக்கிறோமோ என்று எண்ணிக் கொண்டோம். அது ஒருபுறமிருக்கட்டும். ஆட்சியாளர்களும் வேளாண் விஞ்ஞானிகளும் எதற்காக காட்டாமணக்கைப் பயிரிடச் சொல்கிறார்கள்? காட்டாமணக்கு பயிரிட்டால் ஏழை விவசாயி எப்படி குபேரனாக முடியும்?

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாம் ஆயிலையும், காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், சோயா எண்ணெய், புங்கை எண்ணெய் முதலானவற்றை டீசலில் 5% வரை கலந்து எரிபொருளாகப் பயன்புடுத்தலாம். இதனை ""பயோடீசல்'' என்கின்றனர். இதுதவிர பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களில் எத்தனால் எனப்படும் எரிசாராயத்தைக் கலந்து பயன்படுத்துகின்றனர். எரிசாராயத்தை உருவாக்க கரும்பு, மக்காச்சோளம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாற்று வகை எரிபொருட்கள் தாவரங்களிலிருந்து உருவாக்கப்படுவதால் இவற்றை ""உயிர்ம எரிபொருட்கள்'' (ஆடிணிஞூஞுதடூ) என்கின்றனர்.


பொய். வெறும் 5 சதவீதம் என்பது முழுப்பொய். (வெறும் 5 சதவீதத்துக்கா எங்கள் நிலத்தை பாழ் பண்ணவேண்டும் என்று ஒரு விவசாயி யோசிக்க வேண்டும் என்று எழுதப்படும் பொய்கள் இவை)

முழுக்க முழுக்க ஆல்கஹாலிலேயே ஓடும் கார்கள் உண்டு. பிரேசிலில் 100 சதவீதம் பெட்ரோல், அல்லது 100 சதவீதம் ஆல்கஹாலில் அல்லது இரண்டின் கலவையில் ஓடக்கூடிய கார்கள் இருக்கின்றன. இவை பிரேசிலில் ஓடக்கூடிய கார்களில் 53 சதவீதம். பிபிஸி செய்தியை பார்க்கவும்.

//இத்தகைய உயிர்ம எரிபொருட்களுக்கும் பயோ டீசலுக்குமான தேவை உலகெங்கும் அதிகரித்துள்ளது. திடீரென இதற்கான தேவை அதிகரிக்கக் காரணம் என்ன?

ஆண்டுதோறும் பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. வரைமுறையின்றி நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்களை எரித்து வருவதால்; அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் விளைவாக உலகம் மேலும் மேலும் வெப்பமடைந்து கொண்டே போகிறது. இதன் விளைவாக, வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள நிரந்தரப் பனிப் பாளங்கள் உருகத் தொடங்கி கடலை நோக்கி வேகமாக ஓடுகின்றன. இதனால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து பல சிறிய தீவுகள் கடலில் மூழ்கி அழிந்து போகும்; வளிமண்டல வெப்பநிலை உயர்வால் வறட்சியும் வெள்ளமும் அடுத்தடுத்து நிகழும்; காடுகள் பற்றியெரியும்; வளிமண்டலம் எங்கும் புகைமயமாகும்; பல கோடி உயிரிச் சிற்றினங்கள் முதல் மனிதன் வரை அழிய நேரிடும்.//


இதற்குக் காரணம், கிறிஸ்துவ இறையியலின் வழியே மேற்கத்தியர்கள், மனிதர்கள் சுரண்ட ஆண்டவன் கொடுத்ததுதான் இந்த பூமி என்ற நினைப்பும், இயற்கைக்கும் மனிதனுக்கு முரண்பாடு இருக்கும் என்றும் மனிதனை இயற்கையிலிருந்து பிரித்து அவனை இயற்கையை "வெல்லும்" சிந்தனையை கொண்டுவந்த மேற்கத்திய கம்யூனிஸ சிந்தனையும் தானே? இயற்கையோடு இணைந்து வாழக்கோரும் இந்திய சிந்தனையை பார்ப்பனிய பனியா என்று தினந்தோறும் காலைமுதல் மாலைவரை திட்டுவது நீங்கள்தானே?

அதனை இன்னொரு கட்டுரையில் விவரமாக எழுத முயல்கிறேன்.

//இப்பேரழிவைத் தடுக்க, பெட்ரோல்டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அல்லது அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் அளவையாவது மட்டுப்படுத்த வேண்டும் என்ற சுற்றுச்சூழல்வாதிகள் எச்சரித்து வருகின்றனர். புவி வெப்பநிலை அதிகரிப்புக்கும் சுற்றுச்சூழல் நஞ்சாகி பேரழிவின் விளம்பில் உலகம் தத்தளித்துக் கொண்டிருப்பதற்கும் ஏகாதிபத்தியங்களின் இலாபவெறி கொண்ட உற்பத்தி முறையும் போர்வெறியுமே முதன்மையான காரணம். சுற்றுச்சூழலால் நஞ்சாகிப் பேரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ள உலகைச் சீரமைக்க, ஏகாதிபத்திய நலனுக்கேற்ப ஏழை நாடுகளில் காடு வளர்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்திய ஏகாதிபத்தியங்கள், நச்சுச் சூழலிலிருந்து உலகைக் காப்பதில் தாங்கள் அக்கறை கொண்டிருப்பது போல் நாடகமாடின. இப்போது, பயோ டீசல் மற்றும் உயிர்ம எரிபொருட்களைக் கொண்டு, கரிம வாயுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கிளம்பியுள்ளன.//


அமெரிக்க அதிபர் புஷ் தனது 2007ஆம் ஆண்டின் அரசுக் கொள்கை உரையில், எரிபொருளுக்காக பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கும் நிலையை மாற்ற ""பத்துக்கு 20'' என்ற திட்டத்தைக் குறிப்பிட்டார். அதாவது, 2010ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா 20% வரை தனது பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதற்காக, உயிர்ம எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றியமும் 2007 மார்ச்சில் நடந்த மாநாட்டில், போக்குவரத்துத் துறையில் உயிர்ம எரிபொருள் பயன்பாட்டை 2020க்குள் 10% அளவுக்கு உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்தப் பின்னணியில்தான், ""சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்; புவி வெம்பலைத் தணிப்போம்; உயிர்ம எரிபொருளைப் பயன்படுத்துவேம்; காட்டாமணக்கைப் பயிரிடுவோம்'' என்ற கூச்சல் ஆரவாரமாக எழுப்பப்படுகிறது.


வளர்ந்த நாடுகள் பெட்ரோல் பயன்பாட்டை குறைத்துக்கொள்வதும் இறக்குமதியை குறைத்துக்கொள்வதும் நல்லதுதான்.

//புவி வெம்பலைத் தணித்து சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான நல்ல திட்டம் போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் மிகப் பெரிய ஏகாதிபத்திய சதி அரங்கேறி வருகிறது. இத்தகைய மாற்றுப் பயிர் மாற்று எரிபொருள் திட்டம் ஏகாதிபத்தியங்களின் அன்புக் கட்டளைப்படி உலகின் பல ஏழை நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் அனுபவம் என்ன?

மெக்சிகோ நாட்டில், அமெரிக்காவின் எரிசாராயத் தேவைக்காக இனிப்புச் சோளப் பயிரின் சாகுபடி பரப்பு அதிகரித்ததால், வெள்ளைச் சோளம் உற்பத்தி குறைந்தது. வெள்ளைச் சோளத்திலிருந்துதான் மெக்சிக மக்களின் அன்றாட உணவாகிய ""டார்ட்டில்லாஸ்'' தயாரிக்கப்படுகின்றது. எரிசாராயத்துக்கான இனிப்புச் சோள சாகுபடியானது இன்று ""டார்ட்டில்லாஸ்''இன் விலையை 37%க்கு உயர்த்தி விட்டது. அடிப்படை உணவின் தட்டுப்பாடு விலையேற்றத்தால் மெக்சிகோ உழைக்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.//


மற்றுமொரு பொய். உண்மை என்னவென்றால், நார்த் அமெரிக்கன் பிரீ ட்ரேடுக்கு முன்னால், மிகவும் மலிதான விலையில் மெக்ஸிகோவுக்கு சோளத்தை அமெரிக்கா கொடுத்துவந்தது. தற்போது அமெரிக்கா தனது சோளத்தை பயோடீஸலுக்கு திசை திருப்புவதால், மலிவான விலையில் மெக்ஸிகோவுக்கு கொடுக்கவில்லை. இதனால்தான் மெக்ஸிகோவில் டோர்ட்டியாவின் விலை ஏறுகிறது. மெக்ஸிகோ விவசாயிகள் தங்கள் சோளத்தை எடுத்து பயோடீஸல் பண்ணுவதாலோ, அல்லது அந்த சோளத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதாலோ அல்ல.
கீழே பிபிஸியில் மெக்ஸிகோ பொருளாதார மந்திரி சொல்வதை கவனியுங்கள்.
Under the 1994 North American Free Trade Agreement, Mexico used to get cheap corn imports from the US, but Mexico's Economy Minister Eduardo Sojo said that with more US corn being diverted into ethanol production, supply was dwindling.

