Dienstag, 8. Januar 2008

ஜனவரி 8 1979 - கம்யூனிஸ்ட் கெமர்ரூஜின் வெறியாட்டம் முடிவுக்கு வந்த நாள்

1.7 மில்லியன் கம்போடிய மக்களை (அன்றைய கம்போடிய நாட்டின் மக்கள்தொகையில் 21 சதவீதம்) கொன்று கம்யூனிஸ பொன்னுலகத்தை உருவாக்க பேயாட்டம் ஆடிய கெமர் ரூஜ் (சிவப்பு கம்போடியா) கட்சியின் தோல்விநாள் இன்று.

பொதுவுடமை நாட்டை உருவாக்குகிறேன் என்று மார்க்சும்,லெனினும் மாவோவும் உசுப்பேற்றி விட்டதை நம்பி போல்போட் என்ற கம்யூனிஸ சொறிநாய், கம்போடியாவில் ரத்த ஆறு ஓட வைத்து புராதன பொதுவுடமை நாட்டுக்காக சொந்த நாட்டு மக்களையே கொன்று (கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்தவர்கள் எல்லோரும் வர்க்க எதிரிதான்!) வெறியாட்டம் ஆடியது முடிவுக்கு வந்த நாள் இன்று.

வியத்நாம் அமெரிக்காவுடன் போரிட்டுக்கொண்டிருந்தபோது, சீனா வியந்நாமை கை கழுவியது. கம்போடியாவில் இருந்த வியத்நாமியர்கள் இந்த கம்யூனிஸ கட்சியால் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தனர். கம்போடியர்களை கொன்று குவிக்க செஞ்சீனம் ஏராளமான பண உதவியும் ஆயுத உதவியும் ராணுவ உதவியும் சிவப்பு கெமர் (கெமர் ரூஜ்) கட்சிக்கு அளித்து உதவியது. (நம் ஊர் நக்ஸலைட்டுகளுக்கும், மக இகவினருக்கும், சிபிஎம் கட்சிக்கும் சீனா உதவுவது போலத்தான்). அந்த கொடூரத்தை நிறுத்த வியத்நாம் கம்போடியாவுக்குள் புகுந்து இந்த அசுரர்களை ஓட ஓட துரத்திய நல்ல நாள்.

வர்க்க எதிரிகளின் தலைகளை (பலர் இதில் பச்சிளம் மாறாத சிறுவர்கள்!) சிவப்பு கெமர் கட்சியினர் அடுக்கி வைத்திருப்பதை பாருங்கள்.



இதுதான் கம்யூனிஸ சொர்க்கம்.

இதுதான் "புரட்சிகர இயக்கங்கள் பின்னால் அணிவகுப்பதன்" விளைவு.
--
கம்போடியாவின் கம்யூனிஸ்டு கட்சி முதலில் Communist Party of Kampuchea (CPK) என்று அழைக்கப்பட்டது. திடீரென்று ஜனநாயகம் என்று பேசுவோம் என்று "புதிய ஜனநாயகம்" பேர் போட்டுக்கொள்வோம் என்று "Party of Democratic Kampuchea." கம்போடிய ஜனநாயக கட்சி என்று பேர் மாற்றிக்கொண்டார்கள். அதே நேரத்தில் இதனை Khmer Communist Party என்றும் National Army of Democratic Kampuchea என்றும் கூறிக்கொண்டார்கள்.

நம் ஊரில் ஒரு பக்கம் மக்கள் போர் (peoples war) கம்யூனிஸ்டுகள் என்று கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் புதிய ஜனநாயகம் என்று உதார் விடுவதில்லையா. அது போலத்தான். நாமும் ஏமாந்து இவர்களும் ஜனநாயக வாதிகள் என்று ஏமாறுவோம் என்று கனவு காண்கிறார்கள்.

இந்த கம்யூனிஸ்டுகளால் கொல்லப்பட்ட கம்போடிய மக்களை ஆவணப்படுத்தும் முயற்சியில்
http://www.tuolsleng.com/ ட்வோல்ஸ்லெங் மியூஸியம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு விசிட் அடியுங்கள்.

இந்த சிறுமியும் வர்க்க எதிரிதானாம்!