//தென்னமெரிக்காவிலுள்ள பிரேசில் நாட்டில் அமெரிக்கத் தேவைக்காக விளைநிலங்களில் கரும்பும் இனிப்புச் சோளமும் பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது. அவற்றின் விளைபரப்பை அதிகரிக்க, ஏறத்தாழ 9 கோடி ஏக்கர் அளவுக்கு மழைக்காடுகளான அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. இன்னும் 15 கோடி ஏக்கர் காடுகளை அழிக்க அந்நாட்டின் "முற்போக்கு' அரசு தீர்மானித்துள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரித்ததும், தட்டுப்பாடு காரணமாக 2006இல் பிரேசில் நாட்டில் சர்க்கரை விலை இரண்டு மடங்கு அதிகரித்தது.//


பிரேசில் நாட்டில் சர்க்கரைவிலை இரண்டு மடங்காக அதிகரித்தாலும் பிரேசில் நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. ஏனெனில், பிரேசில் நாடு மிகப்பெரிய நாடு. அதன் அமேசான் காடுகள் அழிக்கப்படுவது சர்க்கரைக்காக இல்லை. அதன் காடுகள் உலகெங்கும் காகிதம் என்ற புராதனமான ஊடகக்கருவியை பண்ணுவதற்காக அழிக்கப்படுகின்றன. நவீன இணையம் வந்துதான், காகிதத்தின் தேவை குறைந்து காடுகள் அழிவது குறைக்கப்பட்டுள்ளது.

//பாமாயில் எனப்படும் பனை எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் டீசலுடன் கலந்து எரிப்பதால் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் எண்ணெய்ப் பனை சாகுபடிக்காக காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தியாகும் பாமாயில் 40%க்கு மேல் எரிபொருளுக்காக ஏற்றுமதி செய்யப்படுவதால், சமையலுக்கான பாமாயில் தட்டுப்பாடு காரணமாக விலையேறி விட்டது.

பிரேசிலில் இறைச்சித் தொழிலுக்கு உறுதுணையாகப் பயிரிடப்பட்டு வந்த சோயாபீன்ஸ், இன்று மாற்று எரிபொருளாக (எண்ணெயாக) மாற்றப்படுவதால், அந்நாட்டின் ஒட்டுமொத்த சோயா சாகுபடியே அமெரிக்காவுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக பிரேசிலில் பன்றி மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் பெரும் நெருக்கடியில் சிக்கி வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆடுமாடுகளின் மேய்ச்சலுக்கான நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சோயா பண்ணைகளாக மாற்றப்பட்டு விட்டதால் ஏழைநடுத்தர விவசாயிகள் ஆடுமாடுகளைக் கூட வளர்க்க முடியாமல் தத்தளிக்கின்றனர். ""நேற்று வரை சோயா எங்களுக்கு வாழ்வளித்த பயிர்; இன்று அது எங்கள் வாழ்வைப் பறிக்க வந்துள்ள கொலைகாரப் பயிர்'' என்று குமுறுகிறார்கள் பிரேசில் விவசாயிகள்.


இருக்கலாம். ஆனால், அந்த விவசாயிகள் மீது அரசாங்கம் எந்த கட்டுப்பாடுகளையும் விதித்து, அவர்கள் சோயாபீன்ஸை பயோடீஸலுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தமுடியாது.

//இந்த உண்மைகள் ஒருபுறமிருக்க, உலகின் பல ஏழை நாடுகளின் உணவுத் தட்டுப்பாடும் பட்டினிச் சாவுகளுக்கான பேரபாயம் இந்த மாற்றப் பயிர் மாற்று எரிபொருள் திட்டத்தால் உருவாகியுள்ளது. உலகெங்கிலுமுள்ள நிலங்களில் ஏறத்தாழ 40% பரப்பளவுக்கு பாரம்பரிய விவசாயம் நடந்து வருகிறது. இந்த விளைநிலங்களிலிருந்துதான் மாற்று எரிபொருள் மாற்றுப் பயிருக்கான நிலத்தை ஒதுக்க முடியும். அமெரிக்காவின் கனவுத் திட்டமான ""பத்துக்கு 20'' திட்டத்தில் பாதியளவுக்கு நிறைவேற்ற, அதாவது, அந்நாடு 10% அளவுக்கு மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டுமானால், உலகெங்கிலுமுள்ள விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலங்கள், உணவு தானிய உற்பத்தியைக் கைவிட்டாக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பட்டினி கிடக்க வேண்டும்!//


அமெரிக்காவின் மாற்று எரிபொருளுக்கு அமெரிக்கா வெளிநாடுகளை நம்பி இருக்கிறது என்பது மாபெரும் பொய். பெட்ரோலிலிருந்து அவர்கள் பயோடீஸலுக்கு போவதன் காரணமே, அமெரிக்காவின் எரிபொருள் தேவைக்கு அவர்கள் வெளிநாடுகளை நம்பி இருக்கக்கூடாது என்ற காரணமே. அமெரிக்காவின் mechanized agriculture மூலம் மிக அதிகமாக உற்பத்தியாகும் சோளத்தை விளைவிக்கும் விவசாயிகள் உண்மையில் ஏழைகள். ஏனெனில், அவர்கள் உற்பத்தி செய்யும் சோளத்துக்கு தேவை அமெரிக்காவில் இல்லை. அதனால், சோளத்தையும் கோதுமையையும் அமெரிக்கா, ஏழை நாடுகளுக்கு உதவி என்று வெளிநாடுகளில் கொட்டுகிறது. அவ்வாறு அந்த அமெரிக்க விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதால் வருடாவருடம் மானியம் வழங்குகிறது.

தற்போது அந்த சோளத்துக்கு பெட்ரோலாக மாற வாய்ப்பு இருப்பதால், ஏராளமான அமெரிக்க விவசாய சங்கங்கள் சோளத்திலிருந்து பெட்ரோல் எடுக்கும் தொழிற்சாலைகளை கட்டிவருகின்றன.

//ஒரு கார் டாங்கில் ஊற்றப்படும் எரிசாராயத்தை உருவாக்கத் தேவையான உணவு தானியத்தைக் (சோளம்) கொண்டு ஒரு வருடத்துக்கு ஒரு மனிதனின் பசியைப் போக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பல கோடி டன் உணவு தானியங்கள் கார்களில் ஊற்றப்படும் எரிசாராயமாக மாறும் என்றால், எஞ்சியிருக்கும் உணவு தானியங்களுக்காக உலகெங்குமுள்ள ஏழை மக்கள் அடித்துக் கொள்ளும் அபாய நிலை உருவாகும். எனவேதான், மார்ச் 2007இல் அமெரிக்க அதிபர் புஷ் மாற்று எரிபொருள் குறித்த ""பத்துக்கு 20'' திட்டத்தை அறிவித்தவுடனேயே, அமெரிக்க எதிர்ப்பாளரான கியூபா நாட்டின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, ""இத்திட்டத்தின் மூலம் மனித இனப் படுகொலைகளை அமெரிக்கா உலகமயமாக்கியுள்ளது'' என்று சாடினார்.//


பிடல் காஸ்ட்ரோ சொல்லிவிட்டார் இல்லையா? உங்களுக்கு வேதவாக்குதான்.

//உயிர்ம எரிபொருளுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தின் பின்னணியில் இன்று ஏழை நாடுகளின் உணவுப் பாதுகாப்பு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வசதி படைத்தவர்களின் சொகுசுக் கார்கள் சாலைகளில் சறுக்கிக் கொண்டு ஓடுவதற்காகவும், ஏகாதிபத்திய நாடுகளின் எரிபொருள் தாகம் தீர்வதற்காகவும், ஏழை நாடுகள் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் ஒழித்துக் கட்டும் இந்த ஏகாதிபத்திய சதிக்கு மைய மாநில அரசுகள் விசுவாசமாகச் சேவை செய்து வருகின்றன.//


இல்லை. இதுவும் இன்னொரு வடிகட்டின பொய். இந்தியாவில் உற்பத்தியாகக்கூடிய ஆல்கஹால் பெட்ரோலையோ அல்லது பயோடீஸலையோ வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் எந்த திட்டமும் இந்தியாவிடமோ அல்லது இந்திய மாநிலங்களிலோ இல்லை.

இந்தியாவே வருடாவருடம் பல்லாயிரம் கோடி ரூபாயை கொட்டி மத்தியகிழக்கிலிருந்து பெட்ரோலியம் இறக்குமதி செய்துகொண்டிருக்கும்போது இந்தியாவில் உருவாகும் பயோடீஸலை யாருக்கு ஏற்றுமதி செய்வார்கள்? ஏன் ஏற்றுமதி செய்வார்கள்?

//தமிழக அரசு 2004ஆம் ஆண்டிலேயே கரும்பாலைகளில் வடிக்கப்படும் சாராயத்தின் அளவைக் கூட்டிக் கொள்ளவும், புதிதாக வடிப்பாலைகள் நிறுவி எத்தனால் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. பயோ டீசல் உற்பத்திக்கு 5% வரிவிலக்கு அளித்துள்ளது. ஆந்திர அரசு, அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காட்டாமணக்கு மற்றும் காட்டாமணக்கு வகையைச் சேர்ந்த ""ஜெட்ரோபா'' முதலானவற்றைப் பயிரிட பல சலுகைகளை அறிவித்துள்ளது. பல வங்கிகள் இம்மாற்று எரிபொருள் உற்பத்திக்குக் கடன் வழங்குகின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பெரியார்புரா, ஆர்.எஸ்.எஸ்.புரா முதலான பெருந்தொண்டு நிறுவனங்களும் உயிர்ம எரிபொருள் திட்டங்களை விவசாயப் பகுதிகளில் செயல்படுத்தி வருகின்றன.

சுற்றுச் சூழலைக் காப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள உயிர்ம எரிபொருட்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுமா? இது குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் இதற்கு நேரெதிரான முடிவுகளையே வெளியிட்டுள்ளன.//


இன்னொரு வடிகட்டின பொய். உயிர்ம எரிபொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மண்ணிலிருந்து எடுக்கப்படும் பெட்ரோலிய பொருட்களால் ஆகும் சுற்றுச்சூழல் பாதிப்பை விட பல மடங்குகுறைவு. உதாரணமாக இதில் ஏதும் உலோக கனிமங்கள் மாசு இருக்காது.

//எரிசாராயம் கலந்த பெட்ரோல் வெளியிடும் கரிம வாயுக்களின் பருமம் ஒப்பீட்டளவில் குறைவு என்பது உண்மைதான். ஆனால், எரிசாராயத்துக்காக வளர்க்கப்படும் கரும்பு, இனிப்புச் சோளம் ஆகியவற்றுக்கு இடப்படும் பூச்சி மருந்துகள் உரங்கள்; கரும்பை ஆலையில் அரைத்து சாராயம் வடிக்கும் வரை எரிபொருள்கள் வெளியேற்றும் கரிம வாயுக்கள்; எரிசாராயத்தை விற்பனை நிலையம் வரை கொண்டு செல்லும் வாகனங்கள் வெளியேற்றும் புகை என ஒட்டு மொத்த கரிமவாயுக்களின் பருமத்தைக் கணக்கிட்டால் எல்லா கழுதையும் ஒன்றுதான்//


இல்லை. இதில் பெரிய அளவில் பெட்ரோலியத்தில் உள்ள உலோக கனிமங்கள் மூலம் வரும் மாசு ஆகியவை குறைவு.

//மேலும், மாற்றுப் பயிர் சாகுபடியானது சுற்றுச் சூழலைக் காப்பதற்கு மாறாக, பல நாடுகளில் சுற்றுச்சூழலையே நஞ்சாக்கி விட்டுள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தென்னமெரிக்காவில், அமெரிக்காவின் எரிபொருள் பசிக்காக தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதால், பூமி வெம்பல் மேலும் தீவிரமாகி விட்டது. அங்குள்ள ஆண்டேஸ் மலைத் தொடரின் பனி சூழ்ந்த சிகரங்கள் உருகத் தொடங்கி விட்டன. இந்தோனேஷியா முழுவதும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காக எண்ணெய்ப் பனையும் காட்டாமணக்கும் காடுகளை அழித்து பயிரிடப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் சீர்கேட்டில் அந்நாடு உலகின் மூன்றாவது இடத்தை எட்டி விட்டது.//


மேலும் தவறு. இந்தோனேஷியா தனது பயோடீஸலை ஏற்றுமதி செய்வதில்லை. இரண்டாவது இந்தோனேஷியாவில் பயோடீஸல் இந்தொனேஷிய பொதுமக்களால்தான் வாங்கப்படுகிறது.

//மாற்று எரிபொருளுக்காக காடுகள் அழிக்கப்படாமலிருந்தால், அந்தக் காடுகளே சுற்றுச்சூழலைக் காப்பதில் மாற்று எரிபொருளை விட முன்னணியில் இருந்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உயிர்ம எரிபொருளை உற்பத்தி செய்யப் பயிரிடப்படும் மாற்றுப் பயிர்களின் அமோக விளைச்சலுக்காகக் கொட்டப்படும் உரமும் பூச்சிக் கொல்லிகளும் பெட்ரோலியப் பொருட்கள்தான். பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு நிலத்தையும் நீரையும் அதே பெட்ரோலியப் பொருட்களால் நஞ்சாக்குவது எப்பேர்பட்ட புத்திசாலித்தனம்! மேலும், ஏகாதிபத்தியங்களின் எரிபொருள் தாகத்திற்காக காட்டாமணக்கு, ஜெட்ரோபா, சோயா, சோளம் என ஒற்றைப் பயிர் முறைக்கு நிலம் மாற்றப்பட்டால் நிலம் மலடாகிப் போகாதா?


உரமும் பூச்சிக்கொல்லியும் இன்று பெட்ரோலிய பொருட்களாகவே இருக்கலாம். ஆனால், வருங்காலத்தில் தாவர அடிப்படை பொருட்களாகவே இவை இருக்கலாமே? அதற்கான ஆய்வுகள் இந்தியாவில் விவசாய பல்கலைக்கழங்களில் நடத்தப்பட்டுவருகின்றன. இவற்றில் பல தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டும் இருக்கின்றன.

//பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, மராமத்துப் பணிகளை அறவே புறக்கணித்து, தனது வணிகத் தேவைக்காக பருத்தி, அவுரி முதலானவற்றைக் கட்டாயமாகப் பயிரிட வைத்து பெரும் உணவுப் பஞ்சத்தை விளைவித்து, நமது முன்னோர்களைக் காவு கொண்டது அன்றைய காலனியாதிக்கம். இன்று, தனியார்மய தாராளமயத் தாக்குதலால் விவசாயத்தைத் திவாலாக்கி, ஏகாதிபத்திய தேவைக்காக காட்டாமணக்கையும் இனிப்புச் சோளத்தையும் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை மாற்றி, உணவுக்காக நிரந்தரமாகக் கையேந்தும் நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டுள்ளது மறுகாலனியாதிக்கம். அன்று, கட்டபொம்மன் கோட்டையை இடித்த வெள்ளைக்காரன் அந்த இடத்தில் எள்ளையும் ஆமணக்கையும் விதைத்தான். இன்று, உணவுக்கான விவசாயத்தை ஒழித்து கள்ளியையும் காட்டாமணக்கையும் விதைக்கின்றன அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள். மாற்று எரிபொருள் எனும் வஞ்சக வலை விரித்து ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ள ஏகாதிபத்திய சதியை அம்பலப்படுத்தி முறியடிப்பதும், விவசாயிகளை ஓரணியில் திரட்டிப் போராடுவதுமே புரட்சிகர ஜனநாயக சக்திகளின் இன்றைய அவசரக் கடமையாகியுள்ளது.//


அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் என்று மேலே நீங்கள் எழுதியவை அனைத்தும் பொய்கள். அமெரிக்கா மாற்று எரிபொருள் என்று போவது மற்ற நாடுகளை சார்ந்து இருப்பதற்கு அல்ல. பெட்ரோலியத்தின் காரணமாக மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை நீக்கி சுய சார்பாக ஆவதற்காகத்தான் அது மாற்று எரிபொருள் என்று செல்கிறது.
அதனை பார்த்து இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளும் எரிபொருளில் தன்னிறைவை அடைய மாற்று எரிபொருளை தேடுகின்றன.

ஆனால் நீங்களோ "எவனுமே உருப்படக்கூடாது" என்ற உங்களது உயர்ந்த நோக்கத்தின் காரணமாக, வெறிகொண்ட நாய் நுரை கக்குவது போல, எல்லா இடங்களிலும் எல்லா விஷயங்களிலும் "அமெரிக்க ஏகாதிபத்தியம்" என்று கண்டுபிடித்து நுரை கக்கிவருகிறீர்கள்.

பெட்ரோலியம் விஷம் - அது கூடாது.
உரம், பூச்சிக்கொல்லி கூடாது.
மாற்று எரிபொருள் கூடாது.
அணு உலை கூடாது.
கணிணி தொழில்நுட்பம் கூடாது.
வெளிநாட்டு தொழில்நுட்பம் கூடாது.
தொழிற்சாலை துவங்கக்கூடாது.
நவீன விவசாய முறைகள் கூடாது.
பாரம்பரிய இந்திய ஞானமோ பார்ப்பன பனியா சமாச்சாரம்.
வெளிநாட்டு விஷயமோ அமெரிக்க ஏகாதிபத்திய சமாச்சாரம்.

எல்லோரும் பஞ்ச பன்னாடையாக ஆகி உங்கள் பின்னால் வந்து புரட்சி ஓங்குக என்று குரலெடுத்து பாடி ஏகே47 (அது மட்டும் வெளிநாட்டு தொழில்நுட்பம் இல்லை!) எடுத்து கண்ட இடத்தில் சுட்டால், அப்பாடா நிம்மதி என்று இருப்பீர்களா?

40 Comments:

Anonym said...

அன்புள்ள தமிழ்மணி,
உங்கள் கட்டுரை ம்ருதையனின் பொய்களைச் சரமாரியாய்ப் பட்டியலிட்டிருக்கிறது. ஆனால் பொய் சொல்லியும் மக்களை அச்சுறுத்தியுமே அவர்களைத் தம்பக்கம் இழுக்கும் இழிசெயலைத் தொடர்ந்து செய்து வந்திருக்கும் கும்பலிடம் உங்கள் நியாயமான வாதங்கள் எடுபடுமா என்பது சந்தேகமே.

மருதையனின் இந்த பகுதியைப் பாருங்கள் .

//பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, மராமத்துப் பணிகளை அறவே புறக்கணித்து, தனது வணிகத் தேவைக்காக பருத்தி, அவுரி முதலானவற்றைக் கட்டாயமாகப் பயிரிட வைத்து பெரும் உணவுப் பஞ்சத்தை விளைவித்து, நமது முன்னோர்களைக் காவு கொண்டது அன்றைய காலனியாதிக்கம்.//

இது என்னமோ பாரம்பரிய தொழில்நுட்பத்திற்கு மிகவும் ஆதரவாகவும் , அனுசரணிஅயாகவும் கம்யூனிஸ்டுகள் இருந்தர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது. இது போன்ற பொய் உண்டா? காந்திஜி, உள்ளூர் தொழில் நுட்பம், கதர், விதேசி துணிகள் புறக்கணிப்பு, சர்க்கா என்று இயக்கங்கள் நடத்திக்கொண்டிருந்தபோது, சோவியத் யுனியனில் தொழிற்சாலைகளைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டவர்களாய் பெரும் தொழிற்சாலைகளின் புகழ் பாடி பார்ப்பன பனியா என்று இகழ்ந்த கூட்டம் இது.

இவர்களின் தலைவரான அண்டைநாட்டு மாமனிதர் ஒருவர் விவசாயத்தின் பாரம்பரியத்தப் புறக்கணித்ததன் பயனாய் பஞ்சங்கள் உண்டானதும் வரலாறு. திடீரென்று அவருக்கு குருவிகள் எல்லாம் பயிரைக் கொத்தித் தின்பதால் உற்பத்தி குறைகிறது என்று ஞானோதயம் ஏற்பட்டு மனிதர்களைக் குருவிகளாய்ச் சுட்டுத்தள்ளிக் கொண்டிருந்த செம்படையை , குருவிகளாய் மனிதர்களைச் சுட்டுக் கொல்ல ஆணை பிறப்பித்தார். இயற்கையின் சுழற்சிகளைப் பற்றிய அடிப்ப்டை அறிவு கூட இல்லாத இந்தச் செயலால் இரண்டு வருடங்கள் உணவு உற்பத்தி பாதிக்கப் பட்டது.

இப்படிப்பட்ட ஒருவரின் சீடர் பாரம்பரிய உழவுமுறைகள் பற்றிச் சொல்ல கொஞ்சமேனும் வெட்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் மன்சாட்சி இருந்தால் தானே பொய் சொல்ல அஞ்ச வேண்டும். மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு அந்தப் பிரசினை இல்லையே.

அனானி(1)

said...

நன்றி அனானி1.

அதே பகுதியை நான் படிக்கும்போது ஏதோ ஸ்டாலினின் collectivizationஐ விமர்சிக்கிறாரோ என்றுகூட நான் அதிர்ந்துவிட்டேன். பிறகுதான் தெரிந்தது, அது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை திட்டியிருக்கிறார் என்பது.

கூட்டுப்பண்ணை என்று கூத்தடித்து பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, விவசாயிகளை அவர்களது நிலத்திலேயே கூலிவிவசாயிகளாக மாற்றி கொடூரம் புரிந்த லெனின் ஸ்டாலின் மாவொ போன்றவர்களை படங்களாக வைத்து தினந்தோறும் பூஜை செய்பவர்கள், என்ன கூச்சநாச்சமின்றி பொய் பேசுகிறார்கள் என்பதை பார்த்தால் நமக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Anonym said...

தமிழ்மணி

மாற்று எரிபொருள் வந்து அரபு நாடுகளின் பொருளாதாரத்துக்கு ஆபத்து வந்தால் அப்புறம் மதசார்பின்மை என்னாவது?அமெரிக்காவில் எத்தனால் பயன்பாட்டால் தினமும் பத்து மில்லியன் பேரல் எண்ணெய் இறக்குமதி குறையும். இந்தியா,சீனாவிலும் இது அமுலுக்கு வந்தால் சவூதிகள் அப்புறம் பேரிச்சம் பழம் விற்க போக வேண்டியதுதான். அதனால் தான் மருதையன் மதசார்பின்மையை காப்பாற்ற மாற்று எரிபொருளை எதிர்க்கிறார்.

said...

இருக்கலாம். ஆனால், தெரியவில்லை.

பெட்ரோலிய பொருட்களை உபயோகப்படுத்துவது தவறு என்பது போல இந்த கம்யூனிஸ்டு கட்டுரையில் உள்ளது.

Anonym said...

ஒரு விஷயம் கவனியுங்கள்.
எந்த கம்யூனிஸ்டு கட்டுரையிலும் இதற்கு பதிலாக இது செய்யலாம் என்று ஆலோசனை இருக்காது.

ஏழைகள் வாழ்வு வளம் பெருக இது செய்யலாம் என்று எந்த ஆலோசனையும் இல்லாமல், "புரட்சிகர இயக்கங்கள் பின்னால் அணி திரள்வது" மட்டுமே ஒரே தீர்வாக சொல்லப்படும்.

இயங்கங்கள் பின்னால் அணி திரண்டு போலீஸை ஆயுதம் கொண்டு தாக்குவது, மற்ற இயக்கங்கள் மீது ஆயுதத்தாக்குவதல் செய்வது, இவர்கள் தவிர மற்ற கம்யூனிஸ இயக்கங்கள் எல்லாம் போலிகள் ஆகவே,அவர்களை ஆயுதம் மூலம் தாக்குவது எல்லாவற்றையும் செய்வதுதான் இவர்களுக்கு ஒரே நடவடிக்கை.

வார்த்தைஜாலங்களில் மயங்கிவிடாமல், கூர்ந்து படிக்க உங்களை மாதிரி இரண்டு பேர் இருந்தால் போதும்.

இவர்கள் பின்னால் மூளை கழண்டு செல்லும் இளைஞர் கூட்டத்துக்கு புத்தி தெளிந்துவிடும்.

Anonym said...

Do you know why chidambaram removed import duty for wheat?

why is india importing wheat?

what is import wheat price and indian wheat price?

Do you know how mych food , milk/egg,corn etc in USA now?

--aathirai

said...

உங்கள் மறுமொழிக்கு நன்றி ஆதிரை,

ஏன் இந்தியா கோதுமை இறக்குமதி செய்கிறது என்பது உங்களுக்கு ஏதோ கருத்து உள்ளது போல இருக்கிறது.

அதனை எழுதுங்கள்.

நன்றி

said...

ரகமி,
உங்கள் மேலான மறுமொழிக்கு நன்றி.

பாராட்டுரைக்கும் நன்றி.

Anonym said...

Thamizmani,

P.chidambaram says there is short supply of grains and removed import duty for wheat. There are calls to do the same for rice.

1. If PC is not lying,

If there is short supply of food, how can you use farm land for jatropha and realestate activities and flower cultivation.
Wheat import prices are more than indian wheat and has gone up around the world

2. If PC is lying for some other reason, and we have sufficient grains why would we remove import duty and import at high prices?

It is common sense that big population first needs food before cars etc. superpower with thiruvodu does not sound good.

I read on one of reliance websites they export 90 percent of diesel from their jhamnagar refinery to USA because india 'cannot absorb' all that fuel. Then why 1- 2- 3?

It is very difficult to find the truth among all these liars.

I also read indian farmers
said they will not cultivate rice as a protest. If india imports all its food, the dollar reserve will disappear in one month, i think.

-aathirai

said...

நன்றி ஆதிரை,

ப சிதம்பரத்துக்கு பொய் பேச எந்த அவசியமும் இல்லை.
ஒரு நாட்டில் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட தானியம் அதிகமாக விளைந்துகொண்டே இருக்காது. சில காலங்களில் அதிகம் விளைவதும் சிலகாலங்களில் குறைவாக விளைவதும் பல்வேறு காரணங்களால் நடக்கிறது. எப்போது ஒரு பொருள் குறைவாக இருக்கிறதோ அதனை இறக்குமதி செய்யவும், எது அதிகமாக இருக்கிறதோ அதனை ஏற்றுமதிக்கு அனுமதிக்கவும்தான் அரசாங்கம் இருக்கிறது இல்லையா?

http://www.indiaonestop.com/wheat.htm

மேற்கண்ட பக்கங்களில் பார்த்தால், 97-98இல் நாம் 1 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்திருக்கிறோம் என்பது தெரியும்.

http://www.indiaonestop.com/exim%20compo.htm

2001இல் எவ்வளவு இறக்குமதி செய்திருக்கிறோம், அதில் எவ்வளவு பெட்ரோலை இறக்குமதி செய்ய கொடுத்திருக்கிறோம் என்று பாருங்கள்.
94830 கோடி ரூபாய் இறக்குமதியில் 71497 கோடி ரூபாய் பெட்ரோலுக்காக மட்டுமே இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதே வருடம் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 32713 கோடி மட்டுமே.

பெட்ரோல் இல்லாமல் தெருவில் வண்டிகள் ஓடாமல், லாரிகள் இந்தியாவெங்கும் பொருட்களை வினியோகிக்காமல் இருந்தால், இந்தியாவில் எவ்வளவு பெரிய அழிவு பஞ்சம் பட்டினி வரும் என்று தெரியுமா உங்களுக்கு?

பெட்ரோல் என்பது வெறும் கார்களுக்காக மட்டும் இல்லை. மின்சார உற்பத்தி, லாரிகள், என்று அத்தியாவசிய தேவைக்காக இன்று பெட்ரோல் தேவை. அவை இல்லையென்றால் வெறும் கோதுமை உற்பத்தியை வைத்துகொண்டு ஒன்றும் செய்யமுடியாது. விளைந்த இடத்திலேயே அழுகி நாறவேண்டியதுதான்.

ரிலயன்சுக்கு வருவோம்.

இந்திய அரசாங்கம் பெட்ரோலை அதிக விலைக்கு வாங்கி வாங்கிய விலையை விட குறைந்த விலைக்கு இந்தியாவில் விற்கிறது. ஆனால், ரிலயன்ஸ் வாங்கிய விலையைவிட குறைந்த விலைக்கு விற்க முடியாது. அதனால், அது தான் உற்பத்தி செய்யும் பெட்ரோலை வெளிநாடுகளில் விற்று காசு பண்ண பார்க்கிறது.

http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=9321b750-3813-462c-b427-054630a8312d&MatchID1=4617&TeamID1=3&TeamID2=4&MatchType1=1&SeriesID1=1163&PrimaryID=4617&Headline=Reliance+eyes+direct+fuel+sales+in+US%2c+Europe

இந்தியாவில் பயோடீஸல் உற்பத்தி ஆனால், அது சம்பந்தமான ரிபைனரிஸ் உருவாக்கப்பட்டால், அது பெட்ரோலை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்கவேண்டிய தேவையை குறைக்கும். பயோடீஸல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டால், அது இந்திய தொழில்வளத்தை தீவிரமாக அதிகரிக்கும்.

Anonym said...

/இந்திய தொழில்வளத்தை தீவிரமாக அதிகரிக்கும்//

அது கம்யூனிஸ்டுகளுக்கு பிடிக்காது !

said...

////இந்திய அரசாங்கம் பெட்ரோலை அதிக விலைக்கு வாங்கி வாங்கிய விலையை விட குறைந்த விலைக்கு இந்தியாவில் விற்கிறது. ஆனால், ரிலயன்ஸ் வாங்கிய விலையைவிட குறைந்த விலைக்கு விற்க முடியாது. அதனால், அது தான் உற்பத்தி செய்யும் பெட்ரோலை வெளிநாடுகளில் விற்று காசு பண்ண பார்க்கிறது///

Very important point. Yes. and the cumulative losses of all oil PSUs in India have crossed 1,00,000 crores due to 'under recovery' in the past few years. If they are not allowed to hike the petro-product prices to reasonable levels, then the future seems grim. there will be no possiblity for capacity expansion and new refineries and marketing companies to keep pace with the growing demand of the expanding economy.
and this loss is temporarily bridged by govt issuing 'oil bonds' to oil PSUs (tens of thousandsof crores). and this vital losses and loans are not reflected in union budget. hence a huge budget deficit is now not included in the budgetery figures for now and swept under the carpet. Future looks grim in the oil scenerio. We may have to import more petrol products at higher prices in the near future.

I fear that there is a hidden oil shock for India when suddenly we meet shortages in near future. If RIL is not able to export its diesel, etc it will be doomed. Already it(and Essar) has stopped its expansion of its excellent petrol bunk networks (where really pure and better quality products were sold for a slightly higher rates) and those who have taken franchise of the existing bunks too are in dire straits.

In future, no idiot will want to venture into this crazy scenerio and there will be no takers if HPCL, BPCL, OIL are privatised now. Many investors and buyers would be sighing in relief that the privatisation moves were stalled by the left. otherwise the investments in those companies would be now in jeaopardy.

Last year i wrote to RIL and Essar HQ's suggesting them that they make one of the share holders of HPCL or BPCL (which are now partially privatised) to sue the union govt (PIL in SC) ; the management of these PSU companies delibrately undersell their products (for some notional idea of public good) and incurr losses.
It is malafide action and cheats shareholders and investors. the govt should not have sold some of its shares to guileble investors if it decides to run the units in a loss.

I have asked some SC lawyers and corporate lawyers about the implications of all this in vain. no proper answer for this.

At present each LPG cylinder is subsidied for Rs.300 or so and all users (mostly middle class and above, while the poor use kerosene or wood) happily enjoy this 'subsidy' , refusing to accept rational prices. hence the artificial scarcity for cylinder refills and new connections as PSUs are averse to issue new connections and refills which is a drain on their already stetched finances. moreover there is too much diversion of domestic LPG for commercial purposes by cynical public for illegal profits...

Anonym said...

China needs desperately some place where it can grow food. It will be the industrial empire and ruin other nation's industries and keep them dependent.

It will import all its food.

I think the maoists in India are trying to keep india agrarian to serve their master's needs for food.

So in effect this would be an agrarian colony of China.

Just as Japan tried colonizing Taiwan as an agrarian colony in 1930s.

How like them to be wanting to carry the shoes of the Chinese emperors!

Why do they then invoke bhagat singh and other anti-colonial warriors, when all they are desirous of is to make India a colony?

Or are they wishing to make India a stupid nation like Anwar Hoxa's albania?

A self contained fortress where people got two slices of bread a day or some such thing?

Anonym said...

above is written by me anony2

Anonym said...

There are pros and cons in using biofuels. To dismiss them as a conspiracy is illogical because scientists in India have been working on them for some decades,
right from 1970s. Today the range of inputs for biofuels has expanded. We cant depend on imported oil forever.Can we afford to spend 70% of export earnings just to buy one commodity. So the challenge is to have a right policy for biofuels taking into account pros and cons.America is
investing heavily in this. Europe is also doing much R&D. For a country like India with so much wastelands where no food crop can be cultivated growing crops for
biofuels is a win-win strategy.
The question is how to use them while minimising the negative consequences.
These commies never understand
things because they are clueless
about the reality.
ஒரு விஷயம் கவனியுங்கள்.
எந்த கம்யூனிஸ்டு கட்டுரையிலும் இதற்கு பதிலாக இது செய்யலாம் என்று ஆலோசனை இருக்காது.

because they simply cut and
paste without any understanding. They never bother about technology or economics or
ecology. They recycle views from here and there without undertaking any serious reading on any issue.

said...

மறுமொழிகளுக்கு நன்றி

Anonym said...

அனானி 2 எழுதியது பல விஷயங்களை தெளிவு படுத்துகிறது.

ஏன் இந்தியாவில் எல்லா முன்னேற்றங்களையும் கம்யூனிஸ்டுகள் எதிர்க்கிறார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.

சீனாவின் விவசாய காலனியாக இந்தியாவை ஆக்க உழைக்கிறார்கள் இந்த கம்மனாட்டி கம்யூனிஸ்டுகள்!!

பாவிகளா!

said...

மறுமொழிகளுக்கு நன்றி.

said...

இந்தியா ஒரு விவசாய நாடு. 60% மக்கள் விவசயத்தை நம்பி உள்ளனர்.ஏழை மக்களின்
எண்ணிக்கையும் கிராமத்தில்தான் அதிகம் உள்ளது. வளர்ந்து வரும் ஏழை-பணக்காரர் பிளவை குறைக்க வேண்டுமானால் விவசாய விளைபொருள்களின் தேவை வளர்ந்த சமூகத்திடையே அதிகரிக்க பட வேண்டும். அவர்களுடைய பணம் கிராம மக்களை கொண்டு போய் சேரவேண்டும்.

Jetrobaவின் மற்றொரு குணம், அது குறைந்த நீர்வளம் உள்ள பகுதியைலும் வளரும். இதன் மூலம் மிகவும் பின் தங்கிய வறண்ட மாவட்டங்களில் வாழும் ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளின் வாழ்க்கை தரம் உயர வாய்ப்புள்ளது. அவர்களின் முன்னேற்றத்துக்கு இது ஒரு அரிய வரபிரசாதம்.

நெல் மற்றும் கரும்பின் விலை உயரும் போதெல்லாம் ,கூலி தொழிலாளின் கூலி உயர்ந்து
உள்ளது வரலாற்று உண்மை. அது போல் Jetrobaவும் வறண்ட பகுதி மக்களின் வாழ்க்கை
தரத்தை வளர நிச்சயம் உதவும்.

இன்று இந்தியாவின் உழைப்பு மற்றும் செல்வங்கள் எல்லாம் பெட்ரோலை டாலரில்
வாங்க வேண்டிய காரணத்தால்(அது மட்டுமல்ல காரணம் என்றாலும் அதுவும் ஒரு முக்கிய
காரணம்) அமெரிக்க டிரசரியில் முதலீடு செய்து உள்ளோம். டாலர் மற்றும்
பெட்ரோலுக்கிடையே உள்ள தொடர்பை இந்த பதிவு விளக்குகிறது.

http://tamilfuser.blogspot.com/2007/09/blog-post.html

ம.க.இ.க வினர் தினமும் எதிர்க்கும் அமெரிக்க ஏகாப்திபத்தியத்தின் வளர்ச்சியின் அடிப்படை காரணமே பெட்ரோலை பலநாடுகள் இறக்குமதி செய்வது தான். Jetroba பயிரிட்டு பெட்ரோல் இறக்குமதியை குறைப்பதன் மூலம் அமெரிக்க ஏகாப்திபத்தியத்தின் வளர்ச்சியை குறைக்கலாம். இந்த அடிப்படை உண்மையை கூட ம.க.வி.கவினர் புரிந்து கொள்ள முடியாதது ஆச்சிரியமாக உள்ளது.

அடுத்து சுற்றுப்புற சூழல். உண்மையிலேயே சுற்று புற சூழலுக்கு பாடு படுபவர்களாக
இருந்தால் அவர்கள் எதிர்த்து போராட வேண்டியது, பெட்ரோல் உபயோகம், பாரம்பரிய நெல் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் தான். அவை தான் green house gas அதிகம் வெளியிடுகிறது.அவர்க்ளுடைய இந்த கருத்து சரியான பிதற்றல்.
மேலும் jetroba பயிரிடுவது என்பது இறால் வளர்ப்பு போன்று ஒட்டு மொத்தமாக
விளைநிலத்தை பாழாக்குவது அல்ல.