மேலே காணும் அடையாளம் தெரியாத இந்த சிறுவனைப்போல லட்சக்கணக்கானவர்கள் பலியானவர்களின் போட்டோக்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

--

இந்த கம்யூனிஸ்டுகளை ஓட ஓட துரத்துங்கள்.

இது போன்ற ஒரு நாளை நாம் நம் எதிர்காலத்தில் கொண்டாட வேண்டாம். அப்படி கொண்டாடாமல் இருக்கவேண்டுமென்றால், இப்போதே இந்த கம்யூனிஸ்டுகள் ஓட ஓட துரத்தப்பட வேண்டும்.

அது உங்கள் கையில்தான் இருக்கிறது.

17 Comments:

said...

தமிழ்மணி,

கம்போடிய கம்யூனிசத்தில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் கெமெர் என்பது கம்போடியாவின் ஒரு சாதியை குறிக்கும் சொல்.சர்வதேசியம் பேசும் கம்யூனிஸ்டுகள் கெமெர் இனவாதம் பேசியவர்களாக அமைந்தது ஒரு நகைமுரண் என்றால் கடைசியில் கெமெர் இனத்தவர்களையே தாக்கி கொன்று குவித்தது இன்னொரு நகைமுரண்.

கம்போடியாவின் மைனாரிட்டிகள் (சீனர்கள், கெமெர் அல்லாத சாதியினர்) மிக அதிகமாக அழித்தொழிக்கப்பட்டனர்.சர்வதேசியம் பேசிய ரஷ்ய கம்யூனிஸ்டுகள் உக்ரைன்,ஜார்ஜியா மக்களை கொன்றுகுவித்தது போல்..

"Be global, act local" என்பது கம்யூனிசத்துக்கும் பொருந்தும் போல..உள்ளூருக்கு இனவாதம், வெளியூருக்கு சர்வதேசியம்:-)))

இலங்கையில் இனவெறியர்களான ஜேவிபியும் கம்யூனிஸ்டுகள்தான்.அதனால் தான் நம் மார்க்ஸிஸ்டுகள் ஜேவிபியை கண்டிப்பதில்லை.

said...

//கெமெர் என்பது கம்போடியாவின் ஒரு சாதியை குறிக்கும் சொல்.//

நன்றி. இது எனக்கு தெரியாத விஷயம்.

Anonym said...

see also this

http://en.wikipedia.org/wiki/The_Killing_Fields

There was also a film by the name of Killing Field.

Anony (1)

Anonym said...

டேய் உனக்கு இருக்குடா

said...

//டேய் உனக்கு இருக்குடா//

என்ன இருக்கு?

said...

They tried to follow "Cultural Revolution" of Mao model. They killed all the intellectuals/educated. Moved all the population to villages. They have really cruel history.

//இலங்கையில் இனவெறியர்களான ஜேவிபியும் கம்யூனிஸ்டுகள்தான்.அதனால் தான் நம் மார்க்ஸிஸ்டுகள் ஜேவிபியை கண்டிப்பதில்லை.//

கண்டிக்காமல் விடுவது மட்டுமல்ல. அவர்களுடைய முக்கிய கூட்டங்களுக்கு JVP யை சிறப்பு பார்வையாளர்களாக அழைக்க படுவர்.Hindu Ram(active CPM leader), JVP கட்சியினருடைய பிதாமகர்.

இந்த கம்யூனிஸ்டுகளின் மிகப்பெரிய துரோகம், அவர்களை வளர்க்கும் மக்களின் நலன்களுக்கு பாடு படாமல், பிற நாடுகளில் இருக்கும் கம்யூனிச தலமைக்கு விசுவாசமாக இருப்பர்கள். கமீர் ரவுஜ் சைனாவுக்கு விசுவாசமானது போல், இந்திய கம்யூனிஸ்டுகள் சைனாவுக்கும், தமிழக கம்யூனிஸ்டுகள் கேரளாவிற்கும்(சேலம் ரயில்வே கோட்டம்,பொள்ளாச்சி விவகாரம்,முல்லை பெரியாறு விவகாரம்) விசுவாசமாக இருக்கிறார்கள்.

said...