உண்மையில் அரசு செய்ய வேண்டியது என்ன என்றால்

1.விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஒட்டு மொத்தமாக
கொடுத்து அவர்களின் மூலம் பயிரிட நினைக்க கூடாது.

2.Jetroba என்பது மேலை நாடுகள் பயிரிடும் பயிர் அல்ல. என்வே நல்ல வித்து உருவாக்குவது, அதற்கு தேவையான agronomic practise கண்டு பிடிப்பது போன்ற விவசாய ஆராய்ச்சிக்கு நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது இந்திய அரசாங்கம் அதிக அளவு பணத்தை அராய்ச்சிக்காக விவசாய பல்கலை
கழகங்கள் மூலம் செலவிடுகிறது. அவர்களுடைய அராய்ச்சி திருப்தி அளிப்பதாக இல்லை.
கோயம்புத்தூரை சேர்ந்த தனியார் நிறுவனம் அவர்களை விட நன்றாக செயல்படுகிறார்கள்.
அது போல் தனியார் நிறுவனங்களை jetroba அராய்ச்சிக்காக ஊக்குவிக்க வேண்டும்

3.Jetroba தொழில் நுட்பத்தில் உள்ள் மற்ற technology gapsம் சரி செய்ய பட வேண்டும்

4.கலைஞர் செய்யும் நில சீர்திருத்த திட்டத்தை jetroba பயிரிடும் பகுதிகளில் முழுமையாக
செயல் படுத்த வேண்டும். அதாவது நிலமற்றவர்களுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது.

5.அங்கு இருக்கும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம்,நில சீர்திருத்த வசதி போன்ற
capital investment இலவசமாக செய்து கொடுக்க வேண்டும்.

6. jetroba விளை பொருளுக்கு நல்ல குறைந்த பட்ச ஆதார விலையை கொடுக்க வேண்டும்.

7.அரசு உதவியுடன் நல்ல பயிர் காப்பீட்டு திட்டத்தை(crop Insurance) அறிமுகபடுத்த
வேண்டும். இது புதிய பயிர் என்பதால், பயிர் காப்பீட்டு திட்டத்தை எளிதாக அறிமுக
படுத்தலாம்.

8.Contarct farming அறிமுகபடுத்தி விவசாயிகளுக்கு நல்ல தொழில்
நுட்பமும்,இடுபொருள்களுக்கான முதலீடும் எப்போதும் கிடைக்க செய்ய வேண்டும்.

பிடரல் காஸ்ட்ரோ உண்மையான தலைவர்தான். தன் மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்க உதவியவர். பன்னாட்டு
கம்பெனிகளுக்கு விலை போகாதவர். ஆனால் அவர் கூறும் அனைத்தையும் எடுத்து கொள்ள
வேண்டும் என்று அவசியம் இல்லை. முன்பு சோவியத் கூறிய அனைத்தையும் எடுத்து
கொண்டு அதை utopean சமூகமாக கம்யூனிஸ்டுகள் காட்டினர் .அதனால் சோவியத் சரிவு
மக்களிடம் அவர்களின் சித்தாந்தத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.பிறகு சைனாவை
உதாரணம் காட்டினர்.அது சர்வாதிகார மற்றும் முதலாளித்துவ பாதைக்கு சென்ற போது
மக்களும், கம்யூனிசத்தின் ஒரு பகுதியினரும்(CPM) சித்தாந்ததின் மீது நம்பிக்கை இழந்தனர்.
CPM முதலாளித்துவ/சர்வாதிகார பாதைக்கு சென்றது. மீதமுள்ளோர் மக்களிடம் உள்ள
வெறுப்பு, ஏழ்மை போன்றவற்றை வைத்து கொள்கை, தீர்வு எதுவும் இல்லாமல் சில அன்னிய model வைத்து போராடுகின்றனர்.

கம்யூனிசத்தின் அடிப்படை சித்தாந்ததை மட்டும் வைத்து இந்தியா-இந்தியர்களின்
தேவையை கொண்டு கொள்கைகளை இந்தியர்களுக்காக வடிவமைத்து இருந்தால் இந்த
வெற்றிடம் ஏற்பட்டிருக்காது.இந்த வெற்றிடத்தால் ஏழை மக்க்ளுக்கு உண்மையிலேயே
போராட ஒரு உண்மையான அமைப்பும் இல்லாமல் போய்விட்டது.

said...

சதுக்கப்பூதம்,
உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி.

உங்கள் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துபோகிறேன், கடைசி கருத்தை தவிர.

இன்று தமிழ்நாட்டில், இந்தியாவில் இருக்கும் கட்சிகள் எல்லாமே மக்கள் நலனை அடிப்படையாக கொண்டவைதான்.

ஒரு கட்சி செய்யும் தவறை மற்ற கட்சி உரத்து பேசுவதால், எல்லா கட்சிகளுமே மோசமானவை என்ற எண்ணம் வந்துவிட்டிருக்கிறது. (அப்படிப்பட்ட உரத்து பேசுவதால்தான் ஏராளமான வளர்ச்சி நடந்திருக்கிறது, தவறுகளும் களையப்பட்டிருக்கின்றன!!!)

ஆனால் கம்யூனிஸம் அடிப்படையே தவறான கொள்கை.

பிடல் காஸ்ட்ரோ அப்படிப்பட்ட நல்ல தலைவராக இருந்தால், கம்யூனிஸம் மக்களுக்கு நல்லது செய்யுமென்றால், ஏன் கியூபாவிலிருந்து மக்கள் கார் டயரிலெல்லாம் புகுந்துகொண்டு வெளியேறுகிறார்கள்?

Anonym said...

தமிழ்மணி,

முதலில் இந்த பதிவுகளுக்கு நன்றி.

கம்யூனிஸ்டுகளின் துரோகம், சுதந்திர போராட்டகாலத்திலிருந்து ஆவணப்படுத்தப்பட்ட ஒரு விஷயம்.

இன்றும் அவர்கள் துரோகம் தொடர்வது ஆச்சரியமானது அல்ல.

இப்போதும், தங்களது துரோகம் அம்பலப்பட்டுவிட்ட கம்யூனிஸ்டுகள் உங்கள் பதிவில் ஒருமறுப்பு வார்த்தை கூட எழுத முடியாமல் இருப்பதை கவனிக்கிறேன்.

said...

ரகமி
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

said...

//ஆனால் கம்யூனிஸம் அடிப்படையே தவறான கொள்கை. //

இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. வளர்ந்த நாடுகளுக்கு, முக்கியமாக மக்கள் தொகை வளர்ச்சி சமநிலை அடைந்து,எந்த ஒரு வாய்ப்பையும் பெரும்பான்மையான மக்கள் பயன் படுத்த கூடிய அளவில் வளர்ந்த மக்களுக்கும், நாட்டிற்கும் முதலாலித்துவம் நன்மையை தரும். பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை வசதியே சென்றாடையாத, கிடைக்கும் வாய்ப்புகளை பெரும்பான்மையான மக்கள் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ள மக்களுக்கு கம்யூனிசம் மற்றும் முதலாலித்துவம் கலந்த கலவையே பயன் தரும்.இடது-வலது இரண்டும் கலந்த கலவை தேவை.

//பிடல் காஸ்ட்ரோ அப்படிப்பட்ட நல்ல தலைவராக இருந்தால், கம்யூனிஸம் மக்களுக்கு நல்லது செய்யுமென்றால், ஏன் கியூபாவிலிருந்து மக்கள் கார் டயரிலெல்லாம் புகுந்துகொண்டு வெளியேறுகிறார்கள்?
//

There is no utopean country in the world.தொழிற் புரட்சியால் பயன் பெறாத வறுமை நிறைந்த ஒரு நாட்டில், மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை கிடைக்க செய்தது அவரது சாதனை. அனைவரும் அடிப்படை வசதி கிடைத்தவுடன்,அதை தக்க வைத்து அடிப்படை வசதி அனைவருக்கும் கிடைத்து முதலாளித்துவ மனபான்மை வருவது இயல்பு. அதன் விளைவே வெளி நாடுகளுக்கு செல்ல முயல்வது.

//ஜனநாயகம் இல்லாத முதலாளித்துவம், சர்வாதிகாரமாகி, தற்போதைய சீனா போல பாஸிஸமாக ஆகிறது.
//

முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்ட ஜனநாயகமும், மறைமுக சர்வாதிகரத்திற்கு தான் இட்டு செல்லும்

said...

///இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. வளர்ந்த நாடுகளுக்கு, முக்கியமாக மக்கள் தொகை வளர்ச்சி சமநிலை அடைந்து,எந்த ஒரு வாய்ப்பையும் பெரும்பான்மையான மக்கள் பயன் படுத்த கூடிய அளவில் வளர்ந்த மக்களுக்கும், நாட்டிற்கும் முதலாலித்துவம் நன்மையை தரும். பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை வசதியே சென்றாடையாத, கிடைக்கும் வாய்ப்புகளை பெரும்பான்மையான மக்கள் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ள மக்களுக்கு கம்யூனிசம் மற்றும் முதலாலித்துவம் கலந்த கலவையே பயன் தரும்.இடது-வலது இரண்டும் கலந்த கலவை தேவை.///

No Sathukka Pootham,

All developed countries started as
'developing' nations some centuries back. We, tried what you are trying to state (mixed economy and socialism, etc) for 40 years until 1991, with only counter-productive results and near bankruptcy. Trying to bridge the rich-poor divide (sounds good in theory) thru re-distributive taxations (or rather confiscatory tax regime of some max 98 % in 1969) only resulted in massive evasion, and killing the incentive for new enterprise and finally stagnation. ditto for MRTP act which was aimed at limiting 'concentration of wealth' ; and license raaj to 'allocate' resources according to 5 year plans.

You have to read a lot about those terrible decades when actually the rich became richer, while poor became poorer. Pls try
rajaji.net for some of his lucid essays and analysis of those decades. mere slogan mongering of
pseudo socialism crippled us both economically and morally. Rajaji was a great visonary and far sighted statesman whose wisdom is being recognised only now. his dire warnings and predictions were uncannily correct. and at the age of 81, he fought the Congress giant thru his new and fledgeling Swathanthra party. a herioc fight..

We can see the living examples of esat asian tigers like Japan, Taiwan, HK, S.Korea which were devastated in WW 2 and started from scratch from 1945. We were relatively better off at that time. (only our size and population was larger). That those nations could become 'developed' nations in a few decades thru free market capitalism is proof enough. even Pak did better than us in several field of economic activity as they did not have the benefit of Congress (or Nehru) socialism.

Pls read about the stupid constraints of the MRTP act (monopolies restrictive trade prevention act or some damn name) which prevented ALL industries to expand capacity without govt permission or license (read bribe).

more people were impoverished thru these retrogressive polices (though those who supported them called themselves 'progressives' while those who opposed them were dubbed anti-poor by demegouges like Indira Gandhi, etc) than thru any free market capitalistic 'exploitation'

employment generation was very very very very slow in those decades when compared now. Supposing if the leftist were in power in 1991 and if a person like you were Fin. minister in 1991 (and given a free hand), pls explain how you would have handled the CRISIS of 1991 balance of payments ? and what steps would you have done subsequently to acheive this growth now seen ? any alternatives ? or would you have continued with old inward looking polices that would have bankrupted us and resulted in hyper-inflation and complete collapse (like in present Zimbawe, etc)

you need to do a lot more homework and re-reading of our past economic history..

said...

சதுக்கப்பூதம், அதியமான் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

அதியமான்
நீங்கள் தமிழில் எழுதினால் நிறையபேரை சென்றடையுமே உங்கள் கருத்துக்கள்.

சதுக்கப்பூதம்,
கம்யூனிஸம் பற்றி கம்யூனிஸ்டுகளுடன் விவாதித்த பழைய பதிவுகள் இருக்கின்ற்ன.
தயவு செய்து படித்துப்பாருங்கள்.
அதில் நான் எதேனும் தவறாக எழுதியிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
நன்றி

said...

நண்பர் ஆதிரை (உள்ளல்) தன்னுடைய பதிவில் மாற்று எரிபொருள், விவசாயிகள் சம்பந்தமாக கட்டுரை எழுதியுள்ளார்.
வாசகர்கள் படிக்க வேண்டுகிறேன்.
பசிதம்பரத்தை எதிர்த்து

Anonym said...

thanks thamizmani.

said...

அல்கே என்று சொல்லக்கூடிய பச்சை பாசி கடல்தண்ணீர், உவர் தண்ணீர், என்று எங்கும் வளரக்கூடியது.

இந்த பக்கத்தைபாருங்கள்.
http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2008/01/03/AR2008010303907.html

A Promising Oil Alternative: Algae Energy

With petroleum reserves dwindling, the search is on to replace gasoline with a cleaner, greener alternative. Though much eco-talk has centered on ethanol from corn and biodiesel from soybeans, the biofuel that looks more likely to replace petroleum on a large scale comes from a most unlikely place: pond scum.

Algae, like corn, soybeans, sugar cane and other crops, grows via photosynthesis (meaning it absorbs carbon dioxide) and can be processed into fuel oil. However, the slimy aquatic organisms yield 30 times more energy per acre than land crops such as soybeans, according to the U.S. Department of Energy. The reason: They have a simple cellular structure, a lipid-rich composition and a rapid reproduction rate. Many algae species also can grow in saltwater and other harsh conditions -- whereas soy and corn require arable land and fresh water that will be in short supply as the world's population balloons.

"If you replaced all the diesel in the U.S. with soy biodiesel, it would take half the land mass of the U.S. to grow those soybeans," says Matt Caspari, chief executive of Aurora Biofuels, a Berkeley, Calif.-based private firm that specializes in algae oil technology. On the other hand, the Energy Department estimates that if algae fuel replaced all the petroleum fuel in the United States, it would require 15,000 square miles, which is a few thousand miles larger than Maryland.

Another bonus: Because algae can be grown just about anywhere in an enclosed space, it's being tested at several power plants across the nation as a carbon absorber. Smokestack emissions can be diverted directly into the ponds, feeding the algae while keeping greenhouse gases out of the atmosphere.

Although processing technology for algae fuel -- a.k.a. "oilgae" in some environmentalist circles -- is improving, it's still years away from reaching your local gas pump. "It's feasible; it's just a question of cost, because no large-scale facilities have been built yet," Caspari says. Boeing and Air New Zealand recently announced a joint project with a New Zealand company to develop an algae-based jet fuel, while Virgin Atlantic is looking into the technology as part of a biofuels initiative. Watch this space for updates.

-- Eviana Hartman

உலகத்திலேயே மிக அதிக அளவு பெட்ரோலியத்தை உபயோகிக்கும் அமெரிக்காவே ஒரு சிறிய அளவில் அல்கே என்னும் பச்சைபாசியை பயிர் பண்ணுவதன் மூலம் எரிபொருள் தன்னிறைவை அடைந்துவிட முடியும் என்று கூறுகின்றனர்.

இதன் மூலம் 30 மடங்கு அதிக எரிபொருளை பெறலாம் என்று கூறுகின்றனர். இதனால்தான் மேலே பதிவு எழுதும்போதே இதன் இணைப்பை கொடுத்திருந்தேன்.

இந்தியாவில் கடலோர கிராமங்களில் இந்த பச்சைப்பாசி வளர்ப்பு செய்து இந்தியா வெகு விரைவில் எரிபொருள் தன்னிறைவை அடையலாம்.

said...

தமிழ்மணி,

பிரேசில், இன்ன பிற நாடுகளின் ஆல்கஹால் உற்பத்தியை நம் நாட்டுடன் ஒப்பிட கூடாது.

காரணம் அங்கே எல்லாம் கரும்பில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்யப்படுவதில்லை.

அங்கே எல்லாம் மக்கா சோளம், சுகர் பீட் தான் சர்க்கரைக்கான மூலம்.

இந்தியா உலகில் அதிகம் கரும்பு உற்பத்தி செய்யும் நாடு, நம்மிடம் சர்க்கரை எடுத்த பிறகு எஞ்சும் கழிவு மொலாசஸ் நிறைய வீணாகப்போகிறது அதனைக்கொண்டே பல மில்லியன் லிட்டர் அல்கஹால் தயாரிக்கலாம்.

ஒரே பிரச்சினை கள்ளச்சாரயம் அதிகம் ஆகிவிடும். இங்கே பெரும்பாலும் எல்லா மாநிலங்களிலும் மதுவிலக்குள்ளது.

மேலும் காட்டாமணக்கினை தரிசு நிலங்களில் போட செய்யலாம், வழக்கமான நிலங்களில் அல்ல அரசும் அப்படித்தான் சொல்லி வருகிறது.

ரயில்வேக்கு சொந்தமாக எப்போதும் டிராக் ஓரம், நடுவே மற்றும் ஸ்டேஷன், இன்ன பிற இடங்களில் அதிகம் இடம் உள்ளதாகவும் அதில் பயிரிடப்போவதாகவும் லாலு கூட சொல்லி இருக்கிறார்.

இறக்குமதி வரியை நீக்கியது உண்மையில் உணவுத்தட்டுப்பாட்டினால் அல்ல wto உடன்படிக்கை படி இறக்குமதிக்கு உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் வரி விதிக்க கூடாது என அமெரிக்கா போன்ற நாடுகள் கோரிவருவது தான். அதை எல்லாம் வெளியில் சொன்னால் போராட்டம் வரும் என உணவு தட்டுப்பாடு எனக்குண்டு போடுகிறார் ப.சி.2010க்கு பிறகு எந்த இறக்குமதிக்கும் தடை இருக்க கூடாது என ஒப்பந்தம் என நினைக்கிறேன், அதில் எல்லாம் ஏற்கனவே கை எழுத்தும் போட்டாச்சு அரசு, இப்போதிலிருந்து படிப்படியாக இறக்குமதி தடைகளை நீக்கும் வேலையை அரசு செய்கிறது.

இல்லை எனில் எப்படி ஏற்றுமதி செய்ய முடியும் நம்மால்.

//இந்திய அரசாங்கம் பெட்ரோலை அதிக விலைக்கு வாங்கி வாங்கிய விலையை விட குறைந்த விலைக்கு இந்தியாவில் விற்கிறது. ஆனால், ரிலயன்ஸ் வாங்கிய விலையைவிட குறைந்த விலைக்கு விற்க முடியாது. அதனால், அது தான் உற்பத்தி செய்யும் பெட்ரோலை வெளிநாடுகளில் விற்று காசு பண்ண பார்க்கிறது//

ரிலையன்ஸ் எந்த கச்சா எண்ணையும் வாங்கி சுத்திகரித்து விற்கவில்லை, அவர்கள் செய்வது சுத்திகரிப்பு பணி மட்டுமே அதற்கான கட்டணம் வாங்கிக்கொள்வார்கள் மற்ற நாடுகளின் எண்ணை நிறுவனங்களிடம்.

இப்பொழுது தான் கோதாவரி ரிவர் பேசின், மும்பை , மேலும் சில இடங்களில் சுயமாக கச்சா எண்ணை எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். அவர்களின் சொந்த கச்சா சுத்திகரிப்பு வெகு குறைவே, மீதி எல்லாம் மற்றவர்களுக்கு வேலி செய்தல் தான்.

வெளிநாட்டு நிறுவனங்கள் ஏன் அவர்களே சுத்திகரிக்காமல் இங்கே கொடுத்து செய்கிறார்கள் எனில் சுத்திக்கரிப்பு பணியால் சுற்று சூழல் பாதிக்கும் என்பதால். ரிலையன்சுக்கு காசு , இந்திய மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு இலவசமாக!

நம் அரசும் அன்னிய செலவாணி, தொழில் வளர்ச்சி என்று சும்மா அடுத்தவர்கள் எண்ணையை சுத்தம் படுத்தும் வேலை செய்வதை கேட்கவில்லை. இதை அரசுக்கட்டுப்படுத்த வேண்டும்.

said...

வவ்வால்,
நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.

ரிலயன்ஸ் பண்ணவில்லை என்றால் வேறு யாராவது வெளிநாட்டில் பண்ணியதை நாம் விலை கொடுத்துதான் வாங்கவேண்டும். இந்தியாவில் தேவைப்படும் அளவுக்கு பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் இந்தியாவில் இல்லை. இந்திய தேவையை கவனிக்கும்போது ரிலயன்ஸ் செய்வது கொசு அளவுதான்.

said...

தமிழ்மணி,

//இந்திய தேவையை கவனிக்கும்போது ரிலயன்ஸ் செய்வது கொசு அளவுதான்.//

ஆனால் அப்படி அல்ல, ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலைத்தான் உலகளவில் 3 வது பெரிய ஒன்று.இந்தியாவின் தேவையில் சுமார் 35 சதவீதம் (33 மில்லியன் டன்)எண்ணை சுத்திக்கரிக்க முடியும்(அரசு நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து 40 சதம் தான்)மேலும் இந்த ஆண்டு முதல் இரட்டிப்பு ஆக்கப்போவதாக அறிவித்தும் உள்ளது.

ரிலையன்ஸ் சுத்திகரிப்பு 90 சதம் அமெரிக்க கச்சா எண்ணை அதை சுத்திகரிக்கும் கட்டணம் அல்லது அதற்கினையான எண்ணை எடுத்துக்கொள்வார்கள்.

ரிலையன்ஸிடம் இருந்து அப்படி உபரி எண்ணையை இந்திய அரசு நிறுவனங்களும் வாங்குகின்றன.

எனவே ரிலையன்ஸ் செய்வது சின்ன வேலை அல்ல. கணினியில் அமெரிக்காவிற்கு வேலை செய்தால் காசு வருவது போல தான் இதிலும், ஆனால் கூடுதலாக நாம் தான் மாசுபடுதலையும் சந்திக்க வேண்டும்.

said...

நன்றி வவ்வால்.

Anonym said...

//விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஒட்டு மொத்தமாக
கொடுத்து அவர்களின் மூலம் பயிரிட நினைக்க கூடாது.
//
sila IT niruvanangal mnc kaluku virkapaduvadhai pola,

vivasaya nilangalum ulloor companygal vangi ethirkalathil mnc kaluku virkapadalam.

velinatil irundhu unavu porutkalai indhiyavil kuraindha vilaiku 'dump ' seidhal vivasayigal nilangalai porikadalai vilaiku vitru viduvargal.

contract farming thevai illai. in maharashtra, farmers are seting up their own co-operative stores and agro companies and selling directly. thats what you need.

selling to corporate retailers and contract farming will just keep the farmers poor as usual and some huge corporation will fatten up.

retail , farm rendum pona mothamum pona madhiri dhan.



ther is a rumor muka family is setting up ethanol plants in US.

Anonym said...

சர்வாதிகாரத்தை எதிர்ப்பது என்பது அவரது தமிழ் ரத்தத்தில் ஊறியது.

எவ்வாறு எமர்ஜன்ஸி சர்வாதிகாரத்தை எதிர்த்தாரோ அதே போல, மக்கள் விரோத, சர்வாதிகார நக்ஸலைட்டுகள் தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதையும் கடுமையாக எதிர்த்து அவர்களை ஒழித்து தமிழகத்தை காத்திருக்கிறார் என்பதையும் இங்கே குறிக்கவேண்டும்

தமிழ் ரத்தம் என்றென்றைக்கும் சர்வாதிகார எதிர்ப்பு கொண்டது. ஜனநாயக பண்பு கொண்டது. அது என்றைக்கும் கம்யூனிஸ பயங்கரவாதத்தை ஆதரிக்காது என்று குறிக்கவேண்டுகிறேன்

said...

கலைஞர் பதிவுக்கு பதிலாக இங்கே எழுதிவிட்டீர்கள் என்று கருதுகிறேன்

நன்றி

said...

பச்சைபாசியிலிருந்து எடுக்கப்பட்ட பயோடீசல் மூலம் கார் ஓட்டப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.


http://www.thehindu.com/2008/01/12/stories/2008011256671600.htm

International
Oil from algae a solution?
Peter Huck


Car run on the oil of microscopic algae road-tested

Los Angeles: As biofuel production using corn and sugar is criticised for putting food stocks at risk, could oil from algae solve the energy crisis?

Has a sewage farm just outside the New Zealand city of Blenheim provided a solution to the world’s energy shortages? Aquaflow Bionomic Corporation, a local start-up, has patented a process to extract biofuel from sewage, and last year Minister for Energy David Parker road-tested a car run on the oil of microscopic algae.

“Wild algae is one of the ubiquitous units of nature,” says Nick Gerritsen, a partner in the firm. “If you leave a bucket of water outside, the water will turn green as it is settled by wild algae. We realised very early that we needed to create a model that took advantage of wild algae feedstocks.”

The challenge was to catch what he calls “the little blighters”, the algae that contain oils or lipids, in the work’s outflow pipe, a cleansing process known as bio-remediation. In May 2006, the company produced what it claimed was “the first biodiesel crude from wild algae”. The process is secret, though oil was extracted from algae that had been separated from water, which Aquaflow wants to leave clean enough to drink.

Aquaflow first had to pass the energy balance test, creating a fuel that produced at least as much energy as went into creating it. The company went from pond scum to biodiesel in just over a year and says its fuel is suitable for domestic use and transport. Furthermore, it claims its technology fits “on the back of a truck,” and is cheap enough to be adopted anywhere. “Our aim is to enable communities to use their wild algae feedstock and become as self-sufficient as they can,” says Mr. Gerritsen.

Faith in algae to provide energy has spread. Last month, Shell announced it had formed a joint venture with HR Biopetroleum that will construct a demonstration plant to harvest algae they claim can double their mass several times a day, providing 15 times more oil per hectare than alternatives such as rape.

“Algae have great potential as a sustainable feedstock for production of diesel-type fuels, with a very small C02 footprint,” says Graeme Sweeney, Shell’s executive vice-president of future fuels and carbon, but admits the commercial potential of the scheme is yet to be proved.

Meanwhile, the Commercial Aviation Alternative Fuels Initiative, an alliance of aircraft manufacturers, industry organisations and entrepreneurs, is seeking a biojet fuel that could come from algae.

Last month (DEC), a San Francisco “algae summit” drew more than 300 delegates. One participant was Kelly Ogilvie, co-founder of Seattle firm Blue Marble Energy, which plans to harvest wild algae from sewage farms, lakes and rivers, mining ponds and algae blooms caused by pollution. It says its method is “low cost” and “low tech.” Unlike corn, soya beans, rapeseed and sugar cane — unsustainable monocultures that threaten food production already jeopardised by climate change — algae thrive in shallow, brackish water. Like all plants, they convert sunlight into energy and voraciously consume CO2.

Algae also emit CO2, but this can be offset by injecting nutrient rich CO2 emissions into algae-rich water. No one knows how much CO2 could be absorbed but Mr. Gerritsen believes it could be “quite significant.” Best of all, he says, algae can double their mass in hours.

And they need less space than other biofuels. While corn produces 60 or so gallons of ethanol an acre annually, algae can provide up to 10,000 gallons of biofuel, says Dave Daggett, research chief at Boeing.

However, getting there is a challenge. “There are hurdles throughout the process stream,” says Eric Jarvis, a senior scientist at the National Renewable Energy Laboratory (NREL). The U.S. company, funded by energy company Chevron, has resumed work on identifying strains of algae likely to produce abundant lipid oils.

— © Guardian Newspapers Limited, 2008

Anonym said...

தமிழ்மணி,

கடல் பச்சைபாசி பெட்ரோலை இந்திய விஞ்ஞானிகளும் இந்திய தொழிலதிபர்களும் செய்ய ஆரம்பித்தால், பாய்ந்து வந்து அதுக்கும் எப்படி முட்டுக்கட்டை போடுவது என்று யோசித்து போராட்டம் பண்ணுவார்கள்.

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...

ஒரு தேவையற்ற மறுமொழி நீக்கப்பட்டுள்ளது

Anonym said...

Dear Tamizhmani
please note that all renewable energy technology proposed by many companies are not commercialised yet.they are getting funds from the US govt but they couldn't produce bio fuels on a commercial scale .so it is not going to be easy to replace all the gasoline with bio fuels.
thanks
bala