சதுக்கப்பூதம்
உங்கள் கருத்துக்களோடு உடன் படுகிறேன்

Anonym said...

தமிழ்மணி அவர்களே,
தோழர்கள் மருதையன்,அசுரன்,தியாகு போன்ற ம க இ க தீவிரவாதிகள், போல் போட் வெறியனுக்கும் வீர வணக்கம் போட்டாங்களா?வெறி நாய் ஸ்டாலினுக்கு (ரஷ்யன்,நம்ம ஊர் ஆசாமி இல்லை) போட்டாங்க,தெரியும்.

said...

போல்போட் வெறியனுக்கும் சலாம் போட்டாங்கள். ஆனால், நம் ஊர் மக்களுக்கு ஸ்டாலின் (ரஷியன்) தெரிஞ்ச் அளவுக்கு போல் போட்டை தெரியாது. காரணம், இந்திய ஊடகத்துறையில் இருக்கும் இடதுசாரி நெருக்குவளை.

தெரியாத ஆளை எதுக்கு தெரிய வைப்பானேன் என்று போல்போட்டை பத்தி பேசறதில்லை. ஆனால், போல்போட் பத்தி ஏதேனும் அங்கே இங்கே வந்துவிட்டால், இடதுசாரி என்று கூட பார்க்காமல் அடித்துவிடுவார்கள். அருந்ததிராய் பேட்டியையே கட் பண்ணி வெளியிட்ட கும்பல் இது.

http://www.tehelka.com/story_main28.asp?filename=Ne310307Its_outright_CS.asp


இதில்
I think it’s important for us to acknowledge that both Mao and Stalin are dubious heroes with murderous pasts. Tens of millions of people were killed under their regimes. Apart from what happened in China and the Soviet Union, Pol Pot, with the support of the Chinese Communist Party (while the West looked discreetly away), wiped out two million people in Cambodia and brought millions of people to the brink of extinction from disease and starvation. Can we pretend that China’s cultural revolution didn’t happen? Or that millions of people in the Soviet Union and Eastern Europe were not victims of labour camps, torture chambers, the network of spies and informers, the secret police.
என்று அருந்ததிராய் தப்பித்தவறி உண்மையை சொல்லுவதை கூட எடிட் செய்து நீக்கிவிட்டுத்தான் தமிழில் பிரசுரித்தார்கள் நியூ டெமாக்ரசி கம்யூனிஸ்டுகள்.

இவ்வாறு போல்போட்டை தாங்கிப்பிடிக்க இவர்களுக்கு காரணம் என்ன?

ஏதோ ஸ்டாலின் பற்றிய அவதூறுகளுக்கு தனியே புத்தகம் போட்டு விளக்கிவிட்டார்களாம். அதனால் அவற்றை நீக்கிவிட்டார்களாம். போல்போட் பற்றி புத்தகம் போட்டீர்களா? பிறகேன் அதனை நீக்கினீர்கள்?

Anonym said...

அருமையான தேவையான பதிவு
நன்றி

Anonym said...

1.7 மில்லியன் மக்களை சுட்டுத்தின்ற கம்யூனிஸ்டுகள் மோடிக்கு எதிராக போராட்டமாம். வேடிக்கை!

Anonym said...

இந்த போல்போட் கம்போடிய கம்யூனிஸ்டுகள் பற்றி விவரமாக சொல்லமுடியுமா?

தெரியாத விஷயமாக இருக்கிறது..

நன்றி

said...

நன்று ரகமி நன்றி அனானி

கெமர் ரூஜ் பற்றி விவரமாக படிக்க khmer rouge என்று ஆங்கிலத்தில் கூகுள் பண்ணி படித்து பாருங்கள்.

Anonym said...

கெமர் ரூஜ் பற்றி தமிழக பத்திரிக்கைகளில் வந்தால் நன்றாக இருக்கும்.

Anonym said...

எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு தன்னை கம்யூனிஸ்டு என்று தைரியமாக கூறிக்கொள்கிறார்கள்?

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
said...

நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி.

பல்வேறு நாடுகளில் நடந்த கம்யூனிஸ்ட் கொடுங்கோன்மைகளை பற்றிய விழிப்புணர்வை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும்